நேர்மையான அதிகாரி!’- பிரதமர் அலுவலகத்தில் தமிழக பெண் அதிகாரி!

சிறப்பான பணி; நேர்மையான அதிகாரி!’- பிரதமர் அலுவலகத்தில் தமிழக பெண் அதிகாரி

பிரதமர் அலுவலகத்தில் புதிதாக 16 இணை செயலாளர்களை நியமனம் செய்து மத்திய அமைச்சரவையின் பணியாளர் நியமன செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதில் தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா ஒருவர்.

1994-ம் ஆண்டு ஐஏஎஸ் பயிற்சி முடித்த அமுதா தற்போது உத்தரகாண்டில் உள்ள முசோரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். தமிழகத்தில் உணவு பாதுகாப்புத்துறை ஆணையராகவும், தருமபுரி மாவட்ட கலெக்டராகவும் பணியாற்றியுள்ள அமுதா, நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றவர். 2015ல் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது களமிறங்கிய அவர், ஒவ்வொரு மக்களை பாதுகாப்பாக வெளியேற்றினார். இவரின் இந்த செயல் அனைவராலும் பாராட்டப்பட்டது.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை பொறுப்பாக செய்து முடித்தவர் அமுதா.

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.