Latest Post

“விஷால் சொன்னது கூட ஒருவகையில் சனாதானம் தான்” தயாரிப்பாளர் கார்த்தி பதிலடி



சென்னை:

Hungry Wolf Entertainment And Production LLP சார்பில் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘எனக்கு என்டே கிடையாது’. அறிமுக இயக்குநர் விக்ரம் ரமேஷ் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளதுடன் படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராகவும் நடித்துள்ளார். 

தயாரிப்பாளரான கார்த்திக் வெங்கட்ராமன் இன்னொரு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கதாநாயகியாக ஸ்வயம் சித்தா நடித்துள்ளார். மேலும் சிவகுமார் ராஜு, பிச்சைக்காரன் புகழ் முரளி சீனிவாசன், சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

தளபதி ரத்னம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கலாச்சரண் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சந்திரமுகி 2, யாத்திசை உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ஸ்டண்ட் இயக்குனர் ஓம் பிரகாஷ் இந்த படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். படத்தொகுப்பை வேல்முகனும் கலை வடிவமைப்பை சூர்யாவும் கவனித்துள்ளார். 

அக்டோபர் 6 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஆக்சன் ரியாக்சன் சார்பில் ஜெனிஷ் இந்தப்படத்தை வெளியிடுகிறார்.   இதனை முன்னிட்டு தற்போது இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் புரமோஷன் நிகழ்ச்சி சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் என யாருமே சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்காமல் படக்குழுவினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் கார்த்திக் பேசும்போது:

“அடிப்படையில் வழக்கறிஞர் என்றாலும் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தில் தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆகவும் பயிற்சி எடுத்தேன். கடந்த ஏழு வருட தவமாக தற்போது இந்த படத்தை தயாரித்துள்ளேன். இந்த ஏழு வருடங்களில் ஒவ்வொரு முறையும் இந்த படத்தை துவங்க முயற்சிக்கும்போது சில தடங்கல்கள் ஏற்பட்டு முயற்சி தள்ளிப்போனது. ஆனாலும் ‘எனக்கு என்டே கிடையாது’ என்கிற எங்கள் படத்தின் டைட்டிலை எனக்கு நானே சொல்லி உற்சாகப்படுத்திக் கொண்டேன்.


விக்ரம் ரமேஷ் என்னை சந்தித்து சொன்ன கதை தனித்துவமாக இருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்குவதற்கு முன்பாக சில விஷயங்களில் தீர்மானமாக இருந்தேன். படப்பிடிப்பில் யாரும் யாரையும் திட்டக்கூடாது. கோபத்தைக் காட்டக் கூடாது. படப்பிடிப்பில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அன்றைய தின ஊதியத்தை அவர்கள் கேட்காமலேயே தேடிச்சென்று கொடுத்து விட வேண்டும்.. எல்லோருக்கும் சரிசமமான உணவு வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தென்.. படப்பிடிப்பு நடந்த 35 நாட்களிலும் அதை இடைவிடாமல் கடைபிடித்து முதல் படத்திலேயே இதை சாதித்தும் விட்டேன்.


இந்த படத்தில் மூன்று பேருக்கு இடையே ஏற்படும் ஒரு சிறிய போராட்டம் ஒன்று இருக்கிறது. இதற்கு ஸ்டண்ட் மாஸ்டரை வைத்து படமாக்கினால் நன்றாக இருக்கும் என்பதால் ஓம் பிரகாஷை அழைத்தோம். அவர் அதை ஒரு பிரமாதமான சண்டைக் காட்சியாகவே அமைத்துக் கொடுத்தார். யாத்திசை போன்ற படத்தில் 300 பேருக்கு மேல் வைத்து சண்டை காட்சிகளை உருவாக்கியவர் வெறும் மூன்று பேருக்கான சண்டைக் காட்சியையும் அழகாக வடிவமைத்து கொடுத்தார்.


சமீபத்தில் நடிகர் விஷால் பேசும்போது:

மூன்று கோடி, நான்கு கோடி வைத்துக்கொண்டு சின்ன படங்களை தயாரிக்கிறோம் என யாரும் வர வேண்டாம் என கூறியிருந்தார். இதுவே ஒரு விதமான சனாதானம் தான்.. இப்படி சொல்ல யாருக்குமே உரிமை இல்லை” என்று கூறினார்.


தயாரிப்பாளர் கார்த்திக்கின் வழிகாட்டியாக அவருக்கு பக்கபலமாக துணை நிற்கும் சக்தி என்பவர் பேசும்போது, “எனக்குள் இருக்கும் இலக்கிய ஆர்வம் தான் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. விக்ரம் ரமேஷ் முதல் பட இயக்குநர் மாதிரியே இல்லை.. தயாரிப்பாளர் கார்த்திக்கை பொறுத்தவரை, தான் இருக்கும் இடங்களில் யாரும் மோசமான வார்த்தைகள் பேசுவதை விரும்ப மாட்டார். யாரையும் மரியாதை குறைவாக நடத்த மாட்டார். முக்கியமாக தனிநபராக இல்லாமல் எல்லோரும் கூட்டாக சேர்ந்து வெற்றி பெற வேண்டும் என விரும்புபவர். இந்த படத்தின் இசையமைப்பாளர் கலாசரணின் திறமையை பார்க்கும்போது இத்தனை நாளாக இவர் எப்படி வெளியே தெரியாமல் இருந்தார் என்கிற ஆச்சர்யம் ஏற்பட்டது” என்று கூறினார்.


இப்படத்தின் வெளியிட்டு உரிமையை பெற்றுள்ள விநியோகஸ்தார் ஜெனிஷ் பேசும்போது:

“சமீபத்திய நிகழ்வில் நடிகர் விஷால் சின்ன படங்களை எடுப்பவர்கள் தயவு செய்து சினிமாவுக்கு வர வேண்டாம் அதற்கு பதிலாக அந்த காசில் சொத்து வாங்கி போடுங்கள் என்று கூறியதை அவர் சொன்ன ஒரு அறிவுரையாக தான் நான் பார்க்கிறேன். அவர் ஒரு தயாரிப்பாளராக தனது கடந்தகால அனுபவத்திலிருந்து அப்படி கூறியுள்ளார். அவர் சொன்னது போல இன்று சின்ன பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்வதிலும் ஓடிடி தளங்களில் விற்பனைக்கு கொண்டு செல்வதிலும் நிறைய சிரமங்கள் இருக்கிறது. லட்சங்களில் எடுக்கப்பட்ட படங்களை விநியோகித்து கூட நல்ல லாபம் பார்த்தேன். அதேசமயம் சமீபத்தில் ஒரு ஐந்து கோடி பட்ஜெட்தில் எடுக்கப்பட்டு வெளியான படம் வெறும் பத்து லட்சம் தான் வசூலித்தது. டாடா, குட் நைட் போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் நல்ல வசூல் செய்தன என்பதையும் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.


ஒளிப்பதிவாளர் தளபதி ரத்னம் பேசும்போது:

“சமீப காலமாக நிறைய திரில்லர் படங்கள் வருகின்றன. இதில் என்ன புதிதாக பண்ண முடியும் என்கிற எண்ணம் பலருக்கும் ஏற்படும். ஆனால் இந்த படத்தில் திரைக்கதை புதிதாக இருக்கும். படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக்கின் குணாதிசயத்துக்காகவே இந்த படத்தில் அனைவரும் இருமடங்காக அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தோம். படத்தை எடுத்து முடித்த பின்பு அதை இசையமைப்பாளரும் எடிட்டரும் சேர்ந்து இன்னும் வேறு விதமாக மாற்றி விட்டார்கள்” என்று கூறினார்.


இசையமைப்பாளர் கலாசரண் பேசும்போது:

“இந்தப் படத்தில் கடைசி டெக்னீசியனாக இணைந்தது நான்தான்.. சொல்லப்போனால் மொத்த படத்தையும் எடுத்து முடித்துவிட்டுத் தான் என்னிடம் வந்தார்கள்.. பாடல்களுக்கு கூட மாண்டேஜ் காட்சிகளை முன்கூட்டியே எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து அதற்கு பாடல்களை உருவாக்க சொன்னார்கள். அதே சமயம் எனக்கு வேண்டிய சுதந்திரத்தையும் கொடுத்தார்கள்.


இந்த படத்தில் இரண்டு பாடல்களை பரிதாபங்கள் புகழ் கோபி மற்றும் அபிஷேக் ராஜா ஆகியோர் பாடியுள்ளனர். அபிஷேக் ராஜா என் இசையில்  ஏற்கனவே சில சுயாதீன பாடல்களை பாடியுள்ளார்” என்றார். 


கலை இயக்குநர் சூர்யா பேசும்போது:

“இந்த படத்தின் படப்பிடிப்பில் எங்களை தேடி வந்து சம்பளத்தை கொடுத்தார்கள். சொன்ன மாதிரியே 35 நாட்களில் படத்தை முடித்து விட்டார்கள். தயாரிப்பு நிறுவனம் என சொல்வதை விட அது வானத்தைப் போல குடும்பம் என்று சொன்னால் சரியாக இருக்கும்” என்று கூறினார்.


நடிகர் சிவகுமார் ராஜு பேசும்போது:

“இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தபோது எனக்கே முதலில் சந்தேகமாகத் தான் இருந்தது. ஆனால் என்னை ஊக்கப்படுத்தி உற்சாகம் கொடுத்து நடிக்க வைத்தனர். முதன்முறையாக சண்டை காட்சிகளில் நடிக்க வேண்டி இருந்தது. ரிகர்சல் பண்ணும்போது தான் சினிமா என்பது விளையாட்டு கிடையாது என்பதை உணர்ந்தேன்” என்று கூறினார். 


இயக்குநர் விக்ரம் ரமேஷ் பேசும்போது:

“நிறைய தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்றுள்ளேன். ஆனால் இது ஒளிவு மறைவில்லாத ஒரு நிறுவனம். கதையை சொல்வதற்கு முன்பாகவே, இதுதான் பட்ஜெட்.. நான் தான் ஹீரோவாக நடிக்கப் போகிறேன். என்னுடைய நண்பர்களும் இதில் என்னுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என முதலிலேயே கூறிவிட்டேன். தயாரிப்பாளரும் எந்த நிபந்தனையும் விதிக்காமல் சந்தோஷமாக ஒப்புக்கொண்டார். அதுமட்டுமல்ல ரொம்பவும் தாமதப்படுத்தாமல் கதை சொன்ன ஒரு வாரத்திலேயே படத்தையும் துவங்கி விட்டார்கள். 

இந்த படத்தில் மஸ்தான் கதாபாத்திரத்தில் சிவகுமார் ராஜு நடித்துள்ளார். இவர் நிறைய குறும்படங்களில் நடித்த அனுபவம் கொண்டவர் இவருக்கு முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் பிரபலமான இன்னொரு நடிகரை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தோம் ஆனால் கடைசி நேரத்தில் இவரே நடிக்கட்டும் என முடிவெறுத்தோம்.  இந்த படத்திற்கு பாடல்கள் சிச்சுவேஷன் சொல்வதற்கு பதிலாக முழு படத்தின் கதையும் சொன்னேன். பாடலாசிரியர் ஸ்ரீனி அதற்கு ஏற்றார்போல அருமையான பாடல்களை எழுதிக் கொடுத்தார். 

ஒரு படத்துக்கு தேவை நல்ல கதை.. ஒரு நல்ல தயாரிப்பு நிறுவனம்.. இவை இரண்டும் இருந்தால் யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம். இந்த படம் பார்த்துவிட்டு ரசிகர்கள் வெளியே வரும்போது படம் நல்லா இருக்கு என்று மட்டுமே சொல்வார்கள்.  இந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் படத்தின் கதாநாயகி ஏன் கலந்து கொள்ளவில்லை என்றால், அவரை எங்களால் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. இந்தியன் 2, கேப்டன் மில்லர் என பெரிய படங்களில் அவர் பிசியாக இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.. ஒருவேளை இனி பெரிய படங்களில் தான் நடிப்பார் போல தெரிகிறது.  

இந்த படத்தில் நடித்துள்ள சேகர் என்கிற கதாபாத்திரம் ஒரே நாளில் பலவிதமான பிரச்சனைகள சந்திக்கும்... அவரது வாழ்க்கையும் இந்த படத்தின் கதையும் முடிந்து விடும் என நினைக்கும் நேரத்தில் மீண்டும் புதிதாக இன்னொரு விஷயம் தொடரும். அதனால் தான் எனக்கு எண்டு கார்டே இல்லை என்கிற டைட்டிலை இந்த படத்திற்கு வைத்தோம்: என்று கூறினார்.

Paterson Cancer Center (PCC) and Cancer Alleviation Foundation (CALF) organised “Rose day”


Chennai: 

Paterson Cancer Center (PCC) and Cancer Alleviation Foundation (CALF) organised Rose Day. The name Rose Day is evolved from the name of the minor girl Melinda Rose. It is conducted, every year on the 22nd of September all over the world. Paterson Cancer Center, a comprehensive care centre, conducts the program in a different way. This year is the 21st year of Cancer patients Rose Day function at Paterson cancer center. At the event, ambassadors spoke about the love, care and confidence that they received from their dear ones as they battled cancer. The programme aimed at instilling self-confidence in cancer patients by making them comprehend that it is curable. As a part of Rose Day celebration, ambassadors and their relatives shared their experience at the hospital and highlighted the support from doctors and relatives. Dr S. Vijayaraghavan, Managing Director of Paterson Cancer Cancer welcomed the gathering. Many ambassadors emphasised that cancer was curable. The event also saw many ambassadors interacting with cancer patients. All patients were given a daily need kit bag as part of this programme.
 
Shri.K.Gurumurthy was the chief guest who inaugurated the Rose day event and addressed to the gathering with the importance of faith in God, faith in Doctor and follow up. Whatever they instruct to get out of any sickness for that matter including Cancer.

Shri. Krishnaswamy Culli, HDFC BANK -Senior Vice President spoke about importance and benefits of health Insurance. He also insisted that after he took over as Vice present head in the system called CLUSTER. He was focusing on health insurance and also has developed a separate package for Cancer patient. The details of which is propagated through their teams to their clients.

Shri.Dr.Amal Raj I.P.S.,Commissioner of Police, Tambarm, in his speech mentioned about the dedicated participation for the Paterson Cancer Center Team headed by the Chief and the Managing Director Dr.S.Vijayaraghavan and wished the team to continue with the vision of a “Cancer Free Society” as envisaged by Dr. APJ Abdul Kalam.

Shri. Archith Madhan Bob representing Shri. Madhan Bob, spoke about the importance of eradication of the usage of plastics and social hygiene which are the causes low immunity and infections by his own song “Thuppuramani” was played after Shri. Madhan Bob sent his blessings through Audio.

