மே 2025

 'படையாண்ட மாவீரா' இசை வெளியீட்டு விழா



சென்னை:

 
நிர்மல் சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் வி.கே. புரொடக்ஷன்ஸ் வழங்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தை வ. கெளதமன் இயக்கி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். பாடல்களுக்கு ஜி.வி. பிரகாஷ்குமாரும்  பின்னணி இசைக்கு சாம் சி. எஸ்.-சும் பொறுப்பேற்றுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொள்ள சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. 
 
வ. கெளதமன், E. குறளமுதன், U.M. உமாதேவன், கே. பாஸ்கர், கே. பரமேஸ்வரி ஆகியோர் வி.கே. புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். சமுத்திரக்கனி, பூஜிதா, பாகுபலி பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், சாய் தீனா, ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான், ஏ.எல். அழகப்பன்,  மதுசூதன ராவ், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், தமிழ் கெளதமன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். வைரமுத்து பாடல்களை எழுத, கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது படத்தொகுப்பை கவனிக்க, நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் சண்டைப் பயிற்சியை ஸ்டண்ட் சில்வாவும் கையாண்டுள்ளனர்.
 
'படையாண்ட மாவீரா' இசை வெளியீட்டு விழா முக்கிய அம்சங்கள் வருமாறு:
 
நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் தயாரிப்பாளர் எம்.ஜே.எஃப். லயன் பி.ஆர்.எஸ். சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி வரவேற்றன‌ர். 'பிக் பாஸ்' புகழ் முத்துக்குமரன் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.  தயாரிப்பாளர்கள் கே. பாஸ்கர், E. குறளமுதன், U.M. உமாதேவன், நடன இயக்குநர்கள் தினேஷ் மாஸ்டர், ஸ்ரீதர் மாஸ்டர், ஐநா கண்ணன் உள்ளிட்டோர் படக்குழுவினரை வாழ்த்தி பேசினர். 
 
நடிகர் இளவரசு பேசுகையில், "தமிழகத்திற்கு அறிமுகமான ஒரு மனிதனின் கதை இது. கதையை முன்னெடுத்து செல்லும் கதாபாத்திரம் ஒன்றில் நான் இப்படத்தில் நடித்துள்ளேன். இயக்குநர் கெளதமன் எனக்கு சுமார் 25 ஆண்டுகளாக பழக்கம். இந்த திரைப்படத்தை மிகவும் சிறப்பாக அவர் உருவாக்கியுள்ளர்," என்றார். 
 
இயக்குநர் வி.சேகர் பேசுகையில், "இப்படம் ஒரு கூட்டு முயற்சி என்று அறிகிறேன். என்னுடைய 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை', 'ஒண்ணா இருக்க கத்துக்கணும்' உள்ளிட்டவையும் ஒற்றுமையை தான் வலியுறுத்தின. அத்தகைய ஒற்றுமை தான் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் பலம். இப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்." 
 
வழக்கறிஞர் கே. பாலு பேசுகையில், "கெளதமன் ஒரு படம் எடுக்கிறார் என்று சொன்னால் அதில் உணர்வு இருக்கும், உயிர் இருக்கும் என்று பொருள். அவரது 'சந்தனக்காடு' தொடர் மிகுந்த வரவேற்பு பெற்றது. படையாண்ட மாவீரா என்று சொல்லும் போதே உள்ளத்தில் வீரம் கொப்பளிக்கிறது. வீரத்தின் எடுத்துக்காட்டாக வாழ்ந்த ஒரு மனிதனை பற்றிய படம் இது என்பது மிகவும் பெருமையான விஷயம். இப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்," என்றார். 
 
கார்ட்டூனிஸ்ட் பாலா பேசுகையில், "அண்ணன் கெளதமன் பற்றி சொல்ல ஏராளம் உண்டு. எப்போதும் உணர்ச்சிப்பிழம்பாக இருக்கக்கூடியவர் அவர். மிகச்சிறந்த திரைக்கலைஞரான அவரது 'படையாண்ட மாவீரா' படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்," என்றார். 
 
இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில், "கெளதமன் என்னுடைய நல்ல நண்பர். அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொள்வோம். 'படையாண்ட மாவீரா' படம் மிகவும் பிரம்மாண்டமாக வந்துள்ளது. வளர்ச்சி என்ற பெயரில் செய்யப்படும் செயல்கள் சாதாரண மக்களை எப்படி பாதிக்கிறது என்பதை உணர்வுப்பூர்வமாக, அழுத்தம் திருத்தமாக இப்படம் பேசுகிறது. கெளதமனின் மகன் தமிழ் கெளதமன் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். விரைவில் பெரிய நாயகனாக அவர் வருவார்," என்றார். 
 
சண்டைப் பயிற்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா பேசுகையில், "இயக்குநர் கெளதமன் மனிதநேயம் மிக்கவர், துன்பத்தில் தோள் கொடுப்பவர். இப்படத்தின் சண்டைக்காட்சிகள் மிகவும் அருமையாக வந்துள்ளன. அவரது போராட்ட குணம் அவற்றில் வெளிப்பட்டுள்ளது. படம் வெற்றியடைய அனைவரின் ஆதரவையும் கோருகிறேன்," என்றார். 
 
தயாரிப்பாளர் மணிவண்ணன் பேசுகையில், "படத்தின் சில காட்சிகளை பார்த்தேன், சிறப்பாக இருந்தன. குறிப்பாக புலிப்பாடல் மிகவும் எழுச்சியாக உள்ளது. இப்படம் வெற்றி பெறும் என நான் மிகவும் நம்புகிறேன்," என்றார். 
 
தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் பேசுகையில், "தமிழையும் தமிழ்நாட்டையும், தமிழ் சினிமாவையும் நம்பி வந்த யாரும் கெடுவதில்லை. இப்படத்தின் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். தம்பி கெளதமன் சிறந்த மனிதர், சிறந்த படைப்பாளி. 'சந்தனக்காடு' தொலைக்காட்சி தொடரையே திரைப்படம் போல எடுத்தவர், 'படையாண்ட மாவீரா' பிரம்மாண்டத்தின் உச்சம், 'புஷ்பா' படம் போல இது இந்தியா முழுவதும் மாபெரும் வெற்றி பெறும்," என்றார். 
 
இயக்குநர் பேரரசு பேசுகையில், "நல்ல கருத்துகளை தமிழன் கேட்டு தூங்கிவிடக்கூடாது, மனதில் ஏற்றிக்கொள்ள வேண்டும். தமிழ் மற்றும் தமிழனுக்காக குரல் கொடுப்பவர் இயக்குநர் கெளதமன். அவரது 'படையாண்ட மாவீரா' வெற்றி பெற வாழ்த்துகிறேன்," என்றார். 
 
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் பேசுகையில், "அண்ணன் கெளதமனுக்கும் எனக்கும் நீண்ட நெடிய பழக்கம். இந்தப் படத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் சொல்லும் போதே இதை எப்படியாவது உருவாக்கி விட வேண்டும் என்று தீர்மானித்தோம். இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும்," என்றார். 
 
நீதிபதி கலையரசன் பேசுகையில், "அருமையான வெற்றிப்படத்தை வழங்கியுள்ள கெளதமன் அவர்களை வாழ்த்துகிறேன். அறம் சார்ந்து இப்படத்தை அவர் எடுத்துள்ளார். மிகவும் கஷ்டப்பட்டு பல தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து 'படையாண்ட மாவீரா' படத்தை உருவாக்கியுள்ளார்கள். இந்த திரைப்படம் வெற்றி பெற கடவுளை வேண்டிக்கொண்டு வாழ்த்துகிறேன்," என்றார். 
 
'படையாண்ட மாவீரா' படத்தின் இயக்குநரும் நாயகனுமான வ. கெளதமன் பேசுகையில், "இந்த மண்ணையும் மக்களையும் நேசிப்பது போலவே மற்றொருபுறம் எனது திரைத்துறையையும் நான் நேசிக்கிறேன். இது நான் இயக்கி நடித்திருக்கிற படைப்பு. உண்மையில் ஒரு படைப்பாளியின் படைப்பு தான் பேச வேண்டுமே தவிர அவன் பேசக்கூடாது என நான் நினைப்பேன். ஆனாலும் இந்த படத்தை பற்றி நான் பேசவேண்டியுள்ளது.
 
இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் என் மீது மிகுந்த அக்கறை கொண்டு இந்த படத்தை உருவாக்க முன்வந்தார்கள். திரைத்துறையின் நான் இன்னும் அதிகம் சாதிக்க வேண்டும் என விரும்பினார்கள். மக்களுக்கான கதையை அவர்களுக்கு வழங்க வேண்டும் என விரும்பினோம். இவற்றின் விளைவு தான் 'படையாண்ட மாவீரா'. 
 
இப்படத்திற்காக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து இணைந்து மிகச் சிறந்த பாடல்களை வழங்கியுள்ளார்கள் புலிக்கொடி பாடல் உணர்வுப்பூர்வமாகவும், ஜிவி பிரகாஷும் மது ஸ்ரீயும் பாடிய பட்டாம்பூச்சி பாடல் அழகுணர்ச்சியுடனும் அமைந்துள்ளன. சாம் சி. எஸ். சிறப்பான பின்னணி இசையை தந்துள்ளார். 
 
இப்படத்தின் முன்னோட்டம், பாடல்கள் மிகுந்த சிலிர்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக அனைவரும் கூறினீர்கள், மிக்க நன்றி. முழுப்படத்தையும் பார்த்ததும் உங்கள் உள்ளங்களில் பேரதிர்வை அது ஏற்படுத்தும், அது உறுதி. 
 
எத்தனையோ படங்களுக்காகவும் எத்தனையோ பிரச்சினைகளுக்காகவும் நான் குரல் கொடுத்த போதெல்லாம் அமைதியாக எனக்கு எந்த சாயமும் பூசாமல் இருந்தவர்கள் காடுவெட்டி குரு அவர்கள் பற்றியும் ஒரு சமுதாயத்தை பற்றியும் தவறாக திரைப்படத்தில் காட்டிய போது அதற்கு எதிராக நான் நியாயமான கேள்விகளை எழுப்பியவுடன் என் மீது சாதி சாயம் பூசினார்கள். அந்த சமயத்தில் கௌதமன் கேட்டதில் என்ன தவறு என்று எனக்குத் தெரிந்த ஒரு ஊடக நண்பர், அப்படத்தின் இயக்குநரிடம் கேட்டபோது நான் தான் தாதா போன்று ரவுடி போன்று காட்டிவிட்டேன், வேண்டுமானால் 'சந்தனக்காடு' எடுத்தது போன்று குரு அவர்களை வாழ்க்கையை பற்றியும் கௌதமன் ஒரு படம் எடுக்கட்டுமே என்று கூறியுள்ளார். அந்த சவாலை ஏற்று தான் இந்த படமே தொடங்கியது. 
 
இது தனி சாதி படமல்ல, தமிழ் சாதி படமாக இருக்கும். சாதி, மதம் கடந்து மனிதனாக இருப்பவர்கள் யார் பார்த்தாலும் அரங்கம் மட்டுமல்ல அவர்கள் ஆன்மாவும் அதிரும், அறம் சார்ந்த ஒரு மாவீரனை அவர்கள் தரிசிப்பார்கள். 
 
