Latest Post

Dr. Mohan’s Diabetes Specialities Centre Launches Genomic Lifestyle Counselling (GLC) 



Chennai: 

Dr. Mohan’s Diabetes Specialities Centre, one of Asia’s largest and most respected diabetes care networks today announced the launch of its Genomic Lifestyle Counselling (GLC) program, a pioneering initiative designed to integrate genetic insights with personalized lifestyle interventions for the prevention and management of metabolic diseases.

Speaking at the launch, Dr. V. Mohan, Chairman emphasized that healthcare is rapidly transitioning from a generalized approach to precision-based care. He stated that genomic science now enables clinicians to understand individual susceptibility to conditions such as Type 2 diabetes, obesity, and cardiovascular disease. By leveraging genetic profiling, interventions can be tailored with greater accuracy, improving outcomes and long-term disease prevention.

Dr. Mohan highlighted that India faces a significant and growing burden of diabetes and obesity. Innovative strategies like Genomic Lifestyle Counselling represent a critical step towards predictive, preventive and personalized healthcare.

Dr. R. M. Anjana, Managing Director elaborated on the scientific framework of the GLC program. She explained that the model combines genomic risk assessment with structured lifestyle modification plans, including diet optimization, physical activity recommendations, and behavioural guidance. The goal is to provide patients with actionable, evidence-based strategies aligned with their genetic predispositions.

Dr. Anjana noted that this approach strengthens early risk identification and empowers individuals to make informed decisions to delay or prevent the onset of metabolic disorders.

Dr. Geeta Dharmatti, Nutrigenomic Counsellor detailed the practical implementation of GLC. She explained how nutrigenomics enables customized dietary planning based on gene–nutrient interactions, ensuring that nutrition advice is scientifically aligned with an individual’s metabolic profile. The program also integrates continuous counselling support to enhance adherence and measurable health outcomes.

The launch of Genomic Lifestyle Counselling reinforces Dr. Mohan’s Diabetes Specialities Centre’s commitment for over 35 years to research-driven innovation and comprehensive diabetes care. By embedding precision medicine principles into routine clinical practice, the institution aims to redefine preventive healthcare standards in India.


4k Quality VIDEO HERE:

ProNutramax Unveils Two Distinct Brands – ‘Pro Nutra Kidz



Chennai:

Chennai-based ProNutramax launched its two distinct brands — ‘Pro Nutra Kidz: For Active Mind and Body’, a nutraceutical range focused on supporting active minds and growing bodies, and ‘ANI Traditional Masala’, dedicated to delivering authentic, time-tested flavours — at a launch event held at Welcomhotel by ITC Hotels, Chennai in the presence of Guests of Honour & dignitaries: Dr J. Radhakrishnan - IAS, Additional Chief Secretary and Chairman-cum-Managing Director of TNPDCL; Kalaimamani Actor Chinni Jayanth, Mr. Pawan Kumar, IRS(Delhi); Wing commander (Retd.), Mr. Ramesh Pulapaka, CEO-ABCL; Ms. Apsara Reddy, India's first trans politician, Social activist & Journalist; Dr. Srimathy Kesan, Founder and CEO, Space Kidz India; Mr Viswanathan Natarajan, Vice Chairman, Gojan Educational Institutions; Mrs. ILA Prabhu, General Manager-ITC.

With this dual launch, ProNutramax aims to bridge the gap between convenience and tradition. By combining nutraceutical science with traditional masala excellence, the company seeks to support modern families with products that promote both health and heritage cooking.

Speaking at the launch conference, Ms. Latha Dubay, Founder & CEO of ProNutramax, said, “As modern life becomes faster and more demanding, the home kitchen has turned into a place of compromise.Today’s new-generation parents often struggle to balance their children’s busy academic schedules with proper nutrition, while also trying to preserve the authentic flavours of traditional home cooking.

Understanding this challenge, we at ProNutramax have brought together science-backed nutrition and time-tested flavours under two distinct brands- Pro Nutra Kidz and ANI. Our mission is simple — to restore 100% parent-approved nutrition and the trusted taste of yesteryear to every family’s table”.

Highlighting the brand’s strategic retail presence, growth plans, and commitment to consistent quality, the Mr. K Raman, Director, said, “Recognising that accessibility is as important as quality, ProNutra and ANI are backed by a strong strategic marketing plan to ensure high visibility across prominent retail outlets and high-footfall stores. Supported by a rapidly expanding dealer network, we are well-positioned to meet growing demand in urban and semi-urban markets. We identified a widening gap where families were often forced to choose between convenience and wholesome quality. Our goal is to bridge that gap by making premium nutrition and authentic traditional flavours easily accessible — without compromise.”

"Both brands remain committed to authenticity in preparation and unwavering consistency in quality, whether in nutraceutical supplements or traditional masalas. We welcome distributors from Tamil Nadu to join us as we expand into key markets and build a strong industry presence”, he added.

 

Why ProNutra?

In a market filled with so-called “health drinks” that often contain hidden sugars, ProNutra stands out as a transparent and parent-friendly choice. Created especially for growing children—whose taste preferences may often lean toward fast food—ProNutra delivers balanced nutrition without compromise.

Pro Nutra Kidz: For Active Mind and Body delivers rich, enjoyable flavours like classic Vanilla and Rich Chocolate, while supporting overall growth and development. Formulated with essential vitamins and minerals, it helps promote strong bones, improved immunity, and sustained energy — supporting both active minds and growing bodies. Unlike many products that come pre-loaded with high amounts of sugar, ProNutra gives control back to parents—allowing them to decide how much sweetness to add.

Building on this foundation, ProNutramax will soon expand its portfolio with specially formulated products designed for women and elders, addressing their unique nutritional needs at every stage of life.

 

Why ANI?

While ProNutra focuses on the science of growth and nutrition, ANI celebrates the art of traditional cooking. The brand offers a carefully crafted range of spices and instant mixes that stay true to heritage flavours, with a strong emphasis on authentic taste and traditional preparation. Its Idli Podi stands out with a rich, granular texture, delivering a wholesome and satisfying experience. Moreover, absolutely the most apt and the latest aluminium foil packaging has been used to enhance shelf life, freshness and seal the aroma.

For staples such as Rasam, Sambar, Puliyotharai, and Rava Idli mixes, high-quality key ingredients are sourced from a single authentic source to ensure batch-to-batch consistency and true traditional flavour. This strong focus on ingredient integrity and uniform quality sets ANI apart in the market.

Going forward, ANI plans to expand its portfolio with popular traditional favourites, including Instant Payasam, Millet Dosa, and Special Maddur Vada, thus bringing more heritage recipes to modern kitchens.

BirthRight by Rainbow Hospitals Brings To City ‘One Of Its Kind’ Holistic Maternal Care Clinic For Recurrent Pregnancy Loss - "Vannam"



Chennai: 

After four consecutive miscarriages, a 35-year-old woman in Chennai recently delivered a healthy baby following structured evaluation and closely monitored care. Doctor says her case reflects a larger concern, as many women undergo repeated miscarriages without detailed investigation, highlighting the need for a comprehensive approach. With recurrent pregnancy loss affecting nearly 2–3% of pregnancies, particularly among women in their 20s and 30s, Birthright by Rainbow Hospitals has launched Vannam Clinic in Guindy, Chennai’s first gynecology-led Recurrent Pregnancy Loss (RPL) and Pregnancy Failure Clinic.

Recurrent pregnancy loss, defined as two or more consecutive miscarriages, which can result from genetic factors, uterine structural concerns, cervical weakness, clotting disorders, hormonal imbalances, or metabolic conditions. Several women in their 30s approached the hospital after multiple miscarriages. They needed systematic evaluation and focused genetic counseling support, and coordinated specialist care to improve pregnancy success rates. Vannam Clinic addresses this gap by bringing together obstetric, genetic, fetal medicine, neonatal and pediatric metabolic expertise under one roof to ensure accurate diagnosis and individualized treatment planning.

With the launch of Vannam Clinic, BirthRight by Rainbow Hospitals reinforces its vision of providing complete 360-degree maternal care. Women from across regions can access comprehensive services in one place, from pre-pregnancy evaluation and gynecological care to high-risk obstetrics, fetal medicine, delivery, neonatal support, and multispecialty pediatric care at Rainbow Children's Hospital. BirthRight’s aim is to create greater awareness about early screening, encouraging young mothers to seek evaluation even after a pregnancy failure thereby improving pregnancy success rates through timely intervention and continuous obstetric care within a unified system.

“Recurrent pregnancy loss requires careful clinical evaluation and structured assessment. Identifying the timing and pattern of previous losses, along with a thorough review of medical history, is critical to determining the underlying cause. Not all cases require fertility intervention; many can be managed effectively through targeted diagnosis and personalized care. Conditions related to genetics, uterine factors, blood-related disorders, or maternal health issues must be systematically evaluated before deciding the course of treatment. A dedicated clinic allows us to provide focused consultation, multidisciplinary input, continuous monitoring and empathetic patient centered approach. With early identification and appropriate management, a significant number of women with prior pregnancy losses can achieve successful outcomes,” said Dr. Mathangi Rajagopalan, Senior Obstetric Consultant at Rainbow Children's Hospital, Chennai, who was instrumental in starting this clinic.

Adding to this, Dr. Priyadharshini S M, Senior Consultant – Obstetrics And Gynecology, Rainbow Children's Hospital said “As pregnancy patterns evolve, it is important to move from reactive treatment to proactive evaluation. At BirthRight, our strength lies in offering comprehensive maternal care from pre-pregnancy counseling to delivery and advanced neonatal support. Vannam Clinic strengthens this framework by ensuring that recurrent pregnancy loss is evaluated thoroughly before considering fertility interventions. Every patient’s clinical history is unique, and personalized, tailor-made care plans are essential to improving outcomes and supporting successful pregnancies.”

The clinic was inaugurated by actress Saranya Ponvannan in the presence of the team of doctors from Birthright by Rainbow Hospitals, including Dr. Mathangi Rajagopalan, Senior Consultant – Obstetrics and Gynecology; Dr. Priyadharshini S M, Senior Consultant – Obstetrics and Gynecology; Dr. Lucetta Amelia Dias, Consultant – Obstetrics and Gynecology; and Dr. Padma Priya, Consultant – Obstetrics and Gynecology, along with Mr. Bhaskar Reddy, Zonal Director, and Mr. Gunasekhar Chowdary, Facility Director, Rainbow Children’s Hospital.

Addressing the gathering, Ms. Saranya Ponvannan said, “Motherhood is deeply emotional, and repeated pregnancy loss can be devastating for families. Initiatives like Vannam Clinic provide women not just medical care, but hope and reassurance that they are not alone in this journey.”

'ஓ பட்டர்ஃப்ளை' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!




ஓபட்டர்ஃப்ளை திரைப்படம், ஆன்ட்ஹில் சினிமா நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகும். பாலம்பூர் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படும் இப்படத்திற்கு, துல்சியா நிறுவனம் கன்சல்டிங் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளது. ஒரு வலுவான மற்றும் திறமையான கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது. 

அறிமுக இயக்குநர் விஜய் ரங்கநாதன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். நிவேதிதா சதிஷ், சிபி சந்திரன், அதுல், நாசர், லட்சுமி பிரியா சந்திரமௌலி மற்றும் கீதா கைலாசம் உள்ளிட்ட திறமையான நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளது. உறவுகளின் மென்மையையும், கணிக்க முடியாத தன்மையையும் ஒரு த்ரில்லர் பாணியில் பேசும் இப்படம் வரும் மார்ச் 6ம் தேதி திரையரங்குளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.

ஒளிப்பதிவார் வேதராமன் சங்கரன் அவர்கள் பேசும்போது, ஓ பட்டர்ஃப்ளை படத்தை மிகவும் சிரமப்பட்டு எளிதாக எடுத்து விட்டோம்.  மார்ச் 6ம் தேதி படம் வெளியாகிறது. அனைவரும் தியேட்டரில் பார்த்து சப்போர்ட் செய்யுங்கள். நன்றி. 
 
இசையமைப்பாளர் வைசாக் சோமநாத் அவர்கள் பேசும்போது, இயக்குனருக்கு என்ன வேண்டும் என்று தெளிவாக இருந்தார், என்னால் என்ன கொடுக்க முடியும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன். அதனால் மிகவும் எளிதாக அமைந்தது. இந்த படத்தில் பணி புரிந்தது நல்ல ஒரு அனுபவமாக இருந்தது. மார்ச் 6ம் தேதி படம் வெளியாகிறது. அனைவரும் படத்திற்கு சப்போர்ட் செய்யுங்கள். நன்றி.
 
தயாரிப்பாளர் ஆனந்த் ஷா அவர்கள் பேசும்போது, இயக்குனர் விஜய் முதல் முறையாக இந்த கதையை எடுத்துக் கொண்டு வந்த போது இது போன்ற ஒரு கதையை நான் பார்த்ததே இல்லை. மிகவும் சிம்பிளான ஒரு ஸ்டோரி, மிகவும் சிம்பிளிசிட்டியான ஒரு மனிதர். பொதுவாக இயக்குனர்கள் முதல் படம் பண்ணும் போது பிரம்மாண்டமாக எடுக்க முயற்சிப்பார்கள், அதன் மூலம் பணம் சம்பாதிக்க நினைப்பார்கள். ஆனால் விஜய் நல்ல ஒரு தரமான படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக இந்த படத்தை எடுத்துள்ளார். படத்தில் பணியாற்றிய அனைவரும் தங்களது முழு உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்திற்காக மும்பையில் அலுவலகம் போடலாம் என்று சொன்னேன், ஆனால் இயக்குனர் அந்த செலவை படத்திற்குள் போடலாம் என்று சொன்னார். நன்றி.
 
தயாரிப்பாளர் வெங்கி அவர்கள் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். முதல் முறையாக என்னுடைய வாழ்க்கையில் ஒரு சினிமா விழாவில் பேசுகிறேன். நான்கு வருடங்களுக்கு முன்னர் விஜய் என்னிடம் இந்த கதையை சொன்னார். ஆனால் எதற்காக என்னிடம் சொன்னார் என்று புரியவில்லை. முதலில் இந்த படத்திற்கு இன்வெஸ்ட்மென்ட் செய்கிறேன் என்று சொன்னேன். பிறகு நான் தான் தயாரிப்பாளர் என்று சொன்னார்கள். எதுவாக இருந்தாலும் பர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்று விஜய் எண்ணினார். இந்தப் படத்திற்காக 35 வீடுகளை தேடினார். அதில் ஒரு வீட்டை தேர்வு செய்தார். ஆனால் அந்த வீட்டின் உரிமையாளர் படம் எடுப்பதற்கு முதலில் சம்மதிக்கவில்லை, பிறகு அவரிடம் பேசி சம்மதிக்க வைத்தோம். விஜய் இடமிருந்து கால் வந்தால் ஏதாவது பெரிய பிரச்சினையாக மட்டும் தான் இருக்கும். விஜய் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார். அவருடைய உழைப்பிற்காக நிச்சயம் இந்த படம் வெற்றி பெற வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள். 
 
நடிகர் அத்துல் அவர்கள் பேசும் போது, அனைவருக்கும் வணக்கம். இயக்குனர் விஜய் அவர்களுக்கு நான் மிகப்பெரிய நன்றியை சொல்லிக்கிறேன். அவர் இல்லை என்றால் நான் இந்த படத்தில் இல்லை. கதையை முழுவதுமாக படித்தேன். சிறப்பாக இருந்தது. இதில் எப்படியாவது நன்றாக நடிக்க வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு வந்தது. இந்த படத்தில் என்னை நம்பி வாய்ப்பு கொடுத்துள்ளனர். படப்பிடிப்பு முழுவதும் செம ஜாலியாக இருந்தது. நிவேதிதா நல்ல ஒரு நடிப்பை இந்த படத்தில் கொடுத்துள்ளார். படம் பார்க்கும்போது உங்களுக்கு அது புரியும். நாசர் சார் அவர்களுடன் நடித்தது எனக்கு பெருமையாக இருந்தது. டெக்னிகல் டீம் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். இந்த படத்திற்கு என்ன தேவையே அதனை சரியாக கொடுத்துள்ளனர். மார்ச் 6ம் தேதி அனைவரும் இந்த படத்தை பார்த்து சப்போர்ட் செய்ய வேண்டும். எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. 
 
நடிகர் சிபி சந்திரன் அவர்கள் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். இது போன்ற மேடை கிடைப்பது நல்ல ஒரு வாய்ப்பு. நிறைய அலுவலகங்களில் என்னுடைய புகைப்படத்தை கொடுத்து வாய்ப்புக்காக காத்திருந்தேன். இந்த படத்தில் எங்கள் டீமே சிறப்பாக அமைந்துள்ளது. ரிலேஷன்ஷிப் என்றாலே த்ரில்லர் தான். நாம் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் போது நம்முடைய பார்ட்னரிடம் சில விஷயங்களை மறைத்திருப்போம். அனைவரும் இதனை செய்திருப்போம். யாரும் நல்லவர்களும் கிடையாது, கெட்டவர்களும் கிடையாது. அப்படி மறைக்கும் போது நமக்குள் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். மர்டர் மிஸ்டரி படங்களை விட ரிலேஷன்சிப்பில் இருக்கும் திரில்லர் எதிலுமே வராது. இந்தப் படம் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் த்ரில்லரை பற்றி பேசுகிறது. மேலும் இந்த படம் நிறைய விஷயங்களை பற்றி பேசுகிறது. இன்று விவாகரத்து தொடர்பான செய்திகள் தான் அதிகம் இடம் பெறுகிறது. 
 
ஒருவர் நம்மிடமிருந்து விலகி செல்லக்கூடாது என்பதற்காக தான் ஒரு விஷயத்தை மறைக்கிறோம். அவர்கள் தேவையே இல்லை என்று நினைத்தால் அனைத்தையும் ஓப்பனாக சொல்லி விடுவோம். சினிமா துறையில் விவாகரத்து தொடர்பான செய்திகள் அதிகம் வருகிறது. ஒருவருக்கு மெண்டல் ஹெல்த் மிகவும் முக்கியம்.. விஜய் சார், அஜித் சார் போன்றவர்களுக்கு வருடத்தில் 150 நாட்கள் தான் வேலை இருக்கும். மீதமுள்ள நாட்களில் வீட்டில் தான் இருக்க வேண்டும். அந்த சமயத்தில் மெண்டல் ஹெல்த் மிகவும் முக்கியம். அது இல்லை என்றால் நமது குடும்பத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் போது பழைய ரிலேஷன்ஷிப்பை பற்றி பேசவே கூடாது. அதை கடந்து போய்விட வேண்டும். உங்களுடைய தட்டில் இருக்கும் சாப்பாட்டை யாரும் சாப்பிட முடியாது, அதேபோல இன்னொருவர் தட்டில் அதிகம் சாப்பாடு இருந்தால் அதை அவர் சாப்பிட போகிறார்.  நம்மளுக்கு என்ன தேவையோ, அதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த படம் இந்த சமயத்திற்கு ஏற்ற ஒரு படமாக இருக்கும் என்று நம்புகிறேன். இயக்குனர் சொல்ல வந்த கருத்தை உண்மையாக இருக்கும். அனைவரும் இந்த படத்தை பாருங்கள். எனக்கு பலமுறை சப்போர்ட் செய்துள்ளீர்கள். இந்த படத்திற்கும் சப்போர்ட் செய்யுங்கள். நன்றி
 
நடிகை நிவேதிதா சதீஷ் அவர்கள் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். இந்த மேடையில் இருப்பது மிகவும் எமோஷனலாக உள்ளது. கேப்டன் மில்லர் படத்திற்காக மிகவும் கடின உழைப்பை கொடுத்தேன், கிட்டத்தட்ட 1 வருடம் அந்த படத்தில் பணியாற்றி நிறைய கற்றுக்கொண்டேன். ஆனால் நான் எதிர்பார்த்த பலன் எனக்கு கிடைக்கவில்லை என்று தோன்றியது. சினிமா நமக்கு சரிப்பட்டு வருமா அல்லது வேறு ஒரு துறையில் கவனம் செலுத்தலாமா என்று தோன்றியது. சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி இருக்கலாம் என்று நினைத்தேன். அந்த சமயத்தில் தான் ஓ பட்டர்ஃப்ளை படம் எனக்கு வந்தது. நான் இதுவரைக்கும் கேட்ட நரேஷன்களில் அது சிறப்பாக இருந்தது. இந்த படம் பண்ணலாம் என்று முடிவு எடுத்த பிறகு நிறைய ரிகர்சல் செய்தோம். படம் ஆரம்பிக்கும் போது எனக்கு ஒரு அறுவை சிகிச்சை இருந்தது.
 
படக்குழு நினைத்து இருந்தால் வேறு நடிகையை கமிட் செய்திருக்கலாம், ஆனால் எனக்காக காத்திருந்தனர். என்னுடைய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனருக்கு நன்றி. இந்த படம் ஒரு புதிய ஜானரில் உருவாகியுள்ளது. இந்த படம் ஹியூமன் எமோஷனல் பற்றி பேசுகிறது. இந்த படத்தை பார்த்து வெளியே வரும் போது நல்ல ஒரு மனதுடன் வெளியே வருவீர்கள் என்று நம்புகிறேன். இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். இயக்குனர் விஜய் போன்ற நபர்கள் கிடைப்பது அரிது. இந்தப் படம் ஒரு நல்ல ஒரு எக்ஸ்பீரியன்ஸை கொடுத்தது. இந்த படத்திற்கு அனைவரும் சப்போர்ட் செய்வீர்கள் என்று நம்புகிறேன். இசையமைப்பாளர் நல்ல ஒரு ஓர்க்கை இந்த படத்திற்கு கொடுத்துள்ளார். இந்த படம் சிங் சவுண்ட் முறையில் உருவாகியுள்ளது. அனைவருக்கும் நன்றி. 
 
இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் விஜய் ரங்கநாதன் அவர்கள் பேசும்போது, அனைவருக்கும் நன்றி. நான் சினிமாவிற்கு வந்து 7,8 வருடங்கள் ஆகிவிட்டது. என் அப்பா மற்றும் அம்மா இருவரும் சினிமா பக்தர்கள். அதிலிருந்து எனக்கு ஈடுபாடு வந்தது. சினிமாவில் ஏதாவது தனித்துவமாக பண்ண வேண்டும் என்று நினைத்தேன். அதற்காகத்தான் நிறைய காலம் எடுத்துக் கொண்டேன். இந்த கதையை நீண்ட நாட்களுக்கு முன்பு எழுதினாலும், மீண்டும் ஒரு எழுத்தாளருடன் இணைந்து எழுதினேன். இந்த படத்திற்காக தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களை தேடி அலைந்தோம். இந்த படம் ஏற்கனவே உள்ள பேட்டன்களில் இல்லை என்பதை உணர்ந்தோம். முன்னணி நிறுவனங்களிடம் இந்த கதையை எடுத்துக் கொண்டு சென்ற போது இந்த படத்திற்கான ரெஃபரன்ஸ் இல்லை. நண்பர்கள் இந்த படத்திற்காக அவர்களால் முடிந்த இன்வெஸ்ட்மெண்ட் செய்துள்ளனர். 
 
சினிமாவில் இண்ட்ரஸ்ட் உள்ளவர்களிடம் இந்த கதையை கொண்டு சென்றோம், அப்படி உள்ளே வந்தவர்கள் தான் எங்களது தயாரிப்பாளர்கள். அனைவரையும் ஒன்றிணைத்தது இந்த கதை தான். ஒரு பெண் கதாபாத்திரத்தை முதன்மையாக வைத்து படம் எடுப்பது அவ்வளவு சுலபமானது இல்லை. இந்த படத்தை முதலில் இருந்தே சிங்க் சவுண்டில் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அதனால் கண்டிப்பாக தமிழ் பேச தெரிந்த நடிகை வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தோம். அப்படித்தான் நிவேதிதா இந்த படத்திற்கு வந்தார்கள். நிறைய பேரை இந்த கதாபாத்திரத்திற்கு முயற்சி செய்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. நிவேதிதா எங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சியான தருணம். நாசர் சாருக்கு எங்கள் படத்தின் ஐடியா பிடித்திருந்தது. இந்த படத்தில் அவரை வித்தியாசமான கதாபாத்திரத்தில் பார்க்கலாம். லட்சுமி பிரியா இந்த கதையை புரிந்து கொண்டு இந்த படத்திற்குள் வந்தார்கள். மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பான ஒர்க்கை கொடுத்துள்ளனர். இசையமைப்பாளர் இந்த படத்திற்கு முக்கியமான ஒருவராக மாறி உள்ளார். இந்த படம் ஒரு யுனிக் அட்டெம்ப்ட். மார்ச் 6ம் தேதி படம் வெளியாக உள்ளது. உங்களது சப்போர்ட் தேவை. நன்றி.
 
ஓ பட்டர்ஃப்ளை திரைப்படம் வரும் மார்ச் 6ம் தேதி திரையரங்குளில் வெளியாக உள்ளது.

‘அந்தோனி’ ட்ரெய்லர் வெளியீட்டு விழா


லங்கையின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கயல் வின்சென்ட், டிஜே பானு, நிழல்கள் ரவி, அருள்தாஸ், சுதர்சன், ஷாமி நடித்துள்ளனர்.

சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர் இயக்கி உள்ளனர். ஒளிப்பதிவு ரிஷி செல்வம், எடிட்டிங் சுரேஷ் ஏ பிரசாத், கலை இயக்கம் கலா மோகன்.

தயாரிப்பு: கலைவளரி சகா. ரமணதாஸ், சுகந்தினி. இணைத் தயாரிப்பாளர்கள் : விஜய் பாலசிங்கம், ஸ்ரீஸ்கந்தராஜா, விக்கி.

மார்ச் மாதம் வெளியாக இருக்கும் இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

விழாவில் திருமதி அகிலா பாலுமகேந்திரா, இயக்குநர் சீனுராமசாமி, லெனின் பாரதி, ‘உலக சினிமா’ பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் இணைத்தயாரிப்பாளர் விக்கி பேசும்போது,

“இந்திய -இலங்கை கூட்டுத் தயாரிப்பில்1980 வரை பல படங்கள் வந்துள்ளன. போர் தொடங்குவதற்கு முன்பு கூட இதே சாலிகிராமத்தில் சிங்களப் படங்கள் கூட விழா நடத்தப்பட்டு வெளியாகி இருக்கின்றன.போர் தொடங்கிய பிறகு எந்த தமிழரின் நிறுவனமும் இந்தக் கூட்டுத் தயாரிப்பில் ஈடுபடவில்லை.டிஜிட்டல் காலத்திலாவது ஏதாவது செய்யலாமே என்கிற ஏக்கம் இருந்தது. ஜெனோசனும் சுகிர்தனும் இந்தப் பட முயற்சியில் வாய்ப்பைத் தேடிக் கொண்டு இருந்தார்கள். ரமணன் அவர்கள் தயாரிக்க வந்தார். பிறகு அவருடன் பலரும் சேர்ந்து தயாரிக்க முன்வந்தார்கள். போர் நினைவுக் கதைகளைப் படமாக எடுத்தது மாறி மறுவாழ்வுக் கதைகள் எடுக்கலாம் என்று,இயக்குநர்கள் விரும்பினார்கள். அப்படித்தான் இந்தப் படம் உருவாகி உள்ளது .பாலு மகேந்திரா சார் ஈழத்தில் எப்படியாவது ஒரு படம் எடுக்க வேண்டும் என்பதைக் கனவாக வைத்திருந்தார். அவரது அந்தக் கனவு நனவானதில் எனக்கு மகிழ்ச்சி. இது போரைத் தாண்டிய ஒரு கதை என்பது மகிழ்ச்சி.” என்றார்.

தயாரிப்பாளர் ரமணதாஸ் பேசும்போது,

“இலங்கை என்கிற நாட்டிலிருந்து உலகத் தரத்திற்கு ஒரு படம் கொடுக்க வேண்டும் என்பது நீண்ட காலம் ஏக்கமாக இருந்தது.சின்னச் சின்ன படைப்புகளைச் செய்து கொண்டிருந்தோம்.அன்புத் தம்பி சுகிர்தனின் கதையைக் கேட்ட போது அந்தப் படத்தை எடுத்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்தோம்.பல தமிழ் நாட்டு சினிமாவைப் பார்த்தே நாங்கள் வளர்ந்து வந்திருக்கிறோம். இப்படி ரத்தத்திலேயே கடத்தப்பட்ட சினிமா தான் தமிழ்நாட்டு சினிமா .உலக தரத்திற்கு ஒரு படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். தம்பி சுகிர்தன் ‘மழைக்கால இரவுகள்’ என்ற குறும்படத்தைக் காட்டினார். அதைப் பார்த்து இந்தப் படத்தைத் தயாரித்து இருக்கிறோம். ஈழத்திலிருந்து பெரும் பொருட் செலவிலே வருகிற படம் என்று இதைக் கூறலாம்.தமிழ்நாடு என்பது எங்கள் ரத்தத்தோடும் சதையோடும் கலந்து இருப்பதால் தமிழ்நாட்டு மக்கள் , எங்கள் கதைகளை எங்கள் ஜன்னல் வழியாகப் பார்க்காமல் வீட்டுக்குள் வந்து பார்க்க வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பமாக இருக்கிறது. இப்படம் உங்களது சக உறவுகள் எப்படிப் புது இடத்தில் வாழ்கிறார்கள் என்பதைப் பார்ப்பதாகவே இருக்கும்.


இந்தப் படத்திற்கு முதலீட்டாளர்களாகப் லண்டன்,சுவிஸ், பிரான்ஸ், நார்வே , இலங்கை போன்று பல்வேறு நாடுகளில் இருந்து எங்களுக்கு உதவி இருக்கிறார்கள்.இவ்வளவு பேர் சேர்ந்தா இந்தப் படத்தை எடுத்தீர்கள் என்று உங்களுக்கு வியப்பாக இருக்கும். போன வருடம் மார்ச் மாதம் 5 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படம், இப்போது மூன்று மொழிகளில் தயாராகி இருக்கிறது.


இது பிரபஞ்சம் தந்திருக்கும் படம் .இதற்கு இளையராஜா அவர்கள் இசையமைத்திருப்பதற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்திற்கு அவரால்தான் இதற்கான இசையைக் கொடுக்க முடியும். ஆமாம் இளையராஜா அவர்கள் இதற்குள் வந்த பிறகு இது உலக சினிமாவிற்கான பயணத்தில் ஒரு கல் எடுத்து வைத்த உணர்வைத் தருகிறது .

இதில் தமிழகம் மட்டுமல்ல இலங்கை மட்டுமல்ல ஐரோப்பிய நாட்டுக் கலைஞர்களும் பங்கேற்று நடித்து இருக்கிறார்கள் . அந்த அளவில் இது ஒரு பிரபஞ்சத்துக்கான படம் போல் அமைந்திருக்கிறது “என்றார்.

சிறப்பு விருந்தினராக வந்திருந்த இயக்குநர் சீனு ராமசாமி பேசும்போது,

“இந்த ‘அந்தோனி’ படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து நான் கண்கலங்கினேன் .

இந்த பட விழாவிற்காக என்னை அழைப்பதற்காக இந்த இளைஞர்கள் வந்து என்னிடம் பேசிய போது, எந்த ஊர் என்று கேட்டேன் இலங்கை என்றார்கள். அந்த ஒரே காரணத்திற்காகத் தான் இந்த விழாவிற்கு நான் வந்தேன். எனக்கு மற்றபடி இளையராஜா இசை என்பது மட்டும் தெரியும். தயாரிப்பாளர் யார் படத்தில் மற்றவர்கள் யார் என்று தெரியாது.

அழிக்கப்பட்ட ஒரு நாட்டிலிருந்து இரண்டு இளைஞர்கள் இப்போது படம் எடுப்பதற்காக வந்துள்ள, அந்த ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் நான் இங்கு வந்தேன்.

ட்ரெய்லரையும் பாடல்களையும் பார்த்தேன். இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்திருப்பது, அவர் இசை அமைத்தார் என்பதை விட அவர் ஆசிர்வதித்திருப்பதாகவே நான் கருதுகிறேன். என் உள் ளுணர்வு அதைத்தான் கூறியது.இளையராஜா ஆசீர்வதித்த படம் என்றுதான் நான் இதைச் சொல்ல வேண்டும். இது ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஒரு நாடு சிதிலமடைந்த பிறகு, போர் முடிந்த பிறகு, அல்லது போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகு எப்படி இருக்கும் ?வாழ்க்கை கேள்விக்குறியாகவே இருக்கும்.அந்த நாடு அழிவில் இருக்கும். போர் முடிவுக்குப் பிறகு அந்த நாட்டில் வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு தனியனின் இருப்பு எப்படி இருக்கும்? எல்லாமே கேள்விக்குறிதான். எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் எதற்காக வேண்டுமானாலும் கேள்வி கேட்பார் இன்றிக் கைது செய்யப்படலாம். அப்படி ஓர் அச்சம் எப்போதும் இருக்கும். அப்படிப்பட்ட மண்ணிலிருந்து வந்த இளைஞர்களின் நினைவுகளில் குண்டு விழுந்த சத்தம் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும். இதை யாரும் மறுக்க முடியுமா? உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அதிகாரத்தின் மூலம் அடக்குமுறையைச் சந்தித்து வருகிற மக்களின் கலை வடிவமாகத்தான் அந்தோனியை நான் பார்க்கிறேன். அப்படிப்பட்ட நாட்டில் இருந்து இங்கு வந்திருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகள் மீது ஏன் இன்னும் தடையை நீக்கவில்லை? விடுதலைப் புலிகள் தான் இல்லை என்று தெரிந்து விட்டதே. புலிகள் யாரும் உயிரோடு இல்லை என்ற பிறகும் ஏன் அந்தத் தடையை நீக்காமல் இருக்கிறார்கள்? நான் இதற்கு முன்பு சொன்னேன் அல்லவா? யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் அதற்காகத்தான். அதனால்தான் நீக்காமல் இருக்கிறார்கள். நான் யாரோடும் உடன்பட்டோ முரண்பட்டோ இங்கே இதைப் பேசவில்லை.என்னுடைய கருத்தை நான் சொல்கிறேன்.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளரை நான் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். அந்தக் கடலையும் அந்த அலையையும் அந்த வாழ்க்கையையும் தத்ரூபமாக நம் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார்.

இந்தப் படத்தில் நடித்த கயல் வின்சென்ட் இனி அந்தோனி வின்சென்ட் என்று அழைக்கப்படுவார்.அந்த அளவிற்கு அவர் நடித்துள்ளார்.

நான் வின்சென்டிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.நீ இவ்வளவு சிறந்த நடிகன் என்று எனக்குத் தெரியாமல் போய்விட்டது.என்னை மன்னித்துவிடு. நான் சந்திக்க வேண்டும் என்று எனக்குத் தேவைப்படும் போது எங்காவது வெளிநாட்டில் இருப்பாய். நடிக்க வைக்க முடியாமல் போய்விட்டது .

வின்சென்ட் இதில் ஒரு முழுமையான நடிகனாக வெளிப்பட்டுள்ளார். நவயுக இலங்கை சினிமாவில் இருந்து ஒரு புது சக்தியாக வந்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். எல்லாம் நேர்த்தியாக இருக்கிறது.

இந்த அந்தோனியில் ஒரு தோணி இருக்கிறது. அதனால் கண்டிப்பாக கரை சேரும். எப்போது படம் பார்க்கப் போகிறோம் என்று ஆர்வமாக இருக்கிறது. ஒரு திரைப்படம் என்பது மறப்பதற்கு அல்ல, நினைப்பதற்கு என்று உருவாகி உள்ளது .

எதையோ ஒன்றை மறைப்பதற்கு எதையோ ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பேசினாலும் காசு, பார்த்தாலும் காசு, தாகம் வந்து தண்ணீர் குடித்தாலும் காசு, கழிப்பறை சென்றாலும் காசு.
மனித வாழ்க்கையில் எல்லாமே பணம் சம்பந்தப்பட்டதாக ஆகிவிட்டது.

நீங்கள் பார்க்க வைக்கப்படுகிற உலகத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் கேட்க வைக்கப்படுகிற உலகத்தில் இருக்கிறீர்கள். ஒட்டுமொத்த மனித வர்க்கத்தையே அபிப்ராயங்களை உருவாக்குவதும்,அபிப்ராயங்களை அழிப்பதும், அதை வேடிக்கை பார்ப்பதும் என்று தான் வைத்திருக்கிறார்கள்.இதுதான் இன்றைய உலகம்.அப்படி இருக்கிற இன்றைய உலகத்தில் ஈழத்து மக்களின் வாழ்க்கையை உயிரோட்டமாக, போருக்குப் பின்னாலான வாழ்க்கையை அவர்களுக்குள் இருக்கும் பரிந்தவிப்பைக் காட்டுகிற இந்த ‘அந்தோனி’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடையும்.


எனக்கு ‘நீர்ப்பறவை’ கால கட்டம் நினைவுக்கு வந்தது.இந்தப் படத்தை ஊடகங்கள் சுமந்து கொண்டு போய் மக்களிடம் சேருங்கள். ஒவ்வொரு சிறிய படத்திற்கும் எழுத்தாளரும் பத்திரிகையாளரும் தான் துணை. வேறு யாருமே கிடையாது.தரமான படத்தை எடுத்திருக்கும் தயாரிப்பாளர் ரமணனுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே அம்மா அகிலா பாலு மகேந்திரா வந்து இருப்பது மகிழ்ச்சி. அவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். அவர் இங்கே வந்திருப்பது பெருமை. எனது ஒவ்வொரு படத்தையும் அவருக்குப் போட்டுக் காண்பிப்பேன். ஆனால் இடி முழக்கத்தை மட்டும் போட்டுக் காண்பிக்கவில்லை – அது கமர்சியலாக இருப்பதால் போட்டுக்காட்டவில்லை. விழாக்களுக்காக மட்டும் படம் எடுத்தால் நம் வாழ்க்கையில் விழா என்பதே இல்லாமல் போய்விடும். எனவே அதை கமர்சியலாக எடுத்துள்ளேன்” என்று கூறினார்.

இயக்குநர் லெனின் பாரதி பேசும்போது,

“இந்தக் கரையில் இருந்து கொண்டு அந்தக் கரையைப் பார்த்திருக்கிறோம். நாம் எடுக்கும் படங்களில் கடலின் இந்தக் கரையைத் தான் பார்த்து இருக்கிறோம். அந்தக் கரையைப் பார்க்கும் வகையில் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். தங்கள் மண் சார்ந்த படமாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்து அதன் தாக்கத்தில் உருவாக்காமல் அவர்கள் தன்னிச்சையாக உருவாக்க வேண்டும். அப்படி ஒரு தன்னிச்சையான திரை உலகமாக இலங்கைத் தமிழ்த் திரையுலகம் உருவாக வேண்டும் .வளர வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குநர்களில் ஒருவரான ஜெனோசன் ராஜேஷ்வர் பேசும்போது,

“நான் இங்கே இருப்பதை உணர்வு பூர்வமாக நினைக்கிறேன். நான் பல ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதே அரங்கில் கடைசி வரிசையில் நின்று கொண்டிருந்த அனுபவம் கொண்டவன் நான். தயாரிப்பாளர் முதலீடு செய்து உதவி கொண்டிருக்கிறார் என்றால் இந்த பிரபஞ்சம் கண்ணுக்குத் தெரியாமல் எவ்வளவோ உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறது. சுகிர்தன் எடுத்த ‘மழைக்கால இரவுகள்’ குறும்படம் தயாரிப்பாளருக்குப் பிடித்துப் போய் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்திற்காக பல அண்ணன்கள் தங்களை அறியாமலேயே உதவிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். கேமராவை சொந்தமாக வாங்கிக் கொண்டு போய்தான் இலங்கையில் படப்பிடிப்பு நடத்தினோம். நாங்கள் நினைத்தபடியே படத்தை எடுத்திருக்கிறோம்.

வழக்கமான படமாக இல்லாமல் ஒரு நல்ல படத்தை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதை எடுத்திருக்கிறோம். இது ஒரு கடலோரக் காதல் காவியம். இது இலங்கை மண் சார்ந்த ஒரு காதல் கதை.அனைத்து சமூகத்தினரும் பார்க்க வேண்டும், ஆதரிக்க வேண்டும். அனைவரும் ஊக்கமளித்து வெற்றி பெற வைக்க வேண்டும்” என்றார்.

இன்னொரு இயக்குநர் சுகிர்தன் கிறிஸ்துராஜா பேசும்போது,

“நல்ல மழை பெய்து எந்தன் காடு இங்கு கனிந்தது.நான் நினைத்த எண்ணம் கல்வெட்டாக வளர்ந்தது.கொம்புத்தேனை பார்த்து நின்றேன் கையில் வந்து விழுந்தது. கூட்டத்தோடு நின்ற என்னை கொஞ்சும் அன்னம் அழைத்தது, என்ற மாதிரியான நிகழ்வு எனக்கு.

ஒரு படத்தில் சொல்லி இருப்பார்கள் ‘காதலும் கடலும் எப்போது பார்த்தாலும் சலிக்காது’ என்று. எங்கள் ஊரில் உள்ள காதலையும் கடலையும் இந்தப் படத்தில் காட்டி இருக்கிறோம். இந்தப் படம் எப்படி ஒரு அனுபவமாக இருக்கும் என்றால்,

காசு செலவழித்து இலங்கை வரத் தேவையில்லை. இந்த படத்திற்கு ஒரு டிக்கெட் எடுங்கள், யாழ்ப்பாணம் நகரத்தில் இறங்கி அழகான கிராமத்தில் ஒரு பஸ்ஸில் போகும்போது இளையராஜா பாடல்களை கேட்டுக் கொண்டு காற்று வீசும் ஜன்னல் ஓரம் அமர்ந்து இருக்கும்போது ஏற்படும் உணர்வை இந்தப் படம் கொடுக்கும்’ என்றார்.

‘உலக சினிமா’ பாஸ்கரன் பேசும்போது,

”நான் உலகத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு படங்களைப் பார்ப்பவன். அதே உலகத் தரத்தோடு இந்த ‘அந்தோனி’ திரைப்படம் இருப்பதைப் பார்த்தேன். இந்த இயக்குநர்கள் இருவரும் கிருஷ்ணன் -பஞ்சு, தேவராஜ் – மோகன் போல வெற்றிகரமாக விளங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்தப் படத்தின் கதாநாயகன் வின்சென்ட் என் ராசாவின் மனசிலே ராஜ்கிரண் போல இருந்தார். கதாநாயகி உதிரிப்பூக்கள் அஸ்வினி போல ஒரு மோனாலிசா தன்மையுடன் இருந்தார்.இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

கதையின் நாயகனாக நடித்துள்ள ‘கயல்’ வின்சென்ட் பேசும்போது,

“நான் முதல் படமாக நடித்திருக்க வேண்டிய படம் ‘நீர்ப்பறவை’. அதில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதன் பிறகு என் குரு நாதர் பிரபு சாலமன் ‘கயல்’ படத்தில் அறிமுகப்படுத்தினார். இந்தப் படத்தில் கதாநாயகனாக இல்லாமல் கதை நாயகனாக நடித்திருக்கிறேன்.இது எனக்கு முக்கியமான படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இந்தப் படத்தின் நாயகி டிஜே பானு 50 லட்சம் ரூபாய் கொடுத்து தெலுங்குப் படத்தில் அழைத்தபோது அதை மறுத்துவிட்டு இங்கே வந்திருக்கிறார். அவர் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது” என்றார்.

இவ்விழாவில் ‘அந்தோனி’ படக் குழுவினரும் நண்பர்களும் கலந்து கொண்டனர்.

'அரிசி' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா


மோனிகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் P. சண்முகம் - இணை தயாரிப்பாளர்கள் S.M. பிரபாகரன் - மகேந்திர பிரசாத் ஆகியோரின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் S. A. விஜயகுமார் இயக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் திரு. முத்தரசன் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'அரிசி ' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் எஸ். ஏ. விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அரிசி' எனும் திரைப்படத்தில் இரா .முத்தரசன், சமுத்திரக்கனி, சுப்பிரமணிய சிவா, ரஷ்யமாயன் உள்ளிட்ட பலர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஜான்ஸ் வி ஜெரின் ஒளிப்பதிவு செய்ய கே எஸ் நதிஸ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். 

இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

விவசாயத்தையும்,விவசாயிகளையும் மையப்படுத்திய உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி, 'அரிசி' படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவரான வைகோ பெற்றுக்கொண்டார்.

திரு. வைகோ பேசுகையில், '' அரிசி உயிரின் மறு பெயர் எனும் இந்த திரைப்படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவரான இரா முத்தரசன் உழவனாகவே மாறி இருக்கிறார். அவர் நடிப்பு கலையை பயின்றவர் அல்ல ஆனால் இயற்கையாக அவர் கட்டியிருக்கும் தலைப்பாகையுடன் தொலி உழவு செய்யப்பட்ட வயலில் நெற்கதிரை லாவகமாக வீசுகிறாரே.. அது நெடுங்காலமாக வயலில் நெற்கதிரை வீசி இருந்தால் மட்டுமே அப்படி நெல்லை வீச முடியும்.

அண்ணன் முத்தரசன் கலை உலகில் பிரவேசித்திருக்கிறார். எந்த பயிற்சியும் முன் அனுபவமும் கிடையாது. ஆனால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிட்டார் என்பதை இப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்த சில நிமிடங்களிலேயே உணர முடிந்தது.

அரிசி திரைப்படத்தில் சிம்பொனி இசை அமைத்து உலகப் புகழ் பெற்றாரே.. அண்ணன் கலைஞரால் இசைஞானி என்று பெயர் சூட்டப்பட்ட அந்த மாமேதையினுடைய இசையமைப்பிலே வெளியான உருவான பாடல்கள் பின்னணி இசை இதயத்தை கவர்வதாக அமைந்திருக்கிறது.

இந்தத் திரைப்படம் விரைவில் வெளிவரும் என்பதை நான் அறிந்தேன் அது மக்களின் ஆதரவை பெறும் என்று நான் நம்புகிறேன். விவசாய மக்களுக்கு உழவர் பெருங்குடி மக்களுக்கு ஒரு அரிசி தான் உலகத்தை காப்பாற்றுகின்ற உயிர்கருவி என்கின்ற தத்துவத்தை தருகின்ற இந்த திரைக்காவியம் மகத்தான வெற்றி பெறுவதற்கு தமிழகத்தில் வாழும் கோடான கோடி விவசாய பெருமக்கள்.. நான் இதுவரை எந்த மேடையிலும் திரைப்படங்களை பாருங்கள் என்று விளித்ததில்லை. ஆனால் மண்ணை நம்பி கலப்பையை நம்பி விதைக்கும் விதைகளை நம்பி உலகத்தை வாழ்வித்து கொண்டிருக்க கூடிய பசிப்பிணி போக்குகின்ற மருத்துவர்களாக திகழ்கின்ற விவசாய பெருமக்கள் நீங்கள் திரையரங்கங்களுக்கு வர வேண்டும். அரிசி உன்னதமான வெற்றியை பெற்றது என்ற நிலையை விவசாயிகள் உருவாக்க வேண்டும். உங்கள் துயரங்கள் போராட்டங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும் கலை உலகம் அரசியலையும் நாட்டின் தலை விதியையும் தீர்மானிக்கின்ற இடத்தில் ..வேளாண்மை இருப்பதால் விவசாயம் இருப்பதால் இந்த காவியம் வெற்றி பெறும். இதில் பங்கெடுத்து இருக்க கூடிய அனைத்து நடிகர்களுக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய சமுத்திரக்கனி அவர்கள் இன்னும் உயர்ந்த விருதுகளை அவர் நடித்த திரைப்படங்களின் மூலமாக பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். இந்த திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். என்னை உயிராக நேசிக்கும் முத்தரசனுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து, அரிசி திரைப்படத்தில் மட்டுமல்ல.. எதிர்கால தேர்தல் களத்திலும் நாங்கள் தான் வெல்வோம் எனக் கூறி விடைபெறுகிறேன் நன்றி. '' என்றார்.

திரு. உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், '' அண்ணன் இரா முத்தரசன் - சமுத்திரக்கனி நடிப்பில் தயாராகி இருக்கும் அரிசி திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கும் திரு. செல்வ பெருந்தகை- திரு. வைகோ- திரு. திருமாவளவன் - திரு. வீரபாண்டியன் - திரு. பேராசிரியர் காதர் மைதீன்- திரு. புதுமடம் அலி- திரு. பழ. ஆசைத்தம்பி- திரு. செல்வராஜ் - திரு. சண்முகம் - திரு. வன்னியரசு - திரு. எஸ். எஸ். பாலாஜி- திரு. மாரிமுத்து - திரு. ரூபி மனோகரன் - திரு. கனகராஜ் - திரு. திருமுருகன் காந்தி- மருத்துவர் ஷர்மிளா- திரு. சிற்றரசு- திரு. முகமத் அபுபக்கர் - தயாரிப்பாளர் சண்முகம்- இயக்குநர் விஜயகுமார்- திரு ஆர் கே செல்வமணி- மற்றும் இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் என் காலை வணக்கம்.

முதலில் இந்த திரைப்பட குழுவினருக்கு என்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் இது போன்ற திரைப்படங்களின் இசை மற்றும் முன்னோட்ட விழாவை மிகப் பெரிய நட்சத்திர ஹோட்டலில் நடத்துவார்கள். மிகப்பெரிய திரையரங்கத்தில் நடத்துவார்கள். ஆனால் அரிசி திரைப்படக் குழுவினர் இந்த நிகழ்ச்சியை கலைஞர் கட்டிய இந்த வள்ளுவர் கோட்டத்தில் நடத்தியதற்கு முதலில் என்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைச்சராக பொறுப்பேற்ற இந்த நான்காண்டு காலங்களில் திரைப்படம் தொடர்பான எந்த நிகழ்விலும் கலந்து கொண்டதில்லை. இது அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நன்கு தெரியும். யார் கேட்டாலும் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்று உறுதியாக சொல்லிவிடுவேன். ஆனால் அண்ணன் முத்தரசன் கேட்கும்போது என்னால் தட்டிக் கழிக்க முடியவில்லை. நீங்கள் தேதியை சொல்லுங்கள் நான் உறுதியாக வந்து விடுகிறேன் என்று சொன்னேன். அதன் பிறகு நேரம் கேட்டார். அதையும் நீங்களே சொல்லுங்கள் என்று சொன்னேன்.

பல வருடங்களாக கொடுக்காமல் இருந்த திரைப்படத் துறையினருக்கான தமிழக அரசின் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் தமிழக அரசின் விருதுகள் வழங்கப்படாமல் இருந்தது. இதற்காக குழு அமைக்கப்பட்டது . 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை திரைப்பட விருதுகளை வழங்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

நான் திரை துறையில் இருந்து வெளியேறி, மக்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் இன்று நான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான அண்ணன் முத்தரசன் அவர்கள் மக்கள் பணியில் இருந்து சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவர் சினிமா துறைக்கு வந்திருந்தாலும் எவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றாலும் அவர் மக்கள் பணிக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். அவர் சினிமாவில் உச்சத்திற்கு போனாலும் அவர் எப்போதும் விரும்புவது மக்களோடு மக்களாக இருப்பதைத்தான். இது தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.

அரசியலில் இருந்து சினிமாவிற்கு வந்திருக்கும் அண்ணன் முத்தரசனுக்கு திரைத்துறையில் முன்னால் இருந்தவர் என்ற வகையில் என்னுடைய வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மக்களுக்காக பல்லாண்டு காலம் களத்தில் போராடியவர் தான் அண்ணன் முத்தரசன். திரையிலும் மக்களுடைய உரிமைகளை.. உரிமையுடன் பேச வந்துள்ளார். அதிலும் குறிப்பாக இந்த படத்தில் அவர் விவசாயியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் போஸ்டர் ,ட்ரெய்லர், பாடல்களை பார்க்கும் போது அவர் விவசாயியாக நடித்திருக்கிறார் என்பதை விட விவசாயியாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால் நிச்சயமாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ள முடியும்.

முத்தரசன் மட்டுமல்ல அண்ணன் சமுத்திரக்கனியும் கம்யூனிஸ்ட் கொள்கைகளை தொடர்ந்து பேசக்கூடியவர். விவசாயிகளுகாக கம்யூனிஸ்ட்கள் களத்தில் இறங்கி போராடினால் நிச்சயம் அதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்த முறையும் வெற்றி பெறுவார்கள். அதேபோல் இந்த படமும் நிச்சயமாக வெற்றி படமாக அமையும்.

இந்தப் படத்தின் தலைப்பு அரிசி உயிரின் மறு பெயர் என வைத்திருக்கிறார்கள். இந்த அரிசிக்காக ஒரு காலத்தில் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள். பண்ணையார்களிடம் வாழ்க்கை முழுவதும் அடிமையாக இருந்தார்கள். காலமெல்லாம் வயலில் வேலை பார்த்தாலும் அவர்களுக்கு என்று ஒரு நேர சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் இருந்தது. அப்படிப்பட்ட விவசாய தொழிலாளர்களின் உரிமைக்காக களத்தில் இறங்கி கம்யூனிஸ்டுகள் எத்தனையோ போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

அதனால் டாக்டர் கலைஞர் அடிக்கடி சொல்வார். நான் மட்டும் தந்தை பெரியாரையும், அண்ணாவையும் என் வாழ்க்கையில் சந்திக்காமல் இருந்திருந்தால்... நானும் ஒரு கம்யூனிஸ்ட் தோழனாக மாறி இருப்பேன் என அடிக்கடி சொல்வார்.

அப்படிப்பட்ட கலைஞர் தான் 1969 ஆம் ஆண்டில் ஆட்சி கட்டிலில் ஏறிய பிறகு ஏழைகளுக்கு அரிசி கிடைப்பதற்கான எல்லா வழிவகைகளையும் செய்து கொடுத்தார். ஒரு படி அரிசிக்காக யாரும் மற்றவர்களின் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருக்கக் கூடாது எனும் நிலைமையை தமிழகத்தில் ஏற்படுத்தியவர் டாக்டர் கலைஞர்.

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 2006 சட்டமன்ற தேர்தலில் கலைஞர் அவர்கள் தேர்தல் வாக்குறுதி ஒன்றை அளித்தார். 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என முதன் முதலில் அறிவித்தார். இது மக்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஏனெனில் அந்த காலத்தில் பல குடும்பங்களுக்கு அரிசி சோறு என்பது மிகப்பெரிய கனவாக இருந்தது. அந்தக் கனவை நனவாக்கியவர் டாக்டர் கலைஞர் . பின்னர் அந்த ரெண்டு ரூபாயை ஒரு ரூபாயாக குறைத்தார். அதற்கு அடுத்த கட்டமாகத்தான் இன்று விலையில்லா அரிசியும் வந்திருக்கிறது. மக்களுடைய அடிப்படைத் தேவையான இந்த அரிசி பிரச்சனையை போக்கியவர் டாக்டர் கலைஞர்.
அந்த வகையில் விவசாயிகளின் உரிமையை பேசும் இந்த படம் நிச்சயம் வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அண்ணன் முத்தரசனின் அரசியல் களப்பணியும், கலைப் பணியும் மென்மேலும் சிறக்கட்டும் என உங்கள் அனைவரின் சார்பாக நான் வாழ்த்துகின்றேன். '' என்றார்.

திரு. செல்வ பெருந்தகை பேசுகையில், '' இந்தத் திரைப்படம் ஒரு வெற்றி பெற்ற திரைப்படமாக மாற வேண்டும். இந்த காலகட்டத்திற்கு எது தேவையோ அதை தோழர் முத்தரசன் அவர்கள் முன்னெடுத்திருக்கிறார். நேற்று நான் ஒரு வேளாண்மை தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்ட போது இந்தியாவில் 53.8 மில்லியன் மெட்ரிக் டன் அரிசி பற்றாக்குறை இருக்கிறது. கடந்த 2023 -24 ஆண்டு ஒப்பிடும் போது ஒவ்வொரு ஆண்டும் அரிசியின் உற்பத்தி குறைந்து வருகிறது. வேளாண்மை திட்டங்கள் இந்தியாவில் சரியாக செயல்படவில்லை. ஒரு பக்கம் இயற்கையின் சீற்றம் ( பருவமழை மாறி பொழிவது - வறட்சி ஏற்படுவது- தட்பவெப்ப நிலை மாறுவது- மண்ணின் தரம் - வளம் ஒவ்வொரு முறையும் மாறுவது.. ) இப்படிப்பட்ட சூழலில் இந்தியாவில் அரிசி உற்பத்தி குறைந்து கொண்டே இருக்கிறது.

வேளாண்மை துறை இந்தியாவில் தினம் தினம் அழிந்து வருவதற்கு காரணம் ஒரு நேர்மையற்ற ஆட்சி கடந்த 12 ஆண்டுகளாக இந்தியாவில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஏற்கனவே வேளாண்மை குடிமக்களுக்கு எதிராக மூன்று சட்டங்களை நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இல்லாமல் வாக்கெடுப்பும் இல்லாமல் பாஜக அரசு நிறைவேற்றியது. இந்தியாவில் உள்ள அனைத்து வேளாண்மை குடிமக்களும் விவசாய பெருங்குடி மக்களும் ஒன்று திரண்டு புது டெல்லியை முற்றுகையிட்டு 13 மாதங்கள் போராடினர். இந்தப் போராட்டத்தில் பல உயிர்களை பலி கொடுத்தனர். அதற்குப் பிறகு மோடி அவர்களுக்கு தெளிவு பிறந்து, எப்படி இரவோடு இரவாக எந்த விவாதமும் இல்லாமல் மூன்று கருப்பு சட்டத்தை கொண்டு வந்தார்களோ.. அந்த மூன்று வேளாண் சட்டத்தையும் திரும்ப பெற்றுக் கொண்டார்கள்.

அமெரிக்க - இந்திய வர்த்தக ஒப்பந்தத்தில் இந்திய வேளாண்மை குடிமக்களின் வாழ்வாதாரத்தை அடகு வைத்திருக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் அரிசி என்ற இந்த திரைப்படம் திரைப்படமாக வருவதை விட பாடமாக எடுத்துக் கொண்டு விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். விவசாய மக்களுடைய வாழ்வாதாரத்திற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். ஆகவே இந்த திரைப்படம் வெற்றி திரைப்படமாக மாற வேண்டும். எல்லோரும் பார்க்க வேண்டும். ஏற்கனவே இந்தத் திரைப்படத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிடும் என்று அறிவிப்பு செய்திருந்தோம். அதற்குரிய செலவையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஏற்கும். இப்படிப்பட்ட திரைப்படங்களை ஊக்கவிக்க வேண்டும். ஆகவே இந்தத் திரைப்படத்தை இயக்கிய இயக்குநருக்கும் நடிகர் நடிகர்களுக்கும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பொது வாழ்க்கையில் இருந்து கொண்டே திரைப்படத்திற்கு வருகை தந்திருக்கும் முத்தரசனுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார்.

திரு. தொல் திருமாவளவன் பேசுகையில், '' இந்தத் திரைப்படம் பொருத்தமான கால சூழலில் வெளி வருகிறது. அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்திருக்கும் இந்திய பிரதமர் மோடி அவர்கள் அல்லது பாஜக அரசு 20 ஆண்டுகளுக்கு வரி இல்லாமல் அமெரிக்காவிடமிருந்து கோதுமை, அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் அனைத்தையும் இறக்குமதி செய்வதற்கு உடன்பட்டு இருக்கிறார்கள். எந்த பொருளை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்தாலும் வரி இல்லை என்ற நிலையில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இது உழவர்கள் - விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நேற்று அதாவது பன்னிரண்டாம் தேதி இடதுசாரி இயக்கங்கள் ஐக்கிய விவசாயிகள் முன்னணி எல்லோரும் ஒன்று சேர்ந்து இந்தியா முழுவதும் பொது வேலை நிறுத்தம் நடத்தினர். விடுதலை சிறுத்தைகளும் அதில் இணைந்து பங்கேற்றியது. விவசாயிகள் இனி உற்பத்தியே செய்ய முடியாது என்கிற நிலையை நாம் எதிர் கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறோம்.

இந்தப் படத்தில் நான் அரிசியை உற்பத்தி செய்கிறேன். அதற்கான விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் இல்லையா? என கேள்வி கேட்கிறார்கள்.

