Latest Post

 ரத்னம் திரைப்படம் எப்படி இருக்கு?!




ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ்  கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் தான் "ரத்னம்"

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:

சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்த நாயகன் விஷால், சமுத்திரகனி அரவணைப்பில் வளர்கிறார். வேலூரில் எம்.எல்.ஏ. மற்றும் தாதாவாக இருக்கும் சமுத்திரகனி சொல்லும் வேலைகளை எல்லாம் விஷால் செய்து முடிக்கிறார். இந்நிலையில் வேலூருக்கு தேர்வு எழுத வரும் பிரியா பவானி சங்கரை பார்த்தவுடன் அவர் பின்னாலே செல்கிறார். தேர்வு எழுதும் நேரத்தில் பிரியா பவானி சங்கரை ஒரு கும்பல் தாக்க வருகிறது. அந்த கும்பலிடம் இருந்து அவரை விஷால் காப்பாற்றுகிறார். தொடர்ந்து பிரியா பவானி சங்கருக்கு அந்த கும்பல் மூலம் பிரச்சனை வருகிறது. இறுதியில் அந்த மர்ம கும்பல் யார்? பிரியா பவானி சங்கரை கொலை செய்ய துரத்த காரணம் என்ன? பிரியா பவானி சங்கரை விஷால் பாதுகாக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை......

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் விஷால், சென்டிமென்ட், ஆக்ஷன், பாசம் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக சிங்கிள் ஷாட் ஆக்க்ஷன் காட்சியில் சிறப்பாக நடித்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கருக்கு நடிக்கும் வாய்ப்பு அதிகம் கிடைத்துள்ளது. அவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார்.

குறிப்பாக விஷால் மீது அக்கறை காட்டும் இடத்தில் கவனிக்க வைத்து இருக்கிறார். படத்திற்கு பெரிய பலம் சமுத்திரகனி நடிப்பு. விஷாலுக்காக இவர் எடுக்கும் முயற்சிகள் ரசிக்க வைக்கிறது.

சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிந்து இருக்கிறார் கவுதம் வாசுதேவ் மேனன். முரளி சர்மா வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். இவருக்கு உறுதுணையாக வரும் ஹரிஷ் பெரடி, முத்துகுமார் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள். மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு ஆகியோர் ஆங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார்கள். 

அம்மா சென்டிமென்ட்டை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஹரி. தன் படங்களுக்கு உண்டான அதே ஸ்டைலில் திரைக்கதை அமைத்து ரசிக்க வைத்து இருக்கிறார். 

கதாபாத்திரங்கள் இடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். சிங்கிள் ஷாட் ஆக்க்ஷன் மற்றும் காட்சிகள் வைத்து ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார். தேவி ஶ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். சுகுமாரின் ஒளிப்பதிவு ஆக்க்ஷன் காட்சிகளை அதிர வைத்துவிட்டது என்றே கூறலாம். 

காதல் காட்சியிலும், காமெடியிலும் கூடுதல் கவனம் தேவை.....

மொத்தத்தில் இந்த "ரத்னம்" தாயின் பாச உணர்வு

Rating: 3.5/5

”ஹாஃப் பாட்டில்” ஆல்பம் பாடல் வெளியீடு!




சென்னை:

ES Production & Macha Swag Dance  தயாரிப்பில், தீபன் மற்றும் வைபவ்  இசையில், எழில்வாணன் வடிவமைத்து  உருவாக்கியிருக்கும்  ஆல்பம் பாடல், ”ஹாஃப் பாட்டில்”. இன்றைய கால இளைஞர்களின் காதலையும் ஊடலையும் மையமாகக் கொண்டு இப்பாடல் உருவாகியுள்ளது. எழில்வாணன் EV, பிக்பாஸ் ரவீனா &  ரேணுகா(சிறப்பு தோற்றம் ) இணைந்து நடித்துள்ளனர். மான்சி  & EV இணைந்து நடன அமைப்பைச் செய்துள்ளனர். 

இணையத்தில் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இப்பாடலின் குழுவினர் பத்திரிகை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.

இயக்குநர், நடிகர், எழில்வாணன் EV பேசியதாவது:

இந்த பாடலை விளம்பரப்படுத்தும் பொருட்டு  பிரபலங்கள் யாரையாவது அழைக்கச் சொன்னார்கள் எனக்கு பேர் தெரிந்த பிரபலம் நீங்கள் தான் அதனால் தான், உங்களை அழைத்து உங்கள் முன்னிலையில் பாடலை விளம்பரப்படுத்துகிறோம். இந்த மேடைக்கு நான் வந்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் முருகன் அண்ணா, சுரேந்தர் அண்ணா, விஜய் அண்ணா இந்த மூவரும் தான் காரணம், எல்லா இடத்திலும் இவர்கள் எனக்காக நின்றிருக்கிறார்கள். எந்த ஒரு காரியம் என்றாலும் உன்னால் முடியும் செய் எனத் தைரியம் தந்திருக்கிறார்கள்.  நான் அமெரிக்காவில் ஐடி துறையில் வேலை பார்த்து வருகிறேன், இந்த துறை மீதான காதலில் தான் இதைச் செய்ய ஆரம்பித்தேன், யார் வேண்டுமானாலும் எந்த துறையில் வேண்டுமானாலும் அவர்கள் விரும்பினால் சாதிக்கலாம் என்பதற்கான எடுத்துக்காட்டாகத் தான் இதைச் செய்கிறேன். என் படக் குழுவினர் எனக்கு மிக உறுதுணையாக இருந்தார்கள். தீபக் மற்றும் வைபவ் இருவரும் எனக்கு இரண்டாவது முறையாக இசையமைக்கிறார்கள்.எடிட்டர் கலைவாணனும் நானும் இணைந்து இரண்டாவது முறையாக பணியாற்றுகிறோம்... அவர் எனக்கு ஒரு மேஜிக் (Work) எடிட்டிங் செய்து கொடுப்பார் அது அவ்வளவு அழகாக இருக்கும் அவருக்கும் எனது நன்றி...