என்னுடைய வாழ்நாள் லட்சியமே மூன்று காடுகள் பற்றிய படங்கள் எடுப்பது தான். ஒன்று வீரப்பன் வாழ்ந்த சந்தனக்காடு, அதை நிறைவேற்றி விட்டேன்.  இரண்டாவது காடுவெட்டி குரு அவர்களும் தோழர் தமிழரசன் அவர்களும் வாழ்ந்த முந்திரிக்காடு, இதில் ஒருவரை பற்றி தற்போது படம் எடுத்துள்ளேன். மூன்றாவது என்னுடைய தாய்க்கும் தாய் மொழிக்கும் சமமான எனது தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வன்னிக்காடு. லட்சிபப் பாதையில் உள்ள இரண்டு படங்களை முடித்துள்ளது போல் இன்னும் இருக்கும் இரண்டு படங்களையும் கட்டாயம் எடுப்பேன். தமிழ் இனத்தின் தலைநிமிர்விற்காக நான் இதை செய்யாமல் சாய மாட்டேன், அனைவரும் ஆதரவு தாருங்கள், நன்றி," என்றார். 
 
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், "தம்பி கெளதமன் மிகுந்த‌ உரிமையாக அழைத்ததால் வெளியூரில் இருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளேன், அதனால் ஏற்பட்ட தாமதத்திற்கு மன்னிக்கவும். 
 
உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவன் மாவீரன் பிரபாகரன் என்று பேசியவர் அண்ணன் திரு காடுவெட்டி குரு அவர்கள். ஒரு மாபெரும் சமூகமே மாவீரன் என்று வணங்கிக் கொண்டிருக்கும் குரு அவர்களே அண்ணன் பிரபாகரனை மாவீரன் என்று சொன்னது நாம் ஒரே ரத்தம் ஒரே மரபணு என்பதை காட்டுகிறது. அப்படிப்பட்ட காடுவெட்டி குரு அவர்களின் வாழ்க்கையை தான் தம்பி கௌதமன் அவர்கள் 'படையாண்ட மாவீரா' என்று வீரமும் அறமும் சுமந்த படைப்பாக எடுத்துள்ளார். 
 
கெளதமனின் படைப்பாற்றலை நாம் ஏற்கனவே கண்டுள்ளோம். 'சந்தனக்காடு', 'மகிழ்ச்சி' அவர் திறமைக்கான சான்றுகள். அவரின் அடுத்த படைப்பான‌ 'படையாண்ட மாவீரா' மிகவும் அருமையாக வந்துள்ளது. இதை திரைப்படமாக மட்டும் சுருக்கிவிட முடியாது. மிகுந்த உழைப்பு, சிரமத்திற்கு பிறகு இப்படம் உருவாகியுள்ளது. முன்னோட்டத்தையும், பாடல்களையும் பார்த்தேன், மிகச்சிறப்பு, படத்தை பார்க்க தூண்டுகின்றன. 'படையாண்ட மாவீரா' மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்," என்றார். 

'கராத்தே கிட்: லெஜெண்ட்ஸ்'  திரைவிமர்சனம் 



ஜோனதன் என்ட்விஸ்டல் இயக்கத்தில் ஜாக்கி ஜான், ரால்பே மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் 'கராத்தே கிட்: லெஜெண்ட்ஸ்'  

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:

மாஸ்டர் ஹான் நடத்தும் குங்ஃபூ பள்ளியில் பயிலும் மாணவர் லீ ஃபாங்.  லீயின் அம்மாவுக்கு அமெரிக்காவில் வேலை கிடைக்க, மேம்பட்ட வாழ்க்கை தரத்திற்காக அமெரிக்கா வருகிறார்கள், தாயும் மகனும். புதிய பள்ளி, புதிய மனிதர்கள் என திகைக்கும் லீக்கு அறிமுகமாகிறார் மியா. பீட்ஸா ஷாப் ஒன்று நடத்தி வரும் மியாவின் தந்தை விக்டருக்கும் பரிட்சயமாகிறார் லீ. கடன் பிரச்சனையில் சிக்கும் விக்டர், முன்னாள் பாய் ஃப்ரெண்ட் கார்னர் கொடுக்கும் டார்ச்சரில் மியா என இருவரின் பிரச்சனைகளையும் பார்க்கிறார் லீ. 

கடந்த காலத்தில் நிகழ்ந்த இழப்பு ஒன்றால், இனி சண்டை செய்ய மாட்டேன் என அம்மாவிடம் சத்தியம் செய்து கொடுத்த லீ, Five Boroughs Tournament என்ற சண்டை போட்டியில் கலந்து கொள்ள நேர்கிறது. இதை தெரிந்த தனது அம்மா என்ன செய்தார்? போட்டியில் லீ வென்றாரா? என்பதே கதை...

கதையின் நாயகனாக பென் வாங், லீ என்ற கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார், ஜாக்கி ஜான், ரால்பே கெஸ்ட் ரோல் போல் தான் வந்து செல்கின்றனர். நடிகர்களில் பெரிதாக கவர்வது ஜாக்கிசான்தான். சீரியஸாக பேசும் அதே தருணத்தில் அவர் செய்யும் சின்ன காமெடி நம்மை அத்தனை மகிழ்ச்சி ஆக்குகிறது. சண்டை காட்சிகள் ரசிக்க வைக்கிறது. படம் தொடங்கியதும் தெரியவில்லை, முடிவதும் தெரியவில்லை, பரபரப்பாக செல்கிறது. ஆனால் 

கதையில் கூடுதல் கவனம் தேவை..... ஜாக்கிஜானை பல காட்சிகளில் காட்டி இன்னும் முக்கிய கதாபாத்திரம்  கொடுத்திருக்கலாம்....

மொத்தத்தில் இந்த 'கராத்தே கிட்: லெஜெண்ட்ஸ்' ஒரு முறை பார்க்கலாம்.... 

