Latest Post

Apollo Hospitals Achieves 8,000+ Robotic Surgery Milestone, Building Tamil Nadu's Most Advanced Surgical Ecosystem



Chennai: 

Apollo Hospitals announced the successful completion of over 8,000 robotic-assisted surgeries across multiple specialities, marking a significant milestone in its commitment to precision-led, patient-centric surgical care. With this achievement, Apollo Hospitals has established Tamil Nadu's largest multi-platform robotic surgery programme and the most comprehensive robotic surgical ecosystem in Chennai, significantly expanding access to advanced surgical precision for patients across the state.

Apollo Hospitals has built a uniquely integrated robotic ecosystem by deploying advanced platforms, including the da Vinci Xi, MAKO, HUGO RAS, SSI Mantra, and CMR surgical systems. This multi-platform approach enables surgeons to select the most appropriate technology based on clinical indication, procedural complexity, and individual patient needs, thereby enhancing surgical accuracy, safety, and outcomes.

Dr Preetha Reddy, Executive Vice Chairperson, Apollo Hospitals Enterprise Limited, said, "At Apollo Hospitals, technology is never the end goal. It is a way to achieve improved outcomes and enhance patient experiences. As we expand our robotic footprint, our focus remains firmly on precision, safety, and patient-first care. Crossing 8,000 robotic surgeries reflects our belief that innovation must be clinically meaningful, responsibly scaled, and accessible. Robotics empowers our surgeons with greater precision and confidence, while enabling patients to recover faster and safer."

Ms Sindoori Reddy, Director - Strategy, Apollo Hospitals, added, "Our robotic program is built on a simple yet powerful principle of using the right technology for the right patient, every time. By investing across multiple platforms, we have created a future-ready surgical ecosystem that supports surgeons, improves consistency, and delivers measurable outcomes. The true impact lies not in the numbers alone, but in improved recovery, safety, and quality of life for our patients."

Robotic-assisted procedures at Apollo Hospitals span a wide range of specialities, including Urology, Gynecology, General and Laparoscopic Surgery, Colorectal and Thoracic Surgery, Orthopedics and Joint Replacement, Oncology, and Cardiac Sciences. This program provides a hospital-wide strategy where advanced technology, standardised clinical protocols, and continuous outcome monitoring are seamlessly integrated into everyday surgical practice.

To date, over 8,000 robotic surgeries have been performed across specialities, with 30–40% of complex procedures in select departments now conducted robotically, among the highest adoption rates in the state. Clinical outcomes from robotic-assisted procedures indicate up to 50% lower blood loss, a 1–2-day shorter hospital stay, and faster recovery and return to daily activities, depending on the procedure, compared to conventional surgery.

Apollo Hospitals has also made sustained investments in surgeon training, credentialing, and continuous outcome tracking, resulting in one of the largest and most experienced robotic surgical teams in the state. Robotic surgery volumes continue to grow steadily, driven by strong clinical outcomes and increasing patient confidence.

As part of its ongoing commitment to awareness and understanding of next-generation surgical technologies, Apollo Hospitals hosted a robotic showcase open to the public, with a special focus on medical college students. Doctors, students, influencers, and media representatives interacted with surgeons and experienced the robotic platforms firsthand, reinforcing Apollo's commitment to education, transparency, and innovation in healthcare.


5 பேருக்கு ‘ராஜஸ்தானி-தமிழ் சேவா’ விருதுகள்: நீதிபதி மகாதேவன் வழங்கினார்!



சென்னை: 

தமிழகத்தின் சமூக, கலாச்சாரம் மற்றும் கட்டமைப்பு வளர்ச்சிக்கு தங்களது தன்னலமற்ற சேவையால் சிறந்த பங்களிப்பை வழங்கிய தனிநபர்கள், நிறுவனங்களை கவுரவித்து ‘ராஜஸ்தானி - தமிழ் சேவா’ விருதுகளை ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு வழங்கி வருகிறது.

இந்த ஆண்டுக்கான விருதுக்கு தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சுதாசேஷய்யன், மேற்கு மாம்பலம் பொது சுகாதார மையத் தலைவர் சுவாமி நாதன் ஐசன்ஹோவர், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தலைமை ஓதுவார் பி.சற்குருநாதன், பயிர் அறக்கட்டளை தலைவர் வி.ஆராயி, வழக்கறிஞர் கே.ஆர்.ராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். விருதாளர்களை ‘துக்ளக்’ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, ‘இந்து’ என்.ரவி, பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, பகவான் மகாவீர் அறக்கட்டளை நிறுவனர் சுகல்சந்த் ஜெயின் ஆகியோர் அடங்கிய நடுவர் குழு தேர்வு செய்திருந்தது.

இந்நிலையில், விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. உச்ச நீதிமன்றநீதிபதி ஆர்.மகாதேவன் தலைமை வகித்து, விருதாளர்களுக்கு ‘ராஜஸ்தானி - தமிழ் சேவா’விருதுகள், ரூ.2 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: எப்படி வேண்டுமானாலும் பயணிக்கக்கூடியது வாழ்க்கை. இதில் நமக்கு தேவையான அனைத்து விதமான வசதிகளையும் தேடிக் கொள்ளலாம். பதவி, பணம், கவுரவத்தால் நம்மை உயர்த்திக் கொள்ளலாம்.ஆனால், அனைத்தும் ஒருநேரம் நம்மைவிட்டு விலகிச் செல்லும்.

அவை அனைத்தும் விலகிய பின்னால், நம் நிலைமை இதுதான் என்பதை இன்றே உணர்ந்து பாருங்கள் என்று, தங்களது செயல்கள், வார்த்தைகள், பேச்சுகள், வாழ்க்கை முறை மூலம் நமக்கு எடுத்துக்கூறி, இந்த மண், மொழி, நாட்டை தங்களது பணிகளால் சிறப்பித்துள்ளனர் இந்த விருதாளர்கள். இவர்களை கவுரவிப்பதன் மூலமாக, இப்படிப்பட்ட பணிகள் சிறக்க வேண்டும் எனும் செய்தியை ராஜஸ்தானி அசோசியேஷன் பதிவு செய்துள்ளது என்று அவர் பேசினார். ‘இந்து’ என்.ரவி பேசும்போது, “ராஜஸ்தானி மக்கள் கல்வி, மருத்துவ சேவை மூலம் தமிழக வளர்ச்சிக்கும் தொண்டாற்றி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சேவா விருதுகள் என்பது, தமிழகத்தின் சமூக கட்டமைப்பில் ராஜஸ்தான் சமூகத்தின் ஒருங்கிணைப்பை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல் ஆகும்” என்றார்.



ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாட்டின் தலைவர் நரேந்திர ஸ்ரீஸ்ரீமால் கூறுகையில், "தகுதியுள்ள நபர்களை அங்கீகரிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். வரும் ஆண்டுகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மக்களைக் கவுரவிக்கும் வகையில் இந்த ஆண்டு விருதுகளை எங்கள் சங்கம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும்," என்றார்.

ராஜஸ்தானி-தமிழ் சேவா விருதுகளின் ஒருங்கிணைப்பாளர் அனில் கிச்சா கூறுகையில், "விருதாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை நாங்கள் பின்பற்றிய மிகச்சிறந்த செயல்முறைகளில் ஒன்றாகும். மாநிலம் முழுவதிலும் உள்ள பொதுமக்களிடமிருந்தும் நிறுவனங்களிலிருந்தும் பரிந்துரைகளை வரவேற்பதில் தொடங்கி, பெறப்பட்ட 200-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை ஒரு தெரிவுக்குழு (Shortlisting Committee) ஆய்வு செய்தது. அதனைத் தொடர்ந்து, எஸ். குருமூர்த்தி (ஆசிரியர், துக்ளக் வார இதழ்) தலைமையிலான 5 பேர் கொண்ட நடுவர் குழு, 8 வெவ்வேறு பிரிவுகளில் இருந்து இறுதி 5 விருதாளர்களைத் தேர்வு செய்தது. நடுவர் குழுவின் முடிவில் எங்கள் சங்கம் எந்தத் தலையீடும் செய்யவில்லை," என்று தெரிவித்தார்.

விழாவில் ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு பொதுச் செயலாளர் தினேஷ் போத்தாரி, தமிழ் சேவா விருதுகள் குழுத் தலைவர் அஜித் சோர்டியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 ரெட் லேபிள் விமர்சனம் 



ரெவ்ஜென் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் லெனின் தயாரிப்பில், பொன். பார்த்திபன் எழுத, திரைக்கதை எழுதி, இயக்கியிருப்பவர் கே.ஆர். வினோத். சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார். இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளார். மேலும் லெனின், அஸ்மின், முனிஷ்காந்த், அனுமோகன் தருண், கெவின், கார்மேகம் சசி, அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர்.

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:

கல்லூரித் தேர்தலில் நேர்மைக்கும், ஊழலுக்கு பெயர் பெற்ற எம்.எல்.ஏ சண்முகராஜனின் (ஆர்.வி.உதயகுமார்) மகன் பாண்டியன், அந்த தேர்தலில் தலைவனாக வெற்றி பெற அவனை எதிர்த்து யாரும் போட்டி போட கூடாது என்று கல்லூரியில் தனது கைகூலிகளுடன் சேர்ந்து ரவுடித்தனம் செய்கிறான். 

அவனை எதிர்த்து மாணவர்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்ற மாணவனை பேராசிரியர் ஒருவர் ரோஹித்தை தேர்தலில் போட்டியிட சொல்கிறார். மேலும் அந்த பேராசிரியரின் அறிவுத்தளின்படி ரோஹித், கல்லூரித் தேர்தல்களில் நேர்மைக்கும் ஊழலுக்கு எதிரான ஆக்ரோஷமான நிலைப்பாட்டிற்கும் பெயர் பெற்ற முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கதிரின் உதவியை (லெனின்) நாடி, அவரைத் தேடிச் செல்கிறான். 

மறுபக்கம் கடந்தகாலத்தில் கல்லூரியில் நடைபெற்ற போராட்டங்களில் கதிர் ஏற்படுத்திய பிரச்சனைகளுக்காக அவர் மீது நீண்டகாலப் பகை கொண்ட ஒரு உள்ளூர் போலீஸ் அதிகாரி, கதிரை பழிவாங்க சரியான தருணத்திற்காகக் காத்திருக்கிறார். 

முதலில் வர மறுக்கும் கதிர் பின் அவர்களுக்கு துணையாக இருந்து கல்லூரியில் நடக்கும் ரவுடித்தனத்தை அடக்கி தேர்தலை நடத்த உதவி செய்கிறார். இந்நிலையில், அதே கல்லூரியில் படிக்கும் எம்.எல்.ஏ சண்முகராஜனின் மகளும், பாண்டியனின் சகோதரியுமான பவித்ராவை (அஸ்மின் யாசர்) தனது தம்பியை எதிர்த்து சகமாணவன் ரோஹித்துக்கு ஆதரவாக வாக்குகளை சேகரிக்கிறான். மேலும் பவித்ரா கதிரை காதலிக்கிறார். 

இந்த காதல் விவகாரம் எம்.எல்.ஏ சண்முகராஜன் மற்றும் அவரது மகன் பாண்டியனுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் கதிரின் உதவியுடன் தேர்தலில் ரோஹித் வெற்றி பெறுகிறார். தேர்தலில் தோல்வி அடைந்த அவமானத்தில் இருக்கும் பாண்டியன் கதிரை பழிவாங்க துடிக்கிறார். மறுபக்கம் எம்.எல்.ஏ சண்முகராஜன் தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்கிறார். இந்நிலையில் கல்லூரியில் நடைபெறும் ஒரு கல்லூரி நிகழ்ச்சியின் போது பவித்ராவுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை (கார்மேகம்) அங்கு கொல்லப்படுகிறார். அதை தொடர்ந்து அடுத்து என்ன ஆனது? கொலையை செய்தது யார்? என்பதே மீதி கதை.....

கல்லூரி நாள்களின் முரட்டுத்தனம், நிகழ்காலத்தின் மன உளைச்சல், அதைத் தாண்டிய புத்திசாலித்தனம் என கதிர் கதாபாத்திரத்தை நம்பிக்கையுடன் கதிர் கதாபாத்திரத்தைச் சுமந்து கவர்ந்துவிடுகிறார் லெனின்.  முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கதிர் கதாபாத்திரத்தில் லெனின், ஆக்ஷன். காதல், கோபம், புத்திசலித்தனம் என அனைத்தையும் நேர்த்தியான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

பவித்ரா கதாபாத்திரத்தில் அஸ்மின் யாசர், பவித்ராவின் தந்தையாக ஆர்.வி. உதயகுமார், அவரது உதவியாளராக அனுமோகன், பொன் பார்த்திபன், தருண், கெவின், கார்மேகம் சசி, அனுஷா ஆகியோருடன் சேர்ந்து கௌரவ வேடத்தில் முனிஷ்காந்த் மற்றும் சசிகுமார் உட்பட அனைவரும் துணை வேடங்களில் திரைக்கதை நகர்வுக்கு உதவியுள்ளனர். உடல்மொழிக்கெல்லாம் வேலையே இல்லை என்று சொல்லும்விதமாக வசனங்கள் வழியாகவே வில்லத்தனம் காட்டி நடித்திருக்கிறார் ஆர்.வி.உதயகுமார். ஆனால் 

ஒரு கல்லூரியில் சிசிடிவி கேமரா கூட இருக்காதா? என்ற கேள்வி எழுகிறது..... காமெடியில் கூடுதல் கவனம் தேவை...

மொத்தத்தில் இந்த 'ரெட் லேபிள்' விறுவிறுப்பு.....      

 RATING: 3.8/5


NSC Bose Road gets a new iconic landmark of Grand New Khazanchi Jewellery Showroom!



Chennai: 

Kazhanchi Jewelers launched a Grand New Showroom in NSC Bose Road - Wall Tax road Corner today in Chennai. A five decades of family business in gold has crowned a  stand-alone, and a grand new jewelry showroom is the iconic center of the jewelry hub in NSC Bose Road.

Actress Bagyasree Borse graced her presence as a chief guest and inaugurated the showroom. 

A First-of-its-Kind of Showroom has a valet parking facility at NSC Bose Road. 

Speaking on the occasion, Mr. Rajesh Mehta, Joint Managing Director Khazhanchi Jewelers said, "it's proud moment to  inaugurate up an first of its kind  jewellery showroom in NSC Bose road,  this we achieved through the legacy we have in jewellery  business where our entire family involved to develop each and every movements." 

We are delighted to announce that an inaugural offer in Gold Price, Rs. 2500 less per sovereign, and Rs 5000 off per carat. And Wastage on jewellery starts at just 1%. Customers can now purchase Jewellery at manufacturing costs, he added.

Chennai Brings the Global ECMO Community Together at SWAAC ELSO & ESOI Conference 2026



Chennai:

Chennai emerged as a global hub for critical care medicine as it hosted the 12th Annual International South West Asia and Africa Chapter of the Extracorporeal Life Support Organisation (SWAAC ELSO) Conference, along with the 15th Annual National ECMO Society of India (ESOI) Conference, from February 7th and 8th, 2026, at Radisson Blu GRT.

The prestigious conference was organised by Dr K. Madhan Kumar, Director - ECMO & VAD, Senior

Consultant - Cardiothoracic, ECMO, VAD & Transplant Surgeon, and Dr Indira Jayakumar, Senior Consultant and Lead Paediatric Intensivist, along with Kauvery Hospital, and brought together some of the world’s leading experts in critical care, cardiothoracic surgery, cardiology, paediatrics, anaesthesiology, pulmonology, nursing, and perfusion technology.

Over 700 delegates from India and several other countries participated in the event, highlighting Chennai’s growing stature as a centre of excellence in advanced life-support medicine.

The conference focused on the expanding role of Extracorporeal Membrane Oxygenation (ECMO) in

managing patients with severe heart and lung failure. Over the past 15 years, ECMO has transformed intensive and emergency care, offering hope and improved survival in conditions once considered uniformly fatal.

This evolution was reflected in the conference sessions, where speakers shared real-world clinical experiences, emerging challenges, and evolving best practices in adult and paediatric ECMO care.

The scientific programme featured a strong blend of international and national faculty, including senior leaders from the global ELSO community. In addition to keynote lectures and panel discussions, participants engaged in hands-on workshops on ECMO cannulation, advanced VA and VV ECMO, ECPR, and paediatric ECMO, enabling practical, skill-based learning.

Speaking on the occasion, Dr K. Madhan Kumar said, “ECMO is no longer a last-resort therapy – it is

becoming an integral part of modern critical care. Our aim through this conference was to share knowledge, standardise practices, and empower healthcare professionals to deliver timely and effective ECMO support, especially in complex cardiac and pulmonary failures where all other modalities couldn’t help.” He added, “Hosting this international conference in Chennai reflects the city’s growing leadership in advanced critical care and transplant medicine.”

Dr Aravindan Selvaraj, Co-founder and Executive Director of Kauvery Hospital, remarked, “At Kauvery Hospital, we believe that world-class healthcare is built on strong clinical expertise, continuous learning, and global collaboration. Supporting and hosting this conference aligns with our vision of making advanced life-saving technologies accessible to patients across the region.” He further said, “We are proud of our ECMO team for their dedication and excellence. Conferences like this strengthen our healthcare ecosystem and ultimately benefit patients who need the most advanced critical care.”

SWAAC ELSO, in collaboration with ESOI, continues to play a vital role in promoting the safe and effective use of ECMO, including in resource-limited settings. The conference further advanced this mission by fostering collaboration, research, and knowledge-sharing across countries.

The SWAAC ELSO & ESOI Conference 2026 concluded on a high note, leaving participants with enhanced clinical insights, stronger professional networks, and a renewed commitment to improving survival and quality of life for critically ill patients worldwide.

Tanishq and Sachin Tendulkar Extend Gold Exchange Initiative with Two New Festive Offers!



Chennai: 

Tanishq, India’s most trusted jewellery brand from the House of Tata, has extended its nationwide Gold Exchange Initiative, supported by Sachin Tendulkar, with the launch of two new festive  offers designed to make gold exchange and smart gold buying easier for Indian families.

Building on its first-ever 0% deduction on gold exchange across all karatages, Tanishq has introduced:

• Best Gold Rate (BGR) on Advance Buying

• Gold-for-Diamond Exchange

These additions give customers more ways to unlock the value of their existing gold and plan jewellery purchases with greater clarity, while contributing to reduced dependence on gold imports.

Indian households hold an estimated 25,000 tonnes of gold, while nearly 99 percent of India’s gold requirement is met through imports. Through its Gold Exchange Programme, Tanishq encourages families to bring idle gold back into circulation by exchanging it for new jewellery.

Under the Best Gold Rate (BGR) offer, customers can book jewellery in advance and freeze the gold rate. At the time of billing, they will be charged the lower of the frozen rate or the prevailing market rate. The offer is valid for advance bookings made between 24th January and 25th February 2026, with billing to be completed by 25th February 2026. Mia Products purchased with Tanishq products in Tanishq stores are eligible for this offer.

Tanishq has also introduced the option for customers to exchange their old gold for diamond jewellery. This allows families to convert legacy gold into contemporary diamond designs, based on current preferences.

Sachin Tendulkar added, “Gold has always been part of important moments in Indian families. Tanishq’s Gold Exchange gives people a clear and trusted way to renew their jewellery. These new offers help families plan better, upgrade their jewellery, and also play a role in lowering India’s reliance on gold imports.”

