நரி வேட்டை விமர்சனம்
இந்தியன் சினிமா கம்பெனி சார்பில் திப்பு ஷான் மற்றும் ஷியாஸ் ஹாசன் இந்த படத்தை தயாரித்துள்ளனர். அபின் ஜோசஃப் திரைக்கதை எழுத, ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். விஜய் ஒளிப்பதிவு செய்ய, சண்டை காட்சிகளை ஃபீனிக்ஸ் பிரபு, அஷ்ரஃப் குருக்கள் படமாக்கி உள்ளனர். மேலும் இந்த படத்தில் டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சாரமூடு, சேரன், பிரியம்வதா கிருஷ்ணன், ஆர்யா சலீம், பிரசாந்த் மாதவன், ப்ரணவ் தியோஃபைன், நந்து, கிருஷ்ணன் பாலகிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
கேரளாவில் வசித்து வரும் டொவினோ தாமஸ் தான் படித்த படிப்பிற்கு ஏற்றவாறு வேலை கிடைத்தால் தான் வேலைக்கு செல்வேன் என்று உறுதியுடன் தன் அம்மாவுடன் வசித்து வருகிறார். ஒரு நேர சாப்பாட்டிற்கே சிரமப்பட்டு வந்தாலும் நல்ல வேலைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் வேலை டொவினோ தாமஸ்க்கு கிடைக்கிறது. பிடிக்கும் பிடிக்காமல் இந்த வேலைக்கு செல்கிறார். மலைவாழ் மக்கள் தங்களுக்கு இடம் வேண்டும் என்று வயநாட்டில் பிரச்சனை செய்கின்றனர். அவர்களை விரட்டி அடிக்க போலீஸ் படை செல்கிறது. அதில் டொவினோ தாமஸ்ம் செல்கிறார். பிறகு என்ன நடந்தது என்பதே கதை....
கேரளாவில் நடந்த ஒரு உண்மை சம்பவம் அடிப்படையில் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. மலையாள மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் இந்த படம் உருவாகியுள்ளது. சேரனுக்கு இது முதல் மலையாள படம் ஆகும். போலீஸ் அதிகாரியாக வரும் சேரன் ஆரம்பத்தில் நல்லவர் போல தெரிந்தாலும், பிற்பாடு அவர் குணம் மாறுகிறது.
இதுவரை சேரன் நடித்திராத கேரக்டர் அது. தனது கொள்கைக்கு பொருந்தாத கேரக்டர் என்றாலும், இந்த கதைக்காக அவர் மாறியிருப்பது சிறப்பு. இன்னொரு போலீஸ்காரராக வரும் சுராஜ் நடிப்பும் அருமை. பாதிக்கப்பட்ட மலை மக்களின் பிரதிநிதி, பெண் போராளி , அந்த குழந்தை என அனவைரும் மனதில் நிற்கிறார்கள். பாதிக்கப்பட்டு தீ பிழம்புடன் ஓடி வரும் ஒரு நாய் கூட நம் மனதை பிசைகிறது. ஃபீனிக்ஸ் பிரபு, அஷ்ரஃப் குருக்கள் சண்டை காட்சிகள் நன்றாக இருந்தது. ஆனால்
படத்தில் நிறைய லாஜிக் பிழைகள் உள்ளன..... கதையில் இன்னும் கூடுதல் கவனம் தேவை.....
மொத்தத்தில் இந்த 'நரி வேட்டை' ரத்த போராட்டம்.....
RATING 3/5
கருத்துரையிடுக