RATING 2.9/5


 

ஜின் தி பெட் விமர்சனம்



டிஆர் பாலா இயக்கத்தில் முகேன் ராவ், பவ்யா டிரிகா, பாலசரவணன், இமான் அண்ணாச்சி, ராதாரவி, நிழல்கள் ரவி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘ஜின் தி பெட்

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:

மலேசியா சென்று பணிபுரியும் முகேன்ராவ், மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பும் போது 'ஜின்' என்ற பேயோடு வருகிறார். பெட்டிக்குள் அடைத்து வைக்கப்பட்டு வீட்டில் பால், பிஸ்கட் கொடுத்து செல்லமாக ஜின்னை வளர்த்து வருகிறார் முகேன்ராவ். 'ஜின்' வந்த நேரம் அவருக்கு சில நல்ல விஷயங்கள் நடக்கிறது. 

ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்கு கெட்ட விஷயங்கள் நடக்கிறது. இந்நிலையில் எல்லோரும் வெளியில் சென்று வீடு திரும்பும் போது முகேன்ராவின் மனைவி பவ்யா ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடக்கிறார். பவ்யா நிலைக்கு ஜின்தான் காரணம் என ஜின்னை வீட்டுக்கு வெளியே பெட்டியோடு வீசி விடுகிறார் முகேன்ராவ். 

ஒரு கட்டத்தில் பவ்யாவை கொலை செய்ய முயற்சித்தது ஜின் இல்லை என தெரிய வருகிறது. பிறகு யார் அந்த கொலையாளி? ஜின் மீண்டும் வந்ததா ? என்பதே கதை களம்...

முகேன் ராவ் ஜின் காட்சிகள் குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும். பவ்யா டிரிகா அழகாக காட்சி அளிக்கிறார். பின்னணி இசை ஓகே. ஜின் பெட்டிக்குள் இருந்து வரும் கை மற்றும் உருவத்தை இன்னும் கிராபிக்சில் சிறப்பாக காட்டியிருக்கலாம். ஒளிப்பதிவு பரவாயில்லை. பாலசரவணன் டைமிங் காமெடி கொஞ்சம் சிரிக்க வைக்கிறது. சாமியாராக வரும் கயல் தேவராஜ் மற்றும் இமான் அண்ணாச்சி வினோதினி, வடிவுக்கரசி, நிழல்கள் ரவி, ராதா ரவி, நந்து ஆனந்த் ஆகியோர் நடிப்பு ஓகே தான். ஆனால்  

காமெடி காட்சிகளில் கூடுதல் கவனம் தேவை.... ஜின் குரலை மாற்றியிருக்கலாம்....

மொத்தத்தில் இந்த 'ஜின் தி பெட்' மூட நம்பிக்கை கலந்த கலவை......  

RATING 2.8/5


எதையும் கேட்காமல் ‘கண்ணப்பா’ படத்தில் நடித்தது சரிஎன்று படம் உணர்த்தியது -நடிகை மதுபாலா 



சென்னை: 

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஷ்ணு மஞ்சு எழுத்து, தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டமான படைப்பான கண்ணப்பா’ இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார், சரத்குமார் உள்ளிட்ட இந்தியா சினிமாவின்முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் இப்படத்தை முகேஷ் குமார் சிங் இயக்கியிருக்கிறார்.

வரும் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கண்ணப்பா’ திரைப்படத்தின்பிரத்யேக காட்சிகள் பத்திரிகையாளர்களுக்கு திரையிடும் நிகழ்வு இன்று (மே 30) சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றதுஇதில்விஷ்ணு மஞ்சுமதுபாலாஇயக்குநர் முகேஷ் குமார் சிங்படத்தொகுப்பாளர் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.

கண்ணப்பா படத்தின் பிரேத்யக காட்சிகளை பார்த்த பத்திரிகையாளர்கள் நடிகர் விஷ்ணு மஞ்சு உள்ளிட்ட படக்குழுவை வெகுவாக பாராட்டினார்கள்குறிப்பாகநியூசிலாந்தில் படமாக்கப்பட்ட காட்சிகள்மிக பிரமாண்டமாக இருப்பதோடுஇதுவரை எந்த ஒரு இந்திய திரைப்படத்திலும் காட்டாத லொக்கேஷன்களாக இருக்கிறதுமுழுக்க முழுக்க கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் கதை சொல்லாமல்இதுபோன்ற லொக்கேஷன்களில் காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதுநிச்சயம் ரசிகர்களை கவரும்என்று பத்திரிகையாளர்கள் பாராட்டினார்கள்.

நிகழ்ச்சியில் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேசுகையில்:

அனைவருக்கும் வணக்கம்இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஷெல்டன்அவர் அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறார்நான் இரண்டாவது யூனிட்டாக பணியாற்றியிருக்கேன்ஏன் என்றால்என் சகோதரர் விஷ்ணுவுக்காக தான்அவர் தான் என்னை தெலுங்கு சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தினார்அவருடைய ஐந்து படங்களுக்கு நான் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கேன்அவருக்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன்ஷெல்டனுக்காக நான் பேசுகிறேன்அவர் நம்ம பணிக்கு ஏற்றபடி உடனடியாக மாறிவிட்டார்மிக வேகமாக வேலை செய்யக்கூடியவர்இப்படி ஒரு படத்தை விரைவாக முடிக்க முடிந்தது என்றால் அது ஷெல்டனால் தான்அவருக்கு என் வாழ்த்துகள்விஷ்ணு சார் இந்த படத்தின் மூலம் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்ஒரு நடிகராக மட்டும் இன்றி கதையாசிரியராகவும் அவர் அவதாரம் எடுத்திருக்கிறார்அவர் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்இயக்குநர் முகேஷ் குமார் சிங்கிற்கு என் வாழ்த்துகள்நன்றி.” என்றார்.

படத்தொகுப்பாளர் ஆண்டனி பேசுகையில்:

என் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தை என்னிடம் ஒப்படைத்ததற்கு விஷ்ணு சாருக்கு நன்றிமுகேஷ் சாரும்விஷ்ணு சாரும் என் மீது நம்பிக்கை வைத்து என்னை தனி அறையில் விட்டுவிட்டார்கள்படத்தின் ரஸ் அனைத்தையும் கொடுத்து பணியாற்ற சொன்னார்கள்அந்த ரஸ் ஒரு படத்தோடது அல்லஆறு படத்தோடதுமிக கஷ்ட்டமான பணியாக இருந்ததுரொம்பவே நொந்து போயிட்டேன்ஆனால்படம் மிக சிறப்பாக வந்திருக்கிறதுஅனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்மோகன் பாபு சாருக்கு நன்றிஇந்த படத்தின் மூலம் ஒரு குடும்பம் கிடைத்தது போல் இருக்கிறதுஇந்த படம் பிரமாண்டமான படமாக இருக்கும் என்று எனக்கு தெரியும்உங்களுக்கு 27 ஆம் தேதி தெரியும்,  நன்றி.” என்றார்.

நடிகர் சம்பத்ராம் பேசுகையில்:

நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை என்றாலும்என் சொந்த ஊர் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மாநெல்லூர் என்ற கிராமம் தான்எங்க தாத்தாஅப்பா பிறந்த ஊர் அது தான்என் பாட்டி ஊர் காளஹஸ்திரி அருகே இருக்கும் காட்டுப்பள்ளி என்ற ஊர்நாங்க விடுமுறை என்றால் அடிக்கடி அங்கே செல்வோம்அப்படி அங்கே போக வர இருந்ததால் எனக்கு தெலுங்கு தெரியும்என் அப்பாவுடைய நெருங்கிய நண்பர் ஸ்ரீனிவாசன்அவரது மகனும்நானும் மிக நெருங்கிய நண்பர்அவர் பெயர் கோலா ஆனந்த்அவர் இன்று அரசியல் கட்சி ஒன்றில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்அவர் மூலம் தான் எனக்கு இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று  சொல்வேன். 2022 ஆம் ஆண்டு காளஹஸ்திரி ரயில் நிலையம் அருகே மோகன் பாபு சாரின் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருந்ததுஅப்போது ஆனந்த் என்னை அழைத்துச் சென்று மோகன் பாபு சாரிடம் அறிமுகப்படுத்திஎன் மாமா பையன் தமிழில் நடித்துக் கொண்டிருக்கிறார்தெலுங்கில் எதாவது வாய்ப்பு கொடுங்கள் என்று சொன்னார்.

அதன் பிறகு தான் விஷ்ணு சார் அறிமுகமான விஷ்ணு படத்தில் சிறிய கதாபாத்திரம் கொடுத்தார்முதல் முறையாக தெலுங்குப் படத்தில் நடித்தேன்பிறகு இந்த வேடம் மிக சிறியதாக இருக்கிறதுவேற எதாவது படத்தில் பார்க்கலாம் என்று சொன்னார்அதன் பிறகு சுமார் 6 வருடங்களுக்குப் பிறகு ‘காயத்ரி’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  அந்த படத்தில் நடிப்பதற்காக படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன்அப்போது மோகன் பாபு சார் அங்கே வந்த உடன்அவருக்கு வணக்கம் வைக்க அனைவரும் சென்றார்கள்அனைவரையும் அவர் போங்க போங்கஎன்று விரட்டினார்என்னையும் அப்படியே விரட்டினார்எனக்கு கொஞ்சம் கஷ்ட்டமாகி விட்டதுஎன்னடா இது சார் இப்படி நம்மள விரட்டிட்டாரேஎன்று தோன்றியதுபிறகு சண்டைக்காட்சி எடுக்கும் போது மாஸ்டர்சம்பத் இப்படி பண்ணுஅப்படி பண்ணுஎன்று சொல்லும் போதுமோகன் பாபு சார் உடனே கேட்டுவிட்டுடேய் சம்பத் இங்கே வா..., நீயாடா தாடிலாம் வைத்ததால் எனக்கு தெரியாம போச்சுடா..., என்று சொன்னவர்உடனே அங்கிருந்தவர்களை அழைத்தார்சுமார் 200 பேர் இருப்பாங்கஅனைவரையும் அழைத்து, “இவன் என்னுடைய மிக நெருக்கமான நண்பரின் நெருக்கமான உறவினர்இவரிடம் நான் கொஞ்சம் தப்பாக நடந்துக்கிட்டேன்அதனால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்என்று சொல்லி சாரிடா சம்பத்என்று சொன்னார்.  என்னால் அந்த சம்பவத்தை மறக்கவே முடியாதுநான் கண்கலங்கிட்டேன்நான் எல்லாம் ஒரு ஆளே இல்லைஅவ்வளவு பெரிய மனிதர் என்னிடம் மன்னிப்பு கேட்டது எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்ததுஅப்படி ஒரு மிக நல்ல மனிதர் அவர்அவரைப் பற்றி எதாவது தப்பான தகவல் வந்தால் எனக்கு வருத்தமாக இருக்கும்அப்படி ஒரு நல்லவரை ஏன் இப்படி பேசுகிறார்கள்என்று கஷ்ட்டமாக இருக்கும்அந்த படத்தில் நான் சினிமாவில் வாங்காத சம்பளத்தை எனக்கு கொடுத்து அனுப்பினார்.

