Latest Post

 ஃப்ரைடே விமர்சனம் 



அனிஷ் மசிலாமணி தயாரிப்பில் ஹரி வெங்கடேஷ் இயக்கத்தில் மைம் கோபி, KPY தீனா, சித்ரா சேனன், சித்து குமரேசன் ஆகியோர் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள படம் தான் 'ஃப்ரைடே'  

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:

மைம்கோபி ஒரு அரசியல் வாதி மற்றும் அதிகார பலம் கொண்ட ரவுடி. தனக்கு எதிரான ஒருவரை போட்டுத்தள்ளி எம்.எல்.ஏ சீட் வாங்கவேண்டும் என்பது அவர் டார்கெட். KPY தீனாவிற்கு தன் அம்மாவின் மரணத்திற்கு காரணமானவர்களை கொல்ல வேண்டும் என்பது இலக்கு. அனிஷ் மாசிலாமணிக்கு தன் தம்பியை கரை சேர்க்க வேண்டும் என்பது டார்கெட். அவரின் தம்பிக்கு அண்ணன் போல் சம்பவக்காரன் ஆகவேண்டும் என்பது குறிக்கோள். இவற்றை சுற்றி எண்ணலாம் நடந்தது? என்பதே கதை....

KPY தீனாவிற்கு இது முக்கியமான படம். தரமான கேரக்டரை உள்வாங்கி தரமாக நடித்துள்ளார். நாயகி சித்து குமரேசன் தேர்ந்த நடிப்பால் கவர்கிறார். ராமச்சந்திர துரைராஜ், கலையரசன், சித்ராசேனன் உள்பட எல்லோரும் கவனிக்க வைக்கிறார்கள். ரவுடியின் பிள்ளை போலீஸ், போலீஸின் பிள்ளை ரவுடி என்பது உள்பட திரைக்கதை ரைட்டிங்கில் நிறைய ட்விஸ்ட் வைத்து எழுதியுள்ளார் இயக்குநர் ஹரி வெங்கடேஷ்.

ஹீரோ அனிஷ் மாசிலாமணி, மைம் கோபி குழுவில் செயல்படும் அடியாளாகவும், தன் தம்பியை நல்ல பாதையில் நடத்த வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டவராகவும் படத்தில் தோன்றுகிறார். தம்பி, அண்ணனைப் போல ரவுடியாக வேண்டும் என்ற எண்ணம் கொண்டு வாழ்வதால், அவர்களின் கதைகளும் மற்ற கதாபாத்திரங்களின் நோக்கங்களும் ஒரே பாதையில் சந்திக்கும் விதமாக கதை அமைக்கப்பட்டுள்ளது.

கதையை இன்னும்  கொஞ்சம் தெளிவாக சொல்லியிருக்கலாம்... சில லாஜிக் மீறல்கள் உள்ளன.....

மொத்தத்தில் இந்த ஃப்ரைடே பாசத்தின் அதிரடி..... 

RATING 2.9/5



மாஸ்க் விமர்சனம் 




விக்ரனன் அசோக் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் 'மாஸ்க்' 

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:

சொந்தமாக டிடெக்டிவ் ஏஜென்சி வைத்திருப்பவர் வேலு. வாடிக்கையாளர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் அதே நேரத்தில் முடிந்தவரையில் அவர்களை தனது பொருளாதார தேவைகளுக்கு பயன்படுத்திக் கொண்டு பணம் ஒன்றே குறிக்கோளாக வாழ்கிறார். இன்னொரு பக்கம் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் பெண் குழந்தைகளை  வைத்து தொண்டு நிறுவனம் நடத்தி அவர்களை வேறுவிதமாக பயன்படுத்தி வருகிறார் பூமி. இவர்கள் இருவரின் பாதைகளும் ஒரு மிகப்பெரிய கொள்ளை சம்பவத்தின் மூலம் குறுக்கிடுகின்றன. கொள்ளை போன பணத்தை எப்படியாவது மீட்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர் இருவரும். கொள்ளையடிக்கப்பட்ட பணம் மீட்கப்பட்டதா? கொள்ளைக்கு காரணம் யார்? என்பதே மீதி கதை....

நாயகனாக நடித்திருக்கும் கவின், எதார்த்தமாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார். இவரது நடிப்பில் மற்றொரு நடிகரின் சாயல் தெரிகிறது. ஒரு சில இடங்களில் மட்டும் கவனிக்கும்படியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஆண்ட்ரியா, பார்வையிலேயே மிரட்டி இருக்கிறார். இவரது வில்லத்தனமான நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.

மற்றொரு நடிகை ஆக வரும் ருஹானி சர்மா அழகாக வந்து சென்று இருக்கிறார். அரசியல்வாதியாக நடித்திருக்கும் பவன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.சார்லி, ரமேஷ் திலக், கல்லூரி வினோத், அர்ச்சனா சந்தோக், ரெடின் கிங்ஸ்லீ ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. 

நெல்சனின் குரலில் பயணிக்கத் தொடங்கும் படம் அவரது பட பாணியிலேயே செல்கிறது. கதாபாத்திரங்களின் பண்புகள், அவர்களின் சுயநலமான நோக்கங்கள் ஆகியவற்றை ஆடியன்ஸுக்கு புரியவைப்பதற்காக வைக்கப்பட்ட காட்சிகள் நிமிர்ந்து உட்கார வைக்கும் ரகம்.  ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ஜி.வி. பிரகாஷ் பின்னணி இசையும் ஆர்.டி ராஜசேகரின் ஒளிப்பதிவும் கதையோடு பயணித்திருக்கிறது. ஆனால் 

காமெடியில் கூடுதல் கவனம் தேவை.... கதையை கொஞ்சம் லாஜிக்கோடு எடுத்திருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும்....  

மொத்தத்தில் இந்த 'மாஸ்க்' கணிக்கமுடியாத திருப்புமுனை.....

RATING: 3.9/5



சென்ட்ரல் அசோசியேஷன் ஆஃப் பிரைவேட் செக்யூரிட்டி இன்டஸ்ட்ரி (CAPSI) தனது 20வது தேசிய மாநாடு!



சென்னை

சென்ட்ரல் அசோசியேஷன் ஆஃப் பிரைவேட் செக்யூரிட்டி இன்டஸ்ட்ரி (CAPSI) தனது 20வது தேசிய மாநாட்டை 2025 நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் சென்னை ஐஐடி மத்ராஸ் ஆராய்ச்சி பூங்கா அரங்கில் சிறப்பாக நடத்தியது. 

இம்மாநாட்டில் பாதுகாப்பு, பாதுகாப்புத் தொழில்நுட்பம், நுண்ணறிவு, சட்ட அமலாக்கம், பாதுகாப்புத் துறை, தொழில்நுட்பம் மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற பல துறைகளிலிருந்து தலைசிறந்த நிபுணர்கள் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர்.நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து சுமார் 600 பிரதிநிதிகளும் ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகக் குற்றவியல் துறையைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்களும் கலந்து கொண்டனர். இதனால், இது CAPSI வரலாற்றில் மிகுந்த தாக்கம் செலுத்திய மாநடாக அமைந்தது. 

மாநாட்டின் தலைமை விருந்தினராக தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு திரு. சி.வி. கணேசன் கலந்து கொண்டார். 

அவரை CAPSI-யின் தேசிய தலைவர் திரு. குன்வர் விக்ரம் சிங் மற்றும் CAPSI-யின் தமிழ்நாடு பிரிவு தலைவர் திரு. நெவில் ரயன் வரவேற்றார். தன் வரவேற்பு உரையில் திரு. நெவில் ரயன், “நாடு முழுவதும் பாதுகாப்புத் துறை பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு மற்றும் நிறுவன நிலைத்தன்மையில் அவசியமான பங்கை வகிக்கிறது என்பதை வலியுறுத்தினார்”. 



CAPSI மற்றும் APDI தலைவர் திரு. குன்வர் விக்ரம் சிங் தனத்து முக்கிய உரையில் “பாதுகாப்புத் துறை தொடர்ந்து தொழில்நுட்ப வளர்ச்சியையும் மேம்பட்ட பயிற்சிகளையும் ஒருங்கிணைந்த தரநிலைகளையும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டினார்.” 

மாண்புமிகு அமைச்சர் சி.வி. கணேசன் தன் உரையில் CAPSI-யின் பல ஆண்டுகால பங்களிப்புகளை பாராட்டி, தனியார் பாதுகாப்புத் துறை நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு ஆற்றுவதாக கூறினார். அவர், இந்தத் துறை பெரும் அளவிலான வேலைவாய்ப்பை உருவாக்குவதோடு, நாட்டின் GST வருவாயிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருவதாக குறிப்பிட்டார்.மேலும், COVID-19 காலத்தில் பாதுகாப்பு காவலர்கள் அவசர நிலைகளிலும் பணியாற்றியதை வீரத்தன்மையுடனும் தியாகத்துடனும் பாராட்டி, அவர்களுக்கு மேம்பட்ட நலத்திட்டங்களை உருவாக்க மாண்புமிகு முதல்வருடன் ஆலோசிப்பதாக கூறினார். அமைச்சரின் உறுதி மாநாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மாநாட்டின் முக்கிய நிகழ்வுகளில் ‘DigiSuraksha’ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்பட்டது, ‘CAPSI Connect’ செயலி அறிமுகம் செய்யப்பட்டது, சிறந்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 