Star speaker and well known internationally as “Motivational Speaker” Shri.Dr.A.Kaliyamurthy former superintendent of police, brought out the very essential concept of Indian family harmony of inter-person relationships as part of our heritage and the importance of respecting the elders in the family and not allowing them to go to homes. In this vivid speech with multiple anecdote and narration kept the whole audience dumb bound and stunned them for 45 mins through his eloquence and the flow of both English and Tamil vernacular was the height of the event.

Shri.PT Govindarajan, the Trustee of Cancer Alleviation Foundation (CALF) gave Vote of thanks and all the dignitaries took enthusiasm to distribute the Daily need kit bag. There were more than 200 participants in the hall.

VIDEO HERE:

Promed Hospital Organised Free Heart Checkup Camp!



Chennai: 

Promed Hospital, a leading multispecialty hospital at Kottivakkam, Chennai organised a Free Heart Checkup Camp for the Chennai Police Personnel, starting from 23rd September till 29th September 2023 at Promed Hospital. Mr. R Sudhakar, additional commissioner of police (Traffic) Inaugurated the camp today and flagged off the Human Chain to spread the message – Walk For your Heart, walk for a Healthier You to mark World Heart Day 2023 celebration. The Human Chain was held in association with Chiranjeevi and Mary Educational and Charitable Trust, Chennai. 

More than 150 participants, including school students and hospital staffs, held placards and formed a 2km human chain that started from Promed hospital, Kottivakkam and extended till Thiruvanmiyur (RTO). As part of the World heart day awareness program, Mission unblock chennai, a comprehensive program to increase heart health awareness among public through social media has been launched by Dr. Arun Kalyanasundaram. 


World Heart Day is an opportunity for everyone to stop and consider how best to take care of their hearts. India has witnessed a spike in heart disease and heart related deaths. People can optimize their heart health by adopting a healthier lifestyle and doing age-appropriate guideline-based health checkups. It is important that people know their health status and take ownership of the same. The pillars of a healthy lifestyle include a combination of exercise, dietary changes, sleep, avoiding tobacco and alcohol, stress management along with regular checkups – this can ensure a healthy and vibrant life.” said Dr. Arun Kalyanasundaram, Chief Cardiologist, Promed Hospital.

 Traffic policemen work 24x7 to keep our roads safe and ensure we reach home safely to our kin every day. They should have a balanced diet and exercise to avoid heart diseases,” said Mr. R. Sudhakar, Additional commissioner of police (Traffic), Chennai. Mr R Sudhakar lauded Promed’s Brave Hearts initiative to conduct a free heart camp and urged The Chennai Police Personnel to take an active role in the camp and monitor heart health.

The human chain's primary goal is to increase public awareness of cardiovascular disease, its prevention, and the effects it has on individuals. Heart attacks among young people have become more common in recent years. Previously thought to only affect older people, heart attacks now affect a significant number of younger persons, including those even in their 20s. This makes it crucial to educate young adults about maintaining heart health, said Dr Spoorthi Arun, Managing Director, Promed Hospital.

VIDEO HERE:

திருப்பூர் மாநகரில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம்!



திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில்  லட்சகணக்கான மக்கள் கலந்துகொள்ள, 32 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வெகு கோலாகலமாக  நடைபெற்றது. இவ்விழாவினில்  இந்து முன்னணி மாநில செயலாளர் M.சேவுகன் அவர்கள் தலைமையேற்று, கொடி அசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் S.G.சூர்யா அவர்கள் மற்றும் இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் J.S.கிஷோர்ஜி அவர்கள் கலந்து கொண்டார்கள்.

திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே  துவங்கி நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில், திரூப்பூர் மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து லட்சக்கணக்கிலான மக்கள் வெகு உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

இவ்விழாவினில் பல வண்ணங்களில், பல வித தோற்றங்களில், பல அளவுகளில்  அலங்கரிக்கப்பட்ட,  2000க்கும் மேற்பட்ட, விநாயகர் சிலைகள் கலந்து கொண்டன. கண்காட்சி போல,  பெரும் கொண்டாட்டமாக நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பக்தியுடனும், உற்சாகத்துடனும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.  

இவ்விழாவினில் S. செந்தில்குமார் ஜி,  மாநிலச் செயலாளர் திருப்பூர் மாவட்டம்,  கோட்டைச்செயலாளர் மோகன்ஜி,  திருப்பூர் மாவட்ட துணைத் தலைவர் சாமுண்டி ஜி,  திருப்பூர் மாவட்ட செயலாளர் சிவா ஆகியோர் கலந்துகொண்டு ஊர்வலத்தை ஒருங்கிணைத்து வழிநடத்தினர்.

டாக்டர். மேத்தா மருத்துவமனையில் லேசர் சிகிச்சை அறிமுகம்!



சென்னை: 

90 ஆண்டுகால மருத்துவச் சிறப்புகளைக் கொண்ட முன்னணி மருத்துவ நிறுவனமான டாக்டர் மேத்தாஸ் ஹாஸ்பிடல்ஸ், புரோஸ்டேட் (BPH) விரிவாக்கத்திற்கான அதிநவீன மேம்பட்ட லேசர் சிகிச்சையைக் அறிமுகப்படுத்தியது.

