தமிழகத்தில் 10% இடஒதுக்கீடு நடைமுறை படுத்த வேண்டும்!
சென்னை:
பொது பிரிவு சமுதாய தலைவர்கள் மற்றும் முற்படுத்தபட்டோர் கூட்டமைப்பு சார்பாக இன்று சென்னையி்ல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் ஆர்ய வைஸ்ய முன்னேற்ற பேரவை மாநில தலைவர் நாகா R.அரவிந்தன் தலைமையில் நடைபெற்றது. முற்படுத்தபட்டோர் கூட்டமைப்பு மாநில தலைவர் திரு ராமநாதன்ஜி மற்றும் மாநில பொது செயலாளர் அம்பி வெங்கடேசன் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக திரைப்பட நடிகை திருமதி காயத்ரி, ரகுராம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திரைப்பட நடிகருமானதிரு S.V. சேகர் அவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.
இதில் பல்வேறு சமுதாயதலைவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர்.
கோரிக்கைகள்:
மத்திய அரசு அறிவித்துள்ள பொது பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் உடனே அமல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் 10%பொது பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினால் தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க தலைமையிலான கூட்டனிக்கு ஆதரவு அளிப்பது என்றும், தமிழகத்தில் 10% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டி வருகிற ஜனவரி 31-01-2021 சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகில் சுமார் 10,000ஆயிரம் பேர் பங்கேற்கும் தமிழக சட்டமன்ற நோக்கி பேரணி மற்றும் மாபெரும் ஆர்ப்பாட்டம், தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்துவது, 10%பொது பிரிவினருக்கான மத்திய அரசின் இட ஓதுக்கீடு சட்டத்தை தமிழகத்தில் உடனடியாக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக உடனடியாக அமல்படுத்த அரசாணை வெளியிட வேண்டும் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
FULL VIDEO HERE:
SUBSCRIBE & CLICK BELL BUTTON
கருத்துரையிடுக