நாம் இந்த கேள்வியில் உள்ள ஆழத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் ஆதார விலையை நிர்ணயிப்பதற்கான சட்டத்தை கொண்டு வர முடியவில்லை. மற்றவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு விலையை நிர்ணயிக்க முடிகிறது. ஆனால் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருள்களுக்கு ஆதார விலையை கூட நிர்ணயிக்க முடியாத சூழல் இருக்கிறது. இது எங்கே கொண்டு போய் முடியும். விவசாய உற்பத்தி எதிர்காலத்தில் என்னவாக இருக்கப் போகிறது என்ற அச்சத்தை எமக்கு ஏற்படுத்தி இருக்கிறது.

பெரும்பாலான நிலங்கள் தரிசு நிலங்களாக மாறி வருகின்றன. சென்னையை ஒட்டியுள்ள பயிர் நிலங்கள் அனைத்தும் தொழில் வளர்ச்சி என்கிற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்பட்டிருக்கிறது. ரியல் எஸ்டேட் என்கிற பெயரில் விவசாய நிலங்கள் அனைத்தும் தற்போது பிளாட்டுகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. நமக்கான தேவைக்கு நாமே உற்பத்தி செய்யக்கூடிய நிலை அருகி வருகிறது. ஒரு காலத்தில் நமக்கான காய்கறிகளை நம்மூர் சந்தையில் உள்ளூர் சந்தையில் பெற முடிந்தது. கம்பு வரகு சோளம் போன்ற நமக்கான தானியங்களை நம்மால் உற்பத்தி செய்து கொள்ள முடிந்தது. இன்றைக்கு அந்த விவசாயம் இருக்கிறதா என்றால் இல்லை. நம்முடைய வீட்டில் இருக்கும் ஆடு மாடுகளின் கழிவுகளை சேகரித்து அதனை எருவாக மாற்றி விவசாய நிலத்தை பண்படுத்துவதற்கு நாம் பயன்படுத்தி வந்தோம். அக்காலமும் உண்டு. அரசாங்கம் இதைத்தான் பயிரிட வேண்டும் என்று வற்புறுத்திய நிலை அன்று இல்லை. ஆனால் இன்று உலக சந்தைக்கான உற்பத்தி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். கரும்பு உற்பத்தி ,மக்காச்சோள உற்பத்தி அதற்கு அவன் உரம் கொடுக்கிறான். அவனே பூச்சி மருந்து கொடுக்கிறான். விவசாயிகள் தமக்கான உற்பத்தியில் சுதந்திரமாக ஈடுபட முடியாத நிலை..

உலக சந்தைக்கன உற்பத்தியும் கூட அவன் விரும்புகிற வகையில் மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறான். அதிலும் விவசாயிகளுக்கு சுதந்திரம் இல்லை. நிலங்கள் பறி போய்க்கொண்டிருக்கின்றன. கோடிக்கணக்கான மக்கள் விவசாய கூலி தொழிலாளர்களாக மாறியுள்ளனர். விவசாயிகள் வேறு விவசாயக் கூலி தொழிலாளர்கள் வேறு விவசாயக்கூலிகளுக்கு நிலம் வேண்டும் என்ற போராடிய காலம் போய் தற்போது விவசாயத்திற்கே நிலமில்லாத சூழல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் நெல் உற்பத்தி அரிசி போன்றவற்றை குறித்து நாம் இங்கு பேசிக் கொண்டிருக்கிறோம்.

விவசாயம் பால் பட்டு போனால் எதிர்கால சந்ததியினரின் நிலை கவலைக்குரியதாக மாறும். வேளாண் சட்டங்கள் எந்த அளவிற்கு உழவர்களுக்கு எதிராக விவசாயிகளுக்கு எதிராக விவசாய தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டது என்பதை நாம் அறிவோம். பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் வராது இருந்தால் அந்த சட்டங்களை திரும்ப பெற்று இருக்க மாட்டார்கள். ஆனால் விவசாய சட்டங்களை திரும்பப் பெற்ற அரசு தொழிலாளர்களுக்கான தொகுப்பு சட்டங்களை இன்னும் திரும்பப் பெறவில்லை. 44 சட்டங்கள் இருந்தன. அவை அனைத்தையும் நான்காக தொகுத்து விட்டார்கள். தொழிலாளர்கள் சங்கம் அமைக்க முடியாத நிலை... தங்களுடைய ஊதியத்தை கூலியை கோரிக்கையாக கூட வைக்க முடியாத நிலை.. இதெல்லாம் எங்கே கொண்டு போகும் என்ற கவலை இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் இடதுசாரி இயக்கங்களின் தலைவர் மக்களோடு மக்களாக களத்தில் நின்று போராடி மக்களுக்காக தன் வாழ்க்கையை ஒப்படைத்துக் கொண்ட ஒரு தலைவர் இன்றைக்கு திரைத்துறையில் ஒரு நாயகனாக பாத்திரமென்று நடித்திருக்கிறார் என்பது ஒரு திரை கவர்ச்சிக்கான அணுகுமுறை அல்ல. அதிலும் ஒரு அரசியல் அதுவும் நமக்கான அரசியல் இருக்கிறது. இடது சாரி அரசியல் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.

சமுத்திரகனி சொன்ன விசயங்களை நான் வழிமொழிகிறேன்.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் கலைத் துறையும் அரசியல் துறையும் பின்னிப் பிணைந்தாக இருக்கிறது. தனக்கான முதலமைச்சரை திரையில் தேடுபவன் ஆக தமிழர்கள் இருக்கிறார்கள் என பேசுவதை நாம் பார்க்கிறோம்.

இங்கு கருத்தியலுக்கு போராட்டங்களுக்கு தியாகங்களுக்கு முற்போக்கு சிந்தனைகளுக்கு தரப்படுகிற முக்கியத்துவத்தை விட.. இத்தனை கோடி வருமானத்தை விட்டு விட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார் எங்கள் தலைவர் ஆகவே அவரை முதலமைச்சராக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய நிலை தமிழகத்தில் இருக்கிறது.

ஊரு ஊராய் செல்ல வேண்டாம் மக்களுக்காக போராட வேண்டாம் வழக்குகளை சுமக்க வேண்டாம் தடியடி வாங்க வேண்டாம் சிறைக்கு செல்ல வேண்டாம் திரையில் தோன்றினால் தமிழகத்தில் முதலமைச்சராகி விட முடியும். இது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒன்று.

இந்தியாவின் எல்லா மாநிலத்திலும் நடிகர்கள் இருக்கிறார்கள், இயக்குனர்கள் இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ஆன அமிதாப்பச்சன் முதலமைச்சராக விரும்பியதில்லை. கேரளாவில் மம்முட்டி போன்ற சூப்பர் ஸ்டார்கள் இருக்கிறார்கள். அவர்களும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டதில்லை. ஆந்திராவிலும் உண்டு கர்நாடகத்திலும் உண்டு ஆனால் தமிழகத்தில் மட்டும் ஒரு படத்தில் நடித்தால் போதும் அடுத்து தமிழகத்தில் முதலமைச்சர் ஆகலாம் என்கிற நிலை.

ஜனநாயகத்தில் எல்லோருக்கும் அந்த உரிமை உண்டு நான் அதை மறுக்கவில்லை. ஆனால் இந்த சிந்தனை போக்கு இருக்கிறதே இந்த உளவியல் இருக்கிறதே இந்தத் திரைத்துறை தமிழக அரசியலில் ஏற்படுத்தியிருக்கிற தாக்கம் இருக்கிறதே அது பிற்போக்கானதாக இருக்கிறது என்ற கவலை இருக்கிறது. சமுத்திரக்கனி இங்கு இடதுசாரிகள் கலைத்துறையில் இன்னும் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்பதை முன்மொழிந்திருக்கிறார் என நான் நம்புகிறேன். திரை துறையில் பல கம்யூனிஸ்ட் தோழர்கள் இருக்கிறார்கள்.

தோழர்களே இன்று வலது சாரிகளின் அரசியல் மேலோங்கி இருக்கிறது. எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றி விட முடியும் என்ற உத்திகளை அவர்கள் கையாளுகிறார்கள். மாநிலத்திற்கு மாநிலம் அவர்கள் உத்திகளை மாற்றுகிறார்கள்.

தமிழகத்தில் சிவபெருமானை சொல்லியோ அல்லது மகாவிஷ்ணுவை சொல்லியோ ராம பிரானை சொல்லியோ அரசியல் செய்து வெற்றி பெற முடியாது ‌ முருகப் பெருமானை சொல்லிப் பார்த்தார்கள். வேலை தூக்கிப் பார்த்தார்கள் அது எடுபடவில்லை. திருப்பரங்குன்றத்தையும் கையில் எடுத்துப் பார்த்தார்கள் அவர்களின் அரசியல் இங்கே வெற்றி பெறவில்லை.

ஆகவே திரைத்துறை சார்ந்தவர்களை வளைத்து போட்டு அதன் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி.. டெல்லியை போல் தமிழகத்திலும் ஒரு உத்தியை கையாளுகிறார்கள்.

ஆட்சி மாற்றம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இன்றைக்கு இருக்கும். நாளைக்கு செல்லும். ஆனால் யார் எந்த சிந்தனை உள்ளவர்கள் என்ன அரசியல் பேசக்கூடியவர்கள் எந்த நிலைப்பாட்டை கையில் எடுக்கிறவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற பார்வை நமக்குத் தேவைப்படுகிறது வலதுசாரிகளின் கை நாளுக்கு நாள் வலுப்பெற்று வருவது ஒட்டுமொத்த தேசத்திற்கே தீங்கு விளைவிப்பதாகும். அமெரிக்காவுடன் போடப்பட்டிருக்கும் ஒப்பந்தம் இதற்கு ஒரு சான்று.

விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்றால் விவசாய கூலி தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும் என்றால் இந்திய மண்ணில் இடதுசாரி அரசியல் இன்னும் வலுப்பெற வேண்டும். அனைத்து தளங்களிலும் அது விரிவடைய வேண்டும். தமிழ்நாட்டில் அது திராவிடம் என்ற பெயரில் இயங்குகிறது என்பதால்தான் இடதுசாரிகள் திராவிட கட்சிகளுடன் குறிப்பாக இன்று மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்று இயங்கி வருவதை நாம் பார்க்கிறோம்.