இரண்டு வருடங்கள் முன்பே இதற்கான நடன அமைப்பை உருவாக்கி விட்டேன், இந்த பாடலுக்கு ரவீனா சரியாக இருப்பார் என்று அவரை அணுகினேன் அவர்  உடனடியாக பண்ணலாம் என ஒத்துக் கொண்டு செய்தார். இந்த பாடலின் கரு காதல் தான், காதலர்களுக்கு இடையில் பிரச்சனைகள் வரும்போது  மனம் விட்டுப் பேசினால் எந்த ஒரு பிரச்சனையையும் தீர்த்துவிடலாம். அதைத்தான் ஒரு கருவாக வைத்து இந்த பாடலை உருவாக்கி இருக்கிறோம். உங்கள் அனைவருக்கும் இந்த பாடல் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் எல்லோரும் பாடலுக்கு ஆதரவு தாருங்கள் நன்றி.




நடிகை ரவீனா பேசியதாவது:

எங்களை ஆதரிக்க வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்த ஆல்பம் பாடலின் ஷூட்டிங் வெறும் சில மணி நேரங்களிலேயே முடிந்துவிட்டது. அத்தனை திட்டமிடலுடன் நடந்து முடிந்தது. ஷூட் ரொம்ப ஜாலியாக நடந்தது. எப்போதும் உடன் நடிக்கும் நடிகர்கள் கலைஞர்கள்  நம்மை காம்போர்ட்டபிளாக வைத்துக் கொண்டால் நாம் சிறப்பாக வேலை செய்வோம், அந்த வகையில் இந்த படக்குழுவினர் என்னை மிகச்சிறப்பாகப் பார்த்துக்கொண்டனர்.  எழில்வாணன் மிகத் திறமைசாலி இந்த பாடலின் முழு வேலைகளையும் அவரே செய்துவிட்டார் இந்த துறையின் மீதான காதலில் அவர் அமெரிக்காவிலிருந்து இங்கு வந்து, இதைச் செய்து வருகிறார். சினிமாத்துறை மீது காதலுடன் இருப்பவர்கள் உருவாக்கியிருக்கும் படைப்பில்  நானும் இருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சி.  இந்த டீமில் வேலை என்னுடன் வேலை பார்த்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப்பாடல் மிகச்சிறப்பாக வந்துள்ளது. விரைவில் இணையத்தில் வெளியாகும்..உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.  


நடிப்பு : எழில்வாணன் EV, பிக்பாஸ் ரவீனா & ரேணுகா

கருத்து, பாடல் மற்றும் இயக்கம் - எழில்வாணன் EV

இசை: தீபன் மற்றும் வைபவ்

நடன அமைப்பு: மான்சி  & எழில்வாணன் EV

எடிட்டர்: கலைவாணன் (SK21 எடிட்டர்)

தயாரிப்பு - ES Production & Macha Swag Dance

அருண் விஜய் நடிப்பில், BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு, “ரெட்ட தல” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்வு!




சென்னை:

BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற்கு , “ரெட்ட தல” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்புடன் கூடிய அசத்தலான ஃபர் ஸ்ட் லுக் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவினில்


தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன் பேசியதாவது..
இந்த நாளுக்காக நிறைய உழைத்திருக்கிறோம். எங்களுடன் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்திற்குப் பர்ஃபெக்டான ஹீரோ அருண் விஜய் தான். தான்யா ரவிச்சந்திரன் மிக அழகான படங்கள் செய்துள்ளார். சித்தி இத்னானி பல அற்புதமான படங்கள் செய்துள்ளார். இவர்கள் மூவரையும் இணைத்து அற்புதமான கதைச் செய்துள்ளார் திருக்குமரன். அவர்ச் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கதைகள் தேர்ந்தெடுப்பதில், தயாரித்து வழங்குவதில் ரசிகர்களுக்கு நல்ல படைப்புகள் தர வேண்டும் என்பதில் வெகு கவனமாக இருக்கிறோம். அந்த வகையில் திருக்குமரன் மிகச்சிறந்த திரைக்கதைச் செய்துள்ளார். சாம் சி எஸ் இசைப் படத்திற்கு பெரிய பலமாக இருக்கும். மனோஜ் பினோ என் கஸின், அவர்த் தான் இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் எல்லா வேலைகளையும் பார்த்துக்கொள்கிறார். அவர் இதற்கு முன் திரைத்துறையில் பல பணிகளில் பணியாற்றியுள்ளார். உலகளவில் பல முன்னணி கம்பெனிகளில் டேட்டா ரிஸ்க் இருக்கிறது, அந்த டேட்டாக்களைப் பாதுக்காக்கும் பணிகளைத் தான் எங்கள் கம்பெனி செய்து வருகிறது. 300 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு நாங்கள் சேவைகளை வழங்கி வருகிறோம், இப்படிப்பட்ட நிலையிலிருந்து கொண்டு, ஏன் திரைத்துறைக்குள் வருகிறீர்கள் எனக் கேட்கிறார்கள். ஏனெனினில் சினிமா எனக்கு அவ்வளவு பிடிக்கும். அருண் விஜய் செய்வதை என்னால் செய்ய முடியாது, சாம் சி எஸ் செய்வதை என்னால் செய்ய முடியாது, ஆனால் அவர்களை வைத்து அற்புதமான படைப்புகளை உருவாக்க முடியும். அந்த ஆசையில் தான் இந்தத் தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளோம். நான் ஒரு தமிழ் அமெரிக்கன், ஏன் அமெரிக்கர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என நான் வெகுவாக ஆராய்ச்சி செய்துள்ளேன். ஹாலிவுட் எப்படிப் பெஸ்ட் கொடுக்கிறார்கள் அதை எப்படி நாம் கோலிவுட்டில் கொடுக்கலாம் என முயற்சிப்பதே எங்கள் நோக்கம். எங்கள் நிறுவனத்தில் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொன்றையும் கவனமாக ஆராய்ந்து, ஆட்டோமெடிக்காக இயங்குமாறு செய்துள்ளோம். நான் 2 படம் அல்லது 3 படம் எடுப்பதற்காக வரவில்லை. ஒரு மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கவே வந்துள்ளேன். பல படங்களைத் தொடர்ந்து நாங்கள் எடுக்கவுள்ளோம். ஒரு துறையில் வளர்ந்தவனாக நான் இந்தச் சமூகத்திற்கு சிலவற்றைத் திரும்ப அளிக்க வேண்டும் என்பதே என் ஆசை. நாங்கள் சம்பாதிப்பதை, திரும்ப மக்களுக்குத் தர வேண்டும். கொடுப்பது வாங்குவதை விட மகிழ்ச்சிகரமானது. அதற்கான பல வழிகளில் ஒன்று தான் இந்தக்கம்பெனி. இன்று உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. என் படக்குழுவினர், நடிகர் நடிகையர், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி.


BTG நிறுவன நிர்வாகத் தலைமை அதிகாரி மனோஜ் பினோ பேசியதாவது…
பிடிஜி நிறுவனத்தின் பாபிக்கு முதல் நன்றி. சினிமாவில் வந்தது 8 வருஷம் ஆகிவிட்டது, அதில் பீக் இந்த வருடம் தான். பிடிஜி நிறுவனம் மிகப்பெரும் உற்சாகத்தையும், ஊக்கத்தையும் தருகிறது. பாபியும் நானும் சிறு வயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள். பாபியை எப்போதும் பிரமிப்பாகப் பார்க்கும் அளவு, பணிகள் செய்துகொண்டே இருப்பார். நான் ஒரு மருத்துவன் என்றாலும் எங்கள் குடும்பம் மொத்தமும், பாபியைப் பிரமிப்பாக பார்க்கிறோம். பாபி படம் எடுக்கப்போகிறேன் பார்த்துக் கொள் என்று சொன்ன போது எந்த மறுப்பும் என்னிடம் இல்லை. பாபியின் ஷெட்யூல் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும். அவர் அத்தனை வேலைகளை முடித்துவிட்டு, என்னுடன் இரவில் படம் பற்றிப் பேசுவார். என் மனைவியே என்னைவிட பாபியிடம் தான் அதிகம் பேசுகிறீர்கள் என்பார். ஆனால் நாங்கள் பேசினால் தான் அடுத்த ஸ்டெப் என்ன செய்யலாம் எனத் தீர்மானிக்க முடியும். எங்கள் உழைப்பும், பேச்சும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்க்கும் போது உங்களுக்குத் தெரியும். இப்போது சினிமாவின் வியாபாரம் மாறியிருக்கிறது. யார் நடிக்கிறார்கள், என்ன படம், என்ன கதைப் படம் எப்படி வரும் என்பதை எப்போது கேட்டாலும், எங்களால் காட்ட முடியும் அது மாதிரி தான் நாங்கள் இயங்கி வருகிறோம். ஒரே நேரத்தில் 3 படங்கள் இப்போது அடுத்த கதைகளையும் கேட்டு வருகிறோம். எங்களால் ஒரே நேரத்தில் பல படங்களைக் கையாள முடியும் என்பதை நிரூபிக்க நினைக்கிறோம். அடுத்தடுத்து திட்டமிட்டபடி பல படங்கள், எங்கள் நிறுவனம் மூலம் வரும். ஜெயம் ராஜா என் நீண்ட கால நண்பர், எனக்காக எங்களை வாழ்த்த வந்துள்ளார் நன்றி. அஜய் ஞானமுத்து எங்கள் நிறுவனத்தில் மிரட்டலான படத்தைச் செதுக்கி வருகிறார். டிமாண்டிக் காலனி 2 உங்களை மிரட்டும். அருண் விஜய் நான் சினிமாவுக்கு வரும் முன்பே நண்பர், அப்போதும் இப்போதும் அண்ணன் என அன்பாக இருப்பார். அவர் எங்கள் படத்தில் நடிப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்தக்கதை வந்தவுடன் அவரிடம் தான் முதன் முதலில் கதைச் சொல்லச் சொன்னேன். அவருக்குக் கதை பிடித்தது மகிழ்ச்சி. இந்தப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றிப்படமாக இருக்கும். திருக்குமரன் மிகச்சிறந்த திறமைசாலி, அவரிடம் பெரிய பிளானிங் இருக்கும். அது அவரது பிளஸ். இந்தப்படம் கண்டிப்பாகத் திருக்குமரனுக்கு சூப்பர் ஹிட்டாக அமையும். அவர்ப் பெரிய வெற்றிப் பெற்றால் எங்களுக்கு மகிழச்சி. சித்தி இத்னானி பலரது மனதைக் கொள்ளை கொண்டவர். இந்தப்படம் முடியும் போது தமிழ்ப் புலவர் ஆகிவிடுவார். தான்யா இப்படத்தில் பங்குகொண்டது மகிழ்ச்சி. சாம் சி எஸ் பாடல்கள், பின்னணி இசை அற்புதமாக வந்துள்ளது. நடிகர்ப் பாலாஜிக்கு இது பெரிய திருப்புமுனையாக இருக்கும். எடிட்டர் ஆண்டனி எப்போது கேட்டாலும் வெளிநாட்டில் இருக்கிறேன் என்பார், எங்களை வாழ்த்த வந்த ஆண்டனிக்கு நன்றி. எல்லாப்படமும் பிரம்மாண்டமாக வரும் எனச்சொன்னால் உங்களுக்குப் போரடிக்கும், ஆனால் அது தான் உண்மை. இந்தப்படம் ஒவ்வொரு 15 நிமிடங்களிலும் உங்களுக்கு ஆச்சர்யம் தரும், டிவிஸ்ட் இருக்கும். உங்களைக் கண்டிப்பாக இப்படம் மகிழ்ச்சிப்படுத்தும். நன்றி.

இயக்குநர் மோகன் ராஜா பேசியதாவது…
ரெட்ட தல அற்புதமான ஃபர்ஸ்ட் லுக், மொத்தக்குழுவிற்கும் என் வாழ்த்துக்கள். இன்று 2024ல் நல்ல சினிமா வருவதில்லை என்ற குற்றசாட்டு வருகிறது. அதைப் போக்கும் நிறுவனமாகப் பிடிஜி இருக்கும் என நம்புகிறேன். இந்தப்படம் வெற்றிப்படமாக அமையும். மனோஜ் பினோ என் நண்பர், சினிமா மீது தீவிரக் காதல் கொண்டவர். வெற்றிப் பெற வாழ்த்துக்கள். என்னை என் தம்பியை விட அண்ணா என அன்பாக அழைப்பவர் அருண்விஜய். கிட்டத்தட்ட இத்தனைக் காலம் ஃபிட்னெஸாக உடலை வைத்துக்கொள்வது அத்தனை எளிதில்லை, இந்த உழைப்பிற்கு அருண்விஜய்க்கு இன்னும் பல வெற்றிகள் கிடைக்கும். சாம் சி எஸ் உடன் வேலைப் பார்க்க ஆசைப்பட்டேன், அவருக்கு வாழ்த்துகள். சித்தி இத்னானிக்கும் மற்றும் என்னுடன் வேலைப் பார்த்த தான்யாவிற்கும் வாழ்த்துக்கள். படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். அனைவருக்கும் நன்றி.


எடிட்டர் ஆண்டனி பேசியதாவது…
இந்தப்படத்தில் பங்குகொள்வது மகிழ்ச்சி. இது நல்ல படமாக இருக்கும். அருண்விஜய் எனக்கு மிகவும் பிடிக்கும். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகர் யோகி பேசியதாவது…
பாபி சார், மனோஜ் சார் மற்றும் திருக்குமரன் சாருக்கு நன்றி. இப்படத்தில் என்னைத் தேர்ந்தெடுத்தற்கு நன்றி. எனக்குத் தந்துள்ள கதாப்பாத்திரத்தைச் சிறப்பாக செய்வேன். அனைவருக்கும் நன்றி.

நடிகர் பாலாஜி முருகதாஸ் பேசியதாவது…
திருக்குமரன் சார், பாபி சார், மனோஜ் சார் அனைவருக்கும் நன்றி. என்னை இந்தப்படத்திற்காகத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. அருண்விஜய் சாரை ரொம்ப காலமாகத் தெரியும், பல நிகழ்ச்சிகளில் அவரைச் சந்தித்துள்ளேன். அவருடன் சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சி. பிட்னெஸாக உடம்பை வைத்துக்கொள்வது மிகக் கஷ்டம் எனத் தெரியும். அவருக்கு இன்னும் பல வெற்றிகள் குவியும். என் படக்குழுவினருக்கும் மீடியாவிற்கும் என் நன்றிகள்.

இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசியதாவது…
சில படங்களின் டைட்டில் கேட்கும்போது இவ்வளவு நாளா இந்த டைட்டில் வைக்கலையா எனத் தோணும். ரெட்ட தல அப்படி ஒரு டைட்டில். ஃபர்ஸ்ட் லுக் மிரட்டலாக இருக்கிறது. தயாரிப்பாளர்ப் பாபி சின்ன சின்ன விசயங்களுக்கும் எனக்குக் கால் செய்வார், தயாரிப்பாளர் மாதிரியே இருக்க மாட்டார். அவர் மிகப்பெரிய முதலாளி. அவரது மெசேஜ் கால் பார்த்தால் பாசிடிவிட்டியாக இருக்கும். ஒரு படம் ஹிட்டாகக் கதை 50 பர்செண்ட் இருந்தால் போதும், மீதி பாசிடிவிட்டி இருந்தாலே அந்தப்படம் பயங்கர ஹிட்டாகும். இந்தப்படத்தில் பணியாற்றும் அனைவரும் இந்தப்படம் ஜெயிக்க வேண்டும் என்பதில் பாசிட்டிவிட்டியுடன் இருக்கிறார்கள். சாம் சி எஸ் என்றாலே பின்னணி இசையில் மிரட்டுவார் என்பார்கள் அதற்காக நான் பாடல்கள் நன்றாகச் செய்ய மாட்டேன் என அர்த்தம் இல்லை. நான் ஒவ்வொரு வருடமும் நல்ல பாடல்கள் தந்து வருகிறேன். இந்தப்படத்தில் பாடல்கள் எல்லாமே பெரிய ஹிட்டாகும். இயக்குநர் ஒவ்வொரு பாடலின் போதும் தரும் பாராட்டுக்கள் எனக்குப் பெரும் ஊக்கம் தரும். இந்தக்கம்பெனிக்கு யார்ப் படம் செய்தாலும் ஹிட் படமாகத்தான் இருக்கும் இவர்களிடம் அத்தனைத் திட்டமிடல் இருக்கிறது. அருண் விஜய் சார் மிகப்பெரிய உழைப்பாளி, எத்தனை வருடமானாலும் இளமையாக அப்படியே இருக்கிறார். அவருடன் வேலைப் பார்ப்பது மகிழ்ச்சி. இப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றிப்படமாக இருக்கும்.