புரோஸ்டேட் விரிவாக்கம் அல்லது ப்ரோஸ்டேடிக் ஹைப்பர் பிளாசியா (BPH), நீண்ட காலமாக எண்ணற்ற நபர்களை பாதிக்கும் ஒரு மருத்துவ பிரச்சனையாக உள்ளது. வழக்கமாக அளிக்கப்படும் பாரம்பரிய சிகிச்சை முறைகள், பயனுள்ளவையாக இருந்தாலும், நோயாளிகளுக்கு அதிக சிரமம் மற்றும் அதிக குணமடையும் நேரத்தை கொண்டுள்ளன. லேசர் சிகிச்சை மூலம், டாக்டர் மேத்தா மருத்துவமனை சிகிச்சைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

"லேசர் சிகிச்சையை புரோஸ்டேட் விரிவாக்க நோயிற்கு ஒரு திருப்புமுனையாக நாங்கள் கருதுகிறோம்," என்று டாக்டர் கபிலன் சாமிநாதன் குறிப்பிட்டார், சிறுநீரக மருத்துவ நிபுணர் மற்றும் டாக்டர் மேத்தா மருத்துவமனையின் சிறுநீரக துறை தலைவர். "நோயாளிகளின் பராமரிப்பை மேம்படுத்துவதில் மருத்துவமனையின் அர்ப்பணிப்பு  இந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில் வளர்ச்சியை எட்டியுள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.

மேலும், அவர் வழக்கமான சிகிச்சை முறை - புரோஸ்டேட்டின் டிரான்ஸ்யூரெத்ரல் ரெசெக்ஷன் (TURP), நீண்ட காலமாக புரோஸ்டேட் விரிவாக்கத்திற்கு சிகிச்சையளிப்பதற்கான தங்கத் தரமாகக் கருதப்பட்டது. Open புரோஸ்டேடெக்டோமி தவிர்ப்பதற்கு லேசர் சிகிச்சை முறை தேவைப்படுகிறது. இந்த மேம்பட்ட தொழில்நுட்பம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு துல்லியமான சிகிச்சையை வழங்குகிறதுஇதன் விளைவாக குறைக்கப்பட்ட அசௌகரியம், விரைவான மீட்பு, குறைவான இரத்தப்போக்கு, குறைவான ஆபத்து, குறுகிய மருத்துவமனையில் தங்குதல் மற்றும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்திற்கு பங்களிக்கிறது.

மருத்துவ குழும தலைவர் டாக்டர் சரவண குமார் கூறுகையில்:

"இந்த புதிய தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் 24x7 கால் சென்டர் சமீபத்தில் தொடங்கப்பட்டதன் மூலம், டாக்டர் மேத்தாஸ், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் லட்ச கணக்கானவர்களுக்கு தொழில்நுட்பத்துடன் கூடிய அர்த்தமுள்ள சுகாதார சேவைகள் மூலம் மருத்துவ சிறப்பையும் விளைவுகளையும் வழங்குகிறது."

VIDEO HERE:

சினிமாவே ஒரு ஏமாற்று வேலைதான் : இயக்குநர்  பேரரசு பேச்சு!


சென்னை:

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே. ராஜன், இயக்குநர் பேரரசு, இயக்குநர் கேபிள் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த 'ஐமா 'திரைப்படத்தில்

யூனஸ் ,எல்வின் ஜூலியட், அகில் பிரபாகரன் , ஷாஜி, ஷீரா, மேகா மாலு மனோகரன், படத்தைத் தயாரித்துள்ள சண்முகம் ராமசாமி ஆகியோர் நடித்துள்ளனர்.அறிமுக இயக்குநர் ராகுல் ஆர் .கிருஷ்ணா இயக்கி உள்ளார்.ஒளிப்பதிவு விஷ்ணு கண்ணன், எடிட்டிங் அருண் ராகவ், இசை கே .ஆர். ராகுல்.பாடல்கள் அருண் மணியன். தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் (Tamil Exotic Films )நிறுவனம் சார்பில் சண்முகம் ராமசாமி

விழாவில் தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி பேசும்போது,

'நான் ஐடி துறையில் இருந்தவன்.எனக்கு சினிமாவின் மீது ஆர்வமுண்டு. நடிப்பின் மீது மோகம் இருந்தது. ஒரு நடிகராக நான் யாரிடமும் போய் வாய்ப்பு கேட்க முடியாது.அது எப்படி என்று எனக்குத் தெரியாது. எனவே நானே ஒரு படத்தைத் தயாரித்து அதில் நடிப்பதாக முடிவு எடுத்தேன். அப்படித்தான் இந்த 'ஐமா' படம் உருவானது. இதில் இயக்குநர் சொன்ன கதை எனக்குப் பிடித்திருந்ததால் தயாரிக்க ஒப்புக்கொண்டேன். நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்கள் பணிகளைச் சிறப்பாக செய்து ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.இந்தப் படத்தைத் தயாரித்ததன் மூலம் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். இன்று திரைப்படம் எடுப்பதை விட வெளியிடுவது சிரமமாக உள்ளது. படத்தைப் போட்டுக் காட்ட அழைத்தால்கூட யாரும் படம் பார்க்க வருவதில்லை.

