Thaagam Foundation

மரம் நடும் திட்டத்தில் இறங்கிய தாகம் ஃபவுண்டேஷன்!



சென்னை:

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பசுமையை பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபாட்டுடன் செயல்பட்டு வரும் பிரபல தொண்டு நிறுவனமாக தாகம் ஃபவுண்டேஷன், தற்போது நகரங்களிலும் பசுமை பரவ வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள கல்லூரிகளில் மரம் நடும் திட்டத்தை தொடங்கி உள்ளது.

இதுவரை கிராம பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கிய பங்களிப்பு அளித்த தாகம் ஃபவுண்டேஷன் தற்போது மாணவர்களுக்கிடையே இயற்கையின் முக்கியத்துவத்தை அறிய வேண்டும் என்னும் நோக்கத்தில் கல்வி நிறுவனங்களை மையமாகக் கொண்டு இந்த புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.


முதல் படியாக சென்னை வியாசர்பாடியில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் கல்லூரியில் 17.6.2025 அன்று சுமார் 30 செடிகள் நட்டுள்ளது. மரம் நடுதலுடன் மட்டுமல்லாமல் பராமரிப்பு, போன்ற தொடர் பணியிலும் ஈடுபடும் என தாகம் ஃபவுண்டேஷன் தெரிவிக்கிறது. தாகம் ஃபவுண்டேஷன் இந்த பயணத்தில் மாணவர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்றும் கூறுகிறது. மரம் என்பது நமது வாழ்வியலில் தவிர்க்க முடியாத ஒன்றும் அதனை நாம் தான் பாதுகாக்க வேண்டும் என்றும் சொல்லுவதுடன் மட்டுமல்லாமல் அதனை செய்தும் காட்டி வரும் தாகம் ஃபவுண்டேஷனுக்கு துணையாக நம்மால் முயன்றதை செய்வோம்.

தாகம் ஃபவுண்டேஷன் பற்றி:

2018-ம் ஆண்டில் வெறும் மூன்று பேரால் தொடங்கப்பட்ட இந்தத் "தாகம் ஃபௌண்டேஷன்", வெகு விரைவில் ஒரு பெரிய மாற்றத்திற்கான இயக்கமாக வளர்ந்தது. கடந்த ஏழாண்டுகளில், இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இதில் இணைந்து, ஐந்து லட்சத்துக்கும் அதிகமான நபர்களின் வாழ்க்கையில் நேரடியாக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

தொடக்கத்தில் "அனைவருக்கும் உணவு, அனைவருக்கும் கல்வி" என்ற இரண்டு முக்கிய இலக்குகளுடன் பயணத்தை ஆரம்பித்த தாகம் ஃபௌண்டேஷன், இன்று அந்த இலக்கங்களைத் தாண்டி, சுமார் 20 வகையான நலத்திட்டங்களை செயல்படுத்தும் வல்லமை கொண்ட அமைப்பாக மாறியுள்ளது.

தாகம் ஃபௌண்டேஷன் ஒரு முக்கியமான முன்னேற்றத்தைக் கண்டது, அது 100% வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் இந்தியாவின் முதல் தன்னார்வ அமைப்பாக இருக்கும் முறையில். நன்கொடையாளர்கள் தங்களது நன்கொடை எங்கு செல்கிறது என்பதை நேரடியாக கண்காணிக்கக்கூடிய வசதியுடன், நம்பிக்கையுடன் தங்களைச் சேர்ந்தவையாக உணர முடியும்.

இது வெறும் ஒரு தன்னார்வ இயக்கம் மட்டுமல்ல, இது ஒரு நம்பிக்கையின் பேரில் வளர்ந்த சமூக மாற்ற இயக்கம்.

VIDEO HERE:

லேபிள்கள்:
This is the most recent post.
பழைய இடுகைகள்

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.