நடிகை தான்யா ரவிச்சந்திரன் பேசியதாவது…
பாபி சாரை இப்போது தான் நேரில் பார்க்கிறேன் அவர் அமெரிக்காவில் இருந்து அவ்வப்போது அப்டேட் தந்துகொண்டே இருப்பார். அவரை நேரில் பார்த்தது மகிழ்ச்சி. என்னை இந்தப்படத்தில் தேர்ந்தெடுத்தற்கு இயக்குநர்த் திருக்குமரனுக்கு நன்றி. மனோஜ் சாருக்கும் நன்றி. அருண் விஜய்யுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி. இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகை சித்தி இத்னானி பேசியதாவது…
இந்தப்படத்தின் வைப் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தப்படத்தில் நானும் இருப்பது மிகமிகச் சந்தோஷமாக உள்ளது. திருக்குமரன் சாருக்கு நன்றி. எனக்குத் தொடர்ந்து நல்ல இயக்குநர்கள் கிடைத்து வருகிறார்கள். கௌதம் மேனன் சாரில் ஆரம்பித்து அனைவரும் எனக்கு நல்ல கதாப்பாத்திரங்கள் தந்து வருகிறார்கள். அருண் விஜய் சாருடன் நடிப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

இயக்குநர் அஜய் ஞானமுத்து பேசியதாவது…
ஒரு வருடம் முன்பு பிடிஜி. சந்திப்பிற்காகப் போனேன் முதல் படமாக என் படம் செய்கிறார்கள் எனும் போது பயம் இருந்தது. ஆனால் அவர்கள் திரைப்படங்கள் மேல் வைத்திருக்கும் காதல் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. அவர்கள் இன்னும் நிறையப்படங்கள் செய்து பலருக்கு வாழ்க்கைத் தர வேண்டும் என்பதே என் ஆசை. திருக்குமரன் அண்ணாவிற்கு இந்தப்படம் கிடைத்தது பெரிய மகிழ்ச்சி. ஏ ஆர் முருகதாஸ் சாரிடம் வேலைப் பார்த்த போது அவர் எனக்குச் சீனியர். அவர்ப் பயங்கர ஸ்ட்ரிக்ட். மிகப்பெரிய திறமைசாலி அவருக்குச் சரியான ஹீரோவாக அருண் விஜய் கிடைத்துள்ளார். இந்த டைட்டில் மிரட்டலான டைட்டில் ஏ ஆர் முருகதாஸ் சார் வைத்திருந்த டைட்டில். படம் மிகப்பெரிய வெற்றிபெறும் வாழ்த்துக்கள்.

நடிகர் விஜயகுமார் பேசியதாவது…
பாபி பாலச்சந்திரன் மிக எளிய குடும்பத்தில் பிறந்து இத்தனை உயரம் எட்டியுள்ளார். உழைப்பு, நம்பிக்கை, நேர்மை இருந்தால் வெற்றிப் பெறலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார். டாக்டர் மனோஜ் எங்கள் குடும்பத்தில் ஒருவர். ரெட்ட தல மிகச்சிறந்த டைட்டில். வெற்றிகரமான டைட்டில். திருக்குமரன் மிகப்பெரிய திறமைசாலி, கடுமையாக உழைத்து நல்ல திரைக்கதை உருவாக்கி, இந்தப்படம் செய்கிறார். இரண்டு குயின் இருக்கிறார்கள். படத்தில் உழைக்கும் கலைஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். படம் மாபெரும் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.

இயக்குநர்க் கிரிஷ் திருக்குமரன் பேசியதாவது…
இந்த இடத்தில் நான் நிற்கக் காரணமான அனைவருக்கும் நன்றி. ஃபர்ஸ்ட் லுக் தனித்துவமாக இருக்க வேண்டும் எனச் சொன்ன போது, ஒரு கான்செப்ட் வைத்து உருவாக்கலாம் என இந்த ஐடியாவை அருண் விஜய் சாரிடம் சொன்னேன். இது என்ன மாதிரி ஐடியா எனக்கேட்டார். இரண்டு மிருகங்கள் ஒன்றை ஒன்று அடித்து சாப்பிட நினைக்கிறது அது தான் கரு என்றேன். எல்லோருக்கும் பிடித்திருந்தது. பாபி சார், மனோஜ் சார் எவ்வளவு செல்வானாலும் பராவாயில்லை, இதைத்தான் எடுக்கனும் என்றார்கள். அருண் விஜய் உடம்பை வில்லாக வளைத்து, இதற்காக உழைத்துள்ளார். இந்த டைட்டில் ஏ ஆர் முருகதாஸ் சாருடையது, அருண் விஜய் சாருக்கும் எனக்கும் இந்த டைட்டில் பிடித்திருந்தது. இந்தக்கதைக்கு இது தான் சரியாக இருக்குமெனத் தோன்றியது. ஏ ஆர் முருகதாஸ் சாரிடம் கேட்டேன், அவர் வைத்துக்கொள் என அன்போடு தந்தார். இந்தப்படம் ஒரு குழுவாக உருவாக்கும் படம் பாபி சார், மனோஜ் சார் மட்டுமல்லப் பிடிஜி என்பது எங்களையெல்லாம் இணைத்த ஒரு பெரிய குழு. தான்யா, சித்தி இத்னானி அழகாக நடிக்கிறார்கள். அருண் விஜய் சார் ஆச்சர்யம் தந்துகொண்டே இருக்கிறார். படத்திற்காகப் பயங்கரமாக உழைக்கிறார். தயாரிப்பாளர் என் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற கடுமையாக உழைப்பேன். இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி.

