கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களுக்கு விலக்கு!

கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களுக்கு விலக்கு!


பெங்களூரு: 

கர்நாடகத்தில் கோவில்களுக்கு அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விரைவில் விலக்கு அளிக்கப்படும் என்றும், இதுதொடர்பான சட்டம் சட்டசபை கூட்டுக்கூட்டத்தில் கொண்டுவரப்படும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

கர்நாடக பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் உப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் மேலிட பொறுப்பாளர் அருண்சிங், கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் உள்பட மந்திரிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:-

பிற மதங்களின் வழிபாட்டு தலங்கள் சுதந்திரமாக செயல்படுகின்றன. ஆனால் இந்து கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. சில கட்டுப்பாடுகளால் தொந்தரவை அனுபவித்து வருகின்றன. அதனால் கர்நாடகத்தில் கோவில்களுக்கு அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விரைவில் விலக்கு அளிக்கப்படும். 

கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பு இதற்கான சட்டம் கொண்டு வரப்படும். கோவில் வருமானங்கள் வேறு திட்டங்களுக்கு செல்வதை தடுக்கவும், கோவில் வருமானத்தை அந்த கோவிலின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தும் வகையில் முடிவு எடுக்கப்படும்.

கொப்பலில் உள்ள அஞ்சனாத்திரி கோவிலை அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு இணையாக மேம்படுத்துவோம். அதை பிரதமர் மோடியின் கைகளால் திறந்து வைக்க நடவடிக்கை எடுப்போம். மதமாற்ற தடை சட்ட மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றியுள்ளோம். 

அதை வருகிற கூட்டத்தொடரில் மேல்-சபையில் நிறைவேற்றுவோம். இந்த சட்டத்தை அமல்படுத்த ஒரு செயல் படையை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

கர்நாடகத்தில் 34 ஆயிரத்து 558 கோவில்கள் அரசின் அறநிலையத்துறையின் கீழ் உள்ளன. இதில் ஏ பிரிவில் 132 கோவில்கள் உள்ளன. இவை ஆண்டுக்கு ரூ.25 லட்சத்திற்கும் அதிமாக உண்டியல் வருவாய் ஈட்டுகின்றன. பி பிரிவில் 180 கோவில்கள் இருக்கின்றன. 

அந்த கோவில்களில் ரூ.5 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை வருவாய் கிடைக்கிறது. 34 ஆயிரத்து 246 கோவில்களுக்கு ரூ.5 லட்சத்திற்குள் வருவாய் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகத்தில் இந்து கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்து அமைப்புகள் நீண்ட நாளாக முன்வைத்து வருகின்றன. இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.