டிசம்பர் 2023

சபாநாயகன் திரைவிமர்சனம்


அறிமுக இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் தான் ' சபாநாயகன் '

இந்த படத்தில் அசோக் செல்வன், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி, மேகா ஆகாஷ், அக்‌ஷயா ஹரிஹரன், மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை, விவியா சனத், ராம் குமார் உள்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்து இருக்கிறார்.

பள்ளி, கல்லூரி கால காதல் கதையை மையமாக வைத்து தான் இந்த படத்தை இயக்குனர் கொடுத்திருக்கிறார். படத்தில் அசோக் செல்வன் ஒரு நாள் இரவு குடித்துவிட்டு போதையில் இருக்கிறார். இதனால் போலீஸ் அவரை கைது செய்து அழைத்து செல்கிறது. அப்போது செல்லும் வழியில் தன்னுடைய காதல் தோல்விகளை போலீசாரிடம் அசோக் செல்வன் சொல்கிறார்.

அதில், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது கார்த்திகா மீது உண்டாகும் காதல், கல்லூரி படிக்கும் போது சாந்தினி மீது ஏற்படும் காதல், எம்பிஏ படிக்கும் போது மேககா ஆகாஷ் மீது ஏற்படும் காதல் என வரிசையாக தன்னுடைய காதல் களைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார். இறுதியில் அசோக் செல்வன் தன்னுடைய காதலில் வெற்றி பெற்றாரா? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை.....

பின்னணி இசை, ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. காதல், எமோஷன், காமெடி நன்றாக இருக்கிறது.

படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்....

மொத்தத்தில் இந்த சபாநாயகன் காதல் நாயகன்.....

RATING: 3.5/5



நந்திவர்மன் திரைவிமர்சனம் 



அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில் பெருமாள் வரதன் இயக்கத்தில் சுரேஷ் ரவி நடித்திருக்கும் படம் "நந்திவர்மன்". 

இந்த படத்தில் ஆஷா வெங்கடேஷ், போஸ் வெங்கட், நிழல்கள் ரவி, கஜராஜ், மீசை ராஜேந்திரன், ஆடுகளம் முருகதாஸ், அம்பானி சங்கர், முல்லை கோதண்டம் நடித்துள்ளனர். பெலிக்ஸ் இந்த படத்திற்கு இசையமைக்க, சான் லோகேஷ் எடிட்டிங் செய்துள்ளார். பல்லவ மன்னர்களில் ஒருவரான நந்திவர்மன், செஞ்சி பகுதியில் கட்டிய மாபெரும் சிவன்கோவில் ஒன்று மண்ணுக்குள் புதைந்திருப்பதும், அந்த கோவிலில் புதையல் இருப்பதும் தொல்லியல் துறைக்கு தெரிய வருகிறது. 

அதன்படி, தொல்லியல் துறை பேராசிரியர் நிழல்கள் ரவி, தொல்லியல் துறை அதிகாரி போஸ் வெங்கட் தலைமையில் மாணவர் குழு ஒன்றை ஆய்வு மேற்கொள்ள அங்கு அனுப்புகிறார். ஆனால், அந்த கிராமத்தில் மாலை 6 மணிக்கு மேல் சில அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதால் மக்கள் அந்த இடத்திற்கு செல்வதை தவிர்ப்பதோடு, அந்த இடத்தில் ஆய்வு நடத்தவும் தடையாக நிற்கிறார்கள். 

பிறகு மக்களை சமாதானப்படுத்தி அந்த இடத்தில் போஸ் வெங்கட் குழு ஆய்வு மேற்கொள்ளும் போது, அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொல்லப்படுவதோடு, ஆய்வு குழுவில் இருந்த மாணவர் ஒருவரும் கொல்லப்படுகிறார். இந்த கொலைகள் பற்றிய விசாரணையை கையில் எடுக்கும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாயகன் சுரேஷ் ரவி, அந்த ஊரில் நடக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். பிறகு என்ன நடந்தது என்பதே கதை........ 

பெலிக்ஸ் இசையில் பின்னணி இசை சுவாரசியமாக இருந்தது. நந்திவர்மனின் கதையை விவரிக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிக்க வைப்பது போல், கண்ணுக்கு தெரியாத உலோகத்தினால் செய்யப்பட்ட நந்திவர்மனின் மாய வாள், போன்ற விசயங்கள் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறது.

ஆனால் படமாக்கப்பட்ட விதத்தில் இன்னும் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம்..... 

மொத்தத்தில் இந்த "நந்திவர்மன்" கிரைம் வர்மன்......

RATING: 3.5 




வரலாறு எப்போதும் பொய் பேசாது.. பேசக்கூடாது.. - சீமான் 



சென்னை:

ICW நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் டைரக்சனில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது. 

சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க,  அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லனாக களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். இன்னும் பல புதுமுகங்களும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ள இந்த படத்திற்கு கருணாஸ் மகன் நடிகர் கென் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வர் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். 

இந்தப்படத்தின் சிறப்பு நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன், சிவா கிலாரி, இயக்குநர்கள் வ.கவுதமன், பொன்ராம் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசும்போது:

“சல்லியர்கள் சாமானியர்கள் அல்ல.. சகாப்தம், சரித்திரம் படைக்கப் போகிறார்கள்..” என்று கூறினார்


தயாரிப்பாளர் சிவா கிலாரி பேசும்போது:

“எனக்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தான் தெரிந்தாலும் இங்கே அண்ணன் சீமான் அமர்ந்திருப்பதால் கொஞ்சம் பயமாக இருக்கிறது. அதனால் தமிழில் தான் பேச போகிறேன். என் முதல் படம் ‘விசித்திரன்’. இரண்டாவது படம் ‘போகும் இடம் தூரம் இல்லை’. அதில் கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் தயாரிப்பது எளிதான காரியம் அல்ல. படம் பற்றி கொஞ்சம் பாசிட்டிவாக எழுதினால் திரையரங்குகளுக்கு கூட்டம் வரும். திரையரங்குகளை நம்பித்தான் நாங்கள் இருக்கிறோம்” என்று கூறினார்.


இயக்குநர் பொன்ராம் பேசும்போது:

“இந்த விழாவிற்கு என்னை அழைப்பதற்காகவே படத்தை போட்டு காட்டினார்கள். அற்புதமான படைப்பு இந்த சல்லியர்கள். இந்த படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகைக்கு எத்தனை நாள் பயிற்சி கொடுத்தார்கள் என தெரியவில்லை, அந்த அளவிற்கு மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு மண்ணை சார்ந்த உணர்வுபூர்வமான படம் இது. படம் என்று சொல்வதை விட ஒரு நாவலை படிப்பது போன்ற உணர்வை கொடுத்தது. போர் காட்சிகளும் முறையான பயிற்சி கொடுத்து படமாக்கப்பட்டது போல் தெரிகிறது” என்று கூறினார்.


தயாரிப்பாளர் பி.எல் தேனப்பன் பேசும்போது:

இயக்குநர் கிட்டு தனது முதல் படமான மேதகு படத்தையும் சிறப்பாக எடுத்திருந்தார். ஓடிடியில் மிகப்பெரிய அளவில் ஹிட்டான படம் அது. இந்த படத்தையும் நான் பார்த்தேன். நல்ல தரமான படைப்பாக வந்திருக்கிறது. இதை ஒரு இலங்கை படம் என பாராமல் கன்னத்தில் முத்தமிட்டால் படம் போல ஒரு காதல் படமாக பாருங்கள்.  ஒரு இசையமைப்பாளராக கருணாஸின் மகன் கென் இன்னும் பக்குவப்பட்டவராக இருக்கிறார். அருமையாக இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்” என்று கூறினார்.


இயக்குநர் வ.கவுதமன் பேசும்போது:

 “சல்லியர்கள் திரைப்படமாவதற்கு முன்பே கிட்டு என்னிடம் இந்த கதையை கூறினார். ஒருவகையில் என்னுடைய மகன் தமிழ் கவுதமன் இந்த படத்தின் நாயகனாக நடிப்பதாக இருந்தது. ஆனால் இன்னொரு படத்தில் நடிப்பதற்கான வேறு தோற்றத்தில் இருந்ததால் உடனடியாக இதற்கு மாற முடியவில்லை. கதையாக கேட்கும் போது எனக்குள் ஒரு சிலிர்ப்பையும் படமாக பார்த்தபோது, குறிப்பாக இரண்டாம் பகுதியை பார்த்து முடித்தபோது எனக்கும் இயக்குநர் பொன்ராமுக்கும் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தியது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள பெண் ஒரு பேயை போல நடித்துள்ளளார். திரையில் இன்று இருக்கும் எந்த ஒரு பெரிய நடிகையும் அந்த நடிப்பை வழங்கியிருக்க முடியுமா என தெரியவில்லை. நடிப்பால் நம் மனதை உறைய வைத்து விட்டார்.

பகைவனுக்கும் அருள்வாய் நன்நெஞ்சே என பாரதியார் சொன்ன அந்த வார்த்தைகள் தமிழர்களுக்கு மட்டுமே பொருத்தம். அந்த கருத்தை தான் இந்த படம் சொல்லுகிறது. போராட்டத்தில் காயம்பட்டவர்களை காப்பாற்றும் மருத்துவர்களை கூட அழிக்க வேண்டும் என எதிரி நினைக்கிறான்.. அதுதான் இந்த படத்தின் கருப்பொருள்.. காப்பாற்றுபவன் கடவுளுக்கு சமமானவன். அந்த கடவுளையே அழிக்க நினைக்கிறான் எதிரியான சிங்களவன் ஆனால் அவனையும் காப்பாற்ற நினைக்கும் இனம் தான் நம் தமிழினம். மேதகு பிரபாகரனால் வளர்க்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அது சாத்தியம். இந்த படைப்பை தமிழினம் உச்சி முகர்ந்து கொண்டாட வேண்டும் 

பேசாப்பொருளை பேசுவது தான் படைப்புக்கு பேரழகு. அதை இந்த படம் பேசுகிறது. 15 வருடங்களுக்கு முன்பே ‘சந்தனக்காடு’ தொடர் மூலமாக வீரப்பன் வாழ்க்கையை எந்த சமரசமும் இன்றி அரசுகளின் அச்சுறுத்தலை எல்லாம் எதிர்கொண்டு நிஜத்தை மட்டுமே துணிச்சலாக கூறியிருந்தேன். அது இன்றும் பேசப்படுகிறது. அதே சமயம் இன்று வீரப்பனை பற்றி பல பொய்யும் புனைக் கதைகளும் சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால் இன்றும் கூட அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு கொடுக்க இங்கு யாருக்கும் தோன்றவில்லை. வீரம் செறிந்த ஈழப் போராட்டத்தை ஒரு படமாக எடுப்பதற்கு முன்னோட்டமாகவே சந்தனக்காடு தொடரை எடுத்தேன். சந்தனக்காடு போலவே இந்த உலகத்தை முழுக்க அதிர வைக்க இன்னும் படைப்புகள் ஒரு நாள் வரும். அதை செய்யாமல் நான் ஓயமாட்டேன்.

இன்றைய சூழலில் ஒரு குறிப்பிட்ட சதவீத தமிழர்கள் முன்னிலையில் என்னை ஒரு குற்றவாளியாக நிறுத்தும் ஒரு முயற்சி நடந்து கொண்டிருக்கிறது எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. சண்டை போட்டவன், கொன்று குவித்த சிங்களவன் இன்றும் ஒற்றுமையாக இருக்கிறான்.. ஆனால் சிதறி ஓடிய நம் கூட்டம் இன்னும் தங்களுக்குள் பகை வளர்த்து பிரிந்தே கிடக்கிறது. பொய்யை உண்மையாக்குகிற ஒரு சூழலை இனி தமிழினம் அனுமதிக்க கூடாது” என்று கூறினார்.


நடிகர் திருமுருகன் பேசும்போது: 

“நிறைய படங்களில் நடித்திருந்தாலும் இந்த படம் எனது மனதுக்கு நிறைவான படம். தம்பி கிட்டு ஆரம்பத்தில் எடுத்த குறும்படத்தில் நான் தான் நடித்தேன். ஆனால் மேதகு படத்தில் நடிக்க முடியவில்லை. கிட்டு தமிழ் சமூகத்திற்கு ஒரு முக்கியமான படைப்பாளி. மேதகு படத்தை விட சல்லியர்கள் மிகப்பெரிய வெற்றி பெறும். சல்லியர்கள் யுத்த களத்தில் நடக்கின்ற ஒரு படம். ஆனால் பார்வையாளர்களை பொருத்தவரை அது ஒரு ஹீரோ வில்லன் படம் தான். முழு பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படம். ஒரு அரக்க கூட்டத்திற்கும் அறத்துடன் நிற்கும் கூட்டத்திற்கும் இடையில் நடக்கிற கதை இது. வெகு ஜன ரசிகராக நீங்கள் இருந்தால் 100% இந்த படம் உங்களுக்கு பிடிக்கும். தமிழ் உணர்வாளர்களாக இருந்தால் ஆயிரம் முறை உங்களுக்கு பிடிக்கும். இந்த படைப்பை மிகப்பெரிய அளவில் கொண்டு வந்ததற்கு காரணம் கருணாஸ் அண்ணன் தான். இந்த படம் அவருக்கு நிச்சயம் பெரிய வெற்றியை கொடுக்கும். யுத்த களத்தை மையப்படுத்திய வெளிநாட்டு படங்களை பார்க்கும் நம்மவர்களுக்கு ஏன் நம்மூரில் இப்படி ஒரு படம் வருவதில்லை என்கிற ஏக்கம் இருக்கும். அப்படி நம் ஊரில் போர்க்களத்தை மையப்படுத்தி வந்த படங்களில் இந்தப் படம் தான் ஆகச்சிறந்த படமாக இருக்கும்” என்று கூறினார்.


நார்வே நாட்டில் நார்வே திரைப்பட திருவிழாவை பல வருடங்களாக நடத்தி வரும் வசீகரன் பேசும்போது:

“அகிம்சை ஏந்தி போராடிய எங்கள் இனம் ஆயுதம் ஏந்தி போராடிய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இன்று அறிவாயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம். கடந்த 14 ஆண்டுகளில் எம் இனம் விழுந்து கிடந்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சினிமா என்னும் ஊடகத்தின் ஊடாக சரியான திரைப்படங்கள் வரவேண்டும் என்ற 10 நோக்கங்களில் ஒரு நோக்கத்திற்காக நார்வே திரைப்பட விழா 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து தமிழர்களின் கலை, பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியல் மற்றும் வலிகளை பேசுகின்ற திரைப்படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, தமிழர்களின் அடையாளம் என்றால் அந்த சினிமா எப்படி இருக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக அப்படிப்பட்ட படங்களை தான் கடந்த 14 வருடங்களாக நாங்கள் தேர்வு செய்து வருகிறோம். அந்த வகையில் தம்பி கிட்டு மேதகு திரைப்படத்தை கலைக்கூத்து வழியாக அழகான கதை நகர்த்தல் மூலம் சொல்லி இருந்தார். தமிழகமாக இருந்தாலும் தமிழீழமாக இருந்தாலும் போதை வஸ்து, வன்முறை கலாச்சாரம் இவற்றை விதைக்கும் விதமாகத்தான் படங்கள் வருகின்றன என்பது வருத்தமாக இருக்கிறது, சல்லியர்கள் போன்ற படங்கள் தமிழகத்திலும் சரி, வெளிநாட்டிலும் சரி வெளியாவதற்கு நிறைய போராட வேண்டி இருக்கிறது. அதையெல்லாம் தாண்டி இந்த படத்தை வெளிக்கொண்டு வருவோம்” என்று கூறினார்.


நடிகர் சேது கருணாஸ் பேசும்போது:

 “இந்த படத்தை எடுக்க வேண்டும் என கிட்டு முடிவு செய்தபோது என்னிடம் பரமக்குடியை சேர்ந்த இராவணனை அழைத்து வந்தார். பெரிய வசதி வாய்ப்புகள் எல்லாம் இல்லாதவர். ஆனால் இந்த படம் எடுப்பதற்கு முன்பணமாக 10 லட்சம் ரூபாய் கொடுத்து துவக்கி வைத்தவர் இவர்தான். இப்படி சாதாரண கிராமத்தில் இருக்கும் ஒருவருக்கே இந்த உணர்வு இருக்கும்போது, சினிமாவில் இருக்கும் எனக்கு இந்த மொழியால், இனத்தால் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் ஏதாவது செய்யக்கூடாதா என்கிற வெறி ஏற்பட்டது. தமிழர்களின் மறைக்கப்பட்ட வரலாறுகளை எடுத்துச் சொல்லுங்கள். அதற்கு நான் உங்களுடன் உறுதுணையாக நிற்கிறேன் என்று சொல்லி ஒரு உத்வேகத்தை கொடுத்து இந்த நிமிடம் வரை எனக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய தம்பி கரிகாலனுக்கு இந்த நேரத்தில் நான் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கிட்டு இயக்கிய ‘மேதகு’ படத்தை பார்த்து விட்டுத்தான் இந்த படம் பண்ணும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது. இதையும் சரியாக பண்ணியிருக்கிறார். அவர் என்ன கேட்டாரோ ஒரு தயாரிப்பாளராக அதை சிறப்பாக நான் செய்து கொடுத்திருக்கிறேன். அவரும் இந்த படத்திற்கு நேர்மையாக, உண்மையாக உழைத்திருக்கிறார், பிப்ரவரி மாதத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறோம். தமிழ் சினிமாவில் ஒரு பிரச்சனைக்குரிய, ஒரு இன அழிப்பை பற்றிய வரலாற்று பதிவாக பண்ண வேண்டும் என்று சொல்லி, அதை படமாக எடுத்து தணிக்கை அதிகாரிகளிடம் சான்றிதழ் பெற்ற முதல் படம் எனக்குத் தெரிந்து இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

இந்த படத்தை எடுத்ததற்கு இன்னொரு காரணம் என்னவென்றால், என்னுடைய மகன் கென் தான். இந்த படத்திற்கு அவன் தான் இசையமைத்திருக்கிறான். ஆனால் என் பையன் என்னிடம் கேட்ட கேள்வி என்னவென்றால் இவ்வளவு வறண்ட, இவ்வளவு சீரியஸான, இந்த மாதிரியான ஒரு படத்தை இப்போ கஷ்டப்படுகிற நேரத்தில் எதற்காக காசு செலவு பண்ணி எடுக்கிறீர்கள் என்று கேட்டான். காதலிக்கும்போது கூட மண், இனம், மொழி என்று தான் பேசுகிறார்கள், இதையெல்லாம் யார் இந்த காலத்தில் ஏற்றுக்கொள்வார்கள் என்றான். 

அவனிடம் இது நடந்த காலகட்டம் அப்போது.. போராளிகள் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.. நானும் நிறைய பேரை பார்த்திருக்கிறேன்.. ஆனால் அந்த காதலில் கூட அவர்களிடம் ஒழுக்கமும் அறமும் இருந்தது. அது உங்களுக்கு புரியவில்லை. 21 வயது பையன் உனக்கே புரியவில்லை என்றால் அடுத்த தலைமுறைக்கு இது சுத்தமாக தெரியாமல் போய்விடுமே என்பதற்காகத்தான் இந்த படத்தை எடுத்தேன்.. அப்பா உனக்காக காசு பணம் நிறைய சேர்த்து வைக்கவில்லை என வருத்தப்படாதே.. எதிர்காலத்தில் நடிகராகவோ, ஏதோ ஒரு இடத்தை பிடித்து விடுவாய். அப்படியே ஆனாலும் கூட வரக்கூடிய காலங்களில் நடிகர் கருணாஸின் பையன், எம்எல்ஏ கருணாஸின் பையன் என்று சொல்வதை விட சல்லியர்கள் என ஒரு படத்தை எடுத்தானே அவனுடைய பிள்ளை என்கிற ஒரு அடையாளத்தை உனக்கு நான் உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்பதற்காத்தான் இந்த படத்தை எடுத்தேன். இதுதான் நான் உனக்கு கொடுக்கும் சொத்து என்றேன்.  உண்மையிலேயே அந்த உணர்வில் தான் இந்த படத்தை எடுத்திருக்கிறேன். எல்லோரும் நமக்கென்ன என்று போய்விட்டால் வேறு யார் தான் செய்வது? நம் தமிழகம், நம்ம ஊர்.. இந்த ஊரில் எல்லோரும் வாழலாம்.. ஆனால் நம்மை ஆள்பவன் தமிழனாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.


நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசும்போது:

 “சல்லியர்கள் என்பதை ஒரு படம் என்று சொல்வது அவ்வளவு பொருத்தமாக இருக்காது. அது ஒரு ஆவணம்.. வேரை இழந்த மரமும் வரலாற்றை மறந்துவிட்ட இனமும்  வாழாது.. தன் இன வரலாறு தெரியாத எந்த இனமும் எழுச்சி பெற முடியாது.. என் இனத்திற்கு என்று வரலாறே கிடையாது.. ஏனென்றால் வரலாற்றை படைப்பவனுக்கு வரலாற்றை எழுத நேரம் கிடைக்காது. தமிழர் இன வரலாறை நீங்கள் பார்த்துக் கொண்டே வந்தால் எதிரிகளால் வீழ்த்தப்பட்டதே கிடையாது. உடன்பிறந்த ரத்த சொந்தங்களின் துரோகங்களால் தான் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள் இறுதியாக எங்கள் தலைவர் உட்பட.

கற்றறிவை விட பட்டறிவு மேலானது. அதனால் தான் என் தலைவர் மேதகு பிரபாகரன் எல்லாவற்றையும் ஆவணப்படுத்தினார். ஆனால் இறுதிப் போரில் அவற்றில் பாதிக்கு மேல் சிதைந்து அழிந்து விட்டது. அவருக்கு ஒரு பேரார்வம் இருந்தது. சிண்ட்லர்ஸ் லிஸ்ட் ,போல பிரேவ் ஹார்ட் போல, டென் கமான்மெண்ட்ஸ் போல நம்முடைய விடுதலைப் போராட்ட வரலாறும் படமாக வர வேண்டும் என்று பெரிய அளவில் ஆர்வப்பட்டார். அதற்காகத்தான் அவர் ஆணிவேர் படத்தை தயாரித்தார். தலைவரின் படத்தை போஸ்டர்களில் அடித்து ஒட்டினாலே இங்குள்ள போலீசார் கிழித்தெறிகின்றனர். இங்குள்ள அரசியல் சூழல் அப்படி இருக்கிறது. இதை மாற்ற வேண்டும். அதன் பின்னர் தம்பி கவுதமன் சொன்னது போல அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க வேண்டும்.

விழித்துக்கொண்ட வீர மறவர்களின் வரலாறுதான் தமிழர்களுடைய வீர காவிய வரலாறு. அதில் ஒரு துளி தான் இந்த ‘சல்லியர்கள்’ படம். மருத்துவம் என்பதே மகத்துவம். தன் உயிரை எடுக்க வந்த ஒருவனுக்கும் உயிரைக் கொடுக்கின்ற அறம் சார்ந்த மறவர்கள் நம் தமிழர்கள் என்பதை இந்த படம் உணர்த்துகிறது. இந்த படம் இன்னும் பிரம்மாண்டமாக கூட எடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த உணர்வை சிதைக்காமல் நமக்குள் கடத்தி விட்டார் கிட்டு. அதில் பிரம்மாண்டம் எதுவும் தேவைப்படவில்லை. 

என் தம்பி இயக்குநர் கிட்டுவிடம் குறும்படம் எடுக்கும் காலத்தில் இருந்தே படைப்பாற்றல், எழுத்தாற்றல் நிறைய இருக்கிறது. படத்தில் வசனங்கள் நன்றாகவே இருக்கிறது. காட்சி அமைப்புகளில் எதுவும் பொய் சொல்லி விட முடியாது. இலக்கியம் பொய் பேசும்.. புராணம் பொய் பேசும்.. ஆனால் வரலாறு எப்போதும் பொய் பேசாது.. பேசக்கூடாது. பகைவனாக இருந்தாலும் அன்பு காட்டுங்கள் என்பதை தான் இந்த படம் பேசுகிறது. மருத்துவ பெண் நந்தினியாக நடித்துள்ளவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். புதிதாக வந்துள்ளவர் என்று சொல்லவே முடியாது. அந்த நாட்டில், அந்த காட்டில் என்ன முகத்தைப் பார்த்தேனோ, அதேபோன்ற ஒரு முகம்.. அதேபோன்ற ஒரு போராளியின் முகம்தான் மகேந்திரன்.. கருணாஸ் நடித்துள்ள அந்தப்பகுதி இந்த படத்தின் இதயம் போன்றது. 

இதை ஒரு படம் என்று சொல்லாமல் ஒரு வரலாற்று பதிவு என்று தான் உலக தமிழ் சொந்தங்கள் வரவேற்க வேண்டும். நம் அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும். வரலாறு தான் எல்லா தேசிய இனங்களுக்கும் வழிகாட்டி இருக்கிறது. நம் குழந்தைகளுக்கு இரண்டு மணி நேரம் நாம் காட்டுகின்ற ஒரு பாடமாக இதை செய்ய வேண்டும். 

அயோத்தி போன்ற படங்களுக்கு நாங்கள் குரல் கொடுப்பது அதை மக்கள் சாதாரணமாக கடந்து போய் விடக்கூடாது என்பதற்காகத்தான். அதனால் இந்த படத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். சமீபத்தில் வெளியான சித்தா படம் சிறப்பாக இருந்தது. பார்க்கிங் படம் கூட நன்றாக இருந்தது என என்னிடம் கூறி பார்க்க சொன்னார்கள்.. வெள்ளத்தில் சிக்கிக் கிடந்த எங்களால் எப்படி படம் பார்க்க முடியும் ? எங்களது படமே பெரிய படமாக போய்விட்டது. 

இந்த நாட்டை ஐந்து ஆறு முறை ஆண்ட நிர்வாக தலைவர்களைப் போல என் தலைவனுக்கு ஒரு ஐந்து ஆண்டுகள் மட்டும் இருந்திருந்தால் உலகத்தில் தலை சிறந்த வல்லாதிக்க நாடாக எங்கள் தமிழ் ஈழ நாட்டை கொண்டு போய் சேர்த்திருப்பார். ஆனால் கடைசி வரை அவர் போர்க்களத்தில் போராளி தலைவனாகவே நிற்க வேண்டியதாக போய்விட்டது.  விடுதலைப் போராட்ட வீரர்களை பெருமைப்படுத்துவது போன்று, எங்களது மருத்துவ பிள்ளைகளை பெருமைப்படுத்துவது போன்று ஒரு தேன்கூட்டை தொடுவது போன்று கவனமாக இந்த பதிவை கையாண்டு இருக்கிறார்கள் கருணாஸும் இயக்குநர் கிட்டுவும்..” என்று கூறினார்.


தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்:


தயாரிப்பு ;  சேது கருணாஸ் &  கரிகாலன்

இணை தயாரிப்பு ; சாத்தனூர் சிவா

இயக்கம் ; கிட்டு  

ஒளிப்பதிவு ; சிபி சதாசிவம்

இசை , கென்-ஈஸ்வர்  

படத்தொகுப்பு ; சி,எம் இளங்கோவன்

கலை இயக்குனர் ; முஜிபூர் ரஹ்மான்  

ஆக்சன் ; எஸ்.ஆர்.சரவணன்

விஎப்எக்ஸ் ; விக்னேஷ்

மக்கள் தொடர்பு ; A.ஜான்

2024 ஜனவரி 6- ல் ‘ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான்’ பவர்டு பை சென்னை ரன்னர்ஸ்!




சென்னை:

சென்னையைச் சேர்ந்த உலகளாவிய மென்பொருள் சேவை நிறுவனமான ஃபிரெஷ்ஒர்க்ஸ் இன்க் - Freshworks Inc. (NASDAQ: FRSH) மற்றும் தி சென்னை ரன்னர்ஸ் ஆகியவை ஒருங்கிணைந்து, ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் 2024 நிகழ்வின் 12-வது பதிப்பு நடைபெறவிருப்பதை இன்று அறிவித்திருக்கின்றன. 2006-ம் ஆண்டிலிருந்து பேரார்வமும், அர்ப்பணிப்பும் கொண்ட மாரத்தான் ஓட்ட வீரர்கள் - தன்னார்வலர்களால் லாபநோக்கின்றி நடத்தப்படும் ஒரு அமைப்பாக தி சென்னை ரன்னர்ஸ் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 2024 ஜனவரி 6 சனிக்கிழமையன்று நடத்தப்பட்ட திட்டமிடப்பட்டிருக்கும் இம்மாரத்தான் நிகழ்வில் 22,000-க்கும் அதிகமான நபர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தீவிர முனைப்புடன் கூடிய போட்டியாளர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் மற்றும் ஓட்டத்தில் தீவிரம் காட்டும் ஆயிரக்கணக்கான ஆர்வலர்கள் இப்பங்கேற்பாளர்களுள் உள்ளடங்குவர்.

