டிசம்பர் 2021

சென்னையில் மிகப் பிரபலமான வி.ஆர் மாலில் பால் சீலிங் உடைந்து மழை நீர் கொட்டுகிறது!


#rainfall #mall #brokedown #vrmalldanger #vrmallrain #vrmall #vrmallchennai #vrmallbrokedown #vrmallrainvideo

Temporary Augmentation of Train No. 17651/17652 & Train No. 17643/17644 With one additional Sleeper Class Coach! 



 

The following Trains has been temporarily augmented as detailed below:


·         Train No. 17651/17652 Chengalpattu – Kacheguda - Chengalpattu Express will be temporarily augmented with 1- Sleeper Class Coaches and 1- General Second Class Coach Ex. Kacheguda on and from 01st January, 2022 to 31st January, 2022 and Ex. Chengalpattu on and from 02nd January, 2022 to 01st February 2022

 

·         Train No. 17643/17644 Chengalpattu – Kakinada – Chengalpattu Circar Express will be temporarily augmented with 1- Sleeper Class Coaches and 1- General Second Class Coach Ex. Kakinada on and from 03rd January, 2022 to 02nd February, 2022 and Ex. Chengalpattu on and from 04th January, 2021 to 03rd February, 2022

Revised Composition: 1- AC Two Tier Coach, 4- AC Three Tier Coaches, 11-Sleeper Class Coaches, 4- General Second Class Coaches & 2- Luggage cum Brake Vans.

Short Termination Cancelled – Trains to run as per normal schedule



 

Consequent to the cancellation of Line Block between Nayudupeta and Pedapariya, the following trains will run as per normal schedule.  

 

·         Train No.  12711 Vijayawada – Dr MGR Chennai Central Pinakini Express commencing journey on 04th January, 2022 will run to its normal schedule (Earlier notified cancellation of service between Gudur and Dr. MGR Chennai Central stands withdrawn now)

 

·         Train No. 12712 Dr MGR Chennai Central – Vijayawada Pinakini Express commencing journey on 04th January, 2022 will run to its normal schedule (Earlier notified cancellation of service between Dr MGR Chennai Central and Gudur stands withdrawn now)


ஜனவரி 2022-1ல் வெளியாகும் ஜெய்பீம் நாயகி படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்! 


கர்ணன், ஜெய்பீம் ஆகிய படங்களில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் யதார்த்தமான நடிப்பை வழங்கியவர் நடிகை ரஜிஷா விஜயன். தற்போது கார்த்திக்கு ஜோடியாக சர்தார் என்கிற படத்தில் நடித்து வருகிறார். 

இந்தநிலையில் கடந்த 2019ல் மலையாளத்தில் ரஜிஷா விஜயன் நடித்து சூப்பர்ஹிட்டான ‘ஜூன்’ என்கிற படம் தற்போது தமிழில் தயாராகி வருகிறது. மலையாளத்தில் ஹிட்டான ஜோசப் படம் மூலம் புகழ்பெற்று தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு வந்த ஜோஜு ஜார்ஜ் இந்தப்படத்தில் ரஜிஷா விஜயனின் தந்தையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அஹமது கபீர் இயக்கியுள்ள இந்தப்படத்தின் பாடல்கள் மற்றும் வசனங்களை நவீன் முத்துசாமி எழுதியுள்ளார். ஆன்ட் அண்ட் எலிபன்ட்ஸ் சினிமாஸ் (Ants to elephants cinemas) நிறுவனம் சார்பில் அனில் கே.ரெட்டி மற்றும் வி.ஜெயபிரகாஷ் ஆகியோர் இந்தப்படத்தை தயாரிக்கின்றனர்.

சென்னை-28 படம் முதல் நட்பு கூட்டணியாக வலம்வரும் இயக்குனர் வெங்கட்பிரபு, நடிகர்கள் வைபவ், பிரேம்ஜி மற்றும் எடிட்டர் பிரவீன் கே.எல் ஆகியோர் இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வரும் ஜன-1 புத்தாண்டு தினத்தன்று வெளியிடுகின்றனர்.

இந்தப்படம் பற்றி தயாரிப்பாளர் அனில் கே.ரெட்டி மற்றும் வி.ஜெயபிரகாஷ் ஆகியோர் கூறும் போது:

“மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான இந்தப்படம் நிச்சயம் தமிழ் ரசிகர்களுக்கும் பிடிக்கும்.. பாடல்கள் அனைத்தும் அங்கே மிகப்பெரிய ஹிட்.. இங்கே தமிழில் பிரபல முன்னணி பாடகர்கள் இந்த பாடல்களை பாடியுள்ளனர். இந்த படம் இளைஞர்களை கவர்வது மட்டுமல்ல, குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கூடிய ஒரு ஃபீல் குட் படமாகவும் இருக்கும். குறிப்பாக மலையாளத்தில் எப்படி நிவின்பாலிக்கு ஒரு பிரேமம் படம் அமைந்ததோ அதேபோல ரஜிஷா விஜயனுக்கு இந்த படம் நிச்சயமாக அமையும். விரைவில் ரிலீசாகும் விதமாக இந்தப்படம் தயாராகி வருகிறது. தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் இந்தப்படம் வெளியாக உள்ளது” என்று கூறியுள்ளனர்.



ஊரடங்கு கட்டுபாடுகள் அறிவிப்பு  


  • மழலையர் பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை
  • அனைத்து பள்ளிகளிலும் 1 - 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு ஜனவரி 10ம் தேதி வரை அனுமதி இல்லை 
  • அனைத்து பொருட்காட்சி மற்றும் புத்தகக் காட்சிகள் தற்போதைக்கு ஒத்திவைப்பு 
  • சமுதாய, கலாச்சார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடரும்
  • திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து அரங்குகளிலும் 50% பார்வையாளர்கள் உடன் செயல்பட அனுமதி.
  • அழகு நிலையங்கள், சலூன்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.
  • 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தொடர்ந்து செயல்படும்
  • வழிபாட்டுத் தலங்களில் தற்போதைய நடைமுறையே தொடரும்
  • உணவகங்கள், விடுதிகள், தங்கும் விடுதிகளில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து சாப்பிட அனுமதி 

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் 2’ அரை இறுதி போட்டி! 




கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களாக டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சி வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகி வருகிறது. புகழ்பெற்ற இந்த நிகழ்ச்சியை விம் மற்றும் நிபான் பெயிண்ட் இணைந்து வழங்குகின்றன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் பல மாத விடா முயற்சிக்கு பிறகு இந்த வார இறுதியில் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளனர். இதில் வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றுக்கு சென்று கோப்பையை வெல்லும்.


அரை இறுதிப் போட்டிக்கான நடுவர்களாக நடிகை குஷ்பு மற்றும் பிரபல நடன இயக்குனர் பிருந்தா ஆகியோர் உள்ளனர். இந்த நிகழ்ச்சி உங்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் வழங்கவிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் பங்கேற்க இருக்கிறார். இது மேலும் உங்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளிக்கும். இரண்டு நடுவர்களுடன் இணைந்து "செம்ம போத" பாடலுக்கு அவர் நடனமாட உள்ளார்.


இந்த நிகழ்ச்சியை பாவனா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். இந்த வார இறுதியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்க உள்ளன. இவை 3 அணிகளாக பிரிந்து நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த வார இறுதியில் உங்களை உற்சாகப்படுத்த வரும் இந்த அரையிறுதி போட்டியில் ராய்சன் – மெர்சினா மற்றும் அபிராஜ் – அஞ்சனா அணிக்கும், காவ்யா - மகாலட்சுமி மற்றும் நாவலரசன் – அலிஷா அணிக்கும், கார்த்திக் - தியாகு மற்றும் ஐஷு – அல்ஹேனா அணிக்கும் போட்டி நடைபெற உள்ளது. எனவே 1 மற்றும் 2 ஜனவரி 2022 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை மாலை 7.30 மணிக்கு டியூன் செய்யுங்கள். சிறந்த நடன கலைஞர்களுடன் புத்தாண்டை கொண்டாடி மகிழுங்கள்.   

டிக் டாக் புகழ் நடிகை இலக்கியா நடிக்கும் 'நீ  சுடத்தான் வந்தியா'  திரில்லர் படம்!


டிக் டாக் புகழ் நடிகை இலக்கியா நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம் 'நீ சுடத்தான் வந்தியா'.இப்படத்தை கே.துரைராஜ் இயக்கி இருக்கிறார் .ஆல்பின் மீடியா தயாரித்துள்ளது. 2022 ஜனவரியில் வருகிறது. 

இப்படம் டிசம்பரில் 31 தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது. இந்த டிசம்பரில் ஏராளமான படங்கள் வருவதால் இதன் வெளியீட்டுத் தேதி தள்ளிப்போயிருக்கிறது .பொதுவாக விழாக் காலங்களில் பெரிய படங்களும் நட்சத்திர நடிகர்கள் நடித்த படங்களும் வெளியாகும் .அப்போது சின்ன படங்களை வெளியிட்டால் அந்தப் பரபரப்பு ஓசையில் இவை காணாமல் போய்விடும் .இந்த நிலையில் டிசம்பரில் வெளியாக வேண்டியது ஜனவரிக்குத் தள்ளிப் போயிருக்கிறது.

இது குறித்து தயாரிப்பாளர் படத்தின் கதாநாயகன் பேசும்போது:

"நாங்கள் 150 ஸ்கிரீன் எதிர்பார்த்ததற்கு, மிகவும் குறைவாகத்தான் கிடைத்தது. எனவே கமர்சியல் பலமுள்ள வணிக மயமாக்கப்பட்ட இந்த படத்தை 2022 ஜனவரியில் வெளியிடத் தீர்மானித்து விட்டோம் நிறைய எண்ணிக்கையிலான திரையில் வெளியாகும்". " சினிமாவைப் பார்க்கும் போது சுலபமாக தெரியும். நடிகர்கள் நடிப்பதெல்லாம் இலகுவாகத் தோன்றும் .ஆனால் நடித்துப் பார்த்தால்தான் நடிப்பு எவ்வளவு சிரமமானது என்று புரியும். நான் 'நீ  சுடத்தான் வந்தியா' படத்தில் நடித்த போது அதை உணர்ந்தேன்.

எனக்கு சினிமா மீது  காதல் உண்டு. நடிப்பின் மீதும் ஆர்வம் உண்டு. இருந்தாலும் ஒரு தயக்கம் இருந்தது. அதற்கு ஒரு பயிற்சி தேவை என்று நினைத்தேன்.அதனால் நான் கூத்துப்பட்டறையில் மாஸ்டர் பொன்முடி அவர்களிடம் நடிப்பு பயிற்சி எடுத்துக் கொண்டு என்னைத் தயார் செய்து கொண்டு பிறகுதான் நடிக்க வந்தேன். இயக்குநர் எனக்குத் தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார் .அப்போதுதான் மாஸ்டரிடம் பெற்ற நடிப்புப் பயிற்சி  எனக்கு பெரிய உதவியாக இருந்ததை உணர்ந்தேன்.

இந்த படத்தில் 5 பாடல்கள். அதில் நானும் இலக்கியாவும் தோன்றும் 3 பாடல்கள் இருக்கின்றன.  இலக்கியா டிக் டாக் வீடியோக்களில் புகழ்பெற்றவர்.அவருக்கும் இது முதல் படம்; எனக்கும் இது முதல் படம் '.

இது ஒரு காதல் ,சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் நடித்தபோது தயாரிப்புத்துறைப் பற்றி தெரிந்து கொண்டேன். எவ்வளவு சிரமங்களுக்கிடையில் ஒரு படம் உருவாகிறது என்பதை அறிந்து கொண்டேன். இந்தப் படத்தை மிகப்பெரிய  பட்ஜெட் படம் என்று சொல்லலாம் .முழுநீள வணிகப் படத்துக்கு என்னென்ன தேவையோ அதற்கேற்ப படப்பிடிப்பு உபகரணங்களைக் கொண்டுதான் படப்பிடிப்பு நடத்தினார்கள்.  இதில் ரெட் ட்ராகன், ஆரி  கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. பெரிய படங்களுக்கான படப்பிடிப்பு யூனிட் பயன்படுத்தப்பட்டது. இந்தப் படம் நடிப்பில் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அது போலவே ரசிகர்களுக்கும் திருப்தி தரும் என்று நம்புகிறேன்"

ரசிகர்களுக்கு விருந்தாக நிச்சயம் இத்திரைப்படம் இருக்கும் நம்பிக்கையுடன் கூறினார் படத்தின் நாயகன் அருண்குமார்.பல்வேறு தடைகளைக் கடந்து இப்படம் ஜனவரி 2022 முதல் உலகமெங்கும் திரைக்கு வருகிறது.



திருக்குறள் கருத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'அடங்காமை'


ப்படத்தை வோர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பொன் .புலேந்திரன்,ஏ.என்.மைக்கேல் ஜான்சன் தயாரிக்கிறார்கள். தேவையான  எண்ணிக்கையில் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் இருந்ததால் அதிக திரையரங்குகளில் வெளியிடும் நோக்கில் 2022 ஜனவரியில் 'அடங்காமை' உலகமெங்கும் வெளியாகிறது.

இப்படத்துக்குக் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருப்பவர் ஆர். கோபால். இவர், திரையுலகில் 15 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்றுள்ளவர். தன் முதல் படமாக 'மங்களாபுரம்' என்ற படத்தை இயக்கியவர். இது இவருக்கு இரண்டாவது படம்.

இலங்கையைச் சேர்ந்த சரோன் நாயகனாக நடித்திருக்கிறார். ஆந்திராவில் பிரபல விளம்பர மாடலான பிரியா கதாநாயகி. மற்றும் யாகவ் முரளி, கார்த்திக் கண்ணா,முகிலன் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களை ஏற்றுள்ளார்கள்.

சிறுவயதிலிருந்து ஒன்றாகப் பழகிய மூன்று நண்பர்கள் ஆளுக்கொரு ஒரு லட்சியத்தோடு வளர்கிறார்கள் .அதன்படி அவர்களில் ஒருவன் டாக்டராகவும் இன்னொருவன்  நடிகனாகவும் மற்றொருவன் அரசியல்வாதியாகவும் மாறுகிறார்கள்.

டாக்டரை வளர்த்தெடுத்த பாதிரியார் மர்மமாகக் கொலை செய்யப்படுகிறார் .அதுமட்டுமல்ல டாக்டரின் காதலியின் அக்காவும் கொலை செய்யப்படுகிறாள். கொலைக்கான மர்மம் புரியாமல் குழம்பிப் போய் நண்பர்களின் உதவியை நாடுகிறான் மூவரில் ஒருவனான டாக்டர். ஆனால் உடனிருக்கும் அவர்களால்தான் இந்தச் சதி நடந்துள்ளது என்று பிறகே தெரிய வருகிறது .அவர்களை எப்படிப் பழிவாங்குவது என்று துடிக்கிறான்?பழகிய நட்பில் பழிவாங்குதல் அறமல்ல என்று அவன் அஞ்சித் தவிக்கிறான்; தயங்குகிறான்; யோசிக்கிறான். ஆனால் இயற்கையோ மாறுபட்ட தீர்ப்பை வழங்குகிறது.இப்படிப் போகிறது 'அடங்காமை' படத்தின் கதை.


படம் பற்றி இயக்குநர் கோபால் பேசும்போது:

"திருக்குறள் வாழ்வியல் நெறிகளை இரண்டே வரிகளில் கூறும் அற்புதமான நூல். அதிலும் குறிப்பாக 'அடக்கமுடைமை' அதிகாரத்தில் முதலில் வரும் 'அடக்கம்  அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்  'என்ற குறள் 100க்கு  95 பேருந்துகளிலாவது இடம்பெற்றிருக்கும் .ஏன் இந்த வாழ்வியல் சிந்தனை மட்டும் எல்லாவற்றிலும் இருக்கிறது என்பதை யோசித்த போது அதை வைத்து

ஒரு கதையை உருவாக்கினேன். அதுதான் இப்போது படமாக உருவாகியிருக்கிறது. இப்படத்தை டிசம்பர் 31-ல் தமிழகமெங்கும் வெளியிடுவதாக திட்டமிட்டு இருந்தோம்.ஆண்டின் இறுதி வாரத்தில் ஏராளமான படங்கள் வருவதால் திரையரங்குகள் கிடைப்பது சரியாக அமையவில்லை. எனவே நிதானமாகத் திட்டமிடப்பட்டு  ஜனவரியில் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியாகிறது. இது மக்களுக்குப் பிடித்த படமாக இருக்கும் "என்கிறார் இயக்குநர்.

தயாரிப்பாளர்கள் பொன் .புலேந்திரன்,மைக்கேல் ஜான்சன் இருவரும் டென்மார்க்கில் இருந்து இந்த படத்தயாரிப்பில் பங்கேற்று இருக்கிறார்கள். தமிழ்த் திரையுலகின் மீது அபிமானமும் ஆர்வமும் கொண்ட , இவர்கள் இப்படத்தினைத் தொடர்ந்து மேலும் படத் தயாரிப்பில் ஈடுபட இருக்கிறார்கள்.

திருக்குறளை மையமாக வைத்து உருவாகும் இத் திரைப்படம்  ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்புகிறார்கள் இரண்டு தயாரிப்பாளர்களும். இப்படத்திற்கு ஒளிப்பதிவு P.G. வெற்றி, பாடல் இசை கியூரன் மென்டிசன்., திரை இசை M.S ஸ்ரீகாந்த், எடிட்டிங் துரைராஜ், பாடல்கள் ஏ.ரமணிகாந்தன், கெறால்ட் மென்டிசன்,

நடனம் சீதாபதிராம். சண்டைக்காட்சிகள் முரளி, வசனம் ஏ.பி.சிவா. ஜனவரி முதல் 'அடங்காமை' திரைகளில்.



கோவை மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை- மாவட்ட ஆட்சியர்


கோவை: 

கரோனா பரவும் அச்சத்தால், கோவை மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

கரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதால், கோவை மாவட்டத்தில் சாலைகள், பூங்காக்கள் போன்ற பொது இடங்கள், தனியாருக்கு சொந்தமான உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் நாளை (31-ம் தேதி) இரவு பொதுவாக நடத்தப்படும் ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். கூட்டம் கூடி, புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடத்தும் போது, தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட, கரோனா தொற்றானது மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.


4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்!


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் மழையின் அளவு அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் காலை முதலே மழை பெய்து வருகிறது.

சென்னை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனிடையே சென்னை புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

சென்னையில் பெய்து வரும் கனமழையினால் வடபழனி, கோயம்போடு, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி உள்ளது. இதனிடையே அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்ப்ட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


கர்நாடகத்தில் இரவு நேர ஊரடங்கு! 



பெங்களூரு: 

கடும் எதிர்ப்புக்கு இடையே கர்நாடகத்தில் அரசு அறிவித்தப்படி இரவு நேர ஊரடங்கு நேற்றிரவு முதல் அமலுக்கு வந்தது. இதையொட்டி கடைகள், வணிக வளாகங்கள் இரவு 9.30 மணிக்கே மூடப்பட்டன. இந்த ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைக்க அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

கர்நாடகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை மாநிலத்தில் 39 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகி உள்ளது. வரும் நாட்களில்  ஒமைக்ரான் வைரஸ் மேலும் தீவிரமாக பரவக்கூடும் என்று அரசு கருதுகிறது. இந்த ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது. 

அந்த உத்தரவுப்படி, கர்நாடகத்தில் 28-ந் தேதி முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கர்நாடக அரசு கடந்த 26-ந் தேதி அறிவித்தது. இரவு 10 மணிக்கு தொடங்கி காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு கூறியது. இதற்கு சினிமா துறையினர், ஓட்டல், உணவக உரிமையாளர்கள், வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கவலை தெரிவித்தனர்.

ஆனால் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மக்களின் உயிர்களை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கை எக்காரணம் கொண்டும் வாபஸ் பெற மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். அதன்படி கர்நாடகத்தில் இரவு நேர ஊரடங்கு நேற்று அமலுக்கு வந்தது. 

இரவு 9 மணிக்கே போலீசார் வாகனங்களில் ரோந்து வந்து கடைகளை மூடும்படி அதன் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினர். அதனால் 9.30 மணிக்கு எல்லாம் கடைகளை மூடிவிட்டு வியாபாரிகள் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். 10 மணிக்கு அனைத்து வகையான கடைகள் மட்டுமின்றி வணிக வளாகங்கள், ஓட்டல்கள் போன்றவையும் மூடப்பட்டன.

பெங்களூருவில் மேம்பாலங்களை இரும்பு தடுப்புகளை வைத்து மூடவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இரவு நேரங்களில் செயல்படும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அத்தியாவசிய சேவைகளை வழங்கும் ஊழியர்கள், மருத்துவத்துறையினர் உள்ளிட்ட அரசால் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களை தவிர மற்றவர்கள் இரவு 10 மணிக்கு மேல் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதனால் போலீசார் ஆங்காங்கே நின்று சோதனையில் ஈடுபட்டனர். முதல் நாள் என்பதால், 10 மணிக்கு மேல் வெளியில் நடமாடியவர்களை எச்சரித்து அனுப்பினர். இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தாலும், பஸ்கள், மெட்ரோ ரெயில்கள், ரெயில்கள் வழக்கம்போல் இயங்கின. அவசர தேவைகளை தவிர்த்து ஆட்டோ-வாடகை கார்கள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது ரெயில், பஸ், விமான நிலையங்களுக்கு செல்பவர்களை வாடகை வாகனங்கள் ஏற்றி செல்லலலாம். அதில் பயணிப்பவர்கள் அதற்கான முன்பதிவு ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். இரவு நேரங்களில் பஸ்கள் அட்டவணைப்படி செயல்படும். அதில் எந்த மாறுபாடும் கிடையாது.

கர்நாடத்தில் கொரோனா 2-வது அலை ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதால் சினிமா தியேட்டர்களில் தினசரி 5 காட்சிகள் திரையிடப்பட்டு வந்தன. இரவு நேர ஊரடங்கு காரணமாக மாநிலம் முழுவதும் இரவு நேர காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் வரை தினசரி 4 காட்சிகள் மட்டுமே திரையிடப்படும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். 

இரவு நேர ஊரடங்கில் ஓட்டல்கள் அதாவது தங்கும் விடுதிகள் எப்போதும் செயல்படலாம். ஆனால் அங்கு கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளது. ஒமைக்ரான் பரவல் அதிகரித்தால் மாநிலத்தில் தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு மேலும் விஸ்தரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அடுத்தடுத்து வரும் நாட்களில் மேலும் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இரவு நேர ஊரடங்கையொட்டி பெங்களூரு, மைசூரு, மங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 

பெங்களூருவில் ஊரடங்கை மீறி யாராவது சாலைகளில் சுற்றித்திரிந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் கமல்பந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இந்த நிலையில் இரவுநேர ஊரடங்கு குறித்து கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் இரவு நேர ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. யாருக்கும் தொந்தரவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஊரடங்கை செயல்படுத்தவில்லை. நிபுணர் குழுவினரின் பரிந்துரையின்படி, இந்த முடிவு எடுத்துள்ளோம். எந்த காரணத்திற்காக இந்த ஊரடங்கை அமல்படுத்தியுள்ளோம் என்பதை அனைத்து தரப்பு மக்களும் புரிந்துகொள்ள வேண்டும். அரசின் முடிவை எதிர்ப்பதும், விமர்சிப்பதும் சரியல்ல.

கொரோனா 2-வது அலையின்போது எதற்காக ஊரடங்கை அமல்படுத்தினோம் என்பது மக்களுக்கு தெரியும். மக்களின் உயிர்களை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு முடிவு எடுத்துள்ளது. அதனால் அரசின் முடிவை எதிர்ப்பது சரியல்ல.  இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. 