இப்படிப்பட்ட இந்த நிலைமை  சீரடைய வேண்டும் .ஊடகங்கள் இந்தப் படத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்" என்றார்.

இந்தப் படத்தை வெளியிடும் 'ஆக்சன் ரியாக்ஷன்' விநியோக நிறுவனத்தின் ஜெனிஷ் பேசும்போது,

"சிறு முதலீட்டுப் படங்களுக்கு நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம் .ஊடகங்கள் என்றும் சிறு முதலீட்டுப் படங்களையும் நல்ல முயற்சிகளையும் கைவிட்டதில்லை. அந்த நம்பிக்கையில் இந்தப் படத்தை வெளியிடுகிறோம்" என்றார்.

தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே.ராஜன்  பேசும் போது,

"சிறு முதலீட்டுப் படங்கள் தான் திரையுலகை என்றும் வாழவைத்துக் கொண்டிருக்கின்றன. அதன் மூலம் தான் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள்  வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .கடந்த இரண்டு ஆண்டுகளை எடுத்துக் கொண்டால் தோராயமாக 320 படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.அவற்றில் 100 முதல் 150 படங்களுக்கு ஆடியோ வெளியீட்டு விழாக்கள்  நடந்துள்ளன. ஆனால்  சுமார் 70 படங்கள் தான் சிரமப்பட்டு வெளி வந்திருக்கின்றன. வெளியான பல படங்களின் தயாரிப்பாளர்கள் காணாமல் போய்விட்டார்கள். மீதமுள்ள 250 லிருந்து 300 படங்கள் வெளி வராமல் சிரமப்பட்டுக் கொண்டுள்ளன. இந்த வகையில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் இந்தப் படங்களில் முடங்கி உள்ளது.

நான் நிதி உதவி செய்த ஒரு படத்திற்கு 12 கோடி செலவானது .ஆனால் அதன் வெளி மொழி உரிமை போன்றவை ஆறு கோடிக்கு விற்பனையானது. இருந்தாலும் கூட அந்தப் படத்தை வெளியிட முடியவில்லை .இதுதான் இன்றைய நிலைமை .சிறு முதலீட்டுப் படங்கள் சிரமம் இன்றி  வெளிவர வேண்டும். அப்படி வெளிவந்தால் அந்தக் தயாரிப்பாளர் மீண்டும் படம் தான் எடுப்பார் .ஆனால் பெரிய படங்களின் மூலம் வரும் லாபம் மீண்டும் சினிமாக்கு வருமா என்றால்,தெரியாது. இன்று 'ஜெயிலர்' படம் வெற்றிகரமாக ஓடியுள்ளது.  ரஜினிகாந்த் பெரிய நட்சத்திர நடிகர்தான் சந்தேகம் இல்லை. இருந்தாலும் அவருக்குக் கூட மலையாளத்திலிருந்து மோகன்லாலும் கன்னடத்தில் இருந்து சிவராஜ்குமாரும் வந்து நடிக்க வேண்டி உள்ளது. இப்படி இன்று சினிமா மாறி உள்ளது.  இப்போதெல்லாம்  வெளி மாநிலங்களில் இருந்து வந்து தமிழ்நாட்டில் படம் எடுக்கிறார்கள். அவர்களை நான் வரவேற்கிறேன். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது,

''இந்த ஐமா  படத்தில் பத்து பாடல்கள் என்ற போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது .அதற்கு ஒரு தைரியம் வேண்டும். அதைப் படத்தில் சரிவர வைத்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்.


இந்தப் படத்தில் கதாநாயகன் பேசும்போது கண்ணாடி உடைக்கும் காட்சியில் நிஜமாகவே நடித்தேன் என்றார் .சினிமாவே ஒரு ஏமாற்று வேலைதான்.உண்மை போல நம்ப வைக்க வேண்டும் அவ்வளவுதான். கத்தியால் குத்தும் காட்சி என்றால் நிஜமாகவே குத்தி விட முடியுமா? அப்படி எல்லாம் அபாயகரமான காட்சிகளில்  நடிக்கக் கூடாது .அப்படி டூப் இல்லாமல் அபாயகரமான காட்சியில் நடித்துவிட்டு என்னுயிர்த் தோழன் பாபு தன் 30 ஆண்டுகள் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு இப்போது இறந்து விட்டார். இதை நாம் கவனிக்க வேண்டும்.எப்படி வேண்டுமானாலும் இப்போதுள்ள  தொழில்நுட்ப வசதிகளில் எடுக்க முடியும்.எவ்வளவோ படங்களில் எதார்த்தம் மீறி காட்சிகள் வருகின்றன. சினிமாவே ஒரு ஏமாற்று வேலைதான்.தெருவில் கழைக் கூத்தாடி செய்யும் ரிஸ்கைக் கூட சினிமாவில் பெரிய கதாநாயகர்கள் கூட செய்வதில்லை.அதற்கு அவசியமும் இல்லை. ஏனென்றால் அந்த அளவிற்கு வசதிகள் வந்து விட்டன. மெதுவாக நடந்து வருவதைக் கூட ஓடி வருவது போல் எடுக்க முடியும்.