Over 30 lakh Indians have taken part in Tanishq’s Gold Exchange Programme, recycling nearly 1.7 lakh kilos of gold. Close to 40 percent of Tanishq’s business now comes from exchange, making it one of the largest organised gold recycling efforts in the country.

With these new offers, Tanishq continues to lead large-scale gold exchange and advance buying programmes, giving customers greater choice while supporting India’s goal of reduced import dependence.


'ரெட் லேபில்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!



இந்தப் படத்தை கே .ஆர். வினோத் இயக்கியுள்ளார். ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார்,இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார்,சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார்.லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார்.


நாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளார். கெளரவ வேடத்தில் முனிஷ்காந்த் நடிக்க,இயக்குநர் அனுமோகன் தருண், கெவின், கார்மேகம் சசி,அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர்.


வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த 'ரெட் லேபில்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு  இன்று பிரசாத் லேபில் நடைபெற்றது.


நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனாக நடித்துள்ள  லெனின் பேசும் போது,


"நான் எப்போதும் நேரம் தவறாமையைக் கடைப்பிடிப்பவன்.சினிமா விலும் அதைப் பின்பற்ற நினைத்தேன்.சரியான நேரத்தில் வந்ததால்தான் இந்த இயக்குநரையை தேர்வு செய்தேன்.எதையும் முறைப்படி செய்ய வேண்டும் என்பதை சினிமாவிலும் நான் தொடர விரும்பினேன். எந்த வேலையாக இருந்தாலும் நேர்மையாகச் செய்தால் போதும், நடப்பது நடக்கும். பலன் நல்லதாகவே இருக்கும். இந்தப் படத்திற்கு ஐந்து கதாநாயகிகளைப் பார்த்து ஆறாவதாகத்தான் அஸ்மின் வந்தார்.


இந்த ஒரே படத்தில் எனக்குப் பல அனுபவங்கள் கிடைத்தன படத்திற்குத் தலைப்பு பதிவு செய்வதே சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தது. முதலில் ஒரு தலைப்பைப் பதிவு செய்தோம். கிடைத்தது,பிறகு அது காலாவதி ஆகிவிட்டது, இல்லை என்றார்கள்.அதைப் புதுப்பிக்க வேண்டும் என்கிற விஷயம் எனக்குத் தெரியாது. ஓர் ஆண்டுக்குள் புதுப்பிக்க வேண்டுமாம். பிலிம் சேம்பரில் தலைப்பு பதிவு செய்யும்போது நாம் ஒரு ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். 


பிலிம் சேம்பரில் கணினி மயமாக்கி  இணைத்தால் மிகச் சுலபமாக இந்த வேலையைச் செய்ய முடியும். பல பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். ஆனால் யாரும் இதைச் செய்வதில்லை . நான் உங்களுக்கு உதவத் தயாராக இருக்கிறேன் அதுவும் இலவசமாக. பேப்பர் வேலை,அலைச்சல்கள் எதுவும் தேவையில்லை.எல்லாவற்றையுமே எளிமையாகச் செய்யலாம்.


நான் முதலில் நல்ல தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு தான் பிறகு நடிப்பவர்களைத் தேர்ந்தெடுத்தேன். நான் சரியாகத்தான் செய்திருக்கிறேன் என்பதற்கு எனது இசையமைப்பாளருக்கு கேரளாவில் விருது கிடைத்தது, எனது எடிட்டருக்கு தமிழ்நாடு அரசு விருது கிடைத்து இருக்கிறது என்பதிலேயே தெரிந்துவிடும்.  ஒரு படத்திற்கு நடிப்பதற்கு முக மதிப்பு உள்ளவர்கள் தேவைதான்.  இருந்தாலும் நல்ல தொழில்நுட்பக் கலைஞர்கள் தேவை. நான் பணம் சம்பாதிக்க என்று இங்கே வரவில்லை. சினிமா மீதுள்ள காதலால் இங்கே வந்திருக்கிறேன்.


முதலில் 2023-ல் கதை தேர்வானது, கதை பிடித்து விட்டது. ஆனால் எந்தப் படம் வந்தாலும் நமது படத்தில் உள்ள காட்சிகள் இருப்பது போல் தோன்றியது. அதனால் போன ஆண்டில் வந்த அனைத்து படங்களையும் பார்த்து விட்டேன். வாரம் எட்டு படம் வருகிறது. எல்லாவற்றிலும் நாங்கள் நினைத்தது வந்தது போலவே தோன்றும். இருந்தாலும் கதை வலுவாக இருந்ததால் தைரியமாக இருந்தோம்.


நான் படப்பிடிப்பில் கேட்கிற அளவுக்கெல்லாம் வசதிகள் செய்து கொடுக்க மாட்டேன்.ஒரு காட்சியில் 10 நாற்காலிகள் வேண்டுமென்றால் ஐந்து தான் கொடுப்பேன். இப்படித்தான் நான் தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டு மிச்சப்படுத்தினேன். இந்த சினிமாவில் எதற்கெடுத்தாலும் கமிஷன் என்கிற போக்கு இருக்கிறது. இது மிகவும் தவறானது. இதைப் பார்த்த போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.சினிமாவில் கமிஷன்கள் ஒழிக்கப்பட வேண்டும்.