பெரியாரிய அரசியலும் மார்க்சிய அரசியலும் அம்பேத்காரிய அரசியலும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க கூடியது. முதன்மைப்படுத்துவதில் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் இவை அனைத்தும் இடதுசாரி அரசியல்தான். எனவே நாம் அந்த புரிதலுடன் திரைத்துறையையும் கையாளுவோம் என்ற நம்பிக்கையில் தான் அண்ணன் முத்தரசன் அவர்கள் இந்தப் படத்தில் நாயகனாக தோன்றி இருக்கிறார் என்று நம்புகிறேன்.

அவர் இந்த கலை துறையை இடதுசாரி மயப்படுத்துவதற்கு பொறுப்பு இருக்கிறது பண்பு இருக்கிறது நானும் உணர்கிறேன். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த படத்தை இயக்கி இருக்கிற இயக்குனருக்கும் பணியாற்றியிருக்கின்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்'' என்றார்.

நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில்,
''நிறைய மேடைகளில் ஏறி இருக்கிறேன். இது எனக்கு ஸ்பெஷலான மேடை. படைப்பாளிகளை நான் இரண்டு விதமாக பார்க்கிறேன். சமூகத்தில் இருப்பவர்களுக்கு பிடித்த படைப்பை வழங்குபவர்கள் ஒருவகை. இந்த சமூகத்திற்கு தேவையான படைப்பை கொடுப்பவர்கள் மற்றொரு வகை. இது சமூகத்திற்கு தேவையான படைப்பு.

இப்போது இருக்கும் சூழலில் மருத்துவம் போல் படைப்புகள் எப்பவாவது வரும். இதனை அப்படிப்பட்டதொரு படைப்பாகத்தான் பார்க்கிறேன். இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த இயக்குனர் விஜயகுமாருக்கு மனமார்ந்த நன்றி.

பரபரப்பாக பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு போன் கால் வந்தது. முத்தரசன் என்ற பெயரை சொன்னவுடன் எதுவும் பேசாமல் வாருங்கள் படப்பிடிப்பு தளத்திற்கு செல்வோம் என்று கூறினேன். இது சிவப்பு வண்ண துண்டிற்கு நான் கொடுக்கும் மரியாதை.‌ இந்த சிவப்புத் துண்டில் அனைத்தும் அடங்கும் பேரன்பு இருக்கும். பெரும் கருணை இருக்கும் பெரும் கோபம் இருக்கும் மக்களுக்கான அர்ப்பணிப்பு இருக்கும் இப்படித்தான் நான் சிவப்பு வண்ணத்தை பார்க்கிறேன்.‌
அவருடன் நிற்கும்போது அவருடன் பணியாற்றும் போது.. இப்படி எல்லாம் கூட மனிதர்கள் இருக்கிறார்களா..! என்ற ஆச்சரியத்தையும் வியப்பையும் கொடுத்தார். அவரை நான் அப்பா என்று தான் அழைப்பேன். மிக்க மகிழ்ச்சி.

அவருக்குத் துணையாக ஒரு பெண்மணி நடித்தார். அவரது பெயர் ரஷ்யா என்றார்கள். அதுவும் எனக்கு வியப்பாக இருந்தது. அவரிடம் கேட்டபோது எங்கள் ஊரில் நிறைய பேருக்கு அவருடைய பெயருக்கு முன்னால் ரஷ்யா இருக்கும் என்றார்.‌

இப்படி இந்த மண்ணின் மீதும் மக்களின் மீதும் பேரன்பு கொண்டவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உருவாக்கிய படைப்பு தான் இது.‌

இனி வரும் காலங்களில் உணவுக்காக தான் சண்டை. காசு பணத்திற்காக அல்ல. நல்ல உணவை வைத்திருப்பவன் பெரும் செல்வந்தனாக இருப்பான். பணக்காரன் வேறு. செல்வந்தன் வேறு.

நல்ல காற்று நல்ல குடிநீர் நல்ல உணவு வைத்திருப்பவன் தான் செல்வந்தன். இதை நோக்கித்தான் இந்த சமூகம் ஓடும் அவரிடம் சென்று தான் கைகட்டி நிற்க வேண்டும். அந்த சூழல்தான் வரப்போகிறது. இதற்கு முந்தைய தலைமுறை பாதுகாத்துக் கொடுத்த இயற்கை வளங்களை நாம் பத்திரமாக பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும். அந்த பொறுப்பு நமக்கு நிறைய இருக்கிறது. அப்படிப்பட்ட பொறுப்புடன் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் அரிசி . இது அடுத்த தலைமுறையினருக்கு பெரிய ஆவணமாக இருக்கும். காலம் காலமாக பேசப்படும். இதை அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து நல்ல ஒரு அங்கீகாரம் கொடுத்தீர்கள் என்றால் இதுபோன்ற நல்லதொரு படைப்பு உங்களை தேடி வரும். வெல்வோம். '' என்றார்.

*இயக்குநர் விஜயகுமார் பேசுகையில்,*

'' இந்தப் படம் நீண்ட கால ப்ராஜெக்ட். இதை கஷ்டப்பட்டு உருவாக்கினோம் என்பது அனைவருக்கும் தெரியும். இதற்கு உதவி செய்த தயாரிப்பாளர்கள் சண்முகம் - பிரபாகரன் - மகேந்திரன்- ஆகியோருக்கு நன்றி. இந்த விழா இந்த அளவிற்கு பிரம்மாண்டமாக நடைபெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது நடைபெற்றதற்கு இறைவனுக்கு நான் நன்றி சொல்கிறேன்.

இதில் நடித்த இரா முத்தரசன், சமுத்திரக்கனி உள்ளிட்ட நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி.

இந்த திரைப்படம் ஒரு உணர்வுபூர்வமான படமாக இருக்கும். இந்த திரைப்படம் எனக்கு மிகப்பெரிய அடையாளமாக இருக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது.

நாங்கள் நெய் குப்பை எனும் கிராமத்திற்கு சென்ற போது கிடைத்த அனுபவத்தால் தான் இந்தப் படம் உருவானது ''என்றார்.

*தயாரிப்பாளர் சண்முகம் பேசுகையில்,*
'' இந்த படத்தின் கதையை இயக்குநர் விஜயகுமார் என்னிடம் சொல்லி முதலில் ஒரு மேக்கிங் வீடியோ செய்ய வேண்டும் என்று தான் சொன்னார். அதற்கு எவ்வளவு செலவாகும்? என்று கேட்டேன் ஒரு தொகையை சொன்னார் அதை கொடுத்தேன். அதன் பிறகு முத்தரசன் அவர்களை சந்தித்து அவருடைய ஒப்புதலுடன் மேக்கிங் வீடியோவை உருவாக்கினோம்.‌ இதைப் பார்த்த பிறகு இதை இன்னும் விரிவுபடுத்தலாம் விரிவு படுத்தலாம் என்று சொல்லி சொல்லி பேசி பேசி இவ்வளவு பெரிய படமாக உருவாகி இருக்கிறது. இது இவ்வளவு பெரிய படமாக வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி'' என்றார்.

*திரு. இரா. முத்தரசன் பேசுகையில்,*

'' இயக்குனர் விஜயகுமாரும் இளங்கோவும் முதலில் என்னை சந்தித்து விவசாயம் தொடர்பான ஆவணப்படம் ஒன்று உருவாக்குகிறோம் அதில் நீங்கள் இரண்டு நாட்கள் வந்து வருகை தந்து நடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். நான் உடனடியாக கையைக் கூப்பி நான் வரமாட்டேன் என்று உறுதியாக சொல்லி விட்டேன். அதன் பிறகு கதையை சொன்னார்‌. கதை எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. கிராமத்திற்கு சென்று படப்பிடிப்பு நடத்துங்கள். எங்களுடைய தோழர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள் என்று சொன்னேன்.

இயக்குனர் விஜயகுமார் மிகப்பெரிய கெட்டிக்காரர். சாதிக்க கூடிய ஆற்றல் படைத்தவர்.

அதன் பிறகு இது குறித்து தோழர் வீரபாண்டியனிடம் விவாதித்தேன். ஆவணப்படத்தில் இரண்டு நாட்கள் நடிக்க அழைப்பு விடுத்திருக்கிறார்கள் என்று சொன்னேன். இதைக் கேட்டதும் வீரபாண்டியன் இது ஒன்றும் தப்பில்லை தாராளமாக நடிக்கலாம். அதை விருதிற்காக அனுப்புவார்கள். என்றார்.

அதன் பிறகு தோழர் பெரியசாமி இடமும் இதைப்பற்றி சொன்ன போது அவரும் நடிக்கலாம் என்று சொன்னார்.

அதன் பிறகு இரண்டு நாள் என்பதை மூன்று நாளாக நான் கணக்கிட்டு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன். எனக்கு அப்போது ஆவணப்படம் என்றால் என்ன? நீண்ட படம் என்றால் என்ன? எதுவும் தெரியாது. படப்பிடிப்பு தளத்தில் வித்தியாசமான அனுபவம் கிடைத்தது.

அதன் பிறகு உங்களுக்கு எப்போது ஓய்வு நேரம் கிடைக்கிறதோ அப்போது சொல்லுங்கள் படப்பிடிப்பு நடத்தலாம் என மெதுவாக இயக்குநர் சொன்னார்.

அதன் பிறகு 40 நாட்கள் ஆனது. அதன் பிறகு உங்களுடன் சமுத்திரக்கனியையும் சேர்த்து நடிக்க வைக்க வேண்டும் என்று சொன்னார். அப்போது என்னுடன் சமுத்திரக்கனி நடிக்கவில்லை சமுத்திரக்கனியுடன் நான் நடிக்கிறேன் என்று சொன்னேன்.‌

இது என்ன ஆனது என்றால் அரசியலை விட்டு நான் சினிமாவுக்கு சென்று விட்டேனோ.. என்ற நிலை உருவாகிவிட்டது. ஆனால் உண்மையை சொல்கிறேன் இது ஒரு விபத்து போன்றது தான் .என்னுடைய முழு நேரமும் அரசியல் தான். அதை இங்கு தெளிவுபடுத்துகிறேன்.

விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும். அனைவரும் பார்க்க வேண்டும். படம் எப்படி என்பதை உங்களின் முடிவுக்கு விட்டு விடுகிறேன்.

என்னுடைய அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நெய் குப்பை கிராம மக்களுக்கும் நன்றி'' என்றார்.

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.