தமிழ்த் திரைப்படங்கள் பெரிய பெரிய கதாநாயகன் நடிக்கும் படங்கள் கூட செட் போட்டு வெளி மாநிலங்களில் படமாக்கப்பட்டு வருகின்றன.அந்தந்த மாநிலத்தில் உள்ள தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். நம் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களுக்கு அதில் பங்கேற்க வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. எங்கள் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களையும் கொஞ்சம் கவனியுங்கள் என்று நாங்கள் சொல்கிறோம்.இது பற்றி இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தனது ஆதங்கத்தை வெளியிட்ட போது அதைத் திரித்து திசை திருப்பி விட்டார்கள். இதைத் தவறாகச் சிலர் புரிந்து கொள்கிறார்கள். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்" என்றார்.

இயக்குநர் கேபிள் சங்கர் பேசும்போது,

"சிறு முதலீட்டுப் படங்களுக்கு ஆக்சன் ரியாக்சன் விநியோகஸ்தர் ஜெனிஷ் மிகவும் உதவியாக இருக்கிறார் .சிறு முதலீட்டுப் படங்களை வெளியிட்டு பெரிய நிறுவனமாக அவர் உயர்ந்திருக்கிறார். வளர்ந்த பிறகும் அவர் எப்போதும் தனது பணியைத் தொடர வேண்டும் "என்றார்.

இவ்விழாவில் படத்தின் கதாநாயகன் யூனஸ்,கதாநாயகி எவ்லின் ஜூலியட் இசையமைப்பாளர்  கே. ஆர். ராகுல் ,ஒளிப்பதிவாளர் விஷ்ணு கண்ணன் உள்ளிட்ட படக்குழுவினரும் பேசினார்கள்.

மூளையில் உள்ள 2 கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதனை!



சென்னை: 

சென்னையில் உள்ள பன்னோக்கு மருத்துவமனைகளில் ஒன்றாக திகழும் பெரும்பாக்கத்தில் உள்ள கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை மிகவும் சிக்கலான உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய 2 மூளைக் கட்டிகளை சென்னையைச் சேர்ந்த 38 வயது நோயாளிக்கு அகற்றி சாதனை படைத்துள்ளது.

இம்மருத்துவமனையின் மிகவும் நிபுணத்துவம் வாய்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு, மிரர் இமேஜ் பாணியில் பேச்சாற்றலைக் கட்டுப்படுத்தும் மூளையின் இடது மற்றும் வலது பக்கங்களில் உள்ள 2 கட்டிகளை திறமையாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உள்ளனர்.

பொதுவாக, இந்த அறுவை சிகிச்சையானது மிகவும் ஆபத்தானதாகும். ஏனெனில் இந்த அறுவை சிகிச்சையின்போது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அது நோயாளிக்கு பார்வை இழப்பை ஏற்படுத்தும். இது குறித்த பிரச்சினைகள் அவருக்கும் அவரது குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சை மிகவும் வெற்றிகரமான நடந்துள்ளது. இரண்டு கட்டமாக நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை மொத்தம் 10 மணி நேரம் நடைபெற்றது.

சென்னையைச் சேர்ந்த 38 வயது இளைஞர் ஒருவருக்கு மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களில் மிகவும் அரிதான வகையில் இரு கட்டிகள் இருந்தன. இது 5 x 7 செ.மீ. அளவு இருந்தது. இந்த கட்டிகள் மூளையின் பெருமூளைப் பகுதியில் வலது மற்றும் இடது பக்கத்தின் பார்வை சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்தது. இந்த இளைஞர் 3 மாதமாக பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சினையுடன் கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அவர் சிகிச்சைக்காக கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனைக்கு வந்தார். 

