வேம்பு விமர்சனம்
மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் விஜயலட்சுமி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கத்தில் ஹரிகிருஷ்ணன், ஷீலா , மாரிமுத்து, ஜானகி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் ’வேம்பு’
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே உள்ள கிராமத்தில் வாழும் நாயகன் ஹரிகிருஷ்ணன் புகைப்பட கலைஞராக போட்டோ ஸ்டுடியோ கடை வைத்திருக்கிறார். இவரது மாமன் மகள் நாயகி ஷீலா கல்லூரி படிப்பை முடித்து விட்டு அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து வருகிறார்.
சிலம்பம் மீது ஆர்வம் கொண்ட ஷீலா அதை நன்கு கற்றுக் கொள்கிறார். சிலம்பம் போட்டியில் தேசிய அளவில் கலந்து கொண்டு சாதனை படைக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார். இந்நிலையில் ஹரிகிருஷ்ணனுக்கும் , ஷீலாவிற்கு திருமண செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்கிறார்கள்.
பெரியவர்கள் நிச்சயித்தபடி இருவருக்கும் திருமணம் நடக்கிறது. ஒரு நாள் கோவிலுக்கு சென்று விட்டு ஹரிகிருஷ்ணனும் ஷீலாவும் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பும் வழியில் விபத்து ஏற்பட்டு ஹரிகிருஷ்ணனுக்கு கண்பார்வை பறிபோகிறது. இதற்கு பின் ஹரிகிருஷ்ணனுக்கு கண்பார்வை பறி போனதால் ஷீலா குடும்ப பொறுப்பை ஏற்கிறார். பிறகு பறி போன கண் பார்வை மீண்டும் கிடைத்ததா? இல்லையா? என்பதே கதை.....
தற்காப்புக் கலையுடன் சேர்ந்து பெண்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை அடிப்படையாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஜஸ்டின் பிரபு. ஒரு பெண்ணின் வாழ்க்கையை விட அவளுடைய குடும்ப வாழ்க்கையின் போராட்டத்தை கதை சொல்லுகிறது. கிராமத்து பெண்ணாக நடித்திருக்கும் நாயகி ஷீலா துணிச்சலான கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சிலம்பம் சுற்றுவது, கற்று கொடுப்பது, கண் பார்வையற்ற கணவனை பாசமாக பார்த்து கொள்வது என கதைகேற்றபடி சிறப்பாக நடித்துள்ளார். கிராமத்து அழகை அழகாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் குமரன். அம்மாவாக வரும் ஜானகி, எம்.எல்.ஏவாக வரும் மாரிமுத்து, என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள். ஆனால்
எடிட்டிங்கில் கூடுதல் கவனம் தேவை... தற்காப்பு கலையை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்....
மொத்தத்தில் இந்த 'வேம்பு' சிறந்த விழிப்புணர்வு.....
RATING 3.1/5
கருத்துரையிடுக