Rendagam Movie Review: ‘ரெண்டகம்’ திரைப்படத்தின் விமர்சனம்

Rendagam Movie Review:  ‘ரெண்டகம்’ திரைப்படத்தின் விமர்சனம் 




நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் இயக்குநர் டி.பி பெலினி இயக்கத்தில் மலையாளத்தில்  ‘ஒட்டு’ என்ற பெயரில் வெளியான திரைப்படம் தான் ‘ரெண்டகம்’. 

இந்தப்படத்தை ஆகஸ்ட் சினிமா பேனருடன் ஆர்யாவின் தி ஷோ பீப்புள் நிறுவனமும் இணைந்து தயாரித்து இருக்கிறது. 

கேங்வார் மோதல் ஒன்றில் டேவிட்டாக காட்டப்படும்  அரவிந்த் சாமிக்கு தலையில் அடிபட்டது போலவும், அதனால் அவருக்கு பழைய நினைவுகள் அனைத்தும் மறந்து விட்டது போலவும் படம் ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் கும்பல் ஒன்று அரவிந்த் சாமியுடன் நெருக்கமாக பழகி, அவரின் நினைவுகளை மீட்டெடுக்க கிச்சுவாக வரும்  குஞ்சக்கோ போபனை அவரிடம் அனுப்புகிறது. அவரும் நெருக்கமாக பழகி அரவிந்த்சாமியின் நினைவுகளை மீட்டெடுக்க அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்கிறார். இறுதியில் அரவிந்த் சாமிக்கு நினைவுகள் வந்ததா?  கும்பல் குஞ்சக்கோ போபனை அனுப்பியதற்கான காரணம் என்ன? என்பது படத்தின் ட்விஸ்ட் .

வெறுமனே கேங்ஸ்டர் படமாக மட்டும் எடுக்காமல் செம ட்விஸ்ட் ஒன்று வைத்து த்ரில்லர் படமாக இயக்குநர் மாற்றியது பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான். ஆனால் சில காட்சிகளை கணிக்க முடிகிறதை இயக்குநர் கணிக்கவில்லையோ என்று  தோன்றுகிறது....

கெளதம் ஷங்கரின் ஒளிப்பதிவு படத்தின் பலம். பாடல்கள் எல்லாம் 'தேமே' என்று கடந்து செல்கிறது. மாஸ் மொமெண்ட்டுகள், லொக்கேஷன்ஸ் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்திய இயக்குநர் திரைக்கதையை இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம்.

மொத்தத்தில்  இந்த ‘ரெண்டகம்’ நம் மனதை ரெண்டாக்கும்.....


லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.