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளோம். இதை அனைவரும் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும். இந்த 10 நாட்களில் கொரோனா பரவல் எப்படி இருக்கிறது என்பதை ஆராய்ந்த அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும். 

கர்நாடகத்தில் 5 பேருக்கு ஒமைக்ரான்!


பெங்களூரு: 

கர்நாடகத்தில் இதுவரை 38 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்ட 5 பேரில் 2 பேர் அமெரிக்காவில் இருந்தும், துபாய், கானா, மும்பையில் இருந்து தலா ஒருவரும் பெங்களூரு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை சுகாதார துறை மந்திரி சுதாகரும் உறுதி செய்துள்ளார். 

கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களுக்கு விலக்கு!


பெங்களூரு: 

கர்நாடகத்தில் கோவில்களுக்கு அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விரைவில் விலக்கு அளிக்கப்படும் என்றும், இதுதொடர்பான சட்டம் சட்டசபை கூட்டுக்கூட்டத்தில் கொண்டுவரப்படும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

கர்நாடக பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் உப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் மேலிட பொறுப்பாளர் அருண்சிங், கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் உள்பட மந்திரிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:-

பிற மதங்களின் வழிபாட்டு தலங்கள் சுதந்திரமாக செயல்படுகின்றன. ஆனால் இந்து கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. சில கட்டுப்பாடுகளால் தொந்தரவை அனுபவித்து வருகின்றன. அதனால் கர்நாடகத்தில் கோவில்களுக்கு அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விரைவில் விலக்கு அளிக்கப்படும். 

கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பு இதற்கான சட்டம் கொண்டு வரப்படும். கோவில் வருமானங்கள் வேறு திட்டங்களுக்கு செல்வதை தடுக்கவும், கோவில் வருமானத்தை அந்த கோவிலின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தும் வகையில் முடிவு எடுக்கப்படும்.

கொப்பலில் உள்ள அஞ்சனாத்திரி கோவிலை அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு இணையாக மேம்படுத்துவோம். அதை பிரதமர் மோடியின் கைகளால் திறந்து வைக்க நடவடிக்கை எடுப்போம். மதமாற்ற தடை சட்ட மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றியுள்ளோம். 

அதை வருகிற கூட்டத்தொடரில் மேல்-சபையில் நிறைவேற்றுவோம். இந்த சட்டத்தை அமல்படுத்த ஒரு செயல் படையை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

கர்நாடகத்தில் 34 ஆயிரத்து 558 கோவில்கள் அரசின் அறநிலையத்துறையின் கீழ் உள்ளன. இதில் ஏ பிரிவில் 132 கோவில்கள் உள்ளன. இவை ஆண்டுக்கு ரூ.25 லட்சத்திற்கும் அதிமாக உண்டியல் வருவாய் ஈட்டுகின்றன. பி பிரிவில் 180 கோவில்கள் இருக்கின்றன. 

அந்த கோவில்களில் ரூ.5 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை வருவாய் கிடைக்கிறது. 34 ஆயிரத்து 246 கோவில்களுக்கு ரூ.5 லட்சத்திற்குள் வருவாய் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகத்தில் இந்து கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்து அமைப்புகள் நீண்ட நாளாக முன்வைத்து வருகின்றன. இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ராகு கேது தோஷம் நீங்க.....!


ராகு தோஷம்: 

ஒருவரது ஜாதகத்தில் ராகுவால் ஏதேனும் தோஷம் இருந்தால் அதில் இருந்து விடுபட வெள்ளிக்கிழமை அன்றும், ராகு தசை மற்றும் ராகு புத்தி  காலத்திலும் விரதம் இருந்து, ராகு பகவானுக்கு ராகு காலத்தில் மந்தாரை மலரால் அர்ச்சனை செய்து உளுந்தால் செய்யப்பட்ட பலகாரத்தை நைவேத்தியம்  செய்து, ராகு காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வர வேண்டும். அதோடு ராகு காலத்தில் துர்கை அம்மனையும் வழிபட்டு வந்தால் ராகு தோஷம் நீங்கும்.


கேது தோஷம்: 

ஒருவரது ஜாதகத்தில் கேதுவால் ஏதேனும் தோஷம் இருந்தால் அதில் இருந்து விடுபட திங்கட்கிழமை அன்றும், கேது தசை மற்றும் கேது புக்தி  காலத்திலும் விரதம் இருந்து, கேது பகவானுக்கு பல வகை மலர் கொண்டு அர்ச்சனை செய்து, சித்ரான்னம் நைவேத்தியம் செய்து, கேது காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வர வேண்டும். அதோடு விநாயகப்பெருமானையும் தொடர்ந்து வழிபட்டு வர கேது தோஷம் விலகும்.

சௌபாக்கியத்தை அருளும் வருத்தினி ஏகாதசி விரதம்..



வைகாச மாதம் தேய்பிறையில் வருகின்ற ஏகாதசிக்கு வருதினி ஏகாதசி என்று பெயர். இந்த ஏகாதசி விரதம் எல்லா வகையான பாவங்களையும் போக்கி சௌபாக்கியத்தைத்தரக்கூடியது. 

பிறவியைக் கடல் என்பார்கள். அந்தப் பிறவிக் கடலைக் கடக்க ஒரு தெப்பம் தேவை. அந்தத் தெப்பமே இந்த ஏகாதசி விரதம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. யாரொருவர் இந்த ஏகாதசியின் பெருமைகளை படித்தாலோ அல்லது காதால் கேட்டாலோ அவர் நிச்சயமாக ஆயிரம் பசுக்களை தானம் செய்வதின் பலனை அடைவார் மற்றும் தன் எல்லா பாவ விளைவுகளினின்றும் விடுபட்டு பகவான் விஷ்ணுவின் பரமபதத்தை அடைவார்.

ஏப்ரல் / மே மாதங்களில் தேய்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பவிஸ்யோத்தர புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரக்கும் இடையிலான உரையாடலின் விவரிக்கப்பட்டுள்ளது. பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார் என தருமை மன்னா, இந்த ஏகாதசியின் பெயர் வருத்தினி. 

இது ஒருவருக்கு இந்த வாழ்க்கையிலும் அதற்கு பிறகும் நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இந்த ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தால் ஒரு ஜீவன் தன் பாவ விளைவுகளை குறைத்துக்கொண்டு, நிரந்தமான ஆனந்தத்தை அடைந்து மிகுந்த பாக்கியசாலி ஆகிறான்.

இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் ஒரு துர்பாக்கியசாலியான மனைவியும் பாக்கியசாலி ஆகிறாள். ஒருவன் இப்பிறவியிலும் அதற்கு பின்னரும் ஆனந்தத்தையும் நல்ல அதிர்ஷ்டமும் அடைகிறான். அவர்கள் அனைத்து பாவ விளைவுகளும் நீங்கப்பெற்று பிறப்பு இறப்பு என்ற சூழலில் இருந்து விடுபட்டு இறைவனின் தூய பக்தி தொண்டை அடைகின்றனர். இந்த ஏகாதசி விரதத்தை சரியான முறையில் கடைபிடித்து மன்தாதா என்ற மன்னன் முக்தி பெற்றார். மேலும் துந்துமாரா போன்ற பல மன்னர்கள் இந்த ஏகாதசியை கடைப்பிடித்து முக்தி பெற்றனர்.

பத்தாயிரம் ஆண்டுகள் தவம் புரிவதன் மூலம் அடையும் பலனை ஒருவர் இந்த ஏகாதசியை கடைப்பிடிப்பதன் மூலம் எளிதில் அடைவார். சூரிய கிரகணத்தின்போது குருக்ஷேத்திரத்தில் 40 கிலோ தங்கத்தை தானமாக கொடுப்பதன் மூலம் அடையும் புண்ணியத்தை ஒருவர் சுலபமாக இந்த வருத்தினி ஏகாதசியை கடைப்பிடிப்பதன் மூலம் அடைவார்.  மன்னர்களில் சிறந்தவனே, ஒரு குதிரையை தானமளிப்பதைவிட ஒரு யானையை தானம் அளிப்பது சிறந்தது. 

யானையை தானமளிப்பதைவிட நிலத்தை தானமளிப்பது சிறந்தது. நிலத்தை தானமளிப்பதைவிட எள் தானம் உயர்ந்தது எள் தானத்தைவிட பொன் தானம் உயர்ந்தது. பொன் தானத்தைவிட உணவு தானிய தானம் உயர்ந்தது. உணவு தானிய தானத்தைவிட உயர்ந்த தானம் எதுவும் இல்லை. ஓ, மன்னர்களில் சிறந்தோனே, உணவு தனியங்களை தானமளிப் பதன் மூலம் ஒருவர் தன் முன்னோர்களையும், தேவர்களையும் மற்றும் எல்லா ஜீவராசிகளையும் திருப்தி படுத்த முடியும்.

ஒருவர் தன் மகளை தாரைவார்த்து கொடுப்பது உணவு தானியங்களை தானமளிப்பதற்கு சமம் என கற்றறிந்த சான்றோர்கள் தெரிவிக்கின்றனர். உணவு தானிய தானத்தையும் பசுதானத்தையும் முழு முதற்கடவுளே சமபடுத்துகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்து வகையான தானங்களை விட மற்றவர்களுக்கு ஞானத்தை அளிப்பதே மிக உயர்ந்ததாகும். வருத்தினி ஏகாதசியை கடைப்பிடிப்பதால் ஒருவர் எல்லா வித தானியங்களின் பலனையும் அடைவார்.

தன் மகளை விற்று வாழ்க்கை நடத்துபவன் மிகப்பெரிய பாவத்தை செய்தவன் ஆகிறான். அத்தகையவன் கடைசி பிரளயம் வரும் வரை நரகத்திலேயே வாழ வேண்டியவன் ஆகிறான். ஆகையால் ஒருவன் தன் மகளை தாரை வார்க்கும் பொருட்டு எந்த ஒரு செல்வத்தையும் ஏற்கக் கூடாது. 

ஒரு குடும்பஸ்தர், பேராசையின் காரணத்தால், செல்வத்திற்காக தன் மகளை விற்றால், அடுத்த பிறவியில் அவன் ஒரு  பூனை உடலை அடைகிறான். ஆனால், ஒருவன் தன் வசதிக்கேற்ப ஆபரணங்களால் தன் மகளை அலங்கரித்து, ஒரு நல்ல வரனுக்கு தாரை வார்த்து கொடுப்பதால் தான் அடையும் புண்ணியத்தை யமராஜாவின் செயலாளரான சித்திரகுப்தனாலும் கணக்கிட முடியாது.

இந்த ஏகாதசியைக் கடைப்பிடிப்பவர் வெண்கல பாத்திரத்தில் உண்ணுதல் மாமிசத்தை உண்ணுதல்,கீரை தேன் போன்றவற்றை உண்ணுதல், மற்றவர்கள் சமைத்த உணவை ஏற்றுக்கொள்ளுதல், போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சூதாட்டம், உறக்கம், வெற்றிலை பாக்கை சுவைத்தல், மற்றவர்களை குறை சொல்வது, பாவப்பட்ட ஒருவருடன் பேசுவது, கோபம் கொள்வது, பொய் சொல்வது ஆகியவற்றை ஏகாதசியன்று தவிர்க்க வேண்டும். 

மேலும் ஏகாதசிக்கு முன்தினத்திலிருந்தே உடலுறவை தவிர்க்க வேண்டும். ஒருவர் இந்த ஏகாதசியை விதிகளுக்குட்பட்டு கடைபிடித்தால் அவருடைய எல்லா பாவவிளைவுகளும் அழிந்து விடும், மற்றும் அவர் மிக உயர்ந்த இலக்கை அடைவார்.




பஞ்சவடி ஆஞ்சநேயர்!



ஒரு காலத்தில் இந்த பஞ்சவடியில் சித்தர்களும், முனிவர்களும் தவம் செய்து வந்தனர். பல ரிஷிகள் வேத சாஸ்திரங்களை பலருக்கும் உபதேசம் செய்தனர். இதன் அடிப்படையில் இந்த புண்ணிய இடத்தில் ஆஞ்சநேயர் கோவில் கட்ட முடிவானது. ஆஞ்சநேயர் மாபெரும் சக்தி படைத்தவர் என்பதால், மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டது. செங்கல்பட்டு அருகிலுள்ள சிறுதாமூரில் கிடைத்த 150 டன் எடை கருங்கல்லைக் கொண்டு பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை உருவாக்கப்பட்டது.

ராமனுக்கும், ராவணனுக்கும் போர் நடந்த போது, ராவணன் ஆயுதங்களை இழந்தான். இதனால் அவனை மறுநாள் வரும்படி அனுப்பி விட்டார். ராமர் இவ்வாறு செய்தது தன்னை திருத்துவதற்கு என்பதை ராவணன் உணரவில்லை. மீண்டும் ராமருடன் போர் செய்ய நினைத்த ராவணன், "மயில் ராவணன்' என்ற மற்றொரு அசுரனின் துணையுடன் போருக்கு வந்தான். ராமரை அழிக்க மயில் ராவணன் கொடிய யாகம் நடத்த திட்டமிட்டான்.

இந்த யாகம் நடந்தால் ராம-லட்சுமணனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று விபீஷணன் ராமரிடம் தெரிவித்தான். அவனை அழிக்க ஆஞ்சநேயரை அனுப்பினார் ராமன். நரசிம்மர், ஹயக்கிரீவர், வராகர், கருடன், ஆகியோரை வணங்கி ஆசி பெற்ற ஆஞ்சநேயருக்கு, அந்த தெய்வங்கள் தங்களின் சக்தியை அளித்தனர். இதன்மூலம் ஆஞ்சநேயர் பஞ்சமுகம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து மயில் ராவணனை அழித்தார்.

ஜெயமங்கள ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு நரசிம்மரின் அருளால் செயல்களில் வெற்றி, லட்சுமி கடாட்சம், ஹயக்கிரீவரின் அருளால் அறிவாற்றல், ஆன்மிக பலம், வராகரின் அருளால் மனத்துணிவு, கருடனின் அருளால் நஞ்சு ஆபத்து விலகும் தன்மை, ஆஞ்சநேயர் அருளால் மன அமைதி, சகல சவுபாக்கியம் கிடைக்கும்.

12 ஏக்கர் நிலப்பரப்பில் தெற்கு பார்த்து கோவில் அமைந்துள்ளது. ராமர், சீதை, லட்சுமணன், சத்ருக்கன், பரதன் ஆகியோர் ஒரு சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். மூலவர் ஆஞ்சநேயருக்கு மேல் 118 அடி உயர விமானமும், அதன் மீது 5 அடி உயர கலசமும் அமைக்கப்பட்டுள்ளது. மூலவருக்கு அபிஷேகம் செய்ய லிப்ட் இருக்கிறது.

இதற்கு 1008 லிட்டர் பால் தேவைப்படும். இங்குள்ள 1200 கிலோ எடையுள்ள மணியை ஒலித்தால் 8 கி.மீ. தூரம் ஒலி கேட்கும்.பெரிய தீர்த்த கிணறும் உள்ளது. இங்கு ராமரின் பாதுகைகள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன. இது சந்தன மரத்தால் செய்யப்பட்டது. இதற்கு 1.25 கிலோ எடையுள்ள தங்க கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.

சீதையை மீட்பதற்காக ராமர், ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை சென்றபோது, சேது சமுத்திரத்தில் பாலம் அமைக்கப்பட்டது. நளன், நீலன் என்ற வானர வீரர்கள் இந்த பாலப்பணியை நடத்தினர். நளன் தேவசிற்பியான விஸ்வகர்மாவின் மகன். விஸ்வகர்மா தன் மனைவிக்கு, "என்னைப்போலவே உனக்கொரு மகன் பிறப்பான். எனக்குரிய திறமை அனைத்தும் அவனிடமும் இருக்கும்,''என வரம் கொடுத்தார்.

இதனால் நளன் தன் தந்தையைப்போல் சிற்ப பணியில் சிறந்து விளங்கினான். இவனால் கடலிலும் பாலம் கட்ட முடிந்தது. இந்த மிதக்கும் கல்லின் ஒரு பகுதி இக்கோவிலில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. எட்டு கிலோ எடையுள்ள இந்தக்கல்லை தண்ணீர் நிறைந்த ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு பூக்களால் அலங்கரித்துள்ளார்கள்.




நாகூர் தர்காவில் கந்தூரி விழா! 


நாகை மாவட்டம் நாகூரில் உலகப்புகழ்பெற்ற தர்கா உள்ளது. இங்கு கந்தூரி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி கந்தூரி விழா வருகிற 1-ந் தேதி (சனிக்கிழமை) பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சியுடன் தொடங்க உள்ளது. 

இதை தொடர்ந்து 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றம் நிகழ்வும், 13-ந் தேதி (வியாழக்கிழமை) சந்தனக்கூடு ஊர்வலமும், 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை நாகூர் ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் நாகூர் வருவார்கள்.

இந்த நிலையில் நாகூர் தர்கா கந்தூரி விழாவுக்கான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் ஆகியோர் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கொடி மற்றும் சந்தனக்கூடு ஊர்வலம் செல்லும் இடங்களை பார்வையிட்டனர். மேலும் விழா நாட்களில் தர்காவிற்கு வருபவர்களுக்காக செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தர்கா நிர்வாக அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார். 

தொடர்ந்து ஆண்டவர் சமாதி, தலைமாட்டு வாசல், கால்மாட்டு வாசல், தர்கா குளம், அலங்கார வாசல், கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

விழா காலங்களில் அரசின் கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி முககவசம் அணிந்து சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என கலெக்டர், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆய்வின்போது நாகை நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், தர்கா நிர்வாக மேலாளர் ஜெகபர்உசேன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


வைகுண்ட ஏகாதசி தரிசன சிறப்பு ஏற்பாடு!