அதன் பிறகு ‘கண்ணப்பா’ படத்திற்காக அவரே என்னை அழைத்தார்அடுத்த ஒரு படம் நியூசிலாந்தில் படப்பிடிப்புதேதி இருக்கா என்று கேட்டார்சார்நீங்க சொன்னா வருவேன் என்று சொல்லி இந்த படத்தில் நடித்தேன்இதில் எனக்கு மிகப்பெரிய கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்கள்அந்த காளஹஸ்திரி சிவபெருமான் மூலம் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாக நினைக்கிறேன்விஷ்ணு சாருக்கு நன்றிஎனக்கு ஒத்துழைப்பு கொடுத்து என்னை சிறப்பாக நடிக்க வைத்திருக்கிறார்நியூசிலாந்தில் என்னை நல்லபடியாக பார்த்துக் கொண்டார்சரத்குமார் சார்மதுபாலா மேடம் ஆகியோருக்கு இணையாக என்னையும் நடத்தினார்ரொம்ப நன்றி சார்இந்த படம் மிகப்பெரிய அளவில் வந்திருக்கிறதுநிச்சயம் மக்களை வெகுவாக கவரும்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்நன்றி.” என்றார்.

நடிகர் அர்பித் ராணா பேசுகையில்:

அனைவருக்கும் வணக்கம், ‘கண்ணப்பா’ வெறும் திரைப்படம் அல்லஅனைவருக்குமான உணர்வுமகாதேவனின் மிகப்பெரிய பக்தன் நான்எனக்கு இந்த படம் நெருங்கிய தொடர்புள்ள படம்விஷ்ணு சார் இந்த படத்தை மிக பிரமாண்டமாக எடுத்திருக்கிறார்சிவ பக்தர்கள் அனைவரையும் இந்த படம் வியக்க வைக்கும்அந்த அளவுக்கு படம் மிக சிறப்பாக வந்திருக்கிறதுஎனக்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியும்சென்னை என்னுடைய இரண்டாவது இடம்என் உறவினர்கள் பலர் இங்கு தான் வசிக்கிறார்கள்செனைக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு  இருக்கிறது.  எனக்கு இந்த வாய்ப்பளித்த விஷ்ணு சார் மற்றும் முகேஷ் சாருக்கு நன்றி.” என்றார்.

 

இயக்குநர் முகேஷ் குமார் சிங் பேசுகையில்:

தமிழ்நாடு என்னுடைய இரண்டாவது சொந்த இடம்இங்கு ஏராளமான கோவில்கள் இருக்கிறதுநான் இங்கு திரும்ப வந்ததும், ’கண்ணப்பா’ படத்திற்காக உங்கள் முன்பு நிற்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறதுஎங்கள் தயாரிப்பாளர் மோகன் பாபு சார்விஷ்ணு ஆகியோருக்கு நன்றி. ‘கண்ணப்பா’ திரைப்படம் வாழ்க்கைப் பயணத்தில் நிறைய விசயங்களை கற்றுக் கொடுத்ததுஎனக்கு மட்டும் அல்லஇங்கு இருக்கும் அனைவருக்கும் கண்ணப்பா சிறந்த பயணமாக அமைந்ததுஅனைத்து படங்களுக்கும் கஷ்ட்டங்கள் வரும்அதுபோல் கண்ணப்பா படத்திலும் நாங்கள் ஏராளமான பிரச்சனைகளை எதிர்கொண்டோம்ஆனால்அவை அனைத்தையும் கடவுள் சிவன் பார்த்துக் கொண்டார்சிறந்த படைப்பாக கண்ணப்பா படத்தை உருவாக்கியிருக்கிறோம்கடவுள் சிவனுக்கு நன்றிஉங்கள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

நடிகை மதுபாலா பேசுகையில்:

அனைவருக்கும் வணக்கம்நிறைய விசயங்கள் சொல்ல வேண்டும் என்று நினைத்துஎதுவும் சொல்ல முடியாமல் போகும்அப்படி ஒரு நிலையில் தான் நான் இருக்கிறேன்இந்த படம் பண்ணுவதற்கு என்னை சிவன் தான் தேர்வு செய்தார்என்று விஷ்ணு சார் நேர்காணலில் சொன்னார்அதுபோல தான் நானும்சிறு வயதில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்யார் படத்தில் நடிக்க வேண்டும்அறிமுகம் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் யோசிக்காமல்எதுவுமே தெரியாம நடிக்க வந்தவள் நான்நடிகையாக எப்படி அறிமுகமாக வேண்டும் என்றால்பெரிய பெரிய இயக்குநர்கள் பெயரை சொல்வார்கள்ஆனால் நான் அப்படி எல்லாம் சொல்லாமல்எதாவது ஒரு படம்இயக்குநர் யாராக இருந்தாலும் பரவாயில்லை என் முகம் திரையில் வர வேண்டும்என்ற எண்ணத்தில் மட்டுமே நடிக்க வந்தேன்அது  கிரேட் படமாபி கிரேட் படமாநல்ல படமாகெட்ட படமா என்று எதையும் கேட்காமல் நடிக்க வந்தவள் தான் நான்அதுபோல தான் இந்த படத்தின் வாய்ப்பும் அமைந்ததுஇந்த படத்திற்காக எனக்கு கால் வந்தபோது உடனே எஸ் சொல்லிவிட்டேன்என்ன கதாபாத்திரம்என்ன கதை என்று எதையும் கேட்கவில்லைஉடனே சம்மதம் தெரிவித்து விட்டேன்இன்று படத்தை பார்க்கும் போதுஇரண்டாவது முறை எதையும் கேட்காமல் ஓகே சொன்னது சரிதான் என்று தோன்றுகிறதுஇதுவரை நான் நடித்த படங்களில் யாருடன் நடிக்கிறேன்என்ற எந்த விவரமும் தெரியாமல் நடித்து வந்திருக்கிறேன்அதே போல் தான் இந்த படத்திலும் நடித்தேன்இதில் நடித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதுஎன் கதாபாத்திரத்தை திரையில் பார்க்கும் போது மிகவும் சந்தோஷப்பட்டேன்இந்த படத்தில் நடிக்க வந்த போதுமோகன் பாபு சார் 90-களில் நான் இரண்டு வாய்ப்பளித்தேன்என்னுடன் சேர்ந்து ஏன் நடிக்கவில்லைஎன்று கேட்டார்இப்போது அவர் படத்திலும் நடித்துவிட்டேன்அதனால் அவர் ஏன் நடிக்கவில்லை என்று கேட்க முடியாதுஅதேபோல் 35 வருடங்களுக்குப் பிறகு மோகன்லாலுடன் சேர்ந்து நடித்து விட்டேன்அக்ஷய் குமார் படங்களிலும் நிறைய நடித்திருக்கிறேன்அவருடனும் இந்த படத்தில் நடித்தது மகிழ்ச்சி.

இந்த படத்தின் மூலம் சிறந்த நட்பு எனக்கு கிடைத்திருக்கிறதுவிஷ்ணு உடன் இணைந்து பயணித்தது மகிழ்ச்சிகதையாசிரியர்தயாரிப்பாளர் மற்றும் கண்ணப்பாவாக விஷ்ணு மஞ்சு சிறப்பாக பங்களித்திருக்கிறார்.  இயக்குநர் முகேஷ் குமார் சிங் மிக அமைதியானவர்அவரது பணி மிக சிறப்பாக இருக்கிறதுஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறதுநடிகர் சம்பத் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள்இந்த சிறப்பான ஒரு படக்குழுவினருடன் மகிழ்ச்சியாக பணியாற்றியேன்இந்த படத்தின் காட்சியை பார்த்த நீங்கள் வியந்திருப்பீர்கள்என்று நினைக்கிறேன்படமும் மக்களை வியக்க வைக்கும்என்று நம்புகிறேன்.

இளம் அம்மா என்ற இமேஜ் எனக்கு இருக்கிறதுதற்போது அந்த இமேஜை கண்ணப்பா படம் உடைத்துபோர் வீராங்கனை என்ற புதிய பிம்பத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறதுநான் அந்த கதாபாத்திரத்தில் மிக மகிழ்ச்சியாக நடித்தேன்நமக்கு பலர் மீது பல கோபங்கள் இருக்கும்ஆனால் அந்த கோபத்தை வெளிக்காட்ட முடியாதுஇந்த படத்தில் சண்டைக்காட்சியில் எனக்கான கோபத்தை வெளிக்காட்டும் ஒரு வாய்ப்பு கிடைத்ததுஅந்த கத்தியை என்னிடம் கொடுத்து அடிக்க சொல்லியதும்எதிரே வந்த அனைவரையும் அடித்து துவம்சம் செய்து விட்டேன்இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்தது சந்தோஷமாக இருந்ததுஇந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் போது இருந்த ஒரே கஷ்ட்டம்அந்த வெயிட்டான கத்தியை தூக்குவது தான்போர் வீராங்கனையாக உடை அணிந்து கம்பீரமாக நிட்பேன்கையில் கத்தியை கொடுத்ததும்அதன் வெயிட் தாங்க முடியாதுகை எல்லாம் வலி எடுக்கும்அது ஒன்று தான் கஷ்ட்டமாக இருந்ததுமற்றபடி என் கதாபாத்திரத்தில் மகிழ்ச்சியாக நடித்தேன்இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது புதிய அனுபவமாக இருந்ததுதிரையில் பார்க்கும் போது ரசிகர்களும் அதை உணர்வார்கள்நன்றி.” என்றார்.

நாயகன் விஷ்ணு மஞ்சு பேசுகையில்:

