சட்னி சாம்பார் வெப் சீரிஸ் விமர்சனம்
பிரபல இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் யோகி பாபு, கயல் சந்திரன், நிதின் சத்யா, வாணி போஜன், மைனா நந்தின் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் வெப் சீரிஸ் தான், சட்னி சாம்பார்.
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
ஊட்டியில் பிரபல அமுதா கஃபே ஓட்டலின் உரிமையாளரான நிழல்கள் ரவியின் சாம்பாருக்கு அந்த ஊரே அடிமை. இன்னும் சிலர், அந்த சாம்பார் சாப்பிடுவதற்காகவே ஊட்டி வருகிறார்கள். அப்படிப்பட்ட அந்த புகழ் பெற்ற ஓட்டலின் உரிமையாளரான நிழல்கள் ரவி, திடீரென படுத்த படுக்கையாகிறார். தனது மகன் கயல் சந்திரனை அழைத்து ஒரு ரகசியம் கூறுகிறார்.
சென்னையில் தனக்கு அமுதா என்கிற பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், தங்களுக்கு ஒரு மகன் இருப்பதாகவும், சாவதற்குள் அவனை அழைத்து வருமாறு கூறுகிறார். உடனே தன் தங்கை கணவர் நிதின் சத்யா உடன் சென்னை புறப்பட்டு, தன் தந்தையின் மூத்த மகனான ரோட்டுக் கடை யோகி பாபுவை கண்டுபிடிக்கிறார்.
தள்ளுவண்டி டிபன் கடை நடத்தி வரும் யோகிபாபுவின் சட்னிக்கு அங்கு ஒரு கூட்டமே அடிமையாக இருக்கிறது. தன் தாய் இறந்து போன நிலையில், தங்களை புறக்கணித்த தந்தை மீது கடும் கோபத்தில் இருக்கும் யோகி பாபுவை கட்டாயப்படுத்தி ஊட்டிக்கு அழைத்து வந்து தந்தையின் ஆசையை நிறைவேற்றுகிறார் சந்திரன்.
அந்த நொடியே தந்தை இறந்து போக, அவருக்கு காரியம் செய்துவிட்டு 16 நாட்களுக்குப் பின் செல்லுமாறு யோகிபாபுவை கட்டாயம் செய்கிறார் சந்திரன். பிறகு என்ன நடந்தது என்பதே மீதி கதை....
ராதா மோகன் தனது வழக்கமான நடிகர்களான வாணி போஜன், இளங்கோ குமரவேல் மற்றும் பலர் தொடரின் ஒரு பகுதியாக இருப்பதை உறுதிசெய்கிறார். முதல் இரண்டு எபிசோடுகள் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நேர்த்தியாக நிறுவுகின்றன, மேலும் அவை அனைத்தும் நிகழ்ச்சியில் தெளிவாக வரையறுக்கப்பட்ட நோக்கத்தைக் கொண்டிருப்பதைக் காணலாம். யோகிபாபு வானி போஜனிடம் ப்ரோபோஸ் செய்யும் இடம் ரசிக்க வைக்கின்றது.
அம்மா கேரக்டர் ஒத்துபோகவில்லை, கதையில் கூடுதல் கவனம் தேவை....
மொத்தத்தில் இந்த சட்னி சாம்பாருக்கு காரம் குறைவு.....
RATING: 3/5
கருத்துரையிடுக