ஒரு சினிமாவிற்கு இசையமைப்பாளரும் எடிட்டரும் முக்கியமானவர்கள்,அவர்கள் இருவரால்தான் ஒரு படத்தை நன்றாகக் கொண்டு வர முடியும். இசையமைப்பாளர் தெரிகிற அளவிற்கு எடிட்டர் வெளியே தெரிவதில்லை. இசையமைப்பாளர் அளவுக்கு எடிட்டர் கவனத்தில் வருவதில்லை. நான் நடித்த போது முதலில் இரண்டு நாள்  சுமாராகத்தான் நடித்து இருந்தேன். எனக்கே சந்தேகம் இருந்தது .படத்தில் சில இடங்களில் தொய்வு இருந்தது.ஆனாலும் எல்லாவற்றையும் தோன்றாத அளவிற்கு சரி செய்து நன்றாகப் படத்தை தொகுத்துள்ளார் எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் அவருக்கு நன்றி.


படம் தொடங்கும்போதே பெப்ஸி பிரச்சினை வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து போன்கள் வந்து கொண்டே இருந்தன. ஆறாவது நாள் நாங்கள் படத்தை நிறுத்தி விடுவோம் என்றார்கள். படப்பிடிப்பை நிறுத்தி விடுவோம் என்றார்கள் .எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.நாம் முதல் போட்டு படம் எடுக்கிறோம்.அவர்கள் என்ன நிறுத்துவது என்று நானே நிறுத்திவிட்டேன். ஆறாவது நாளே படப்பிடிப்பு நின்று விட்டது. பலருக்கும் இந்தப் படம் தொடருமா என்கிற சந்தேகம் வந்திருக்கும். 


இப்படி 2023 இல் கதை விவாதத்தில் தொடங்கி 2026 வெளியாகிற தேதி வரை ஏதாவது தடைகள், முரண்பாடுகள் இருந்து கொண்டே தான் இருந்தன. இருந்தாலும் இயக்குநரும் மற்றவர்களும்  இணைந்து இந்தப் படத்தை முடித்து இருக்கிறோம்.


சினிமாவில் ஒரு தயாரிப்பாளர் செலவு செய்வது அனைத்தும் செலவுக் கணக்கில் தெரியுமா என்றால் தெரியாது .ஒரு படத்திற்கு  5 கோடி செலவு செய்கிறார்கள் என்றால் பத்திலிருந்து பதினைந்து சதவீதம் செலவில் வராது .கமிஷனாகப் போய் விடுகிறது. இப்படி நாலு ஷெட்யூலுக்கு நாலு யூனிட் மாற்றினேன். முதலில் ஒரு லட்சம் கேட்டார்கள், பிறகு 90 ஆயிரம் , பிறகு 80 ஆயிரம், 70 ஆயிரம் என்று மாறிக்கொண்டே போனது.இது எப்படி இடையில் அவ்வளவு கமிஷன் போகிறது. சம்பளம் வாங்குவது மட்டும் போதாதா? கமிஷன் ஏன் வாங்குகிறார்கள்? சினிமாவில் கமிஷனை ஒழிக்க வேண்டும்.  


சங்கர் சார் லஞ்சத்தை ஒழிப்பதற்குப் படம் எடுத்தது மாதிரி இதையும் ஒழிக்கப் படமாக எடுக்க வேண்டும். இந்த கமிஷன் சினிமாவில் வெகு சகஜமாக இருக்கிறது .நான் கஷ்டப்பட்டு சம்பாதித்து படம் எடுக்க வந்தால் இடையில் உள்ளவர்கள் யாராவது சாப்பிட நினைக்கிறார்கள். நான்  சம்பாதித்த காசுக்கு எனக்கு கணக்கு வேண்டும்.இதை நான் விடமாட்டேன். இன்னொரு அனுபவம். ஒரு குணச்சித்திர நடிகரை அணுகிய போது பெரிய சம்பளம் கேட்டார். அது அவரது விருப்பம் பரவாயில்லை.ஆனால் பயணப்படியாக கிலோமீட்டருக்கு இருபது ரூபாய் கேட்டார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏன் நான் கொடுக்க வேண்டும்? அதுபோல உதவியாளர்கள் சம்பளமும் ஒழிக்கப்பட வேண்டும். இப்படி எல்லாம் நிபந்தனை போட்டால் யாரும் வர மாட்டார்கள் .ஆனால் அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை .


இந்தப் படத்தில் நாங்கள் நியாயமாக உழைத்திருக்கிறோம்.ஏதாவது எடுத்து ஒப்பேற்றி விடலாம் என்று நாங்கள் நினைக்கவில்லை.  அதனால் தான் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எங்கள் மீது நம்பிக்கை வைத்து எங்களை ஊக்கப்படுத்தி இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.


