Latest Post

Decathlon opens one of its large-format stores at Pondy Bazaar, T. Nagar, Chennai



Chennai: 

French sporting goods brand Decathlon has launched a new, expansive four-floor facility in Pond Bazaar, T. Nagar, Chennai spanning around 28632 sq ft. This new location is set to become the sporting goods retailer's flagship store in Tamil Nadu. Dr.C. Sylendra Babu, IPS (Retd), Former DGP/ Head of Police Force, Tamil Nadu inaugurated the store today.

The Pondy Bazaar store boasts the highest range and variety of sporting goods and equipment available in Tamil Nadu, offering a comprehensive selection for various sports and activities. The four floors of the store have been dedicated to the different sporting goods, Ground floor for cycling and allied goods, first Floor for fitness and running, second floor for football, basketball, badminton and table tennis and third floor dedicated for trekking, hiking and camping materials.

Beyond its extensive product offerings, the new Decathlon Pond Bazaar store is a full-service hub. It provides various specialized services, including Racket stringing: Catering to tennis, badminton, and squash enthusiasts; 1-hour delivery: For quick access to essential sporting items and T-shirt printing: Allowing customers to customize their athletic wear. Decathlon has officially relocated its Ramee Mall store to a new, expansive four-floor facility in Pond Bazaar, Chennai.

VIDEO HERE:

10 ஆண்டு வெற்றிப் பயணத்தை உணர்வுபூர்வ பரிசுகளுடன் கொண்டாடிய அஜிலிசியம்!



சென்னை: 

உயிரியல் அறிவியல் (லைஃப் சயின்ஸஸ்) துறையின் முன்னணி ஏஜென்டிக் ஏ.ஐ. (Agentic AI) பார்ட்னராக திகழும் அஜிலிசியம் நிறுவனம், அந்நிறுவனத்தின் ஆரம்ப நாட்கள் முதல் இன்று வரை நீண்டகாலமாக பணியாற்றி வரும் 25 ஊழியர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில் அனைவருக்கும் ஹூண்டாய் கிரெட்டா (SUV)  கார்களை பரிசளித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நிறுவனத்தின் 10 வது ஆண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாக, சென்னை உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ள அஜிலிசியம் நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு உணர்வுபூர்வ தருணங்களை பகிர்ந்துகொண்டனர். ஊழியர்களின் நம்பிக்கையையும் உறுதியையும் கௌரவிக்கும் இந்த பாராட்டு நிகழ்வு, அஜிலிசியம் கடைபிடித்து வரும் மனிதர் மையக் கலாசாரத்தின் ஓர் அனுபவமூட்டும் சான்றாக அமைந்தது.

அழகாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், பணியாளர்கள் அவர்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர், எவரும் எதிர்பாரா விதமாக வரிசைமைத்து நிறுத்தப்பட்ட புத்தம் புதிய ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி-க்கள், வழக்கமான கார்ப்பரேட் கொண்டாட்டம் என்று நினைத்து வந்த பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி, கொண்டாட்டத்தை மறக்க முடியாத உணர்ச்சிகரமான தருணமாக இது மாற்றியது. மேலும் தொழில்துறையில் சவால்கள் நிறைந்த சூழ்நிலையில் கூட, தனது மனிதர் மையக் கொள்கையை கடைபிடித்த அஜிலிசியம், அனைத்து நிலைகளிலும் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வையும் அறிவித்து, தனது ஊழியர்களின் அர்ப்பணிப்பை மறுவாரியாக மதித்து அதன் ஆழமான வேரூன்றிய உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டியது.

இந்த நிகழ்வில் பேசிய அஜிலிசியம் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ராஜ் பாபு, "தொழில்துறை முழுவதும் எச்சரிக்கையுடன் நகரும் இவ்வாண்டிலும் நாங்கள் எங்கள் ஊழியர்களின் உழைப்பையும் உறுதியையும், நிலைத்த நம்பிக்கையையும் மதித்து, உரிய ஊதிய உயர்வும் அங்கீகாரமும் வழங்க முடிவு செய்தோம். இந்த கார்கள் வெறும் பரிசுகளல்ல; நீண்ட காலமாக நிறுவனத்துடன் பயணித்து, அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாயிருந்த ஊழியர்களின் விசுவாசத்தையும் ஒற்றுமையையும் கொண்டாடும் நன்றியின் ஒரு சிறிய வெளிப்பாடு. நிறுவனத்தின் ஆரம்ப காலத்திலேயே எங்களை நம்பி எங்கள் கனவுகளுடன் பயணித்தவர்கள் இவர்கள். அவர்களின் ஆதரவால் இன்று அஜிலிசியம் உலகளாவிய உயிரியல் அறிவியல் ஏ.ஐ. முன்னணி நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. தொடர்ந்த வளர்ச்சிக்கு ஊழியர்களின் விசுவாசமும் அர்ப்பணிப்பும் தான் தூணாக இருக்கும் என்பதை நாங்கள் இந்த செயல் மூலம் வலியுறுத்த விரும்புகிறோம். நிறுவனம் ஒரு கனவாக இருந்தபோது நம்பிக்கையுடன் களத்தில் நின்றவர்கள் இவர்கள். அவர்களின் உறுதிகொடுத்த பங்களிப்பால், இன்று அஜிலிசியம்உலகளாவிய உயிரியல் அறிவியல் ஏ.ஐ. துறையில் முன்னணி இடத்தைப் பிடித்திருக்கிறது. எங்கள் தொடர்ச்சியான வளர்ச்சிக்குப் பின்னால் இருக்கும் ஊழியர்களின் நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் தான் எங்கள் மிகப்பெரிய பலம் என்பதை இந்த செய்கை மூலம் நாங்கள் வலியுறுத்துகிறோம்.”

நிகழ்வின் போது, நிறுவனம் தனது எதிர்கால திட்டத்தையும், தனித்தியங்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப்’ பயன்படுத்தி புதுப்பிக்கப்பட்ட 'அஜிலிசியம் 3.0' தொலைநோக்குப் பார்வையின் கீழ் வெளியிட்டது. இந்த புதுப்பிக்கப்பட்ட பார்வை, லைஃப் சயின்சஸ் நிறுவனங்கள் கண்டுபிடிப்புகளை இயக்கவும், நோயாளிகளின் விளைவுகளை மேம்படுத்தவும் மற்றும் வணிக மாற்றத்தை பெரிய அளவில் திறக்கவும் உதவுவதில் கவனம் செலுத்துகிறது.  இத்துறையில் ஜாம்பவான் நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகப் பெற்றிருப்பதுடன் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியாவில் வலுவான அடித்தளத்தைக் கொண்டிருக்கிறது. அஜிலிசியம் அடுத்த கண்டுபிடிப்பு சகாப்தத்தை வழிநடத்த தயாராக உள்ளது.

திரு.ராஜ் பாபு மேலும் பேசுகையில், “அளவிடக்கூடிய வணிக தாக்கத்தை உருவாக்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்புடன், அஜிலிசியம் வெறும் பிரச்சனைகளை தீர்ப்பது மட்டுமல்லாமல், செயற்கை நுண்ணறிவின் மூலம் லைஃப் சயின்ஸ் நிறுவனங்கள் எவ்வாறு புதுமைகளை உருவாக்குகின்றன, நோயாளிகளுக்கு சேவை செய்கின்றன மற்றும் நிலையான முறையில் வளர்ச்சியடைகின்றன என்பதை மறுபரிசீலனை செய்ய உதவுகிறது. உலகளவில் வலுவாக கால் பதித்திருக்கும் நாங்கள், வலுவான வணிகக் கூட்டுறவைப் பெற்று, தொழில்துறையில் அடுத்த மாற்றத்தின் சகாப்தத்தை வழிநடத்த நாங்கள் தயாராக உள்ளோம்.” என்று கூறினார்.


Kauvery Hospital’s 24x7 Diabetes Helpline Crosses 1500 Days of Lifesaving Support Across Tamil Nadu



Chennai:

Kauvery Hospital’s 24x7 Diabetes Helpline (88802 88802) has completed an impressive milestone of 1500 days of uninterrupted service since its launch on April 21, 2021. As one of the forerunners in establishing a dedicated helpline for diabetes care in Chennai, this initiative has become a vital lifeline for patients across Tamil Nadu—offering expert medical guidance, emergency intervention, and daily diabetes management support at any hour. 

To mark this milestone, Honourable Minister for Health and Family Welfare, Thiru Ma. Subramanian, joined the hospital leadership and care teams in acknowledging the helpline’s impact and encouraging continued innovation in accessible chronic care services.

The helpline is powered by a specialized team of diabetes educators, physicians, dietitians, and data-monitoring experts. From assisting patients during hypoglycemic episodes (a sudden drop in blood sugar levels that can lead to fainting, confusion, or coma if not treated quickly) to interpreting real-time CGMS (Continuous Glucose Monitoring System) data, the support is proactive, holistic, and personalized.

In 2024 alone, the helpline managed 12,541 calls, a steep rise from 1,223 calls in 2021, reflecting its increasing role in diabetes care. Of these, 0.89% were emergencies, predominantly hypoglycemia, which were effectively managed through immediate telephonic support and follow-ups.

To enhance accessibility, the helpline offers multilingual support and WhatsApp-based services, enabling patients to share glucose readings, reports, and photos instantly. It is also evolving into a centralized care coordination point for managing diabetes-related complications involving the heart, kidneys, brain, and vascular system—ensuring timely guidance and specialist referrals.

What makes this service truly impactful is how it has enabled timely, often life-saving interventions in real-world scenarios:

In one instance, a woman experiencing hypoglycemia (low blood sugar levels that can cause disorientation or fainting) was guided over the phone to consume fast-acting glucose. Her symptoms improved, and follow-up calls ensured stability—preventing escalation to an emergency room visit.

In another powerful case, a pregnant woman diagnosed with gestational diabetes was advised elsewhere to consider termination due to extremely high-risk sugar levels. The Kauvery helpline enrolled her in a continuous glucose monitoring program, providing real-time insulin and diet guidance. With close monitoring and support from the team, she delivered healthy twins, proving that technology and teamwork can overcome critical risk.

An IT professional living with Type 1 diabetes experienced early signs of diabetic ketoacidosis (a potentially fatal complication where the body produces excess acids called ketones due to insulin deficiency). The helpline team recognized the symptoms quickly, advised emergency hospital admission, and ensured she received timely care—potentially saving her life.

A patient with a diabetic foot ulcer, unable to travel for care, received continuous support via the helpline. Daily teleconsultations and remote wound monitoring through photos ensured appropriate treatment and healing—without requiring hospitalization.

“Diabetes doesn’t follow a timetable—and neither should care,” said Dr. Baraneedharan, Senior Consultant Diabetologist at Kauvery Hospital. “We launched this helpline to ensure every person with diabetes—whether in Chennai or a remote village—has access to reliable guidance and clinical support. With just one number, we provide medical, emotional, and educational assistance round-the-clock.”

“At Kauvery, we strive to make healthcare continuous, compassionate, and accessible,” said Dr. Aravindan Selvaraj, Co-founder and Executive Director of Kauvery Group of Hospitals. “The 24x7 Diabetes Helpline reflects this philosophy. Beyond addressing emergencies, it empowers people to take control of their condition with the right information at the right time. This 1500-day milestone stands as a testament to the lives touched and lives saved.”

Whether it’s navigating festival diets, a midnight sugar crash, or interpreting CGMS trends, Kauvery’s 24x7 Diabetes Helpline (88802 88802) remains a trusted and ever-present companion in diabetes care—just one call away.