அவருக்கு இம்மருத்துவமனையின் டாக்டர். நைகல் பி சிம்ஸ் மற்றும் அவரது குழுவினர் மருத்துவ பரிசோதனை மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை போன்றவற்றை மேற்கொண்டனர். அப்போது அவருக்கு மூளையின் வலது மற்றும் இடதுபுறம் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் இந்த சிக்கலான அறுவை சிகிச்சை குறித்து அவரிடமும் அவரது குடும்பத்தினரிடமும் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு மைக்ரோநியூரோசர்ஜரி, நேவிகேஷன் மற்றும் இன்ட்ராஆபரேட்டிவ் நியூரோமோனிட்டரிங் ஆகிய உயர்நிலை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த அறுவை சிகிச்சையானது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்றும் அவருக்கு தெளிவாக எடுத்துக்கூறப்பட்டது. கட்டிகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டு இருப்பதன் காரணமாக பார்வை மோசமடைவது மற்றும் பிற பிரச்சினைகளும் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில், முதலில் நோயாளிக்கு பெருமூளையின் வலது புறத்தில் இருந்து கட்டி அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய நிலையில் அவரது உடல்நிலை சீரற்ற நிலையில் இருந்தது. பின்னர் 5 நாட்களுக்கு பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் இரண்டு வாரங்களுக்குப் பிறகு நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சைக்கு அவர் தயாரான நிலையில், அவரது இடது பெருமூளையில் உள்ள கட்டி அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு நோயாளி நன்கு குணமடைந்ததோடு, மேலும் அவரது பார்வையில் 80 முதல் 90 சதவிகிதம் வரை நல்ல முன்னேற்றம் இருந்ததோடு, இரண்டு கண்களிலும் எந்தவித பிரச்சினையும் இல்லாத நிலையில் அவர் 4 நாட்களுக்கு பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சை குறித்து கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி அலோக் குல்லர் கூறுகையில், இந்த கடினமான அறுவை சிகிச்சையின் முடிவில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது இந்தியாவின் முதல் திருப்புமுனை அறுவை சிகிச்சையாகும். மேலும் எங்கள் மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான இந்த அறுவை சிகிச்சையை செய்திருப்பது குறித்து நாங்கள் பெருமை அடைகிறோம். எங்கள் மருத்துவர்களின் சிறந்த அறிவு மற்றும் அறுவை சிகிச்சை திறன்கள், சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்கள், இந்த இளைஞரை இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப வைத்துள்ளது என்று தெரிவித்தார். 

இது குறித்து மூத்த ஆலோசகரும், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் நைகல் பி சிம்ஸ் கூறுகையில்:

இந்த அறுவை சிகிச்சை என்பது அதிக ஆபத்தை உள்ளடக்கியது, ஏனெனில் இந்த செயல்முறையானது மண்டை ஓட்டை இருபுறமும் திறப்பது மற்றும் பார்வை சம்பந்தப்பட்ட மூளையின் பகுதியில் இருந்து கட்டியை அகற்றுவது போன்ற சிக்கல் நிறைந்த அறுவை சிகிச்சையானது நோயாளிக்கு பார்வை இழப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளன. மூளையின் முக்கியமான பகுதியில் மூளையின் இருபுறமும் உள்ள இரண்டு கட்டிகளை அகற்றுவது என்பது மிகவும் சிக்கலானதாகும். இந்த நிலையில் நாங்கள் மேற்கொண்ட இந்த அறுவை சிகிச்சையானது நிச்சயமாக எங்களுக்கான ஒரு திருப்புமுனையாக அமைந்ததோடு எங்கள் மருத்துவமனையில் உள்ள நவீன மருத்துவ தொழில்நுட்பங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் உள்ளது என்று தெரிவித்தார். 

"இது எனக்கு ஒரு புதிய ஆரம்பம், வாழ்க்கையையும் அதன் அனைத்து சாத்தியங்களையும் தழுவுவதற்கான வாய்ப்பு. திறமையான மருத்துவக் குழுவும் அவர்களின் அர்ப்பணிப்பும் இதை சாத்தியமாக்கியது, இந்த அறுவைசிகிச்சை எனக்கு வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பை அளித்துள்ளது, ," என்று நோயாளி கூறினார்.

இது குறித்து இம்மருத்துவமனையின் நரம்பியல் துறை மற்றும் கால்-கை வலிப்புக்கான மேம்பாட்டு மையத்தின் இயக்குனர் டாக்டர் தினேஷ் நாயக் கூறுகையில்:

இந்தியாவைப் பொறுத்தவரை 1 லட்சம் பேரில் 5 முதல் 10 பேருக்கு மூளையில் கட்டி ஏற்படுகிறது. மூளையின் எந்தப் பகுதி பாதிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து மூளைக் கட்டியின் அறிகுறிகள் வேறுபடுகின்றன. இதற்கு முதல் மற்றும் மிகவும் பொதுவான அறிகுறி கடுமையான மற்றும் நீண்ட கால தலைவலியாக இருக்கலாம், மேலும் அடிக்கடி வாந்தி ஏற்படும். வலிப்பு, பலவீனம் அல்லது கைகால்களின் ஒருதலைப்பட்ச முடக்கம், பார்வை, செவித்திறன் பாதிப்பு அல்லது பேச்சாற்றல், நினைவாற்றல் பிரச்சினைகள் அல்லது செயல்பாடுகளில் மாற்றங்கள் ஆகியவை கூடுதல் அறிகுறிகளாகும். மூளைக் கட்டியை உறுதிப்படுத்த, நோயாளிகள் மூளையை எம்ஆர்ஐ அல்லது சிடி ஸ்கேன் செய்ய வேண்டும். கிரானியோட்டமி மற்றும் ட்யூமர் எக்சிஷன் எனப்படும் அறுவை சிகிச்சை, பல்வேறு வகையான மூளைக் கட்டிகளுக்கான முதன்மையான சிகிச்சை முறையாகும் என்று தெரிவித்தார்.

VIDEO HERE:

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.