 

சென்னை ரன்னர்ஸ் - ன் ஆதரவோடு விரைவில் நடைபெறவுள்ள தி ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் 2024, நீண்டதூரத்திற்கு சாலைகளில் நடத்தப்படும் ஓட்ட நிகழ்வுகளது அமைப்பாளர்களின் ஒரு உலகளாவிய முதன்மை அமைப்பான AIMS (சர்வதேச மாரத்தான் மற்றும் தூர (distance) ரேஸ்களுக்கான சங்கம்) என்ற அமைப்பால் சான்றளிக்கப்படும். சென்னை மாரத்தான் 2024, ஒரு தகுதியாக்க நிகழ்வாக அபாட் வேர்ல்டு மாரத்தான் மேஜர்ஸ் என்பதன் அங்கீகாரத்தையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

தி ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் 2024, பவர்டு பை சென்னை ரன்னர்ஸ் என்பது சென்னை மாநகரில் நடைபெறுகின்ற மிகப்பெரிய ஓட்ட நிகழ்வாகும் மற்றும் இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய மாரத்தான் நிகழ்வு என்ற பெருமையையும் இது கொண்டிருக்கிறது. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்காக மொத்தத்தில் நான்கு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. இம்மாரத்தானில் முதன்மை ரேஸான முழு மாரத்தான் (42.195 கி.மீ), பெர்ஃபெக்ட் 20 மைலர் - (32.186 கி.மீ), அரை மாரத்தான் (21.097 கி.மீ) மற்றும் 10 கி.மீ. ஓட்டம் என்பவையே இம்மாரத்தான் தொகுப்பில் உள்ளடங்கிய நான்கு ஓட்ட நிகழ்வுகளாகும்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் ஓட்ட நிகழ்வில் பங்கேற்பவர்களுள் 35%-க்கும் அதிகமானவர்கள் மகளிர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரேஸ் நிகழ்வுகளில் பார்வைத்திறன் பாதிப்புள்ளவர்கள், பிளேடு ரன்னர்கள் மற்றும் வீல்சேர் ரன்னர்களும் பங்கேற்கவிருக்கின்றனர் என்பது இன்னும் சிறப்பான செய்தியாகும்.

தி ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் 2024, பவர்டு பை சென்னை ரன்னர்ஸ், சென்னை மாநகரத்தையே அதிரடியாக அதிர வைக்க முழு தயார் நிலையில் இருக்கிறது. முழு மாரத்தான் போட்டியானது, வரலாற்றுச் சிறப்பு மிக்க மெரினா கடற்கரை பாதை வழியாக நேப்பியர் பாலத்திலிருந்து தொடங்கி, அழகான கடற்கரை பாதையில் கலங்கரை விளக்கத்தை சென்றடையும். அதன்பிறகு இது, மத்திய கைலாஷ், டைடல் பார்க் ஆகியவற்றைக் கடந்து கிழக்கு கடற்கரை சாலையை (ECR) சென்றடையும். முந்தைய ஆண்டைப்போலவே இந்த ஆண்டு நடைபெறும் மாரத்தான் நிகழ்வுகள் நேப்பியர் பாலம் மற்றும் எலியட்ஸ் கடற்கரை என்ற இரு தொடக்க முனைகளை கொண்டிருக்கும். முழு மாரத்தான் (42.195 கி.மீ), பெர்ஃபெக்ட் 20 மைலர் (32.186 கி.மீ), மற்றும் 10 கி.மீ. ஓட்டம் ஆகியவை நேப்பியர் பாலத்திலிருந்து ஆரம்பமாகும். எலியட்ஸ் கடற்கரை, அரை மாரத்தான் (21.097 கி.மீ) நிகழ்வு தொடங்கும் இடமாக இருக்கும். இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், முழு மாரத்தான் பெர்ஃபெக்ட் 20 மைலர் மற்றும் அரை மாரத்தான் 10 கி.மீ. ஆகிய போட்டிகள் நிறைவடையும் முனையாக இருக்கும். 10-கி.மீ. ஓட்ட நிகழ்வுக்கு CPT IPL மைதானம், போட்டி நிறைவடையும் இறுதி முனையாக இருக்கும்.

முந்தைய பதிப்பைப் போலவே, இந்த ஆண்டும் தி ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் 2024, பவர்டு பை சென்னை ரன்னர்ஸ், வகை 1 நீரிழிவு நிலை மீது விழிப்புணர்வை அதிகரிப்பதை இலக்காக கொண்டிருக்கும். நீரிழிவு மேலாண்மைக்காக இன்சுலின் தேவைப்படும் நபர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.12000 முதல் ரூ.18000 வரை இன்சுலின் செலவுகளுக்காக பணம் தேவைப்படுவதால், இத்தகைய நபர்களின் இந்த மாதாந்திர நிதிச்செலவை எதிர்கொள்வதற்கான நிதி ஆதாரத்தை திரட்டுவதும் இந்த மாரத்தான் நிகழ்வின் மற்றொரு முக்கிய நோக்கமாகும்.

இந்நிகழ்வுக்கு ஆதரவளிக்கும் பார்ட்னர்கள்

தி ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் 2024 பவர்டு பை சென்னை ரன்னர்ஸ், சென்னையை அடித்தளமாக கொண்ட பல பிரபல பிராண்டுகளை பார்ட்னர்களாக ஒருங்கிணைக்கும் ஒரு நிகழ்வாக இருக்கும். லைஃப் ஸ்டைல் பார்ட்னராக பாஷ்யம், சில்வர் பார்ட்னராக சுந்தரம் ஃபைனான்ஸ் குரூப், மெட்ரோ பார்ட்னராக சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன், மருத்துவ பார்ட்னராக அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் மற்றும் முதல் பதில்வினை செயற்பாட்டாளர்களாக சிஆர் வாலன்ட்டியர்ஸ் ஆகியவை இந்நிகழ்வில் இணைந்திருக்கும். மாரத்தான் நிகழ்வில் தாகத்தை தீர்க்கும் பார்ட்னராக லிம்கா ஸ்போர்ட்ஸ் மற்றும் மாரத்தான் நிகழ்வில் எரிபொருள் பார்ட்னராக யுனிவெட் இடம்பெறுகின்றன.

இந்த மாரத்தான் நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்துவதற்கு அனைத்து ஆதரவையும் வழங்க உறுதியளித்திருக்கும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை, தாம்பரம் காவல்துறை ஆணையரகம், தமிழ்நாடு அத்லெட்டிக் அசோஷியேஷன், சென்னைவாழ் மக்கள் மற்றும் ஓட்ட செயல்பாடுகள் மீதும், உடற்தகுதி மீதும் பேரார்வம் கொண்டிருக்கும் சென்னையின் துடிப்பான ஓட்ட வீரர்கள், ஆர்வலர்களை உள்ளடக்கிய சமூகத்தினர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியோருக்கு இம்மாரத்தான் நிகழ்வின் அமைப்பாளர்கள் நன்றியினை தெரிவிக்கின்றனர்.

தி ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் 2024 நிகழ்வு, கழிவுகளையே உருவாக்காத ஒரு மாரத்தான் போட்டி நிகழ்வாக இருக்கும். இதற்காக கழிவுகள் மறுசுழற்சி மற்றும் கழிவு தணிக்கைகளுக்கான பார்ட்னராக அர்பஸர் சுமீத் அமைப்பு செயல்படும்.

ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் 2024 - பவர்டு பை சென்னை ரன்னர்ஸ் - ன் ரேஸ் இயக்குனர் திரு. V.P. செந்தில் குமார் இதுபற்றி கூறியதாவது: “நாடெங்கிலும் புகழ்பெற்ற தி ஃபிரெஷ்ஒர்க்ஸ் மாரத்தான் - ன் 12-வது பதிப்பு சிறப்பாக நடைபெறவிருப்பதை அறிவிப்பதில் சென்னை ரன்னர்ஸ் மகிழ்ச்சியும், உற்சாகமும் கொள்கிறது. முந்தைய ஆண்டு பதிப்பின் அடிப்படையில் அதனை மேலும் சிறப்பாக நடத்தும் நோக்கத்தோடு இன்னும் அதிக உற்சாகமூட்டும் அனுபவத்தை வழங்க நாங்கள் தயாராகிவருகிறோம். இந்நகரிலும் மற்றும் உலகளவிலும் மறக்க இயலாத சிறப்பான முத்திரையை இந்நிகழ்வு நிச்சயம் உருவாக்கும் என்று நம்பலாம். கடந்த பல ஆண்டுகளாகவே இந்நிகழ்வு அதன் அந்தஸ்திலும், மதிப்பிலும் வளர்ச்சியடைந்து இந்நாட்டில் சிறப்பாக நடத்தப்படும் முதன்மையான மாரத்தான் நிகழ்வாக தனது இடத்தை வலுவாக நிலைநாட்டியிருக்கிறது. அபாட் வேர்ல்டு மாரத்தான் மேஜர்ஸ் வழங்கியிருக்கும் சமீபத்திய அங்கீகாரம் இதற்கு சிறந்த சாட்சியமாகும். 2024 அபாட் WMM வாண்டா வயது பிரிவு வேர்ல்டு சேம்பியன்ஷிப் நிகழ்வு உடனடியாக அழைப்பிதழைப் பெறுவதற்கு அந்தந்த வயதுப் பிரிவுகளுக்கான தானியக்க தகுதிகாண் நேரத்தில் ஓட்டத்தை முடிக்கும் வீரர்களை இந்த கௌரவமிக்க மாரத்தான் நிகழ்வு தகுதியினை வழங்குகிறது”.

ஃபிரெஷ்ஒர்க்ஸ் - ன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு. கிரிஷ் மாத்ருபூதம் பேசுகையில், “சென்னை மாரத்தான் போன்ற பெரு மதிப்புமிக்க அமைப்புடன் இணைந்து செயல்படுவதில் ஃபிரெஷ்ஒர்க்ஸ் பெருமைகொள்கிறது. உலகெங்கிலுமிருந்து மிக அதிக எண்ணிக்கையில் ஓட்ட வீரர்கள் பங்கேற்புடன் இம்மாநகரின் புகழ்பெற்ற, சிறந்த அமைவிடங்கள் வழியாக மாரத்தான் போட்டிகளில் ஓடுவது ஃபிரெஷ்ஒர்க்ஸ் - ல் பணியாற்றும் எங்கள் அனைவருக்கும் சிறப்பான மகிழ்ச்சி உணர்வையும், பெருமிதத்தையும் வழங்கும் என்பது நிச்சயம். உடற்தகுதியை தங்களது தினசரி செயல்பாட்டின் ஒரு அங்கமாக அமைத்துக்கொள்ள ஒவ்வொருவரும் ஆர்வமுடன் முன்வரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த மாரத்தான் நிகழ்வுக்காக பயிற்சியினை மேற்கொள்வது உடற்தகுதி செயல்பாட்டை தொடங்குவதற்கு ஒரு சிறந்த வழிமுறையாக இருக்கும் என்பது உறுதி,” என்று குறிப்பிட்டார்.

 

மேலும் தகவல்களுக்கு: https://thechennaimarathon.com/

கண்ணகி- திரைவிமர்சனம் 



புதுமுக இயக்குநர் யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலீன் ஜோயா, மயில்சாமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் "கண்ணகி". ஷான் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

நீண்ட நாட்களாக திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்ணாக அம்மு அபிராமி நடித்திருக்கிறார், திருமணத்திற்கு முன் கருவுற்று கருவை கலைக்க முயற்சிக்கும் பெண்ணாக கீர்த்தி பாண்டியன் நடித்திருக்கிறார். திருமணத்தின் மேல் நம்பிக்கை இல்லாமல் பாய் ஃப்ரெண்டுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் பெண்ணாக நடித்துள்ளார் ஷாலீன் ஜோயா, மேலும் கருவுற முடியாத காரணத்தால் கணவனால் கைவிடப்பட்ட பெண்ணாக நடித்திருக்கிறார் வித்யா பிரதீப். 

இவர்கள் நால்வரும் தங்கள் வாழ்வில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க, அடுத்தடுத்து அவர்கள் வாழ்வில் என்னென்ன நடக்கிறது? என்பதே மீதி கதை.... 

உணர்ச்சிகரமான காட்சிகளில் அம்மு அபிராமியின் நடிப்பு சிறப்பு. படத்தின் 4 கதைகளை ஓன்றன்பின் ஒன்றாகக் காண்பித்து குறும்படங்களை இணைத்ததுபோல் இல்லாமல் ஒன்றோடொன்று இணைகோடாகப் பயணிப்பதாகக் காண்பித்திருப்பது முழுமையான திரைப்பட அனுபவத்தைத் தருகிறது. 

ஷான் ரஹ்மானின் பின்னணி இசை சிறப்பாக உள்ளது. பாடல்களும் இனிமையாக உள்ளன. ராம்ஜியின் ஒளிப்பதிவு திரைக்கதைக்குத் தேவையானதைத் தந்திருக்கிறது. ஆனால் 

கதை களம் மெதுவாக நகர்கிறது.... அதில் கூடுதல் கவனம் தேவை......  

மொத்தத்தில் இந்த கண்ணகி சமூக அக்கறை உள்ளவள்......

Rating: 3.8/5 


120 Hz டைனமிக் டிஸ்ப்ளே கொன்ட ரியல்மி C67 5G மொபைல் அறிமுகம்!



சென்னை: 

மிகவும் நம்பகமான ஸ்மார்ட்போன் சேவை வழங்குநரான ரியல்மி அதன் 'சாம்பியன்' சீரிஸில் முதல் 5G ஸ்மார்ட்போனான ரியல்மி C67 5G-ஐ அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது -. 5G சார்ஜிங் சாம்பியனான ரியல்மி ரியல்மி C67 5G ஆனது 5Gஇணைப்புடன் வருகிறது, மேலும் வலுவான கேமரா, வேகமான சார்ஜிங், பெரிய பேட்டரி, கவர்ச்சிகரமான வடிவமைப்பு, சக்திவாய்ந்த 5G சிப்செட், பல்பணிக்கு போதுமான ரேம் மற்றும் தாராளமான ஸ்டோரேஜ் திறன் ஆகியவற்றுடன் வருகிறது. 

ரியல்மி C67 5G இளவயது பயனர்களுக்கு சிறந்த விலையில் சிறந்த தயாரிப்பு அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. C67 5G ஒரு சக்திவாய்ந்த 50MP AI கேமராவுடன் வருகிறது, இது பயனர்கள் தங்கள் படைப்பாற்றல் மற்றும் போட்டோகிராபி திறனை வெளிப்படுத்த உதவுகிறது. பயனர்கள் இந்த படங்களை சிறந்த தரத்தில் பார்ப்பதற்கு, ரியல்மி C67 5G ஆனது FHD+ டிஸ்ப்ளே மற்றும் 91.4% ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்துடன் 120Hz அல்ட்ரா- ஸ்மூத் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது புதுப்பிக்கப்பட்ட விஷன் வடிவமைப்பில் ஒரு மினி காப்ஸ்யூல் 2.0 ஐக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான 33வாட் சூப்பர்வோக் சார்ஜிங் சொல்யூஷனையும் கொண்டுள்ளது, 5000mAh பேட்டரி வெறும் 29 நிமிடங்களில் 1 முதல் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்கிறது. ரியல்மி C67 5G ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 6100 + 5G சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது வலுவான பெர்ஃபார்மென்ஸ் மற்றும் ஒட்டுமொத்த மென்மையான ஆப்பரேட்டிங் அனுபவத்தை வழங்குகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 6GB வரை டைனமிக் ரேம் விருப்பங்களுடன் வருகிறது, இது 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது, இது பயனர்களுக்கு மென்மையான மற்றும் திறமையான மல்டி டாஸ்கிற்கு உதவுகிறது, இது பல பயன்பாடுகளை இயக்கவும் வெவ்வேறு பணிகளுக்கு இடையில் தடையின்றி மாறவும் உங்களை அனுமதிக்கிறது. ரியல்மி C67 5G ஆனது 89mm அல்ட்ரா-ஸ்லிம் பாடியைக் கொண்டுள்ளது. ரியல்மி C67 5G இரண்டு அற்புதமான வண்ணங்களில் கிடைக்கிறது: சன்னி ஓயாசிஸ் மற்றும் டார்க் பர்பிள். இவை இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட்டுகளில் வருகிறது, இதன் விலை முறையே ரூ.13,999 4GB+128GB) மற்றும் ரூ.14,999 (6GB+128GB). 

இந்த வெளியீடு குறித்து பேசிய ரியல்மி செய்தித் தொடர்பாளர்:

ரியல்மியில், 5G ஸ்மார்ட்போனை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், மேலும் எங்கள் 'சாம்பியன்' C சீரிஸின் முதல் 5Gஸ்மார்ட்போனான புதிய ரியல்மி C67 5G, அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். ரியல்மி C67 5G மூலம், நாங்கள் சாத்தியக்கூறுகளை ஆராய்கிறோம் மற்றும் புதுமைக்கான புதிய அளவுகோலை அமைக்கிறோம், சமீபத்திய தொழில்நுட்பத்தை தடையின்றி ஒருங்கிணைக்கும் சிறந்த 5Gசாதனத்தை வழங்குகிறோம், அதே நேரத்தில் எங்கள் இளம் வாடிக்கையாளர்களின் சமூகத்திற்கு சிறந்த மதிப்பை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை பராமரிக்கிறோம். புதிய கண்டுபிடிப்புகளின் எல்லைகளைக் விரிவுபடுத்தும்போது, வலுவான அதிநவீன தொழில்நுட்பத்தை வழங்குவதற்கும், இந்தியாவில் 5G ஸ்மார்ட்போனை அனைவருக்கும் அணுகக்கூடியதாக ஆக்குவதற்குமான எங்கள் பணியில் நாங்கள் உறுதியாக நிற்கிறோம்” என்று கூறினார். 

ரியல்மி தனது பயனர்களுக்கு வாங்கக்கூடிய விலையில் அதிநவீன தொழில்நுட்பத்தை வழங்குவதில் எப்போதும் உறுதியாக உள்ளது. இந்தியாவில் 30 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட ரியல்மி C சீரிஸ் அதற்கு ஒரு சான்றாகும். ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் கேமரா தொழில்நுட்பம் முதல் அழகான வடிவமைப்பு வரை, C சீரிஸ் அதன் முத்திரையைப் பதித்துள்ளது, ஒவ்வொரு புதிய தலைமுறை C சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் சார்ஜிங், கேமரா, ஸ்டோரேஜ் மற்றும் வடிவமைப்பு ஆகிய நான்கு முக்கிய பகுதிகளில் இணையற்ற மற்றும் அற்புதமான புதுமைகளுடன் அதன் பிரிவைச் சார்ந்த மற்ற ஸ்மார்ட்போன்களைக் காட்டிலும் முன்னணியில் உள்ளன.



Kauvery Hospital Alwarpet launches Diabetes on Wheels Program!



Chennai:  

Kauvery Hospital Main Alwarpet, unit of the Kauvery Group of Hospitals, launched the Diabetes on Wheels Program. A mobile van with a team of doctor, dietitian and a nurse will visit 100 locations in Chennai spread across 100 days to raise awareness on Diabetes and its prevention. The van was flagged off by Dr J. Radhakrishnan, IAS, Greater Chennai Corporation Commissioner at the Dishoom Dishoom Diabetes program- an annual expo by Kauvery Hospital to raise awareness on Diabetes. 

Around 600 attendees of the expo benefited from free check-ups on Vitals, Random Blood Sugar, Lipid Profile, Foot Study, Diet Counseling, Physiotherapy counseling, Eye & Dental Check Up. Beyond health screenings, attendees explored stalls featuring diabetic-friendly foods, diet supplements, footwear, and various other diabetic care products.

Dr. K Baraneedharan, Senior Consultant Diabetologist, Kauvery Hospital Alwarpet speaking on the occasion said:

“Diabetes is a silent predator that thrives in the shadows of ignorance. Often-overlooked risk factors are obesity, sedentary lifestyle, genetics, age, and family history. The key to defeating diabetes lies in emphasizing its critical nature as a chronic disease. Dishoom Dishoom Diabetes is an effort in understanding and recognizing the early signs of Diabetes, and embracing a lifestyle that prevents its advances. This year the theme for World Diabetes Day was ‘Know your risk know your responsibility’, and on the same lines we have launched a community outreach program called ‘Diabetes on Wheels’. Through this program we aim to reach a wider population of Chennai, where we will inform and educate the public on diabetes- prevention and management. We will also urge the high risk individuals to get further investigations done through a subsidized price thus making it affordable and accessible for all.” 

“India has an estimated 77 million people (1 in 11 Indians) formally diagnosed with diabetes, which makes it the second most affected in the world.. One in six people (17%) in the world with diabetes is from India. With these alarming numbers, what we as healthcare providers strive to achieve is the prevention and management of Diabetes. An initiative such as this will help us reach people across different age groups and different sectors of the society. We aim to educate people on Diabetes and urge them to follow a healthy lifestyle,” says Dr Aravindan Selvaraj, Co-Founder and Executive Director, Kauvery Group of Hospitals. 

Jithan Ramesh Route No. 17 Movie Trailer Launch!



Chennai:

Nemi Production Dr. Amar Ramachandran presents ‘Route No.17’, is directed by Abhilash, director of critically-acclaimed movie ‘THAI NILAM’ that won 14 International film awards. The film features Jithan Ramesh as the protagonist and Anju Pandiya in the female lead character.  

Hareesh Peraadi is playing the antagonist character in this film and the others in the star-cast include Amar Ramachandran, Nihal, Akil Prabhakar, Jeniffer, Bindu, Karthik Vishwanathan and many others.  Malayalam industry’s most leading music director Ouseppachan is composing music for this film, which has lyrics penned by Yugabharathi, Karthik, Kavignar Senthamizh Dasan and others. 

With the film’s worldwide theatrical release scheduled on December 29, the film’s trailer launch was held at Forum Mall in Chennai, which witnessed the presence of prominent icons from the film industry like Producer T Siva,  playback singers Sujatha Mohan and Swetha Mohan, Actress Vasundhara, Jithan Ramesh’s Bigg Boss show housemates - Actor Aari, Suresh Chakravarthy, Somashekar, Archana, Arandhangi Nisha and actress Komal Sharma were present as chief guests. 

Director Abhilash G Devan said:

“This is a tailor-made film for Jithan Ramesh. Both of us have been good friends ever since I was looking for opportunities in cinema. We have shot this film in almost ten schedules. Jithan Ramesh took laborious effect by acting continuously for 29 days in unbearable heat. We had to shoot the sequence underground that had terrible heat condition. For every 15 minutes, he would come out to pour cold water on him and get back to the underground to continue filming. Usually when the producers come to shooting spot, there would be tension, but when my producer comes on the set it is lively. He also produced my first film. Music Director Ouseppachan hasn’t just composed music, but also gave some advice on the script of the film. You can almost call him a co-director. 

As cinematographer Prashant is almost six feet tall, we shot many scenes without the help of a crane. Aruvi Madan, who played another important role in this film. He  is a good human being. When the shooting of was scheduled in Tirunelveli area, it rained for four consecutive days and the shooting was not possible. So we canceled the shoot temporarily and were paying everyone so that we could come back and do it another time. But Aruvi Madan came forward stating it’s not producer’s fault, but shooting got cancelled due to natural calamity, which doesn’t make him responsible.He surprised me stating that he doesn’t want to get paid.  Such a noble man. The film’s positives and brilliant flashes are due to the team’s hard work, and if there are any minuses, it’s all because of me. Akhil plays second lead role in this movie. I have never seen such a good boy. He does what is exactly required for the role.  I have tried to give this movie in such a way that you will not get bored for 2 hours. "Look and tell me,"  

Producer T Siva said:

“Ramesh is someone I like personally, and is my favourite actor. I was expected a breakthrough for him over a long time, and I am glad that it is going to happen with this movie. He has now got a good route. The film’s trailer has the potential becoming a viral hit in a short span of time.” 

Actress Aranthaangi Nisha said:

“When staying with Jithan Ramesh in the Bigg Boss House, he used to tell that he is waiting for the right opportunity, but didn’t get. And now I am glad that it has happened with this film. I wish him and the entire team, a great success.” 

Actress Suresh Chakravarthy said, “Ramesh would stay calm only at Bigg Boss House, but he is a fantabulous actor. He is now traveling across a good route. The film’s title ‘Route No.17’ is a lucky number in China, and it’s going to work well with him as well.” 

Actress Vasundhara said:

“I have already worked with Abhilash and he is such a dedicated and hardworking person. I am confident that he would have exerted the same amount of energy and efforts in to this project as well. This film will be a great success, and I wish the entire team.” 

Actor Akhil, who has played the second lead role in this movie said:

“Although I have acted in few Malayalam movies, this is my first Tamil movie. Despite the fact that the shooting spot was fun-filed experience, there were lots of risky scenes we had to shoot. Stunt master Jacky Johnson helped and supported a lot. I thank director Abhilash for giving such a lovely role for me.” 

Actress Anju said:

‘This is my debut film in Tamil. Although, I have desire to speak in Tamil, I am not confident as I might go wrong. I am fond of Tamil Nadu youngsters, Everyone in the team including director Abhilash have done a remarkable work. In particular, fight master Jackie Johnson has done a commendable work.” 

Playback singer Sujatha Menon said, ‘I usually don’t attend the audio launch functions, even for the films that have my songs. But if today, I am here along with my daughter, it’s all for the sake of Ouseppachan, who is my mentor. I am welcoming him to the Tamil industry.” 

Actor Harish Kumar said:

“I have not acted in this movie, and I now feel bad for nothing being a part of it. Myself and Abhilash would often have conflicts, but it’s all for the sake of script betterment. Jithan Ramesh sir is a lovely person. Actors like us will have ups and downs, and it’s always advisable to keep working towards our goals without bothered about the results.” 


Actress Komal Sharma said:

“I saw the film along with director Abhilash. I literally felt bad for the intermission as the film was so racy, and didn’t like that break. He has done a remarkable work for this film, which will be evident in every single frame. The entire team’s hard work and dedication will pay off with huge success.”

Music Director Ouseppachan said:

“I am now completing my Golden Jubilee in the industry, and only now, I am here to compose music in a Tamil movie for the first time. I stayed and spent my early days in Kerala, but began my career as music director in Chennai, and 75% of my professional days have been in Chennai. Many have been asking me why I didn’t come here in Tamil cinema industry earlier. It is because when music directors like Vidyasagar and Harris Jayaraj, who worked with me during my 35th year of age were doing great job out here, I didn’t want to ruin the scenario. So I stayed back in Malayalam industry.”

Producer Amar said:

“Let me first express my gratitude to the music director,  for joining our team. Brother Ouseph!  I am a rather fresh entrant to the film;m industry. I have produced 3 mob=vies in Malayalam and one in Tamil;. I am now producing my second Tamil movie. However, Ouspeph did not think of us as being freshers and gave excellent support to our team.

When Abhilash narrated the story to me, he asked me in which language I would prefer to make the movie – Tamil or Malayalam. Without batting an eyelid, I replied in Tamil.

Abhilash only introduced me to Ramesh. There is no better choice than Ramesh for this movie.

I have acted in a minor role in a movie with actor Aari. I had an association with Jithan for 100 days during the making of Big Boss. I am grateful for this team to attend this function recalling this 100 days’ association!

My personal deep gratitude to producer R B Choudhary helped a great deal in the process of releasing this movie after it was completed. I would like to ask the communication media networks to extend their best help to promote this movie to reach the public.

I am still practising as a doctor! I am a maternity specialist. I am also a laparoscopic surgeon. In my career, I have given equal importance to both my medical and film careers. However, as you can rightly observe, my patients are more important than the movie! Only when I do not have any work in the medical field, do I venture into the movie domain. Even when confirming that there is no work in the medical line, I will first confirm that there are enough doctors before venturing into films. After completing this programme, I need to visit the hospital tomorrow morning!  The money I earn from my medical profession will be useful to distribute wages to the film staff!”

Actor Jithan Ramesh said:

“Both myself and Abhilash are good friends, and we always chat casually. When he had done the film ‘Thai Nilam’, he approached me with a script, and insisted that I have to act in it. I asked him to narrate the script, and went completely engrossed with the racy screenplay. 

90% of the film has been shot inside the forest, among which major sequences have been filmed inside a cave, where around 50 people had to stay and shoot. It was even difficult for us to breathe. The film’s maximum budget was spent for the candles as it was used in big numbers during the shoot. The film’s heroine Anju was immersed in soil for most of the sequences for nearly 30 days. She had a fracture on leg during the shoot, and had to take rest, but still she bounced back immediately and got her portions shot. The film has achieved a greater level with the fantabulous musical score of Ouseppachan sir, and everyone will mention the same after the release.”

Actor Aari said:

“It’s great to see that all the playback singers are honoured, and it’s a great privilege to be a part of an event that has Music director Ouseppachan sir, whose contribution to the world of music goes beyond ages and decades. He has completed 50 years in the in usury, and is still able to give youth-centric music. I can see that only his physical age has increased, but not his creative mind and spellbinding music. I am a good friend of Abhilash. He approached me with a script when I was shooting for Nendunchalai. Both of us have shared a great bonding from that point of time, which extends beyond films. Jithan Ramesh had narrated the script to me. He might not have succeeded as a hero, but will definitely score brownie points as villain. Even I’m all set to perform a negative role in a movie that will release next year. 

It’s great and heartwarming to see good-hearted people like Arandhangi Nisha and KPY Bala extending their helping hands towards the needy during the flood times. Many have been publicising and spreading news about the leading icons and celebrities doing such services, but everyone must celebrate these people too. It’s okay if we aren’t contributing or helping anything, but we must celebrate such heroes, who reached out to the poor and needy during these crucial times. Producer Amar is an ordinary man, who became a doctor, and then out of passion, embarked on a journey in the film industry, and has successfully released 5 movies, which shows his immense dedication.”

மூட்டு மாற்று சிகிச்சையில் பிரசாந்த் மருத்துவமனை சாதனை!



சென்னை: 

சென்னையின் முன்னணி பன்னோக்கு மருத்துவமனையாக திகழும் பிரசாந்த் மருத்துவமனை எலும்பியல் பராமரிப்பு ரோபோடிக் பிரிவு துவக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் ரோபோடிக் உதவியுடன் 100க்கும் மேற்பட்ட முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளது.

