18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!


சிவகங்கை மாவட்ட பொது சுகாதாரத்துறையின் மூலம் 18 வயது முதல் 45 வயதிற்குட்பட்டவர்களுக்கு கொரோனா நோய்த்தடுப்பிற்கான இலவச தடுப்பூசி போடப்படுகிறது. இதற்கான தடுப்பூசி தொடக்க முகாம் சிவகங்கை நகராட்சி நகர் நலமையத்தில் நடைபெற்றது. 

முகாமை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

கொரோனா நோய்த்தொற்று அதிகமாக பரவுவதையொட்டி பாதுகாப்பு நலன் கருதி பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் இலவசமாக முதற்கட்ட தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது.

சிவகங்கை மாவட்டத்திற்கு பொது சுகாதாரத்துறையின் மூலம் 12 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 3 நகர்நல மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவமனைகள் ஆகியவற்றில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகின்றது.

இதில் முதற்கட்டமாக கட்டிட தொழிலாளர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள், அனைத்து மார்க்கெட் தொழிலாளர்கள், சில்லறை விற்பனை கடை வியாபாரிகள், அனைத்து கல்லூரி, பள்ளி ஆசிரியர்கள், மாநில போக்குவரத்துக்கழக பணியாளர்கள், அனைத்து அரசுப்பணியாளர்கள், அனைத்து ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்குவதற்கு ஏதுவாக சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொண்டு 100 சதவிகிதம் தடுப்பூசி போடப்பட்டது என்ற நிலையை உருவாக்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர்கள் பார்த்தசாரதி, கலாதேவி, சிவகங்கை நகராட்சிஆணையாளர் அய்யப்பன், பூச்சியியல் நிபுணர் ரமேஷ், சுகாதார ஆய்வாளார்கள் கோதண்டம், முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


லேபிள்கள்: ,

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.