கட்ஸ் விமர்சனம்  



இயக்குநர் ரங்கராஜ்  இயக்கத்தில் இயக்குநர் ரங்கராஜ், நான்சி, டெல்லி கணேஷ், ஸ்ருதி நாராயணன், சாய் தீனா, பிர்லா போஸ், ஸ்ரீ லேகா, அறந்தாங்கி நிஷா, பிரவீன் மஞ்சரேக்கர் மற்றும் பலர் நடித்துள்ள படம் தான் 'கட்ஸ்'

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:

ரங்கராஜ் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். இவரது தந்தை மர்ம நபர்களால் கொலை செய்யப்படுகிறார். ரங்கராஜ் மனைவி ஸ்ருதி நாராயணன் கர்ப்பமாக இருக்கிறார். மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது ரவுடி கும்பலால் குத்தப்பட்டு அவரும் இறந்துவிடுகிறார்.

தந்தை மகன் என இரு கதாபாத்திரங்களிலும் ரங்கராஜ் நடித்துள்ளார். ரங்கராஜ் மணல் அள்ளும் பிரச்சனையில் கொல்லப்படும் ஒரு திரு நங்கையின் வழக்கை விசாரிக்கிறார். இந்த கொலைக்குப் பின் கார்பரேட் நிறுவனத்தின் முக்கிய புள்ளி  ஒருவன் இருப்பது தெரிந்து அவனை கைது செய்து சிறையில் அடைக்கிறார். கைது செய்த சிறிது நேரத்தில் தனது அதிகாரத்தை வைத்து வில்லன் வெளியே வருகிறான். பிறகு தந்தை கொலை, மனைவி கொலை, வில்லன் கதை என படம் சூடுபிடிக்கிறது......

போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கராஜ் கதாபாத்திரங்களிலும், விவசாயி பெத்தனசாமி கதாபாத்திரங்களிலும் ரங்கராஜ் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அப்பா கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்திருக்கும் ஸ்ருதி நாராயணன், கிராமத்து பெண்மணியாக தனது பணியை நிறைவாக செய்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் மனோஜ் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறார்.  பின்னணி இசை ஓகே. நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீலேகா, பெண் காவலராக நடித்திருக்கும் அரந்தாங்கி நிஷா தனக்கு கொடுத்த பணியை செய்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். ஆனால் 

வசனத்திலும், பிளாஷ்பேக் காட்சிகளிலும் கூடுதல் கவனம் தேவை...

மொத்தத்தில் இந்த 'கட்ஸ்' பயம் கலந்த தைரியம்....  

RATING 2.8/5

https://www.tamillive.news/2025/06/guts-movie-review.html

பரமசிவன் பாத்திமா விமர்சனம்



ஸ்ரீ லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் நடிகர்கள் விமல், சாயாதேவி, எம்.எஸ் பாஸ்கர், கூல் சுரேஷ், வீரசமர், மனோஜ் குமார், ஆதிரா, அருள்தாஸ், சேஷ்விதா, ஸ்ரீரஞ்சனி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பரமசிவன் பாத்திமா'  

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:

திண்டுக்கல்லின் மலை சார்ந்த பகுதியில் சுப்ரமணியபுரம், யாக்கோபுரம்,சுல்தான் பேட்டை எனும் பெயரில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோர் வசிக்கிறார்கள். இதில் சுப்பிரமணியபுரம் எனும் ஊரில் வாழும் இந்துக்களுக்கும், யாக்கோபுரம் எனும் ஊரில் வாழும் கிறித்தவ மக்களுக்கும் இடையே அடிக்கடி மத ரீதியான மோதல்கள் ஏற்படுகிறது. இந்த தருணத்தில் யாக்கோபுரத்தில் ஒரு திருமணம் நடைபெறுகிறது. 

திருமணத்திற்கு முதல் நாள் மணமக்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். யார் இதை செய்கிறார்கள் என காவல்துறையினர் விசாரணை நடத்தும் போது எந்தவித தடயங்களும் சிக்காமல் போலீசார் தடுமாறுகின்றனர்.

பிறகு இந்த கொலையை செய்துவருவது பரமசிவன் பாத்திமா தான் என தெரியவருகிறது. உடனே காட்டிற்கு போலீசார் விரைந்து செல்கின்றனர். பிறகு என்ன நடந்தது என்பதே கதை...

பரமசிவன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விமல், பாத்திமா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாயாதேவி தங்களுக்கு கொடுத்த ரொமான்ஸ் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். நடிகை சேஷ்விதா தன் கண்களால் கவர்ந்து இழுக்கிறார்.  

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் தயாரிப்பாளரும் , இயக்குநருமான இசக்கி கார்வண்ணன் தனக்கு தெரிந்த அளவிற்கு நடித்திருக்கிறார்.  எம். எஸ். பாஸ்கர் பாதரியாராக தனக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார். பின்னணி இசை பரவாயில்லை.

கதை எளிதில் யூகிக்கும் அளவில் இருக்கிறது..... மத பிரச்சார காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துகிறது....

மொத்தத்தில் இந்த 'பரமசிவன் பாத்திமா' மத அரசியல் கலவை.

 RATING 2.6/5


குயிலி இசை வெளியீட்டு விழா !


Chennai:

B M ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.வ. அருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் நடிகை லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'குயிலி' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் 'எழுச்சித் தமிழர்' தொல். திருமாவளவன் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள 'குயிலி' திரைப்படத்தில் லிசி ஆண்டனி, ரவி சா, தாஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜூ ஸ்மித் இசையமைத்திருக்கிறார். ஒரு தாயின் வைராக்கியம் மிக்க தொடர் வாழ்க்கை போராட்டத்தை எடுத்துக்காட்டும் விதமாகவும் மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை விநியோகஸ்தர் மோகன் வெளியிடுகிறார். 

விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு நிகழ்வில் படக்குழுவினருடன் மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன், மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநரும் நடிகருமான பாலாஜி சக்திவேல், இயக்குநர் ஸ்ரீஜர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் அருண் குமார் பேசுகையில், ''இங்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த அனைவரையும் வரவேற்கிறேன். இப்படம் சிறப்பாக உருவாவதற்கு உழைத்த படக்குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  முதலில் என்னுடைய பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் 'ஏமாற்றாதே', 'பொய் சொல்லாதே', 'திருடாதே', 'கடினமாக உழைத்தால் வெற்றி கிடைக்கும்' என்ற விஷயங்களை சொல்லிக் கொடுத்து வளர்த்தனர். அவற்றை பின்பற்றி இப்படத் தயாரிப்பின் போது பல தடைகள், தாமதங்கள் ஏற்பட்டாலும் அனைத்தையும் கடந்து வெற்றிகரமாக நிறைவு செய்து இருக்கிறோம். இதற்காக கடினமாக உழைத்த 'குயிலி' பட குழுவினர் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த திரைப்படத்திற்காக முதலீடு செய்த நண்பர்களையும் வாழ்த்துகிறேன், வரவேற்கிறேன், நன்றி தெரிவிக்கிறேன். 

இந்தத் திரைப்படம் ஒரு அம்மாவின் வலியை பேசுகிறது. ஒரு அம்மா தன் மகனை வளர்ப்பதற்காக எவ்வளவு சவால்களை எதிர்கொள்கிறார்கள் எவ்வளவு போராட்டங்களை சந்திக்கிறார்கள்? அவர்கள் வாழ்க்கையில் இறுதிவரை எப்படி போராடுகிறார்கள்? என்பதை இப்படம் விவரிக்கிறது. குயிலியாக நடித்த நடிகை லிசி ஆண்டனி உள்ளிட்ட இப்படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களுக்கும், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

இது கமர்ஷியல் படமாக இல்லாமல் சமூகத்திற்கான படமாக உருவாகி இருக்கிறது.‌ இதற்காக இயக்குநரை பாராட்டுகிறேன். இந்த திரைப்படம் வெளியான பிறகு படத்தை பார்த்தவர்களில் ஐந்து சதவீத மக்களாவது தங்களை திருத்திக் கொண்டால்.. அதுவே இப்படத்தின் வெற்றியாக கருதுகிறோம்,'' என்றார். 

நடிகை தாஷ்மிகா பேசுகையில், ''இந்தப் படத்தில் நடிப்பதற்கு எனக்கு திடீரென்று வாய்ப்பு கிடைத்தது. அதனால் எனக்கு இந்த தருணம் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏதோ ஒரு படப்பிடிப்பில் சிறிய வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இப்படத்தில் நடிப்பதற்கான அழைப்பு வந்தது. குடிக்கு எதிரான படத்தில் நீங்கள் நாயகியாக நடிக்க வேண்டும் என படக் குழுவினர் சொன்னவுடன் உற்சாகம் அடைந்தேன். என் மேல் நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி,'' என்றார். 

மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில், ''குறிப்பிட்ட சமுதாயத்திற்கோ, குறிப்பிட்ட சாதிக்கோ இல்லாமல்,  எல்லாருக்குமான தலைவராகவும், ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் தலைவராக திகழும் தொல் திருமாவளவனை வருக, வருக என வரவேற்கிறேன். அவர் சட்டக் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே எனக்கும், அவருக்கும் பழக்கம் உண்டு. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆர்ப்பாட்டம் நடைபெறும் தருணத்தில் நாங்கள் தினமும் சந்தித்துக் கொள்வோம். இந்தியா கூட்டணி உருவாவதற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை போல் இவருக்கும் பங்கு இருக்கிறது. பாராளுமன்றத்தில் இவருடைய குரல் ஓங்கி ஒலித்திருக்கிறது, ஒலித்துக்கொண்டே இருக்கிறது. 

பி எம் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த 'குயிலி' திரைப்படம் அற்புதமான குடும்ப படம். ஒரு தாய் தன் குடும்பத்திற்காக எப்படி போராடுகிறார் என்பதை அற்புதமாக சொல்லி இருக்கிறார்கள். இதற்காக இயக்குநர் முருகசாமியையும் இப்படத்தை துணிச்சலுடன் தயாரித்த தயாரிப்பாளர் அருண்குமாரையும் பாராட்டுகிறேன். இந்தத் திரைப்படம் குடிகாரர்களை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் கவர்ச்சி இல்லை, ஓரளவு அறிமுகமான நடிகர்களை வைத்து இயற்கையாக உருவாக்கியிருக்கிறார்கள். குடியினால் என்ன கொடுமை நடைபெறுகிறது என்பதை அற்புதமாக சொல்லி இருக்கிறார்கள். 

நான் தமிழக முதல்வருடனும், திருமாவுடனும் நெருக்கமாகத் தான் இருக்கிறேன். ஆனால் இந்த மது விஷயத்தில் சற்று விலகியே இருக்கிறேன். குடி பல குடும்பங்களை கெடுத்திருக்கிறது. பல குடும்பங்கள் பலியாகி இருக்கிறது. அதனால் குடியை தமிழகத்திலிருந்து மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இதற்கு தடை விதிக்க வேண்டும். 

தற்போதுள்ள சூழலில் 20 முதல் 25 சதவீத பெண்களும் குடிக்க தொடங்கி இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் நாடு மிகவும் மோசமாக சென்று கொண்டிருக்கிறது. அதனால் தமிழக முதல்வரை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். ஏதேனும் ஒரு வழியில் மதுவை ஒழிக்க வேண்டும். இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன. ஆனால் என்னை பொருத்தவரை இந்த படத்திற்கு இத்தனை பாடல்கள் தேவை இல்லை. திரையரங்கத்தில் பாடல் காட்சிகளை ரசிகர்கள் விரும்பி பார்ப்பதில்லை. ஆனால் இந்த பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. கருத்துள்ள பாடல் இருக்கிறது, மது ஒழிப்பை பற்றி பேசுகிறது, மதுவால் தாய்மார்கள் படும் வேதனையை பேசுகிறது. இதனால் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதை பெருமிதமாக கருதுகிறேன். இப்படம் வெற்றி பெற வேண்டும். படத்திற்கு முதலீடு செய்த பணம் தயாரிப்பாளருக்கு திரும்ப கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். இதற்கு தமிழ் ரசிகர்களும், ஊடகங்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.முன்னணி நடிகர்கள் திரைப்படத்திற்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என தயாரிப்பாளர்களிடத்திலும் , இயக்குநர்களிடத்திலும் பரிந்துரைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.

இயக்குநர் ப.முருகசாமி பேசுகையில், ''இயக்குநர் பாலாஜி சக்திவேலிடம் உதவியாளராக பணியாற்றும் போது தான் கார்ல் மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரை பற்றி வாசித்தேன். அதன் மூலமாக பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். அதன் பிறகு கூகை திரைப்பட இயக்கத்தில் இணைந்து கொண்டு திரைப்படக் கல்வியைக் கற்றேன். அதைவிட முக்கியமான அரசியல் கல்வியையும் கற்றேன். எளிய மக்களின் வாழ்வியலையும் அங்கு தான் கற்றுக் கொண்டேன். அதன் மூலமாகத்தான் நல்லதொரு படைப்பை உருவாக்க முடிந்தது. இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், உதவி இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

நான் கார்ல் மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர், பெரியார் ஆகியோரை பார்க்கவில்லை. இந்த மூவரும் ஒன்றாக இருக்கும் எழுச்சித் தமிழர் தொல் திருமாவை பார்க்கிறேன். சிறிய வயதிலிருந்து அவருடைய போராட்டத்தையும், பேச்சையும் கேட்டு பார்த்து வளர்ந்தவன். பா ரஞ்சித்தைப் பார்த்தும் வளர்ந்திருக்கிறேன்,'' என்றார். 

இசையமைப்பாளர் ஜூஸ்மித் பேசுகையில், ''முதலில் என்னுடைய பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கல்லூரி படிப்பை முடித்த பிறகு, நான் இசைத்துறையில் பயணிக்க விரும்புகிறேன் என்ற என் விருப்பத்தை தெரிவித்ததிலிருந்து இதுவரை எதையும் அவர்கள் கேட்டதில்லை.  இதனைத் தொடர்ந்து இப்படத்தின் தயாரிப்பாளரான அருண்குமாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த பத்து ஆண்டுகளாக அவருடன் பேசிக் கொண்டிருக்கிறேன். அவர் ஒவ்வொரு முறை தொலைபேசி மூலம் பேசும்போது நலம் விசாரித்து நான் படம் தயாரித்தால் நீ தான் இசையமைப்பாளர் என உற்சாகப்படுத்துவார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தயாரிப்பாளரானதும் அழைப்பு விடுத்து இப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பையும் வழங்கினார். 

சினிமாவில் இருந்து தோல்வி அடைந்தவர்களை விட, சினிமாவை விட்டுவிட்டு சென்று தோல்வி அடைந்தவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். என்னை சினிமாவில் அழைத்து வந்தவர்கள் யாரும் தற்போது என்னுடன் இல்லை. அவர்கள் சினிமாவிலும் இல்லை. வேறு துறைக்கு சென்று விட்டார்கள். இந்தத் தருணத்தில் தயாரிப்பாளர் அருண்குமார் மட்டுமே எனக்கு நம்பிக்கை அளித்து வாய்ப்பளித்தார். 

இப்படத்திற்கு இசையமைக்கும் அனுபவம் வித்தியாசமாக இருந்தது. மறக்க முடியாததாகவும் இருந்தது. இயக்குநர் முருகசாமி,'குயிலி' கமர்ஷியல் திரைப்படம் அல்ல,vகருத்து சொல்லும் படம். அதற்கேற்ற வகையில் இசையமைக்க வேண்டும் என சொன்னார். அதன் பிறகு நான் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் அவருக்கு பிடித்தது. இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன. ஐந்து பாடல்களும் மதுவை குடிக்காதே என்பதை சொல்லும் விதமாகத்தான் இருக்கும். இந்தப் படத்தின் பாடல்களை நான்கு புதுமுக பாடகர்கள் பாடி இருக்கிறார்கள்,'' என்றார். 

இயக்குநர் ஸ்ரீஜர் பேசுகையில், ''சினிமாவும் அரசியலும் ஆண்டாண்டு காலமாக இணைந்து பயணித்துக் கொண்டிருக்கின்றன. சமீப காலமாக சினிமாவில் அரசியல் பேசு பொருளாக மாறி இருக்கிறது. 'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் , கலாச்சாரத்தையும் பேசும் என நம்புகிறேன். இந்த திரைப்படத்தில் குடிக்கு அடிமையானவர்களைப் பற்றி ஒரு பாடம் எடுத்திருக்கிறார்கள். தாய்ப்பாசத்தை மிக அழகாக சித்தரித்திருக்கிறார்கள். 

இந்த விழாவின் நாயகனான ஜூ ஸ்மித் பத்து ஆண்டுகளுக்கு முன் என்னால் அடையாளம் காணப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டவர். இந்தத் திரைப்படத்தில் நிறைய பாடல்கள் இருக்கின்றன என்று நினைக்கிறேன். இதுபோன்ற படங்களுக்கு இரண்டு பாடல்களே போதுமானது. பரபரப்பான இந்த வாழ்க்கை சூழலில் சினிமாவையே ஒன்றரை மணி நேரமாக சுருக்கி விட்டோம். இதுவே போதும் என்றும் நினைக்கிறோம். 'குயிலி' திரைப்படம் நல்ல கலாச்சாரத்தையும், நல்ல பண்பாட்டையும் போதிக்கும் படமாக இருக்கிறது. வலியை பதிவு செய்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. படத்தின் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும், படக் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்"'' என்றார். 

இயக்குநர் பாலாஜி சக்திவேல் பேசுகையில், ''எல்லோருக்குமான தலைவர் தொல் திருமாவளவன் வாழ்க்கை வரலாறு சுயசரிதை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என விரும்புகிறேன். யாரேனும் இதற்கு முயற்சி செய்தால் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் நான் தயாராக இருக்கிறேன்.  இப்படத்தின் இயக்குநர் முருகசாமி, 'கல்லூரி' படத்தில் இருந்து என்னிடம் உதவியாளராக இருக்கிறார். அவர் ஒரு குறும்படத்தை இயக்கி என்னிடம் காண்பித்து அதன் பிறகு உதவியாளராக சேர்ந்தார். இன்று வரை என்னுடன் பயணிக்கிறார். அவர் ஒரு நடிகரும் கூட, இந்தப் படத்திலும் நடித்திருப்பார் என நினைக்கிறேன். 'பொன்னியின் செல்வன்', 'அசுரன்' ஆகிய படங்களில் நான் நடிக்கும் போது என்னுடன் வருகை தந்து அங்கு நடைபெறும் விஷயங்களை உள்வாங்கிக் கொள்வார். அதையெல்லாம் செய்த பிறகு தான் அவர் இந்த படத்தை உருவாக்கி இருப்பார் என நம்புகிறேன்.  

இயக்குநர் முருகசாமி மிக எளிமையான பின்புலம் கொண்டவர். மறைந்த நடிகர் மயில்சாமி உடன் இணைந்து ஏராளமான தொண்டுகளை செய்திருக்கிறார். எளிமையாக பழகக்கூடிய முருகசாமி இயக்குநராக உயர்ந்திருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் அருண்குமாரை மனதார பாராட்டுகிறேன். இந்தப் படத்தை எளிய மனிதர்களின் பார்வையில் இருந்து இயக்கியிருக்கிறார். அதில் வீரியம் இருக்கும். இதுதான் இப்படத்தின் பலம். இப்படத்தின் திரைக்கதையும் நன்றாக அமைத்து இருப்பார் என்று நம்புகிறேன். இந்தப் படம் வெற்றி பெற அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார். 

நடிகை லிசிஆண்டனி பேசுகையில், ''சுய விருப்பம், கடின உழைப்பு, விடாமுயற்சி, பொறுமை ஆகிய நான்கு விஷயங்கள் மீது நான் அதிக நம்பிக்கை வைத்திருப்பவள். இதைத்தான் நான் என் வாழ்க்கையில் தற்போது வரை கடைப்பிடித்து வருகிறேன். இந்த விஷயங்களை தயாரிப்பாளர் அருண்குமாரிடமும் நான் பார்த்தேன். இந்தப் படத்திற்கான அழைப்பு அவரிடம் இருந்து தான் எனக்கு முதலில் வந்தது. அவரே இப்படத்தின் கதையை என்னிடம் விவரித்தார். என் வாழ்க்கையில் முதல் முதலாக தயாரிப்பாளர் ஒருவர் கதையை அழகாக சொன்னது என்றால் அது இவர் தான். அந்த அனுபவம் மறக்க முடியாததாக இருந்தது. இந்த திரைப்படம் பேசும் விஷயமும் எனக்கு பிடித்திருந்தது. இந்தப் படத்திற்கு 'குயிலி' என்று தான் தலைப்பு இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் சொன்னேன். உடனே அவரும் சரி என்று ஒப்புக்கொண்டார். இந்தப் படம் வெற்றி பெறுவதற்கு ரசிகர்களும், ஊடகங்களும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில், ''சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பழங்குடி இன மக்கள் மீதான ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி இயக்கங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதால் இங்கு இந்நிகழ்ச்சிக்கு வர தாமதமானது. இப்படத்தின் பாடல் ஒன்றை மேடையிலேயே கேட்டேன். படம் எதைப் பற்றி வலியுறுத்துகிறது என்பதனை அண்ணன் ராஜனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். இந்த கால சூழலில் சமூக பொறுப்புடன் மதுவிற்கு எதிராக ஒரு திரைப்படம் எடுக்கும் துணிச்சல் இயக்குநர் முருகசாமிக்கும், தயாரிப்பாளர் அருண்குமாருக்கும் இருப்பதை பாராட்டுகிறேன். நெஞ்சார வாழ்த்துகிறேன். 

வணிக நோக்கில் திரைப்படங்களை தயாரிக்க வேண்டும், அதில் வெற்றி பெற வேண்டும், அதில் லாபம் பெற வேண்டும் என்று எண்ணாமல் சமூகப் பொறுப்புணர்வோடு மக்களுக்கு வழி காட்ட வேண்டும், இந்த குடியின் துன்பத்திலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும், விடுதலை பெற வேண்டும் என்ற வேட்கையுடன் இளைய தலைமுறையினர் இந்த படைப்பை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது, என்பதை விட பெருமை அளிக்கிறது. இந்த குழுவினரை பார்த்து பெருமிதம் கொள்கிறேன். அவர்களை ஆரத் தழுவி என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அண்மையில் மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு ஒன்றினை நாங்கள் நடத்தினோம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அது பேசு பொருளாகவும் மாறியது. கடும் விமர்சனங்களுக்கும் உள்ளானது. 

அண்ணன் ராஜன் பேசும்போது, 'தேசிய அளவில் மதுவை ஒழிக்க வேண்டும்' என்றும் , இது தொடர்பாக திருமாவளவன் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் அவர் பேசியிருக்க கூடும் என்றும் குறிப்பிட்டார். அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை. நான் மக்களவையில் இது குறித்து பேசி இருக்கிறேன். அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வியப்பளிக்கிறது. 

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நான் பேசிய போது குறிப்பிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இது தொடர்பாக அரசியல் ரீதியான விமர்சனத்தை முன் வைத்தார். நாம் அதை கடந்து சிந்திக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள நம் தேசத்து மக்கள் குடியினால் பாதிக்கப்படக்கூடாது என்ற பரந்துபட்ட பார்வை நமக்கு உண்டு. ஆகவே மது ஒழிப்பு கொள்கையை தேசிய கொள்கையாக இந்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நான் நீண்ட காலமாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். மகாத்மா காந்தியை நாம் தேசிய தலைவராக ஏற்றுக் கொள்கிறோம். அவருடைய திருவுருவ படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சடிக்கிறோம். அவருடைய கொள்கைகளில் முக்கியமானது மதுவிலக்கு. மகாத்மாவை தேசத் தந்தை என்று ஏற்றுக் கொண்டிருக்கும் நாம் அவருடைய உயிர் மூச்சான கொள்கையான மதுவிலக்கை பொருட்படுத்துவதில்லையே? 

