அந்தாரா சீனியர் கேர் சென்னையில் தனது முதல் பராமரிப்பு இல்லத்தைத் தொடங்குகிறது!
சென்னை:
மூத்த குடிமக்களுக்கு முழுமையான பராமரிப்பு மற்றும் சுகாதார சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனமான அந்தாரா சீனியர் கேர், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) தனது முதல் பராமரிப்பு இல்லத்தைத் தொடங்கியுள்ளது. சுமார் 30,000 சதுர அடி பரப்பளவில் 43 படுக்கை வசதிகளுடன் அமைந்துள்ளது. இந்த வசதி, நாள்தோறும் ஆதரவு தேவைப்படும் மூத்த குடிமக்களுக்கு உதவி வாழ்க்கை வசதிகளை, மேலும் முக்கிய சுகாதார நிகழ்வுகளுக்குப் பிறகு உள்ள மறுவாழ்வு மற்றும் மீட்பு சேவைகளை வழங்க உள்ளது.
நொய்டா, குருகிராம், பெங்களூரு ஆகிய நகரங்களில் ஏற்கனவே ஐந்து பராமரிப்பு மையங்களை வெற்றிகரமாக இயக்கி வரும் அந்தாரா, சென்னையில் தன்னுடைய ஆறாவது பராமரிப்பு இல்லத்தைக் கொண்டு வந்துள்ளது. இது, இந்திய அளவில் பரவலாக உதவி வாழ்க்கை மற்றும் மாற்ற பராமரிப்பை வழங்கும் அந்தாராவின் வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.
சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட தெற்கிந்திய நகரங்களில் அந்தாரா வீட்டு பராமரிப்பு சேவைகளும் தற்போது கிடைக்கின்றன. இந்தியாவின் முக்கிய மருத்துவ சுற்றுலா மையங்களில் ஒன்றான சென்னையில், ஒரு கட்டமைக்கப்பட்ட மீட்பு மற்றும் மறுவாழ்வு பராமரிப்பு வசதிக்கு பெரும் தேவை இருப்பதை இந்த புதிய மையம் நிவர்த்தி செய்யும்.
JLL-ASLI 2024 அறிக்கையின்படி, 2050க்குள் இந்தியாவின் மூத்த குடிமக்கள் ~350 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது — இது முழுமையான, நம்பகமான மற்றும் இரக்கமு ள்ள முதியோர் பராமரிப்பு சேவைகளுக்கான தேவையை துல்லியமாக காட்டுகிறது.
தலைமை நிர்வாக அதிகாரி இஷான் கன்னா கூறுகையில்: “சென்னையில் எங்கள் புதிய பராமரிப்பு இல்லத்தைத் தொடங்கியதை பெருமையாகவும் மகிழ்ச்சியுடனும் தெரிவித்துக் கொள்கிறோம். இது மூத்த குடிமக்களுக்கு உயர்தரமான மறுவாழ்வு மற்றும் மீட்பு பராமரிப்பு, மேலும் நீண்டகால உதவிக்குரிய வாழ்க்கை வசதிகளை வழங்கக்கூடிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிகிச்சையளிக்கும் மருத்தவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும் எங்கள் மருத்துவ அணியுடன், குடியிருப்பாளர்கள் சுதந்திரமாக வாழ்ந்தாலும் உடல்நலப் பின்னடைவுகளை சிறப்பாகக் கையாள முடியும். எங்கள் பராமரிப்பு இடம், பாதுகாப்பான மற்றும் கண்ணியமான சூழலில் 24/7 பராமரிப்பை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.”
கருத்துரையிடுக