கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார்

கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார்


பிரபல திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த், மாரடைப்பால் காலமானார். காதல் தேசம், சிவாஜி உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள கே.வி.ஆனந்த், கனா கண்டேன் திரைப்படம் மூலம் இயக்குநர் ஆனார்.

அதன் பிறகு அயன், மாற்றான், கோ, கவண், காப்பான், அநேகன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள அவர், சிறந்த ஒளிப்பதிவிற்காக தேசிய அளவில் விருது பெற்றுள்ளார்.

54 வயதான கே.வி.ஆனந்த், உடல் நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைவிற்கு சினிமா பிரபலங்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.