சமீபகாலமாக சில சர்ச்சையான சம்பவங்கள் நடப்பதை நீங்கள் அறிவீர்கள்அதைப்பற்றி நான் இங்கு பேச விரும்பவில்லைஅதே சமயம்என்ன நடந்ததுஎன்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்கண்ணப்பா பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ளதுபடத்தின் கிராபிக்ஸ் பணிகள் உலகம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதுலண்டன் மற்றும் துபாய் நாடுகளிலும்இந்தியாவில் 8 இடங்களிலும் பணிகள் நடக்கிறதுபொதுவாக படத்தின் காட்சிகள் அடங்கிய டிரைவ் இரண்டு காப்பிகள் எடுக்கப்படும்ஒன்று எடிட்டிங் ஸ்டுடியோவுக்கும்மற்றொன்று தயாரிப்பு அலுவலகத்திற்கும் அனுப்பப்படும்இது தான் நம்முடைய வழக்கம்அதன்படிகிராபிக்ஸ் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போதுஅதன் சில காட்சிகள் டிரைவ் மூலம் அனுப்பப்பட்டதுஆனால்அதை எங்கள் தரப்பு கேட்கவில்லைகிராபிக்ஸ் நிறுவனத்தினர் எங்கள் முகவரிக்கு அனுப்பி விட்டார்கள்அதாவதுஎங்கள் நிறுவன முகவரி மற்றும் ஜி.எஸ்.டி முகவரி என இரண்டு உள்ளதுஜி.எஸ்.டி முகவரி அப்பாவுடைய இல்லம்அங்கு தான் எங்கள் தொடர்புடைய அனைத்து கடிதம் மற்றும் கூரியர்கள் வரும்சம்மந்தப்பட்டவர்கள் அதை அங்கு சென்று வாங்கிக் கொள்வோம்அதுபோல்எனக்கான அந்த டிரைவ் அந்த முகவரிக்கு வந்திருக்கிறதுஅப்போதுமனோஜ் வீட்டில் இருக்கும் இரண்டு பேர் அந்த கூரியரை வாங்கியதாக சொல்லப்படுகிறதுஇந்த விசயமே எங்களுக்கு தெரியாதுஅப்போதுஇரண்டு வாரங்களுக்குப் பிறகு கண்ணப்பா படத்தின் காட்சிகள் லீக் ஆனால் எப்படி இருக்கும்என்ற ஒரு எக்ஸ் பதிவு வெளியானதுஅதை வைத்து தான் எங்களுடைய காட்சிகள் அடங்கிய டிரைவ் கைமாறியிருப்பது தெரிய வந்ததுசரி இதை பெரிதுப்படுத்தக் கூடாது என்று நினைத்தேன்சமாதன முறையில் அதை கேட்டோம்ஆனால் அதற்கு சரியான பதில் வரவில்லைசரிபோலீஸ் மூலம் சமாதனமாக கேட்டுப் பார்க்கலாம் என்று நினைத்துஅதையும் செய்தோம்அப்போதும் எங்களுக்கு சரியான பதில் வரவில்லைபோலீஸும் முறையாக எப்..ஆர் போடாமல் எங்களால் விசாரிக்க முடியாதுஎன்று சொல்லிவிட்டார்கள்அப்போது கூட இந்த தகவலை ஊடகங்களிடம் நான் தெரிவிக்கவில்லைபோலீஸில் புகார் அளிக்கும் போதுஅங்கிருந்த நிருபர் ஒருவர் மூலமாக தான் செய்தியாக வெளியானதுபிறகு என்ன செய்வது என்று அப்பாவிடம் கேட்ட போது தான் வேறு வழியில்லைஎப்..ஆர் பதிவு செய்ய வேண்டிய நிலை வந்ததுஇப்போது எப்..ஆர் பதிவு செய்துவிட்டோம்போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள்அந்த காட்சிகள் வெளியானாலும்அதை ரசிகர்கள் நிராகரிக்க வேண்டும் என்பது தான் என் கோரிக்கைகாரணம்நூற்றுக்கணக்கானவர்களின் உழைப்பு அதில் இருக்கிறதுஅந்த உழைப்பை நீங்கள் திரையில் வந்து பார்க்க வேண்டும்என்பது தான் என் ஆசைஅதற்காக தான் நான் இந்த அளவுக்கு உழைத்திருக்கிறேன்இது தான் இந்த பிரச்சனைநான் குடும்ப பிரச்சனைப் பற்றி பேச விரும்பவில்லைஅனைத்து குடும்பத்திலும் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறதுஅது சரியாகி விடும்இன்று வரை எனது தம்பிக்கு என்ன பிரச்சனைஏன் அவர் இப்படி செய்கிறார்என்று தெரியவில்லைதெரிந்தால் நிச்சயம் அதை சரி செய்ய நான் முயற்சிப்பேன்.

கண்ணப்பா’ திரைப்படத்தை பொறுத்தவரை இதுவரை கண்ணப்பா பற்றி வந்திருக்கும் படங்களை விட மிக வித்தியாசமான அதே சமயம் பிரமாண்டமான படமாக இருக்கும்குறிப்பாக கண்ணப்பா சிவன் பக்தராக மாறிய பிறகு என்ன நடந்து என்பதை தான் அனைத்து படங்களும் காட்டியிருக்கிறதுஆனால்சிவ பக்தர் ஆவதற்கு முன்பு அவரது வாழ்க்கை எப்படி இருந்ததுஎன்பதை இந்த படத்தில் பார்க்கலாம்அதை சாதாரண படமாக அல்லாமல் விஷுவல் விருந்தாக பார்க்கும் அளவுக்கு படத்தை மிக பிரமாண்டமாக எடுத்திருக்கிறோம்நிச்சயம் இந்திய சினிமாவில் கண்ணப்பா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

படம் தொடர்பாக ஏகப்பட்ட கேள்விகள் எழலாம்ஆனால் வரலாறு மற்றும் இதிகாசங்கள் என்ன சொல்கிறதோ அதை தான் காட்சிகளாக எடுத்திருக்கிறோம்தணிக்கை குழுவினர் ஏகப்பட்ட கேள்விகளை முன் வைக்க உள்ளார்கள்குறிப்பாக கண்ணப்பா தனது வாயில் தண்ணீர் எடுத்து லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாதுவட இந்தியாவில் ஏற்க மாட்டார்கள்என்று சொல்கிறார்கள்ஆனால்உண்மையில் அப்படித்தானே இருக்கிறதுஉண்மையை தானே நாங்கள் காட்சியாக எடுத்திருக்கிறோம்என்று வாதிட்டேன்இதைவிட பெரிய விசயம்காதல் பாடலை பார்த்துவிட்டுகண்ணப்பா காதலித்தாராஎன்று கேட்கிறார்கள்சிவனும்பார்வதியும் காதலிக்காவில்லையாஅவர்களுக்கு இடையே இருக்கும் காதல் தான்கண்ணப்பாவிடமும் இருக்கிறதுஎன்று விளக்கம் அளித்தேன்இப்படி பல கேள்விகளை தணிக்கை குழுவினர் கேட்க இருக்கிறார்கள்அவர்களுக்கு எப்படி புரிய வைத்து படத்திற்கு சான்றிதழ் பெறப்போகிறேன்என்று தெரியவில்லைஅனைத்தையும் சிவன் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறதுஅவருக்காக எடுக்கப்பட்ட படம்நிச்சயம் அவர் அனைத்து தடைகளையும் தகர்த்தெரிவார்என்ற நம்பிக்கை இருக்கிறது.” என்றார்.

ஷெல்டன் சாவு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஸ்டீபன் தேவஸி இசையமைத்துள்ளார்ஆண்டனி படத்தொகுப்பு செய்திருக்கிறார். 24 பிரேம்ஸ் ஃபேக்டரி.வி. எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் சார்பில் மோகன் பாபு பிரமாண்டமாக தயாரித்திருக்கும் ‘கண்ணப்பா’ திரைப்படம் தமிழ்தெலுங்குகன்னடம்மலையாளம்இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வரும் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.