இதனை மாநிலங்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்று ஒன்றிய அரசு கண்டும் காணாமல் இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்ல ஏனைய மாநில அரசுகளும் இதனை தங்களுடைய வருவாய்க்கான வழியாகத்தான் பார்க்கிறது. யார் கெட்டுப் போனால் என்ன ? என்ற அலட்சியப்போக்குத்தான் நீடிக்கிறது. இது தொடர்பான கவலை பல பத்தாண்டுகளாக எனக்கு இருக்கிறது. இதை பல மேடைகளில் பேசி இருக்கிறேன். பல மாநாடுகளில் தீர்மானங்களாக நிறைவேற்றி இருக்கிறோம். 

ன்றைக்கு மது மட்டுமல்ல கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களும் பகிரங்கமாக விற்பனை செய்யப்படுகிறன. நகர்ப்புறங்களில் மட்டுமே புழக்கத்தில் இருந்த போதைப் பொருள்கள்..தற்போது கிராமங்களிலும் ஊடுருவி இருக்கிறது.  இதற்காக ஒரு மாநாடு நடத்தி, அதில் இந்தியா முழுவதும் மது ஒழிப்பு தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும் என ஒன்றிய அரசினை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினோம். இது விமர்சனத்திற்கு உள்ளானது. அரசியல் ரீதியாகவும் விமர்சிக்கப்பட்டது. 

இந்தியா முழுவதும் மது ஒழிக்கப்பட வேண்டும் போதைப் பொருள்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் மட்டுமில்லை ஏராளமான இளைய தலைமுறையினரும் குடிப் பழக்கத்திற்கு ஆளாகி தங்களது வாழ்க்கையை பாழாக்கி கொள்கிறார்கள். குடும்பம் நடத்துவதற்கான ஆளுமையையே இழந்து விடுகிறார்கள். ஏதோ பெயரளவில் தாம்பத்திய உறவை கொண்டு, இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களை பராமரிக்கவும்... பாதுகாக்கவும்,.படிக்க வைக்கவும், எதிர்காலத்தை நல்ல முறையில் உருவாக்கவும், பொறுப்புணர்வு கொண்ட ஆளுமையாக அவர்கள் இல்லை. நிற்க முடியாமல் தடுமாறுகிறார்கள். அதிகாலையில் இருந்து படுக்கைக்கு செல்லும் வரை போதையில் மிதக்கிறார்கள். அவ்வளவு குடும்ப பாரத்தையும் மனைவி சுமக்கிறாள். அது எவ்வளவு கொடிய துயரம் என்பதை களத்தில் நேரடியாக சென்று சந்தித்தால்தான் உணர முடியும். 

இந்த நாட்டை பீடித்திருக்கின்ற பேரவலங்களுள் இதுவும் ஒன்று. இந்தப் படத்தில் இடம்பெற்ற முதல் பாட்டை கேட்டேன். இந்த அவலங்களை எல்லாம் வரிகளாக ஆக்கியிருக்கிறார்கள். இந்தப் பாடல் நம் நெஞ்சை ஆழமாக தொடுகிறது. மிக மிக இன்றியமையாத ஒரு பாடல். எல்லா கிராமங்களிலும் கட்டாயமாக ஒலிக்க வேண்டிய பாடல். எல்லோரும் தங்களுடைய அலைபேசியில் வைத்திருக்க வேண்டிய பாடல். விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய பாடல். இசையும் மிகச் சிறப்பாக இருக்கிறது. வேட்டவலம் த. ராமமூர்த்தி இப்பாடலை எழுதியிருக்கிறார். அவருக்கும் என் பாராட்டுக்கள்.

இந்த விஷயத்தில் நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. இதில் அரசியலை நுழைத்து மதிப்பீடு செய்ய வேண்டியதில்லை. தமிழக முதலமைச்சரிடத்தில் இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் பேசும் போது அவருக்கும் இது தொடர்பான கவலை இருக்கிறது.‌ ஆனால் இது ஒரு சமூக கட்டமைப்பு, சிஸ்டம். அரசு அரசு சார்ந்த கட்டமைப்புகள் சில தருணங்களில் நம்முடைய விருப்பங்களை மீறி இயங்கக் கூடியவையாக அமைந்து விடுகின்றன.‌ 

மக்களிடத்தில் பரந்துபட்ட அளவில் இதற்கான விழிப்புணர்வு தேவை. இன்று மதக் கலவரங்களும், வன்கொடுமைகளும் அதிகரிப்பதன் பின்னணியில் மதுவும் ஒரு காரணம் என்பதை நாம் காண முடிகிறது. 'குயிலி' படத்தால் என்ன சாதிக்க முடியும் என்று கருதாமல் விழிப்புணர்வை இன்னும் விரிவுபடுத்திக் கொண்டே செல்ல வேண்டும். சில இளைஞர்களையாவது இத்தகைய பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும். துயரத்திற்கு ஆளாகாமல் தடுக்க முடியும். இளம் தலைமுறையினரை பாதுகாக்க முடியும். 

மதுக்கடைகளை மூடும் வரை ஒவ்வொரு மருத்துவமனையிலும் போதை மறுவாழ்வு மையம் இடம்பெற வேண்டும், இது என்னுடைய கோரிக்கை. இதனை தமிழக முதலமைச்சரிடமும் தெரிவித்து இருக்கிறேன். அனைத்து மருத்துவமனைகளிலும் உளவியல் ஆலோசனை மையம் இடம்பெற வேண்டும். இதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும்.  

மதுப்பழக்கம் ஒரு தனி மனிதனை மட்டும் பாதிப்பதில்லை. சமூகத்தையே பாதிக்கிறது.‌ எனவே மது மற்றும் போதைப்பொருள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். பிறகு முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்,' என்றார். 

பாடலாசிரியர் வேட்டவலம் த.ராமமூர்த்தி பேசுகையில், ''நான் இந்தப் படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறேன். இதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி. மதுவால் ஏற்படும் பிரச்சனை என்ன என்பது அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சொல்லும்போது தான் பொருத்தமாக இருக்கும். ஒரு சில தருணங்களில் உண்மையை சொல்லலாம். அது அனைவருக்கும் பயன்படும் நானும் மது பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீண்டு இப்படத்தின் பாடல்களை எழுதி இருக்கிறேன். இதற்கு உறுதுணையாக என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் இருந்தனர் மதுவை தொடாதீர்கள். தொட்டாலும் அதனை விட்டு விடுங்கள். அப்போதுதான் உங்களிடம் மகிழ்ச்சி இருக்கும்,'' என்றார்.

”உம்மா தர்ரேன்...” பாடல் மூலம் பிரலமான 'ராஜபுத்திரன்' கே.எம்.சபி!




சினிமா என்ற கடலில் முத்தெடுப்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே என்றாலும், அந்த ஒரு சிலர் மக்களின் கவனத்தை சட்டென்று தன் பக்கம் திருப்பும் வல்லமை படைத்தவர்களாக இருப்பார்கள். விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்றவர்கள் இதற்கு சான்று. தற்போது இவர்களின் வரிசையில் நம்பிக்கை நட்சத்திரமாக ஒரு பாடல் மூலமாகவே தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்திருக்கிறார் இளைஞர் கே.எம்.சபி.

‘ராஜபுத்திரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இளம் தயாரிப்பாளராக 21 வயதில் அறிமுகமாகியிருக்கும் கே.எம்.சபி, அப்படத்தில் இடம்பெற்றுள்ள “உம்மா தர்ரேன்...” என்ற பாடலுக்கு நடனம் ஆடியிருப்பதோடு, சில காட்சிகளில் நடிக்கவும் செய்திருக்கிறார். துள்ளல் நடனம், கவர்ந்திழுக்கும் உடல் மொழி மற்றும் எக்ஸ்பிரஷன்ஸ் மூலம் அந்த ஒற்றை பாட்டில் ரசிகர்களை கவர்ந்திருக்கும் கே.எம்.சபி , “யார் அந்த இளைஞர் ?” என்று படம் பார்ப்பவர்களை கேட்க வைத்திருக்கிறார்.

கடந்த மே 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ராஜபுத்திரன்’ திரைப்படம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர் பாடியிருக்கும்  ”உம்மா தர்ரேன்...” என்ற பாடலும், அந்த பாடலில் நடனம் ஆடியிருக்கும் கே.எம்.சபியும் பிரபலமடைந்திருக்கிறார்கள். சபி எதிர்பார்க்காத வரவேற்பு அவருக்கு கிடைத்திருப்பதால், அடுத்தக்கட்டமாக விரைவில் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாக திட்டமிட்டுள்ளார்.

நடனம், ஆக்‌ஷன், நடிப்பு என அனைத்திலும் முறையாக பயிற்சி பெற்றுள்ள கே.எம்.சபி, நாயகனாக தமிழ் சினிமாவில் நிச்சயம் தனக்கென்று தனி இடத்தை பிடிப்பார், என்று அவரது அந்த ஒரு பாடல் காட்சியை பார்த்தே பிரபலங்கள் பலர் பாராட்டி வருகிறார்கள். ஒரு பக்கம் தயாரிப்பாளராக தரமான படத்தை தயாரித்த மகிழ்ச்சியில் இருக்கும் சபி, மற்றொரு பக்கம் நடிகராக வெற்றி பெறுவார் என்ற பிரபலங்களின் நம்பிக்கை வார்த்தையால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இளம் தயாரிப்பாளராக அறிமுகமாகி இளம் நடிகராக கே.சபி கவனம் ஈர்த்தது போல், அவரது தந்தையும் படத்தின் இணை தயாரிப்பாளருமான கே.கோதர்ஷா சில காட்சிகளில் நடித்து குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கு பொருத்தமானவர், என்று பாராட்டு பெற்றிருக்கிறார். 

பிரபு மற்றும் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ராஜபுத்திரன்’ படத்தில் கிருஷ்ணபிரியா நாயகியாக நடித்திருக்கிறார். வில்லனாக கோமல் குமார் நடித்திருக்கிறார். இவர்களுடன் மன்சூர் அலிகான், ஆர்.வி.உதயகுமார், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, தங்கதுரை உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

கிரசண்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே.எம்.சபி தயாரித்திருக்கும் இப்படத்தின் இணை தயாரிப்பை கே.கோதர்ஷா மற்றும் டி.பாரூக்கு கவனித்துள்ளனர். மகா கந்தன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஆலிவர் டெனி ஒளிப்பதிவு செய்துள்ளார். எஐஎஸ்.நெளஃபல் ராஜா இசையமைத்துள்ளார். வைரமுத்து மற்றும் மோகன் ராஜன் பாடல்கள் எழுத, ஐயப்பன் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். சண்டைக்காட்சிகளை ராகேஷ் ராக்கி வடிவமைத்திருகிறார்.

நல்ல படம் எடுத்தும் போதிய திரையரங்குகள் கிடைக்காமல் போனது படக்குழுவை சற்று வருத்தமடைய செய்தாலும், வெளியான இடங்களில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதும், படத்தை பார்ப்பவர்கள், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘மாமன்’ போன்ற படங்கள் போல் ‘ராஜபுத்திரன்’ படமும் குடும்பத்தோடு பார்க்கும் படமாக இருப்பதாக பாராட்டி வருவதும், படக்குழுவினரை உற்சாகமடைய செய்திருக்கிறது.

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.