‘இறுதி பக்கம்’ திரை விமர்சனம்

‘இறுதி பக்கம்’ திரை விமர்சனம்


தயாரிப்பு: ட்ரீம் கிரியேஷன்ஸ் சார்பில் சிலம்பரசன் | கிருபாகர் | செல்வி வெங்கடாசலம்.

நடிகர்கள்:

ராஜேஷ் பாலச்சந்திரன் as குமார்   - அம்ருதா ஸ்ரீநிவாசன் as இயல்

விக்னேஷ் சண்முகம் as பிரசாந்த் - கிரிஜா ஹரி as ஜெனிபர்

ஸ்ரீ ராஜ் as மிதுன் - சுபதி ராஜ் as ராமசாமி

எழுத்து - இயக்கம்:  மனோ வெ கண்ணதாசன்

ஒளிப்பதிவு: பிரவின் பாலு

இசை:  ஜோன்ஸ் ரூபர்ட்

படத்தொகுப்பு: ராம் பாண்டியன்

ஒலி வடிவமைப்பு: ராஜேஷ் சசீந்திரன்

தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்: சுமேஷ்

கலை: ஜெய் J திலிப்

ஒப்பனை: திவ்யா M

நிர்வாக தயாரிப்பு: மனோ வெ கண்ணதாசன்

மக்கள் தொடர்பு: சக்தி சரவணன்


புஷ்பா தங்கதுரை, சுஜாதா, ராஜேஷ் குமார் போன்றோரின் கொலை, போலீஸ், விசாரணை டைப்பிலான துப்பறியும் கதைகளைத் தேடித் தேடிப் போய் அனுபவத்தை கிளறி விட்டு விட்டது ‘ இறுதி பக்கம்’ படம். கதை என்னவென்றால் ஒரு பெண் நாவலாசிரியர் கொலை செய்யப்படுகிறார். அக் கொலையை விசாரிக்க ராஜேஷ் பாலச்சந்திரன் மற்றும் உதவியாக பெண் போலீஸ் கிரிஜா ஹரி நியமிக்கப்பட இருவரும் இணைந்து எப்படி துப்பறிந்தார்கள் என்பதுதான் கதை.

முழு படமும் என்னவோ ஒரு கொலையும் அதனை விசாரிக்கும் தருணங்களும் தான் என்றாலும் படம் பேசும் பொருள் கொஞ்சம் முக்கியமானதும் விவாதத்திற்குரியதும் கூட. இக்கால பெண்கள் சுதந்திரத்தை அவர்களின் பாலியல் சுதந்திரத்தையும் காதல் காமம் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டையும் ஒரு பெண்ணின் பார்வையில் சொல்ல முயன்றிருக்கிறது இந்தப்படம். படத்தின் தொடக்கக் காட்சியே எந்தவித சுற்றி வளைப்பும் இல்லாமல் கொலையில் ஆரம்பமாகிறது. கொலை நடந்த அடுத்த காட்சியில் விசாரணையும் ஆரம்பமாகி விடுகிறது அங்கேயே நம்மையும் படத்திற்குள் இழுத்து விடுகிறார்கள். ஆரம்பித்த சில காட்சிகளில் கொலை செய்த்வனையும் கண்டுபிடித்து விட்டாலும் ஏவியது யார் என்ற புள்ளியை வைத்துக்கொண்டு திரைக்கதையில் விளையாடியிருக்கிறார் இயக்குநர் மனோ வெ கண்ணதாசன்.

நடிகர்கள் அனைவரும் புதிது என்றாலும் படத்திற்கு தேவையானதை சரியாக செய்துள்ளார்கள். ராஜேஷ் பாலச்சந்திரன், அம்ருதா ஸ்ரீநிவாசன் இருவரும் கலக்கியிருக்கிறார்கள். குறிப்பாக நாவலாசிரியர் ரோலில் வரும் அம்ருதா தனிக் கவனம் பெறுகிறார் அவருடன் லிவ் இன் பார்ட்னராக வந்த ஸ்ரீ ராஜும், காதலனாக வரும் விக்னேஷ் சண்முகமும் தங்கள் ரோலை உணர்ந்து அசத்தி இருக்கிறார்கள் .

ஒரு பெண்ணை பாலியல் சுதந்திரம் கொண்டவளாக காட்டுவதும் பல ஆண்களுடன் தொடர்பு கொள்பவளாகவும் காட்டுவதும், அவளை நாயகியாக காட்டுவதும், தமிழ் சினிமாவில் கத்தி மேல் நடப்பது போன்றது. ஆனால் அதை பார்வையாளனுக்கு அருவருப்பு வராமல் ஒரு பெண்ணின் கோணத்தில் அவளின் நியாயத்தை காட்டியதற்காக பாராட்டலாம்.

படம் ஒரு நாவலை படிப்பது போன்று இருப்பதும் சினிமா பூச்சு இல்லாமல் கொஞ்சம் நாடகத்தன்மையுடன் இருப்பதும் மைனஸ்தான் என்றாலும் ஒரு கொலை விசாரணை படத்தில் யார் கொலையாளி என்பது தான் படம் ஆனால் அதை பார்வையாளன் யூகித்து விட்டால் படம் நிற்காது ஆனால் இப்படத்தில் அந்த விசயத்தில் ஜெயித்திருக்கிறார்கள் அடுத்தடுத்த க்ளுக்கள் போலீஸ் விசாரிக்கும் போது அவர்களுடன் சேர்ந்து நாமும் பயணிக்கிறோம். க்ளைமாக்ஸில் நமக்கு ஆச்சர்யம் தந்து சஸ்பென்ஸை உடைத்திருப்பது அழகுக்காகவே இப்படத்தை கொண்டாடலாம்

மொத்தத்தில் இந்த 'இறுதி பக்கம்' சகலருக்கும் பிடித்த த்ரில்லர்.



லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.