நடிகர் அருண்விஜய் பேசியதாவது…
பாபி சார் மனோஜ் சார்ப் பற்றி எல்லோரும் பேசினார்கள். இந்தப்படம் எனக்கு மிக நெருக்கமான படம். இந்தக்கதை மிக மிகப் பிடித்த கதை. இதற்கு முன் மனோஜ் அண்ணா அனுப்பிய கதைகள் கேட்டிருக்கிறேன், நான் எப்போதும் ஆடியன்ஸ் மைண்ட்செட்டில் இருந்து தான் கதைக் கேட்பேன். திருக்குமரன் இந்தக்கதைச் சொல்லி, ரெட்ட தல என்று சொன்ன போது அட்டகாசமாக இருந்தது. அவர் ஆரம்பத்திலேயே படத்திற்காகக் கடுமையாக உழைத்து வருவது எனக்குப் பிடித்துள்ளது. அவருக்காக நானும் கடுமையாக உழைப்பேன். சித்தி, தான்யா, ஆண்டனி சார், கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். இந்தப்படம் மீது இப்போதே நல்ல பாஸிடிவிட்டி இருக்கிறது. சாம் சி எஸ் உடன் ஏற்கனவே வேலைப் பார்த்துள்ளேன். இந்தப்படம் அவருக்கு வெற்றிப்படமாக இருக்கும். உங்களை மகிழ்விக்கக் கண்டிப்பாக கடுமையான உழைப்பைத் தருவோம். இந்தப்படம் கண்டிப்பாக உங்களை ஆச்சரியப்படுத்தும் நன்றி.

நடிகர் அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார், இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ், யோக் ஜேபி, வின்செண்ட் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

இப்படத்தினை BTG Universal நிறுவனம் சார்பில் திரு.பாபி பாலச்சந்திரன், மிகப்பெரும் பொருட்செலவில்,  அருண் விஜய் திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பிரம்மாண்ட படைப்பாகத் தயாரிக்கிறார். 
தமிழ் திரையுலகில் பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் தலைமை நிர்வாக இயக்குநராக பணியாற்றிய திரு டாக்டர் M.மனோஜ் பெனோ, தற்போது BTG Universal நிறுவனத்தின் தலைமை திட்ட இயக்குநராக பொறுப்பேற்று திரைப்படங்களின் அனைத்து நிர்வாகப் பணிகளையும் செய்து வருகிறார்.   

இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் CS இசையமைக்கிறார்.  டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டர் ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். மாஸ்டர்ஸ் அன்பறிவு மற்றும் பிரபு மாஸ்டர் இணைந்து சண்டைக்காட்சிகளை வடிவமைக்கவுள்ளனர். 

அருண்சங்கர் துரை கலை இயக்கம் செய்கிறார். கிருத்திகா சேகர் உடை வடிவமைப்பு பணிகளைச் செய்கிறார். பப்ளிசிட்டி டிசைனிங் பணிகளை சசி & சசி செய்கிறார்கள். வெங்கட்ராம் பப்ளிசிட்டி போட்டோகிராஃபராக பணியாற்றுகிறார். மக்கள் தொடர்பு பணிகளை சதீஷ், சிவா (AIM) செய்கிறார்கள்.

ரசிகர் மரணம், வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!




சென்னை எம் ஜி ஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்த, சென்னை கே கே நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ராஜா (வயது 33) அவர்கள் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். ஜெயம் ரவி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவரான  ராஜா, ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல நற்பணிகள் செய்து வந்தார். 

தனது ரசிகனின் திடீர் மரணத்தை அறிந்த ஜெயம் ரவி, ராஜாவின் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் குடும்பத்திற்கு எந்த உதவியானாலும் தான் செய்து தருவதாக உறுதியளித்தார்.

"Director's Day" celebrations on 4th May!


To celebrate the birth anniversary of our Telugu  pride , Director Dasari Narayana Rao, who directed the most feature films in the world and created a world record.. Telugu directors have declared May 4th as "Director's Day" and celebrated it like a celebration for the last 5 years!

B. Veera Shankar, president of the Telugu Film Directors' Association said that the main objective is to provide a welfare fund for the Telugu Directors' Association, and we are going to organize this year's "Directors' Day" festival in an unprecedented manner at the Lal Bahadur Stadium in Hyderabad.

Sai Rajesh, vice-president of the Telugu Film Directors' Association, disclosed the details of the festival in a special media conference (curtain raiser event) held on Monday evening. Also, another vice-president Vashishta informed that three best films from the films of new directors released this year will be selected and the directors of those films will be honored by their association with a cash prize of one lakh rupees and a memento.Also, directors Anil Ravipudi, Anudeep, Shiva Nirvana and others are fully engaged in creating many cultural programs along with their fellow director friends, the organizers said.

Famous directors Vijayendra Prasad, Relangi Narasimha Rao, N. Shankar, V.N. Aditya, Maruthi, Harish Shankar, Ajay Bhupathi, V. Samudra, G. Ram Prasad, Venky Atluri, Ram Bhimana, Anudeep, Ravipalli Rambabu and others attended the event as special guests!

In the beginning , General Secretary of Telugu Film Directors' Association Ch. Subbareddy started the meeting and invited many celebrities on the stage.

Director's Day and TFDA logos were unveiled in this meeting. Also, the official website of the Telugu Film Directors' Association was also formally launched. Besides, organizers said that entry passes for this year's "Director's Day" event will soon be sold through the "Book My Show" app.

B. Veera Shankar, president of the Telugu Film Directors' Association said that they have been implementing the free midday meal scheme for the members of their association who are facing financial difficulties since Ugadi, and they have been able to collect 35 lakh rupees in donations for the members' group insurance scheme within a short period of time.He also said that they will work tirelessly to serve their members in every way and that the funds raised through the "Directors' Day" they are celebrating on May 4 will be used only for the benefit of their members.

Director Harish Shankar said that famous actors like Chiranjeevi, Mohan Babu, Prabhas, Srikanth, Nani, Vijay Devarakonda, Ram Pothineni, Kalyan Ram, Allari Naresh, Varun Tej, Sai Durga Tej, Vishwak Sen, Bellamkonda Sai Srinivas, Navadeep, Vaishnava Tej, etc.and  many character artists, technicians will be  participating in the event.