படத்தின் நாயகி அஸ்மின் பேசும்போது,


"இந்த ரெட் லேபில் படத்தின் அனுபவம் மறக்க முடியாது. இந்த படத்தின் மூலம் புதிய உறவுகள் கிடைத்தனர் .நான் வேறு ஒரு தொழிலில் இருந்து இங்கே வந்திருக்கிறேன். இருந்தாலும் இந்த படத்திற்குள் நான் வரக் காரணம் தயாரிப்பாளர் லெனினும் இயக்குநர் வினோத்தும் தான். இயக்குநர் என்னை நன்றாகப் படத்தில் வடிவமைத்திருக்கிறார். இசைஅமைப்பாளர்  கைலாஷ் மேனன் இந்தப் படத்திற்குள் வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது .இந்தப் படத்தில் நாம் அறிமுகமானது பெரிய விஷயம். ஒரு குடும்பம் போல் என்னைக் கவனித்துக் கொண்டார்கள் அனைவருக்கும் நன்றி" என்றார்.


படத்தின் கதாசிரியர்  பொன். பார்த்திபன் பேசும் போது,


"இந்தப் படக்கதையைப் படமாக எடுக்கும் போது முதலில் எதெல்லாம் வேண்டாம் என்று முடிவு எடுத்து தவிர்க்க வேண்டியவற்றையெல்லாம் தவிர்த்தோம் .ஆனால் ஆதாரமாக இருக்கும் ஒருவரியை மட்டும் அதன் பொறியை அக்கினி குஞ்சு இருப்பது போல் அதன் தன்மை மாறாமல் பார்த்துக் கொண்டோம். 2023 இல்  கதை விவாதமாகத் தொடங்கப்பட்டு 2026 வரை ஒவ்வொரு நாளும் மெருகேறி வருகிறது இந்தப் படம். முதல் காட்சிலிருந்து கதை தொடங்கிவிடும். ஒவ்வொரு காட்சிக்கும் சங்கிலி போலத் தொடர்பு இருக்குமாறு இந்தத் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.


பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசும்போது,


"இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்னோடு உரிமையாகப் பழகுபவர்.

எனக்கு ஒருமுறை பணத் தேவை இருந்த போது தயங்கிக் கொண்டு நான் அவரிடம் கேட்கவில்லை.அடுத்த வாரம் தாமதமாகத்தான் கிடைத்தது. அப்போது தயாரிப்பாளர் பேசும்போது மகிழ்ச்சியா என்றார் .ஒரு வாரத்துக்கு முன்பு கிடைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றேன். ஏன் கேட்டிருக்க வேண்டியதுதானே? ஏன் தயக்கம் உங்களுக்கு ? என்றார் .அந்த அளவுக்கு உரிமையோடு பழகுபவர். இந்த படத்தின் பாடல்கள் நன்றாக வந்துள்ளன" என்றார்.


படத்தின் கலை இயக்குநர் பிரகதீஸ்வரன் பேசும்போது,


"படங்களில சின்ன படம் பெரிய படம் என்றெல்லாம் இல்லை. எல்லா படமும் ஒன்றுதான். எது ஓடுகிறது அது பெரிய படம். எது ஓடும் என்று யாராலும் சொல்ல முடியாது .எனக்கு இந்தப் படத்தில் ஒரு சம்பளம் கொடுத்தார்கள் .அதை வெளியே சொல்ல முடியாது. ஆனால் பணத்துக்காக நான் இங்கே வரவில்லை. சினிமா மீதுள்ள காதலால் இங்கே வந்திருக்கிறேன். பணம் வளர வளர கிடைக்கும் "என்றார்.


இசை அமைப்பாளர் கைலாஷ் மேனன் பேசும்போது,


"இதுதான் எனக்குத் தமிழில் முதல் படம் .ஆனால் இங்கே முதலில் வந்தபோது எனக்குத் தயக்கம் இருந்தது .ஆனால் தயாரிப்பாளரும்  இயக்குநரும் நன்றாக என்னைப் பார்த்துக் கொண்டார்கள் .அதனால் இந்தப் பயணம் சௌகரியமாக இருந்தது .ஒரு வகையில் மலையாளப் படங்களை விட எனக்கு இங்கே மிகவும் சௌகரியமாகவும் சுலபமாகவும் இருந்தது. இங்கே தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நல்ல மதிப்பளிக்கிறார்கள். அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்த இயக்குநரும் தயாரிப்பாளரும் சினிமாவை நேசிப்பவர்களாக இருக்கிறார்கள். மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த இந்தப் படம் இப்போது வெளியாக இருக்கிறது மகிழ்ச்சி"என்றார்.


இயக்குநர் கே .ஆர் வினோத் பேசும் போது,


"நாங்கள் வளர்ந்து வரும் திரைப்படக் குழுவினர். வளர்ந்து வரும் நடிகர்களைக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம். அனைவருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் படம் யாரையும் நிச்சயமாக ஏமாற்றாது என்று நம்புகிறேன் "என்றார்.


