வேளாண் – தீவனத் துறையில் கவனம் செலுத்தும் வகையில்‘சுகுணா ஃபீட்ஸ் புதுமையான அறிவாற்றல்'

வேளாண் – தீவனத் துறையில் கவனம் செலுத்தும் வகையில்‘சுகுணா ஃபீட்ஸ் புதுமையான அறிவாற்றல்'



கோவை: 

வேளாண் உணவுத் துறையில் கவனம் செலுத்தும் விதமாக இந்தியாவின் பிரமாண்ட கோழிப்பண்ணை நிறுவனமான சுகுணா புட்ஸ் – கோவை பிஎஸ்ஜி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்லூரி உடன் இணைந்து ‘சுகுணா ஃபீட்ஸ் புதுமையான அறிவாற்றல்' என்னும் பெயரில் கிராமப்புற சந்தைப்படுத்தல் போட்டியை நடத்தியது.

இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 75க்கும் மேற்பட்ட கட்டுரைகள் வரப்பெற்று அவற்றில் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டவற்றிற்கு பரிசு வழங்கப்பட்டன.

 

சுகுணா புட்ஸ் நிறுவனத்தின் தீவன விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு பொது மேலாளர் முரளிபிஎஸ்ஜி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்லூரியின் மார்க்கெட்டிங் துறை தலைவர் அருள் ராஜன் ஆகியோர் வெலிங்கர் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட் அன்ட் ரிசர்ச்தியாகராஜர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட்மதுரை மற்றும் பிஎஸ்ஜி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஆகிய கல்லூரிகளிலிருந்து வரப்பெற்ற கட்டுரைகளை தேர்வு செய்து விருதுகளை வழங்கினர். வேலூர்விஐடி ஸ்கூல் ஆப் பிசினஸ் கல்லூரி இது சம்பந்தமாக தனித்துவமான ஆலோசனையை விளக்கக் காட்சி மூலம் வழங்கியதன் காரணமாக அக்கல்லூரிக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

 

இந்த நிகழ்ச்சியானது கிராமப்புற சந்தைப்படுத்தல் தொடர்பான நுணுக்கங்கள் மற்றும் விவசாய உணவுத் துறையில் பரந்து விரிந்துள்ள தன்மையை புரிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பை வழங்கியதுகுறிப்பாக இந்த நிகழ்ச்சி கால்நடை தீவனங்களில் அதிக கவனம் செலுத்தியது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவாதங்கள் மற்றும் நேரடி அமர்வுகளும் இடம் பெற்றிருந்தன. இதன் காரணமாக வேளாண் உணவுத் தொழில் மற்றும் இந்தியாவின் பொருளாதாரத்தில் அதன் பங்களிப்பு பற்றி மேலும் மாணவர்கள் அறிந்து கொள்வதற்கு உதவியதோடு அது தொடர்பான விழிப்புணர்வையும் அவர்களிடையே அதிகரிக்கச் செய்யும் விதமாக அமைந்திருந்தது. இந்த போட்டிக்கு வரப்பெற்ற மொத்த கட்டுரைகளில் 15 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு அதில் 3 கட்டுரைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதோடு, சுகுணா புட்ஸ் நிறுவனத்தின் சுகுணா ஃபீட்ஸ் துறையின் மூலம் விருதுகள் மற்றும் இன்டர்ன்ஷிப் திட்டங்கள் வழங்கப்பட்டன.

 

இந்த நிகழ்ச்சி குறித்து சுகுணா புட்ஸ் நிறுவனத்தின் தீவன விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பொது மேலாளர் முரளி கூறுகையில், ‘சுகுணா ஃபீட்ஸ் புதுமையான அறிவாற்றல்' போட்டிக்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்திருப்பது குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். நாள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி மாபெரும் வெற்றியடைந்து உள்ளது. மேலும் இந்த வெற்றிக்கு உதவிய அனைத்து பங்கேற்பாளர்கள்பேச்சாளர்கள் மற்றும் கூட்டு நிறுவனங்களுக்கு எங்கள் நிறுவனம் சார்பில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயம் மற்றும் கால்நடை தீவனம் தொடர்பாக அறிந்து கொள்ள விரும்பிய அனைத்து மாணவர்களையும் ஒன்றிணைக்கவும்அவர்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும்சமீபத்திய போக்குகள் பற்றி அறிந்து கொள்ளவும் சிறந்த ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். அதை தற்போது நாங்கள் வெற்றிகரமாக முடித்துள்ளோம். எதிர்காலத்தில் வேளாண்-உணவுத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் சில சிறந்த நடைமுறை தீர்வுகளை வழங்கிய பங்கேற்பாளர்கள் மற்றும் வெற்றியாளர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 


இவ்வாறு அவர் கூறினார்.




லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.