Director N Shankar said that five years ago when he was the president of this association, he started this director's day celebration, and it is a great thing that the current executive committee is continuing the same trend in a great manner.

Directors Maruti surprised everyone by saying that hero Prabhas has announced a donation of 35 lakh rupees to the Telugu Directors' Association.

Many directors present in this meeting wished the festival a success. They praised the Telugu Film Directors' Association President B Veerashankar's team for organizing this 6th Director's Day festival so grandly to bring honor to Telugu directors worldwide.

The general secretary of this association CH Subbareddy said that this ceremony is going to be held in the presence of around 15 thousand viewers and he invited everyone who loves Telugu cinema to come and grace this festival.  Cinema people are the ones who come forward and help anyone whenever they face any difficulty. Chiranjeevi Garu, Mahesh Garu, Prabhas Garu, many great people have come forward like this. This is the truth of history. It is a film director's festival. He asked the audience to come and bless us all.

Many praised Shankar, the head of Raknas events  who announced a donation of 10 lakh rupees to this association while carrying such a big event on their shoulders.

In this program, Telugu Film Directors' Association Treasurer PV Rama Rao, Vice Presidents Sai Rajesh, Vashishta and other members of the Association's Cultural Committee and Literary Committee also participated.

International Autism Awareness!



Chennai:

On 6th April 2024 marking International Autism Awareness Month, the Honourable Governor to Tamil Nadu Shri RN Ravi visited the Aim for Seva - Swami Dayananda Krupa Home (Krupa) Campus in Sriperumbudur and inaugurated several new facilities including the residences, clinical station and training hall. He was accompanied in his tour of the facilities by Mrs. Sheela Balaji Managing Trustee, Swami Sakshatkrtananda Saraswathi and Shri. Ravee Malhotra (Trustees- Aim for Seva) and Dr. Ennapadam S Krishnamoorthy, founder- Buddhi Clinic and Trustee- Aim for Seva).  The Honourable Governor in his inspirational address highlighted the need for long term care pointing out that the question that every parent of such a child carried in their minds was “what after me?”. In this context he described the facility as pioneering and landmark in concept and lauded Swami Dayananda Saraswathiji’s vision in establishing it many decades earlier. Many more such facilities will be required in Bharath was his prediction. 

Spread over 10 acres the Krupa facility provides long term care for men with autism and other intellectual and developmental disabilities who cannot be managed at home for either medical or psycho-social reasons. The facility provides apart from food and shelter at subsidised costs, medical and psychological support and care, as well as a range of occupational and therapeutic opportunities. 

Buddhi Clinic a Chennai based integrative neuropsychiatry facility with branches in Sri Ramakrishna Hospital, Coimbatore and Apollo Specialty Hospitals, OMR, has worked with the Krupa campus for several years now. Each year all residents have undergone detailed Master Health Evaluations with a neuropsychiatry focus, and on several occasions until 2023, they have received integrative therapy for neuroropsychiatric symptoms at their doorstep, physical, psychological and holistic (AYUSH) as per the Buddhi Clinic care protocols. These efforts have also resulted in the Buddhi Book on Intellectual Disability care.  


In October 2023, Buddhi Clinic started functioning within the Krupa campus in a purpose built facility generously constructed for its integrative approach. The centre houses a range of New Neurotechnologies for neuropsychiatry - repetitive transcranial magnetic stimulation (rTMS) with transcranial direct current stimulation (tDCS), transcranial alternate current stimulation (tACS) and random noise stimulation (RNS), transcutaneous Auricular Vagus Nerve Stimulation (tA-VNS), qEEG lead neurofeedback and functional magnetic stimulation (FMS). These are supported by conventional rehabilitation (physiotherapy, occupational therapy, speech therapy, psychological and behaviour therapies and a full house of AYUSH & Naturopathy including hydrotherapy. The development has been supported by private philanthropy and the CSR of various eminent corporates. 


While all residents of Krupa receive these interventions free in turns, based on their clinical complaints, Buddhi Clinic and Swami Dayananda Krupa Care are launching an unique “transformational care program” that invites adults with autism and other neuropsychiatric conditions to stay on campus for 3-6 weeks along with their parents/ family members, in oder to achieve clinical improvements in memory, mental health and mobility (Buddhi’s 3M focus), discover and start developing vocational and occupational skills, improve activities of daily living and quality of life and reduce caregiver distress. 

This innovative program, a global first with no parallels is now available in the Krupa campus and is supported by both Aim for Seva- Swami Dayananda Krupa Home and Buddhi Seva.

டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை திறப்பு! 




சென்னை:

இன்ஃபோசிஸ் இணை நிறுவனரும், பிரதிக்ஷா அறக்கட்டளை பொறுப்பாளருமான  பத்மபூஷன் ஸ்ரீ – கிரிஸ் கோபாலகிருஷ்ணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது 2024ஐ இன்று டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவை வழங்கி கவுரவித்தது. இந்த வாழ்நாள் சாதனையாளர் விருதானது, மருத்துவ ஆராய்ச்சி மற்றும் குறிப்பாக மூளை ஆராய்ச்சியை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்பட்டது.

