மணிப்பூரில் நிலநடுக்கம்!
மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் சனிக்கிழமை பிற்பகல் 2.31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.8ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் உயிர்சேதம் அல்லது சொத்து சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம்கொண்டிருந்தது. வடகிழக்கு மாநிலங்கள் அதிக நில அதிர்வு மண்டலத்தில் வருகின்றன.
இதனால் இப்பகுதியில் நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக