கர்நாடகத்தில் 5 பேருக்கு ஒமைக்ரான்!
கர்நாடகத்தில் இதுவரை 38 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்ட 5 பேரில் 2 பேர் அமெரிக்காவில் இருந்தும், துபாய், கானா, மும்பையில் இருந்து தலா ஒருவரும் பெங்களூரு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை சுகாதார துறை மந்திரி சுதாகரும் உறுதி செய்துள்ளார்.
கருத்துரையிடுக