படத்தில் நடித்துள்ள இயக்குநர் அனுமோகன் பேசும்போது,


"அப்போதெல்லாம் சினிமாவில் ஒரு வழிமுறையைப் பின்பற்றினார்கள் முதலில் கதாசிரியரைக் கொண்டு கதையைத் தேர்ந்தெடுப்பார்கள் . பிறகு திரைக்கதை ஆசிரியர் வசனம் என்று ஆள் தேர்ந்தெடுப்பார்கள்.அவர்களும் தயாரிப்பாளரும் இணைந்து இயக்குவது யார் என்று தேர்ந்தெடுப்பார்கள். பிறகு அவர்கள் இணைந்து அந்தக் கதைக்குரிய கதாநாயகன்,நடிகர்கள் யார் என்று தேர்ந்தெடுப்பார்கள்,அந்த வழியில் தான் இப்போது இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இப்போதெல்லாம் கதாநாயக நடிகர்கள் தான் கதையையும் படத்தின் காட்சிகளையும் முடிவு செய்கிறார்கள் .ஷாட் என்ன என்பது கூட அவர்கள் தான் முடிவு செய்கிறார்கள். அப்படி எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்து சுயநலமாக இருக்கிறார்கள். உங்கள் சுயநலத்தை விட்டு விடுங்கள்.


இந்தப் படத்தில் ரத்தினபுரி என்று பாடலில் வரி வருகிறது. அதுதான் எங்கள் சொந்த ஊர். அந்த ரத்தினபுரியில் தான் பல சினிமாக்காரர்கள்  சுற்றி வந்திருக்கிறார்கள். அங்கேதான் சத்யராஜ், சுந்தர் சி, தயாரிப்பாளர் கே ஆர் ஜி, கே. கோபிநாத் எல்லாரும் சுற்றி இருக்கிறார்கள்.


சினிமா டிக்கெட்டுக்கு 120 ரூபாய் கொடுத்தால் அந்த பணத்தில் தான் 120 குடும்பங்கள் பிழைக்கின்றன. இந்தப் படத்தில் நான் ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.இந்தப் படத்திற்குப் பிறகு எனது பெயரே மாறிவிடும் 'என்றார்.


படத்தை விநியோகம் செய்து வெளியிடும்  ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் குகன் பேசும்போது,


"ஒரு படத்திற்கு ரசிகர்கள் எப்படி வருகிறார்கள் என்றால் முதலில் ரசிகர்கள் அதிகம் உள்ள கதாநாயகர்களுக்கு வரும் கூட்டம் பெரியது .அதைத் தவிர்க்க முடியாது. அது அல்லாத படங்களும் வரத்தான் செய்கின்றன. அப்படி சிறை, மெட்ராஸ் மேட்னி போன்ற படங்கள் ஓடின.  இப்போது வரும் பார்வையாளர்கள் யார் என்றால் 15 முதல் 32 வயது வரை உள்ளவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் .அவர்கள் எதிர்பார்த்து எது அவர்களைத் தூண்டுகிறதோ அந்தக் கதைகள் ஓடுகின்றன. பிறகு தான் வாய் வழியாக பேசப்பட்டு மற்றவர்கள் உள்ளே நுழைகிறார்கள். 


முதல் 10 கதாநாயகர்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதையும் தாண்டி கதை உள்ள படங்கள் ஓடத்தான் செய்கின்றன.  எனவே கதை என்பதை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அடுத்து பாடல்கள் முக்கியம். ரீ ரிலீஸ் படங்கள் எல்லாம் பாடல்களால்தான் பேசப்படுகின்றன .எனவே பாடல்களுக்கு ஓர் இடம் உள்ளது .


இன்று 8 கோடி பேர் இருக்கிறார்கள் என்றால் அதில் 10% பேர் என்றால் 80 லட்சம் பேர் படம் பார்க்க வர வேண்டும் .ஆனால் இது போன்ற புதுப் படங்களுக்கு இரண்டு முதல் ஐந்து லட்சம் பேர்கள் தான் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது .அது ஒரு சதவீதம் தான். அப்படி இருக்கும்போது நல்ல கதை உள்ள படங்கள் வெற்றி பெறுகின்றன. சினிமாவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று யோசிக்கும்போது, சினிமா டிக்கெட் மட்டுமல்ல பிற செலவையும் கணக்கில் கொள்ள வேண்டி உள்ளது. வெளியில் 30 ரூபாய் விற்கும் காபி உள்ளே 150 ரூபாய் விற்கிறார்கள். 


20 ரூபாய் பப்ஸ் உள்ளே 120 ரூபாய். பாப்கான் 700 ரூபாய் வரை விற்கிறார்கள்.படம் பார்க்க வருபவர்களுக்கு  இது ஒரு பெரிய அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.  எனவே நாம் கொடுக்கிற காசுக்கு சரியாக படம் உள்ளதா என்று பார்க்கிறார்கள். எனவே படத்திற்கு கதை முக்கியம்.இந்தப் படக் குழுவினரை வாழ்த்துகிறேன்" என்றார்.

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.