 

இந்த குறிப்பிடத்தக்க சாதனையை மூத்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும்பிரசாந்த் மருத்துவமனையின் மூட்டு மறுசீரமைப்பில் முன்னோடி டாக்டருமான ஆறுமுகம் அவர்களின் தலைமையில் நடைபெற்றுள்ளது. ‘வெலி’யின் 4வது தலைமுறை ரோபோவைப் பயன்படுத்தி 110 ரோபோ முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளை செய்து முடித்த நாட்டின் மிகச் சில அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவராக இவர் உள்ளார்.

 

கடுமையான மூட்டுவலியால் பாதிக்கப்படுபவர்களுக்கு முழங்கால் செயல்பாட்டை மேம்படுத்த மொத்த முழங்கால் மாற்று சிகிச்சையை மிகவும் சீரான மற்றும் பயனுள்ள செயல்முறையாக உள்ளது. அத்தகைய நோயாளிகளுக்கு ரோபோ உதவியுடன் செய்யப்படும் சிகிச்சையானது ஒரு பெரிய வரப்பிரசாதமாகும்ஏனெனில் இது அறுவை சிகிச்சை நிபுணரின் அறுவை சிகிச்சை துல்லியத்தை பல மடங்கு அதிகரிக்க உதவுகிறது. இது அறுவைசிகிச்சையின் போது ஏற்படும் ரத்த இழப்பை வெகுவாக குறைப்பதோடுவழக்கமான முறைகளைப் பயன்படுத்தி செய்யப்படும் அறுவை சிகிச்சையுடன் ஒப்பிடும்போது அறுவை சிகிச்சைக்குப் பின் வலி என்பது மிகக் குறைவாக இருக்கும்.

 

இந்த ஹைடெக் ரோபோவைக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ளும்போது இமேஜ் அடிப்படையிலானசிடி ஸ்கேன் அல்லது வேறு எந்த கதிர்வீச்சு பரிசோதனையும் தேவையில்லை. ரோபோவில் உள்ள கேமரா சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறதுஇது மிக வேகமாகவும்துல்லியமாகவும்ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை படம்பிடிக்க உதவுகிறது. 


மொத்த முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் வழக்கமாகப் பயன்படுத்தும் கருவிகளைக் காட்டிலும் இதில் உள்ள அமைப்புகள் மருத்துவர்களுக்கு மிகுந்த உதவிகரமாக உள்ளன.  இதன் மூலம் நோயாளியின் முழு மூட்டுவலி குணமாவதோடுஅந்த நோயாளிகள் இயல்பு நிலைக்கு வெகுவேகமாக திரும்பி எளிதாக நடக்கவும் விரைவாக குணமடையவும் செய்கிறது.

 

பிரசாந்த் மருத்துவமனையின் மூத்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் ஆறுமுகம் கூறுகையில்:


நாம் வழக்கமான பணிகளை செய்ய நமது கை கால்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது என்பது மிகவும் அவசியம் ஆகும். சரியான உடல் எடையை பராமரித்தால் மட்டுமே கால் மூட்டுகளில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது.

 

அதற்கு நாம் தினந்தோறும் வழக்கமான உடற்பயிற்சி செய்வதும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதும் மிகவும் முக்கியமாகும். அவ்வாறு செய்யும்போது அது வயதான காலத்தில் மிகுந்த பயன் அளிக்கக்கூடியதாக இருக்கும். இவ்வாறு செய்யாவிட்டால் இதன் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் எதிர்காலத்தில் ஏற்படுகின்றன. மருத்துவத் துறையை பொறுத்தவரை அவ்வப்போது புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் கருவிகள் வந்தவண்ணம் உள்ளன. அந்த வரிசையில் எங்கள் மருத்துவமனையில் பல்வேறு நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் உள்ளன. அதில் எங்களின் முழங்கால் மூட்டு ரோபோடிக் அறுவை சிகிச்சை பிரிவானது நோயாளிகளுக்கு துல்லியமான சிகிச்சை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு வரும் நோயாளிகளுக்கு அவர்களின் பிரச்சினைகள் துல்லியமாக கண்டறியப்பட்டு அதற்கு தகுந்த சிகிச்சை அளிப்பதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தில் முழங்கால் மூட்டு சம்பந்தமாக எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்கும் வகையில் நாங்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் ரோபோடிக் உதவியுடன் சிறப்பான சிகிச்சையை அளிக்கிறோம் என்று தெரிவித்தார்.

 

மேலும் அவர்  “TKRல் (Total Knee Replacement)  முழங்காலின் மூட்டுவலி முந்தைய நிலையில் சீரமைப்பதுநோயாளிகள் எளிதில் குணமடைவதில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வது தலைமுறை வெலியின் ரோபோவைப் பயன்படுத்துவதன் மூலம்என்னால் முழங்காலை முழுமையாக சீரமைக்க முடிகிறது. ஒவ்வொரு முழங்காலுக்கும் தனித்துவமான சீரமைப்பைச் செய்கிறேன்அதன் மூலம் ஒவ்வொரு காலையும் அதன் மூட்டுவலிக்கு முந்தைய நிலைக்கு சீரமைக்கிறேன். இது எனது அனைத்து நோயாளிகளுக்கும் மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இது எனது நோயாளிகள் எளிதாக நடக்கவும் விரைவாக குணமடையவும் உதவுகிறது”.

 

இந்த சாதனை குறித்து பிரசாந்த் மருத்துவமைனயின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா கூறுகையில்:


மருத்துவ தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் எங்களின் உறுதியான அர்ப்பணிப்பை வலியுறுத்தும் வகையில்இந்த சாதனை எங்கள் குழுவிற்கு ஒரு முக்கிய மைல்கல்லாகும். 2024-ம் ஆண்டை சிறந்த சாதனை உடன் துவங்குவது என்பது எங்களுக்கும் எங்கள் ஊழியர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எலும்பியல் சிகிச்சைக்கான சிறந்த மையத்தை திறம்பட வழிநடத்திமுழங்கால் தொடர்பான பிரச்சினை உடைய நோயாளிகளின் வாழ்க்கையை மாற்றுவதற்கான அதிநவீன ரோபோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திஎலும்பியல் சிகிச்சைப் பிரிவில் சிறப்பாக பணியாற்றி வரும் டாக்டர் ஆறுமுகம் மற்றும் அவரது திறமையான மருத்துவர்கள் குழுவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


வயது அதிகரிப்புஎடை அதிகரிப்புஅதிக உடல் நிறை குறியீட்டெண்உட்கார்ந்த நிலையிலான பணிகள்தசை பலவீனம்மூட்டுவலி பிரச்சனைகள்விபத்துக்கள்மரபணு காரணிகள் மற்றும் முழங்கால் மூட்டு நிலைமைகள் போன்ற வாழ்க்கை முறை தொடர்பான பிரச்சினைகளால் முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது என்று இந்த மருத்துவமனை கண்டறிந்துள்ளது. அதேபோல் இந்த பிரச்சினையானது ஆண்களைவிட பெண்களுக்கு அதிக அளவில் இருப்பதாகவும் இம்மருத்துவமனை கூறுகிறது. ஏனெனில் இங்கு சிகிச்சைக்கு வந்த ஆண்களைவிட பெண்களே அதிகம். மேலும் ஒரே நாளில் ஒரு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களைவிட இரண்டு முழங்கு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களே அதிகம் என்றும் இம்மருத்துவமனை தெரிவிக்கிறது.

 

இம்மருத்துவமனையில் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட வயதான நோயாளி ஒருவர் கூறுகையில்ரோபோடிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் எனது வாழ்க்கையை மாற்றி அமைத்த இம்மருத்துவமனையின் டாக்டர் குழுவிற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆலோசனை முதல் அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு வரை இங்கு மிகவும் சிறப்பாக உள்ளது.

 

முதலில் நான் ரோபோவால் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சை சரியாக இருக்குமா என்ற எனக்கு சந்தேகம் எழுந்தது. அறுவை சிகிச்சையின் துல்லியம் எனது சந்தேகத்தை தீர்த்ததுஇதன் விளைவாக நான் மிக விரைவாக எனது இயல்பு நிலைக்கு திரும்பினேன்.

 

ஒரு காலத்தில் நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த என்னை அதில் இருந்து விடுவித்து எனது வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக மாற்றிய பிராந்த் மருத்துவமனைக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அனுபவம் எனக்கு ஒரு புதிய முழங்காலை மட்டும் கொடுக்கவில்லைஅது எனக்கு வாழ்க்கையில் ஒரு புதிய உத்வேகத்தையும் கொடுத்துள்ளது என்று தெரிவித்தார்.

 

வெலி நிறுவனத்தின் 4வது தலைமுறை ரோபோ 3காட்சிப்படுத்தல் மற்றும் உள்ளுணர்வு கட்டுப்பாட்டு அமைப்புகளை ஒருங்கிணைக்கிறதுமுழங்கால் மூட்டு சீரமைப்பு அறுவை சிகிச்சைகளுக்கான துல்லியமான தரவுகளையும் வழங்குகிறது. இந்த அணுகுமுறை காரணமாகஅறுவைசிகிச்சை நிபுணர்கள் உடனடி முடிவுகளை எடுக்கவும்செயல்திறன் மற்றும் துல்லியத்தை அதிகரிக்கவும் உதவுகிறதுஇதன் விளைவாக வலி மற்றும் ரத்த இழப்பு குறைவதோடு நோயாளி விரைவாக குணமடைந்து வீடு திரும்பலாம்.


VIDEO HERE:


ஸ்கின்க்யூ உடன் இணைந்து மருத்துவ முக அழகு சேவை பிரிவை துவக்கும் நேச்சுரல்ஸ்!



சென்னை:

புத்தாண்டு 2024-ம் ஆண்டு துவங்க உள்ள நிலையில், தனது சலூன்களில் மருத்துவ முக அழகு சிகிச்சையை துவக்க இருப்பதாக நேச்சுரல்ஸ் சலூன் அறிவித்துள்ளது. நேச்சுரல்ஸ் சலூன், இந்திய சலூன் துறையில் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், மருத்துவ ரீதியிலான முக அழகு சிகிச்சை என்னும்  இதுநாள் வரை தோல் மருத்துவர்களால் மட்டுமே வழங்கப்பட்டு வந்த முக அழகு சேவையை, இப்போது தங்களின் சலூன்களில் உயர் பயிற்சி பெற்ற ஒப்பனையாளர்கள் மூலம் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்காக இந்நிறுவனம் தோல் மற்றும் முடி பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஸ்கின்க்யூ உடன் இணைந்து இந்த சேவையை வழங்க இருக்கிறது. விரிவான ஆராய்ச்சி, மருத்துவப் பரிசோதனை மற்றும் இந்திய தட்பவெப்ப நிலைகளின் அடிப்படையில் இங்குள்ள மக்களின் தோலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட முதல் பாதுகாப்பான சான்றளிக்கப்பட்ட ‘மெடி-பேஷியல்’ என்னும் முக அழகு சாதன பொருட்களையும் அறிமுகம் செய்தது. கடந்த 20 வருடங்களுக்கு முன்னரே முன்னோடி முயற்சியாக தொழில்முறை சார்ந்த சலூன் வகை என்ற கருத்தை நேச்சுரல்ஸ் சலூன் அறிமுகப்படுத்தியது. 

இப்போது இது ரூ.100 பில்லியன் வர்த்தகத்தை உருவாக்கி உள்ளது. இன்று, 23 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்நிறுவனம் தனது அழகு நிலையத்தின் தலைமைத்துவத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தும் விதமாக அழகு என்பதை மருத்துவ அழகுடன் ஒப்பீடு மட்டும் செய்யாமல், அழகு கலைஞர்களை பயிற்சி மற்றும் உயர் திறன்கள் மூலம் அழகியல் நிபுணர்களாகவும் மாற்றி உள்ளது. பிரபல தோல் மருத்துவர் டாக்டர் சித்ரா ஆனந்த் தலைமையில் தயாரிக்கப்படும் ஸ்கின்க்யூ அழகு சாதன மற்றும் முடி பராமரிப்பு பொருட்களுக்கு பாதுகாப்பு சான்றளிக்கப்பட்டு இருப்பதோடு ஆரோக்கியம் மற்றும் புதுமைமிக்க பிராண்டாகவும் அது உள்ளது. 

இது குறித்து பேசிய நேச்சுரல்ஸ் சலூன் நிறுவனர் வீணா குமாரவேல் கூறுகையில்:

நேச்சுரல்சைப் பொறுத்தவரை, எங்களின் நோக்கம் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் அழகுத் தேவைகளுக்கு எப்போதும் சிறந்த சேவையை அளிப்பதாகும். மேலும் தொழில்முறைசார்ந்த சலூன் துறையில் எங்களின் நீண்ட அனுபவமும் தலைமைத்துவமும் எங்கள் 740 சலூன்களில் அழகு சிகிச்சை அனுபவத்தை முழுமையாக மறுபரிசீலனை செய்து மீண்டும் புதுமையை புகுத்தி உள்ளது. இன்றைய இந்த வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பின் மூலம் எங்கள் சலூன்களில் புதுமையான மற்றும் மருத்துவ ரீதியான மெடி-பேஷியல்கள் செய்யப்பட உள்ளது. இவை சிறப்புமிக்க ஸ்கின்க்யூ ஆக்டிவ் பேஷியல் பொருட்கள் மற்றும் சாதனங்களைக் கொண்டு செய்யப்பட உள்ளது. சலூன் துறையில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கி வரும் நாங்கள் தற்போது ஸ்கின்க்யூவின் சான்றளிக்கப்பட்ட தோல் பராமரிப்பிற்கான மெடி-பேஷியல் கிட்டைப் பயன்படுத்தி எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரே இடத்தில் அனைத்துவிதமான அழகியல் சேவைகளையும் வழங்க உள்ளோம். முடி திருத்தும் மற்றும் முக அழகு ஒப்பனையாளர்களாக இருந்து தற்போது அழகியல் நிபுணர்களாக மாறியுள்ள எங்களின் அனைத்து ஒப்பனையாளர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இந்த கூட்டணி குறித்து ஸ்கின்க்யூ நிறுவனர் டாக்டர் சித்ரா ஆனந்த் கூறுகையில்:

மெடி-பேஷியல் என்னும் புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் நீண்ட நெடிய பாரம்பரியத்துடன் இந்தியா முழுவதும் பரந்து விரிந்து இருக்கும் நேச்சுரல்ஸ் உடன் நாங்கள் இணைந்து இருப்பது என்பது எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்களின் பியூட்டி 2.0 மிஷனின் நோக்கம் என்பது வெளிப்புறத்தில் மட்டும் ஒருவரை அழகாக மாற்றுவது என்பது மட்டுமல்லாமல் மருத்துவ ரீதியாக அவருக்கு உள்ள தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினையை கண்டறிந்து அதற்கேற்ப அவருக்கு சேவை வழங்குவதாகும். இதற்காக அழகுக்கலை ஒப்பனையாளர்களுக்கு அவர்களை தங்கள் தொழிலில் இருந்து மேலும் ஒருபடி உயர்த்தும் வகையில் பயிற்சி அளித்து அழகுகலை நிபுணர்களாக மாற்றி உள்ளோம் என்று தெரிவித்தார். 

நேச்சுரல்ஸ் சலூன் இணை நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான சிகே. குமாரவேல் கூறுகையில்:

இந்த புதிய முயற்சியை மேற்கொள்வதற்காக ஒன்றிணைந்திருக்கும் நேச்சுரல்ஸ் மற்றும் ஸ்கின்க்யூ குழுவிற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திட்டமானது வாடிக்கையாளர்கள், உரிமையாளர்கள், ஒப்பனையாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த தொழில்துறைக்கு சாதகமான மாற்றத்தை உருவாக்கும். இதன் காரணமாக இந்தியா முழுவதும் சலூன் தொழிலில் ஈடுபட்டு இருக்கும் நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக மாறும். எங்கள் அழகுக்கலை நிபுணர்களின் துல்லியமான மருத்துவ அழகு சிகிச்சை முறைகள் மற்றும் ஸ்கின்க்யூவின் மருத்துவ தரத்திலான அழகு சாதன பொருட்களின் செயல்திறன் ஆகிய இரண்டும் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்கின்க்யூ நேச்சுரல்ஸ் சலூன் அழகுக்கலை ஒப்பனையாளர்களுக்கு அழகியல் நிபுணர்களுக்கான பயிற்சியை அளிக்க இருக்கிறது. இந்த பயிற்சியின் மூலம் இந்திய மக்களின் தோல் வகைகள், பொதுவான தோல் சார்ந்த பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவர்கள் அறிந்து கொள்வதற்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது. 

ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் மிக உயர்ந்த தரமான சேவை வழங்க அவர்களுக்கு நடைமுறை பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. இந்தியாவில் சலூன் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த கூட்டணியானது ஸ்கின்க்யூ பிராண்டின் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட அழகு சாதன தயாரிப்புகள் மற்றும் நேச்சுரல்சின் அழகியல் நிபுணர்களின் நிபுணத்துவம் ஆகியவற்றின் மூலம் பாதுகாப்பான, தனித்துவமான மற்றும் பயனுள்ள மேம்பட்ட தோல் பராமரிப்பு சேவைகளை வழங்க இந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

VIDEO HERE:

V Creations Kalaippuli S Thanu's next venture starring Vijay Sethupathi, directed by Mysskin commences shoot with pooja



Actor Vijay Sethupathi who has been basking on the success of his recent releases, is all set to join hands with Director Mysskin for the first time. The project is bankrolled by V Creations Kalaippuli S Thanu who's known for producing some of Tamil cinema biggest blockbusters and cult classics. 

Touted to be an action thriller, the story unveils on a train journey, hence the title 'Train'. Vijay Sethupathi will be seen in a different avatar and has undergone a lot of changes for his looks. Dimple Hayati has been roped in to play a meaty role. 

The film also stars Ira Dayanand, Nassar, Vinay Rai, Bhavana, Sampath Raj, Babloo Prithviraj, KS Ravikumar, Yugi Sethu, Ganesh Venkatraman, Kaniha, Diya Seetipalli, Singam Puli, Sriranjani, Ajay Rathnam, Thrigun Arun, Raichal Rabecca and others in supporting roles. 

Director Mysskin who has off late been exploring his musical side will be composing the film's music as well. Fowzia Fathima will be cracking the camera, while Sri Watson will be doing the editing and the production design will be done by V Mayapandi. 

The film kick-started shoot with a Pooja ceremony this morning. Director Vetrimaaran, Nadigar Sangam President Nasser, Producer Council members Murali Ramasamy, Radhakrishnan, S Kathiresan, Producer Anbu Chezhiyan, Kalyanam (Knack Studios) and others graced the ocassion and conveyed their best wishes to the team.


CAST:

Vijay Sethupathi 

Dimple Hayati 

Ira Dayanand

Nassar 

Vinay Rai

Bhavana

Sampath Raj

Babloo Prithviraj

KS Ravikumar

Selva Chandrasekar

Yugi Sethu

Ganesh Venkatraman

Kaniha

Diya Seetipalli

Singam Puli

Sriranjani

Ajay Rathnam

Thrigun Arun

Raichal Rabecca


CREW:

Direction & Music: Mysskin 

Producer: Kalaippuli S Thanu 

Line Producer: LV Srikanth Lakshman

DOP: Fowzia Fathima 

Editor: Sri Watson

Art Director: V Mayapandi 

Costume Designer: Shaima Aslam

Stills: J Harishankar  

Sound Designer: Jeswin Mathew

Executive Producer: R Udayakumar

Production House: V Creations 

PRO: Riaz K Ahmed (V4U Media), Sathish (AIM)

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.