குரூப் 1 தேர்தல் முடிவுகள்!
டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. முதன்மை தேர்வு மே 28, 29, 30 தேதிகளில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலை தேர்வு கடந்தாண்டு ஏப்.,5-ம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பை அடுத்து தேதி குறிப்பிடப்படாமல் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர், ஜனவரி 3-ம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் 3-ம் தேதி நடைபெற்றது. துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 66 பணியிடங்களுக்காக இத்தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில், முதல்நிலை தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி பிப்.,09 வெளியிட்டுள்ளது. ஒரு பதவிக்கு 50 பேர் வீதம் முதல் நிலை தேர்வில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குரூப் 1 முதன்மை தேர்வு மே 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக