'டிராமா' திரைப்பட விமர்சனம்
ஒரு காவல் நிலையத்தில் ஒருநாள் முன்னிரவில் திடீரென மின்சாரம் போகிறது. அந்நேரம் அங்கு பணிபுரியும் தலைமைக்காவலர் சார்லி மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரைக் கொன்றது யார்? எதற்கு கொலை நடந்தது? என்பதை உயரதிகாரிகள் விடிவதற்குள் கண்டுபிடிப்பது தான் 'டிராமா' திரைப்படம்.
ஒரு காவல்நிலையம் ஓர் இரவு ஒரே ஷாட் என்கிற பல ஆபத்தான புதிய முயற்சிகளைக் கையிலெடுத்திருக்கிறார் இயக்குநர் அஜுகிழுமலா.
ஜெய்பாலா காவ்யாபெல்லு ஆகியோரின் காதல்காட்சிகள் இளமைத்துள்ளலாக அமைந்திருக்கின்றன. சார்லி, வின்செண்ட் நகுல் உள்ளிட்ட காவல்துறையினருக்குள்ளான மோதல்கள், காவல்நிலைய எதார்த்தங்களை எடுத்துக்காட்டுகின்றன.
விசாரணை அதிகாரியாக நடித்திருக்கும் கிஷோரின் நடிப்பு அருமை. அதனால், காட்சிகள் மெதுவாகவும் சோதிக்கும் விதத்தில் இருந்தாலும் நடுநடுவே காதல், காமம், காவல்துறையிலேயே இருந்தாலும் பெண்களின் நிலை, திருநங்கைகளின் துடிப்பு ஆகியனவற்றைக் காட்டி படத்தை சமன் செய்திருக்கிறார்கள்.
இறுதியில் சார்லியை கொலை செய்த காரணம் அசர வைக்கிறது. ஆனால் காவல் நிலையத்தில் அடிக்கும் லூட்டி வெறுப்பை ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில் இந்த 'டிராமா' சிறந்த நடிப்பு......
கருத்துரையிடுக