கனமழை பெய்ய வாய்ப்பு!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFAFNzrAam-lzYmLO0UWdWkKmCHCkKc-A1XtQ1xvuK_Pbub3wFMCbXDVhImNpzqa8RMy17cetojPlGpBh_RFcFpLBtBrzRk8h6Evoap0BF-MmIYit-EnmugBmcCPLK7NDEXdSvR5G77M3b/w625-h351/rain+3.jpg)
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அதிகபட்சமாக மஞ்சளாறில் 11 செ.மீ., பெரியகுளத்தில் 10 செ.மீ., தல்லாகுளத்தில் 9 செ.மீ., மழை பதிவானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக