பரமசிவன் பாத்திமா விமர்சனம்
ஸ்ரீ லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் நடிகர்கள் விமல், சாயாதேவி, எம்.எஸ் பாஸ்கர், கூல் சுரேஷ், வீரசமர், மனோஜ் குமார், ஆதிரா, அருள்தாஸ், சேஷ்விதா, ஸ்ரீரஞ்சனி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பரமசிவன் பாத்திமா'
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
திண்டுக்கல்லின் மலை சார்ந்த பகுதியில் சுப்ரமணியபுரம், யாக்கோபுரம்,சுல்தான் பேட்டை எனும் பெயரில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோர் வசிக்கிறார்கள். இதில் சுப்பிரமணியபுரம் எனும் ஊரில் வாழும் இந்துக்களுக்கும், யாக்கோபுரம் எனும் ஊரில் வாழும் கிறித்தவ மக்களுக்கும் இடையே அடிக்கடி மத ரீதியான மோதல்கள் ஏற்படுகிறது. இந்த தருணத்தில் யாக்கோபுரத்தில் ஒரு திருமணம் நடைபெறுகிறது.
திருமணத்திற்கு முதல் நாள் மணமக்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். யார் இதை செய்கிறார்கள் என காவல்துறையினர் விசாரணை நடத்தும் போது எந்தவித தடயங்களும் சிக்காமல் போலீசார் தடுமாறுகின்றனர்.
பிறகு இந்த கொலையை செய்துவருவது பரமசிவன் பாத்திமா தான் என தெரியவருகிறது. உடனே காட்டிற்கு போலீசார் விரைந்து செல்கின்றனர். பிறகு என்ன நடந்தது என்பதே கதை...
பரமசிவன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விமல், பாத்திமா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாயாதேவி தங்களுக்கு கொடுத்த ரொமான்ஸ் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். நடிகை சேஷ்விதா தன் கண்களால் கவர்ந்து இழுக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் தயாரிப்பாளரும் , இயக்குநருமான இசக்கி கார்வண்ணன் தனக்கு தெரிந்த அளவிற்கு நடித்திருக்கிறார். எம். எஸ். பாஸ்கர் பாதரியாராக தனக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார். பின்னணி இசை பரவாயில்லை.
கதை எளிதில் யூகிக்கும் அளவில் இருக்கிறது..... மத பிரச்சார காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துகிறது....
மொத்தத்தில் இந்த 'பரமசிவன் பாத்திமா' மத அரசியல் கலவை.
RATING 2.6/5
கருத்துரையிடுக