வல்லாரை கீரையின் குணங்கள்!

வல்லாரை கீரையின் குணங்கள்! 


வல்லமை மிக்க கீரை என்பதால் ‘வல்லாரைக் கீரை’ என்று பெயர் பெற்றது. கல்வி அறிவு, ஞாபக சக்திக்கு உதவி செய்வதால் ‘சரசுவதி கீரை’ என்று அழைக்கப்படுகிறது.

* வல்லாரைக் கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச்சத்து, தாது உப்புக்கள் என எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. சரிவிகித உணவு என்பதற்கு சரியான உதாரணம் இது.

* வல்லாரைக்கீரையை பறித்த சில மணிநேரங்களுக்குள் பச்சையாக சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்பாக செயல்பட்டு, நினைவு நரம்புகள் தூண்டப்படும்.

* ஒரு கைப்பிடி அளவு வல்லாரைக்கீரையை பச்சையாக மென்று விழுங்கிய பின், பசும்பால் உண்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.

* வல்லாரையை நன்கு காய வைத்து பொடி செய்து, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சாதத்தில் நெய் கலந்து தரலாம்.

* தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு என பல நோய்களுக்கு வல்லாரை ஒரு சிறந்த தீர்வு. எந்த வகையிலாவது உணவில் சேர்த்து கொண்டால் நிவாரணம் கிடைக்கும்.

* காலை வேளையில் வல்லாரைக்கீரையுடன், மிளகு சேர்த்து உண்டால் உடல் சூடு தணியும்.

* வல்லாரைக்கீரையைக் கொண்டு பல் துலக்கினால் மஞ்சள் கறை நீங்கும்.

* வல்லாரைத் துவையல் மலச்சிக்கலை அகற்றும். குடல் வயிற்றுப்புண்களை ஆற்றும்.

* வல்லாரையுடன், தூதுவளை சேர்த்து இடித்து சாறு பிழிந்து, ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர, இருமல், சளி ஓடிப் போகும்.

* வல்லாரை செரடோனின் என்ற சத்தை நிரம்ப கொண்டது. பள்ளிக் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. குழந்தைகளின் மூளை நன்கு வேலை செய்ய வாரத்தில் ஒரு முறையாவது செய்து தர வேண்டும். மூளைக்கு வலுவூட்டி நினைவாற்றலைப் பெருக்கும் தன்மை கொண்டது.




லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.