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி கூறியதாவது:-


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. அதையொட்டி பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டு தரிசனம் மற்றும் 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசிக்காக சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திருப்பதியில் மகதி கலையரங்கம், மாநகராட்சி அலுவலகம், ராமச்சந்திரா பஷ்கரணி, பைராகிபட்டிடையில் உள்ள ராமாநாயுடு பள்ளிக்கூடம், மார்க்கெட் யார்டு ஆகிய 5 இடங்களில் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் வீதம் மொத்தம் 50 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும். ஒமைக்ரான் பரவல் பாதிப்பை அடுத்து உள்ளூர் பக்தர்களுக்கு மட்டுமே இந்த இலவச டோக்கன்கள் வழங்கப்படும்.

சாதாரண பக்தர்களின் வசதிக்காக ஜனவரி மாதம் 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டு தரிசனம், 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை வைகுண்ட ஏகாதசி தரிசனம் ஆகியவற்றில் முக்கிய பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் வழங்கப்படும். முக்கிய பிரமுகர்கள் வழங்கும் சிபாரிசு கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது, நிராகரிக்கப்படும்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி மாதம் 11-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.

13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி அன்று காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை கோவிலின் நான்கு மாடவீதிகளில் தங்கத்தேரோட்டம் நடக்கிறது. அதில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். வைகுண்ட துவாதசி அன்று அதிகாலை 5 மணியில் இருந்து காலை 6 மணி வரை ஏகாந்தமாக சக்கர ஸ்தானம் (சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி) நடக்கிறது.

கொரோனா பரவலை தடுக்க கவுண்ட்டர்களிலும், கோவில் உள்ேளயும் குழாய்கள் மூலம் (ட்ரை ஓசோன்) கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்படும். அலிபிரி சோதனைச் சாவடி, திருமலையில் உள்ள அறை ஒதுக்கீடு மையங்கள், வைகுண்ட கியூ காம்ப்ளக்ஸ், லட்டு கவுண்ட்டர்களில் கிருமி நாசினி தெளிக்கப்படும்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் அனைத்துப் பக்தர்களும் 48 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ், தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் ஆகியவற்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும். 

பக்தர்கள் சரியாக முகக் கவசம் அணிய வேண்டும். இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய வேண்டும். அடிக்கடி கைகளை கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.

ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. திருப்பதியில் உள்ள கவுண்ட்டர்களில் உள்ளூர் பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.

ஜனவரி மாதம் 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டு தரிசனத்துக்காக ஸ்ரீவாணி டிரஸ்ட்டுக்கு காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கு 1000 பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. ஜனவரி மாதம் 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி அன்று ஸ்ரீவாணி டிரஸ்ட் பக்தர்களுக்கு 1000 மகா லகு தரிசன (தூரத்தில் இருந்து வழிபடுதல்) டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.

ஜனவரி மாதம் 14-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை 9 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஆயிரம் வீதம் லகு (மூலவருக்கு சற்று அருகில் இருந்து வழிபடுதல்) தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. ஆர்ஜித சேவையில் ஜனவரி மாதத்துக்கு ஒரு நாளைக்கு 5 ஆயிரத்து 500 டிக்கெட்டுகள் வீதம் வழங்கப்படுகிறது.

ஸ்ரீகாந்த் நடிக்கும் ‘தி பெட்’ படத்தின் பர்ஸ்ட்லுக்கை வெளியிடும் ஆர்யா!


ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பெட்’ (The Bed). வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் எஸ்.மணிபாரதி இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். 

மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, டிக்டாக் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இது சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ள ஒரு வீக் எண்ட் மூவி. ஸ்ரீகாந்தும் அவரது நண்பர்களும் ஊட்டிக்கு ஒன்றாக பிக்னிக் செல்லும்போது நடக்கும் ஒரு கொலையும் அதைத்தொடர்ந்து அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் தான் படத்தின் கதை. 


ஸ்ரீகாந்த் ஐடியில் பணிபுரியும் இளைஞராக நடித்துள்ளார். ஸ்ரீகாந்தின் திரையுலக பயணத்தில் இது முக்கியமான படமாக இருக்கும். ஜான் விஜய் போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜான் விஜய், ரிஷா இருவரும் துணிச்சலாக சில நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளனர்.

ஊட்டியை சுற்றி உள்ள வனப்பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பில் பல நாட்கள் குறைந்த ஆடை அணிந்து கடுங்குளிரில் நடுங்கியபடியே அர்ப்பணிப்பு உணர்வுடன் சிருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார் 

இயக்குனர் மணிபாரதி கூறும் போது:

“வழக்கமாக ஹீரோ, ஹீரோயின் அல்லது வில்லன்கள் தங்களது பார்வையில் படத்தின் கதையை விவரிப்பது போன்று பல படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்தப்படத்தில் ஊட்டி காட்டேஜ் ஒன்றில் உள்ள ஒரு படுக்கை (Bed) தனது பார்வையில் தன்னை தேடிவந்த மனிதர்களின் வாழ்க்கையை விவரிப்பது போல இதன் கதையை உருவாக்கியுள்ளோம். அதற்கு பொருத்தமாக இருக்கவேண்டும் என்பதற்காகவே ‘தி பெட்’ என தலைப்பு வைத்துள்ளோம்” என கூறுகிறார். 

இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா வரும் ஜன-3ஆம் தேதி வெளியிடுகிறார்.

நடிகர்கள்:

ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே, ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, டிக்டாக் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில்

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்:

இயக்குநர் ; எஸ்.மணிபாரதி

ஒளிப்பதிவு ; கே.கோகுல்

படத்தொகுப்பு ஜே.பி (கொடி, பட்டாஸ் படங்களில் பணியாற்றியவர்)

இசை ; தாஜ்நூர்

பாடல்கள் ; யுகபாரதி

கலை ; பழனிவேல்

நடனம் ; தீனா

சண்டை பயிற்சி ; ஆக்ஷன் பிரகாஷ்

ஸ்டில்ஸ் ; ராஜ் பிரபு

நிர்வாக தயாரிப்பாளர் ; A.V. பழனிச்சாமி

தயாரிப்பாளர் ; வி விஜயகுமார்

தயாரிப்பு நிறுவனம் ; ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ்

மக்கள் தொடர்பு ; A ஜான்



Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.