கிரிஸ் கோபாலகிருஷ்ணனுக்கு இந்த விருதை,  டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் டாக்டர் வி. மோகன், துணைத் தலைவர் டாக்டர் ரஞ்ஜித் உன்னிகிருஷ்ணன், நிர்வாக இயக்குனர் டாக்டர் ஆர்.எம். அஞ்சனா ஆகியோர்  முன்னிலையில் சங்கர நேத்ராலயா தலைவர் டாக்டர் டி.எஸ். சுரேந்திரன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை  சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் நீரிழிவு அருங்காட்சியகமான ‘மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை நீரிழிவு அருங்காட்சியகம்’ திறப்பு விழா நடைபெற்றது. இந்த அருங்காட்சியகம் சிறுசேரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை கிரிஸ் கோபாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

நீரிழிவு ஆராய்ச்சிக்கான உலக புகழ்பெற்ற மையமாக, மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையில் உள்ள நீரிழிவு அருங்காட்சியகம், நீரிழிவு ஆராய்ச்சியின் பல ஆண்டு கால வரலாற்றைக் கவுரவிக்கும் மற்றும் விவரிக்கும் பிரத்யேக அருங்காட்சியகமாக இருக்கும். அதன் ஆரம்பகால சிகிச்சை, கடந்து வந்த பாதை, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் உலகெங்கிலும் உள்ள மூத்த விஞ்ஞானிகளின் பிற தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஆகியவையும் இங்கு இடம் பெற்றுள்ளன.


இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் மற்றும் MDRF இன் தலைவர் டாக்டர் வி. மோகன் கூறுகையில்:

மூளை ஆராய்ச்சியில் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் மேற்கொண்ட பணியானது தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மூளை ஆராய்ச்சி மையம் போன்ற அவரது சமூக மேம்பாட்டு திட்டங்கள், நரம்பியல் பிரச்சினைகள் உட்பட பல்வேறு சுகாதார சவால்களை எதிர்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவரது பங்களிப்பை அங்கீகரிப்பதை ஒரு பெரிய கவுரவமாக நாங்கள் கருதுகிறோம். மேலும் வரும் காலங்களில் மருத்துவத் துறைகளில் இதுபோன்ற பல்வேறு சமூகநல முயற்சிகளை பலரும் மேற்கொள்வார்கள் என்று நாம் உறுதியாக நம்புவோம் என்று பேசினார்.

விருதை பெற்ற பத்மபூஷன் – ஸ்ரீ கிரிஸ் கோபாலகிருஷ்ணன் பேசுகையில்:

மருத்துவ அறிவியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி நீரிழிவு ஆராய்ச்சியில் முன்னோடியாக திகழும் டாக்டர் மோகனிடமிருந்து இந்த விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நீரிழிவு அருங்காட்சியகத்தின் திறப்பு விழா மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை போன்ற ஆராய்ச்சி நிறுவனங்களின் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நீரிழிவு ஆராய்ச்சியின் வரலாறு மற்றும் முன்னேற்றங்களை விவரிக்கிறது. இறுதியில் இந்தியாவை உயர்தர ஆராய்ச்சியில் உலகளாவிய தலைவராக மாற்றுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. ஸ்டார்ட்அப் நிறுவனங்களைப் பொறுத்தவரை இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது, அதேபோல ஆராய்ச்சி துறையிலும் இதுபோன்ற முன்னேற்றங்கள் ஏற்படும் என்று நான் நம்புகிறேன். மூளை ஆராய்ச்சி மையமானது மூளை செயல்பாட்டின் பிரச்சினைகளை கண்டறிந்து, புதுமையான சிகிச்சை முறைகளுக்கு வழி வகுக்கிறது. உயர்தர ஆராய்ச்சியில் முதல் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது என்று பேசினார்.


டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஆர்.எம். அஞ்சனா பேசுகையில்:

மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையில் திறக்கப்பட்டுள்ள நீரிழிவு அருங்காட்சியகம், இந்தியாவில் நீரிழிவு ஆராய்ச்சியின் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல். இங்கு பல ஆண்டு கால நீரிழிவு ஆராய்ச்சியின் வரலாறு மற்றும் அறிவியல் முன்னேற்றங்கள் ஆகியவை இடம் பெற்று இருப்பதோடு உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற விஞ்ஞானிகளின் தொழில்நுட்ப முன்னேற்றங்களும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன என்று தெரிவித்தார்.

டாக்டர் மோகன்ஸ் டயாபடிஸ் ஸ்பெஷாலிட்டி சென்டர் பற்றி:

1991 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சென்னையை தலைமையிடமாக கொண்டு நிறுவப்பட்டது டாக்டர். மோகன்ஸ்  நீரிழிவு சிறப்பு மையம்.  இன்று நீரிழிவு  நோயாளிகளுக்கு விரிவான சேவைகளை வழங்கும் இந்தியாவின் முன்னணி  நீரிழிவு மையமாக விளங்குகிறது. டாக்டர். மோகன்ஸ்  நீரிழிவு சிறப்பு மையம் இந்தியாவில் 50 க்கும் மேற்பட்ட நீரிழிவு மையம் மற்றும்  மருத்துவமனைகள் கொண்டுள்ளது.  நீரிழிவு நோயாளிகள் 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மேலும். 5.5 லட்சத்துக்கும் அதிகமான நீரிழிவு நோயாளிகள் ஆலோசனைக்காக டாக்டர் மோகன்ஸ் டயாபடிஸ் சென்டர் அணுகியுள்ளனர். சென்னையில் கோபாலபுரத்தில் இதன் முதன்மை மருத்துவமனை அமைந்துள்ளது.  இங்கு நீரிழிவு பராமரிப்பு,  நீரிழிவு கண் பராமரிப்பு, நீரிழிவு கால் பராமரிப்பு, நீரிழிவு இதய பராமரிப்பு, நீரிழிவு பல் பராமரிப்பு,  நீரிழிவு பக்கவிளைவுகள் தடுப்பு, உணவு ஆலோசனை, நீரிழிவு பராமரிப்பு போன்றவற்றில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆலோசனை மற்றும் சிகிச்சைக்கு 89391 10000 என்ற எண்ணை தொடர்பு கொண்டு  முன்பதிவு செய்யலாம். அல்லது  www.drmohans.com மேலும் விவரங்களுக்கு   இணையதளத்தில்  பார்க்கலாம்.

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.