ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் இல்லை: மாணவர் தற்கொலை!

ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் இல்லை: மாணவர் தற்கொலை!  


ஆன்லைன் வகுப்புக்காக பெற்றோர்கள் செல்போன் வாங்கித்தர தாமதித்ததால் பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றைவிட அதன் தாக்கத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் முறையில் பாடம் நடத்தப்பட்டு வருகின்றன. 

அதனால் கொரோனாவால் வேலையிழந்து, வருமானமின்றி தவிக்கும் பெரும்பான்மையான நடுத்தரவர்க்கத்தினர், தங்கள் பிள்ளைகளுக்கு ஆண்ட்ராய்டு செல்போன்களை வாங்க வழியில்லாமல் தவித்து வருகின்றனர். அதனால் விரக்தியடையும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன.


பள்ளிகள் கொடுக்கும் இந்த அழுத்தங்களால் பெற்றோர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அப்படி மன உளைச்சலுக்கு ஆளான தனியார் பள்ளி மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். 

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்திருக்கும் சிறுதொண்டமாதேவி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகன் விக்னேஷ், வயது 14. கடலூர் மாவட்டம் கொள்ளுக்காரன் குட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்த விக்னேஷ் இந்த ஆண்டு 10-ம் வகுப்புக்குத் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

பள்ளிகள் திறக்கப்படாததால் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடங்களை நடத்திவருகிறது, அந்த தனியார் பள்ளி. அதனால் தனக்கு ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கித்தருமாறு பெற்றோர்களிடம் கேட்டிருக்கிறார் விக்னேஷ். 

அதற்கு அவரது அப்பா, ’இப்போது என்னிடம் பணம் இல்லை. ரெண்டு மூனு நாள் வெயிட் பண்ணு. நம்மிடம் உள்ள முந்திரிக்கொட்டைகளை எப்படியாவது விற்று செல்போன் வாங்கித் தருகிறேன்’ என்று கூறியிருக்கிறார்.


ஆண்ட்ராய்டு செல்போன்

தனது அப்பாவின் வார்த்தைகளை விக்னேஷ் ஏற்றுக்கொண்டாலும், அவர் படிக்கும் தனியார்பள்ளி நிர்வாகம் அதனைக் ஏற்கத் தயாராக இல்லை. ’செல்போனுடன் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள். இல்லையென்றால் டி.சி வாங்கிக் கொண்டு எதாவது அரசுப் பள்ளிக்குச் சென்றுவிடு’ என்று எச்சரித்ததாக கூறப்படுகிறது. 

அதில் மனம் உடைந்துபோன மாணவர் விக்னேஷ், நேற்று முன் தினம் தனது தாயின் புடவையைக்கொண்டு வீட்டிலேயே தூக்கு போட்டுக்கொண்டார்.

அதனைப் பார்த்து அலறித்துடித்த விக்னேஷின் பெற்றோர்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.





லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.