மது விற்பனை செய்த 104 பேர் கைது

 மது விற்பனை செய்த 104 பேர் கைது! 

 தூத்துக்குடி:

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மதுபானக்கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் சட்டவிரோத மதுபான விற்பனை குறித்து சிறப்பு ரோந்து மற்றும் கவனம் செலுத்த  காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டதன் பேரில் நேற்று ஒரே நாளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 785 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் ஆகியோருக்கு சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்வதை தடுப்பதற்கு சிறப்பு ரோந்து மற்றும் தனிக்கவனம் செலுத்துமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் உத்தரவிட்டிருந்தார்.

அவரது உத்தரவின்பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சட்டவிரோத மதுபான விற்பனை குறித்து தனிக்கவனம் செலுத்தியதன்பேரில் நேற்று ஒரே நாளில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 104 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 785 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு பணம் ரூபாய் 9420/-ம் கைப்பற்றப்பட்டது.

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.