திரைப்பட நட்சத்திரங்களுக்கு எதிராக கலர்ஸ் தமிழ் நட்சத்திரங்களின் மோதல்!
திரைப்பட நட்சத்திரங்களுக்கு எதிராக கலர்ஸ் தமிழ் நட்சத்திரங்கள் நேருக்கு நேர் மோதும் சுவாரஸ்யம் நிறைந்த போட்டியாக இந்நிகழ்ச்சி இருக்கும். நடிகர்களின் வேடிக்கையும், கேளிக்கையும் நிறைந்த பேச்சுக்களும், பரபரப்பான விளையாட்டுக்களும் பார்வையாளர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தவிருப்பதால் வரும் ஞாயிறு 2021 ஏப்ரல் 18 இரவு 7:00 மணிக்கு கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் (CSK) நிகழ்ச்சியை நீங்கள் ஒருபோதும் தவறவிடக்கூடாது என்பதற்கான இரு காரணங்கள் இதோ.
நட்சத்திரங்களின் அதிரடி கொண்டாட்டம்: CSK-ன் இவ்வார எபிசோட், தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளாக வளர்ந்துவரும் உபாசனா ஆர்சி, ரிஷா ஜேகப், அஷ்மிதா சிங், ஷாஷ்வி பாலா மற்றும் சாய் பிரியங்கா ரூத் ஆகியோர் அவர்களது பல்வேறு ஃபெர்பார்மன்ஸ் வழியாக பார்வையாளர்களை பரவசப்படுத்தவிருக்கின்றனர்.
அதுமட்டுமல்ல, கலர்ஸ் தமிழ் அலைவரிசையின் நெடுந்தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று மக்கள் மனங்களில் இடம்பிடித்திருக்கும் ஹிமா பிந்து, சோபனா, தர்ஷினி கௌடா, கீர்த்தனா மற்றும் சங்கீதா ஆகியோருடன் நட்புறவுடன்கூடிய மோதலில் திரைப்பட நட்சத்திரங்கள் ஈடுபடவிருக்கின்றனர். சுவாரஸ்யமான இந்த போட்டியினால் இந்த வாரஇறுதி நாளில் ஒளிபரப்பாகும் CSK இன்னும் சிறப்பானதாக இருக்கும் என்பது நிச்சயம்.
மாபெரும் விருந்து: VJ அஞ்சனா ரங்கன் மற்றும் கமல் தண்டபாணி ஆகியோர் தொகுத்து வழங்கும் இந்த வாரத்தின் CSK எபிசோட், பல்வேறு விளையாட்டுக்களின் அற்புதமான கலவையாக இருக்கிறது. ஒவ்வொரு நட்சத்திரத்தின் அறிவையும் மற்றும் சமயோஜித திறனையும் பரிசோதிப்பதாக இந்த விளையாட்டுகள் இருக்கும். எக்ஸ்பிரஷன்ஸ் சுற்றிலிருந்து மேக்-அப் சுற்று என குதூகலமான போட்டிகள் நிறைந்த இந்நிகழ்ச்சியில் இந்த நட்சத்திரங்களின் இதுவரை அறியப்படாத முகங்களை நகைச்சுவை கலந்து இந்த எபிசோட் வெளிச்சம் போட்டு காட்டும்.
கேளிக்கையும், வேடிக்கையும் நிறைந்த கலர்ஸ் தமிழ் கொண்டாட்டம் நிகழ்ச்சியை 2021 ஏப்ரல் 18 ஞாயிறு இரவு 7:00 மணிக்கு கண்டு ரசிக்க கலர்ஸ் தமிழ் அலைவரிசையை மறவாது டியூன் செய்யுங்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை கிடைக்கப்பெறுகிறது.
இயக்குநர் வெற்றிமாறனின் புதிய முயற்சி!
பா.ரஞ்சித் இயக்கிய "ரைட்டர்"
கொரோனா தீவிரம்: மக்கள் நிலை?!
தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்க அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுவரை 2 கோடியே 3 லட்சத்து 54 ஆயிரத்து 41 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதில் 9 லட்சத்து 47 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 5 லட்சத்து 71 ஆயிரத்து 717 பேர் ஆண்கள், 3 லட்சத்து 75 ஆயிரத்து 376 பேர் பெண்கள், 36 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.
இந்தியாவில் கொரோனாவை தடுப்பதற்காக மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி தொடங்கப்பட்டது.
முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், போலீசார் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அடுத்தகட்டமாக மார்ச் 1-ந்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. கூடவே 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கடந்த 1-ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. தமிழகத்தில் தினமும் 1 லட்சத்து 63 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் கடந்த மாதம் முதல் நாடுமுழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு 1 லட்சத்து 60 ஆயிரத்தை கடந்துவிட்டது.
எனவே தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்த பிரதமர் மோடி திட்டமிட்டார். இதற்காக மத்திய அரசு சார்பில் தடுப்பூசி திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரையும் தடுப்பூசி போட வைப்பதே இந்த தடுப்பூசி திருவிழாவின் நோக்கம் ஆகும்.
அதன்படி இந்தியாவில் 4 நாள் தடுப்பூசி திருவிழா கடந்த 11-ந்தேதி தொடங்கியது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு வருகிறார்கள். மத்திய அரசின் தடுப்பூசி திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இந்தநிலையில் தடுப்பூசி திருவிழாவை நடத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் தடுப்பூசி திருவிழா நடத்தி அதிகம் பேருக்கு தடுப்பூசி போட வைக்க தமிழக சுகாதாரத்துறை ஏற்பாடு செய்தது.
அதன்படி தமிழகத்தில் இன்று முதல் 16-ந்தேதி வரை 3 நாட்கள் தடுப்பூசி திருவிழா நடக்கிறது. இன்று காலை தமிழகத்தில் தடுப்பூசி திருவிழா தொடங்கியது. இந்த தடுப்பூசி திருவிழாவில் பொதுமக்கள் ஆர்வமாக பங்கேற்று தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 1900 மினி கிளினிக்குகள் மற்றும் தடுப்பூசி செலுத்த அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனைகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த இடங்களில் இருக்கும் கட்டமைப்பின் படி தினமும் சுமார் 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட முடியும். ஆனால் தற்போது 1.63 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். எனவே தடுப்பூசி திருவிழாவுக்கென்று தனியாக மையங்கள் எதுவும் திறக்கப்படவில்லை. தற்போது போடப்பட்டு வரும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களிலேயே தடுப்பூசி திருவிழாவும் நடைபெற்று வருகிறது.
தடுப்பூசி திருவிழா தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் இதுவரை 39 லட்சத்து 44 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் வேகமாக கொண்டு செல்லும் முயற்சியாகவே இந்த தடுப்பூசி திருவிழா நடந்து வருகிறது.
தடுப்பூசி போட பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் வருகிறார்கள். எனவே தடுப்பூசி திருவிழாவில் தினமும் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளோம். தடுப்பூசி திருவிழா முடிந்த பிறகும் தினமும் 2 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக்கொள்வார்கள் என்று நம்புகிறோம்.
கோவேக்சின் முதல் தவணை தடுப்பூசி போட்டு 4-வது வாரத்துக்குள் 2-வது தவணை போட வேண்டும். கோவிஷீல்டு தடுப்பூசி முதல் தவணை போட்ட பிறகு 8 வாரங்களுக்குள் 2-வது தவணை தடுப்பூசி போடப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். பொதுமக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன் கட்டாயம் தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும்.
18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதிக்குமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். அதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கர்ப்பிணியிடம் தாலி சங்கிலியை பறிக்க முயன்ற கொள்ளையன்!
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், அவரை கண்டதும் இருசக்கர வாகனத்தை திருப்பினர். ஒருவர் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து இருக்க, பின்னால் அமர்ந்து இருந்தவர் கீழே இறங்கி வந்து கீதா கழுத்தில் கிடந்த 11 பவுன் தாலி சங்கிலியை பறிக்க முயன்றான்.
இதனால் சுதாரித்துக்கொண்ட கீதா, கொள்ளையனிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது சாலையோரம் தவறி விழுந்தார். உடனே கொள்ளையன் அவர் கழுத்தில் கிடந்த சங்கிலியை பிடித்து இழுத்தான். ஆனால் கீதா, சங்கிலியை கையால் பிடித்துக்கொண்டு கூச்சலிட்டப்படி கொள்ளையனிடம் போராடினார்.
மனிதனின் மூளையில் சிப் ஒன்றைப் பொருத்தி அதன் மூலம் மனிதனையும் இயந்திரங்களையும் இணைக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதே நியூராலிங்கின் நோக்கம்.