மேலும், பல துறைகளுக்கிடையே நெட்வொர்க்கிங், இணை பணிகள் மற்றும் கருத்துப்பரிமாற்றங்கள் நடைபெற்றன. இரண்டாம் நாள் மாநாட்டில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் துறை இயக்குநர் டாக்டர் சீமா அகர்வால் ஐ.பி.எஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியபொது, “தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளில் முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இலவச தீயணைப்பு பயிற்சி வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.அவர் சிறந்த பாதுகாப்பு பணியாளர்களுக்கு ‘கோல்டன் கார்ட்’ விருதுகளை வழங்கினார்.” 

மாநாடு CAPSI மற்றும் ADPI பொதுச் செயலாளர் திரு. மகேஷ் சர்மா அவர்களின் நன்றி உரையுடன் நிறைவுற்றது. அவர் பேச்சாளர்கள், பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் மற்றும் ஒழுங்கமைப்பு குழுவினருக்கு நன்றியைத் தெரிவித்தார். 



"இந்திய பாதுகாப்புத் துறையில் புதுமை, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் மூலோபாய வலுப்படுத்தல்" குறித்து நிபுணர்கள் விவாதம் முதல் நாளில் உயர்தர தொழில்நுட்ப மற்றும் கருப்பொருள் அமர்வுகளுடன் ஆரம்பமானது. இந்திய பாதுகாப்புத் தொழில்துறை 2.0 – மாற்றங்கள் மற்றும் புதிய வாய்ப்புகள், உள்ளூர் பாதுகாப்பு மற்றும் தேசிய தயார்நிலை, தீ மற்றும் உயிர் பாதுகாப்பு முன்னேற்றங்கள், மின்னணு பாதுகாப்பு அபாயங்கள், தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் அவசரநிலை மேலாண்மை போன்ற தலைப்புகளில் நிபுணர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர். 

பாதுகாப்பு, காவல் துறை, தனியார் பாதுகாப்பு, மின்னணு நுண்ணறிவு மற்றும் தொழில்துறை வட்டார நிபுணர்கள் கலந்து கொண்டு, துறையின் தற்போதைய சூழல் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்து ஆழமான பார்வைகளை வெளிப்படுத்தினர். “புதுமையும் ஒழுங்குமுறையும் தான் துறையின் முன்னேற்றத்திற்கு அடித்தளம்” – குன்வர் விக்ரம் சிங் மாநாட்டின் இரண்டாம் நாள், லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) சோகின் சௌஹான் தலைமையில் நடைபெற்றது. CAPSI தலைவர் திரு குன்வர் விக்ரம் சிங் துறையில் “புதுமை, ஒழுங்குமுறை மற்றும் உலகளாவிய சிறந்த நடைமுறைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் உற்சாகமான உரையாற்றினார்.” அந்நாளில் நடைபெற்ற அமர்வுகள் பிராந்திய அமைதியின்மை மற்றும் குடிமக்கள் பாதுகாப்பு, கார்ப்பரேட் நுண்ணறிவு மற்றும் நிறுவன அபாயங்கள், பேரழிவுக்கான தயார்நிலை, ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் வான் பாதுகாப்பு, நவீன விசாரணைகளில் குற்றவியல் அறிவியல், போலி பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகிய துறைகளை மையமாகக் கொண்டு நடைபெற்றன.தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள் வழக்குக் கதைகள், தொழில்நுட்ப நுண்ணறிவு, மற்றும் கொள்கை வடிவமைப்பு பார்வைகளின் மூலம் விவாதங்களை செழுமைப்படுத்தினர். 

மேலும், CAPSI-யின் மூத்த உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட்டனர். Security sTar Agencies Rating (STAR) திட்டம் குறித்த விரிவான விளக்கங்கள், அமைப்பு மதிப்பீடுகள் மற்றும் மூலோபாயத் திட்டமிடல் அமர்வுகளும் நடைபெற்றன.

'ப்ரண்ட்ஸ்'  படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா






ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம்  24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B. வினோத் ஜெயின் வெளியீட்டில் மீண்டும் திரைக்கு வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் இப்படத்தை வெளியிடும் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் வினோத் ஜெயின், நடிகர் விஜய் சார்பில் தமிழக வெற்றி கழகத்தின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் இசிஆர் பி. சரவணன், சூர்யா சார்பில் அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத்தின் செயல் தலைவர் ஆர். ஏ. ராஜா, நடிகர் ரமேஷ் கண்ணா, இயக்குநர்கள் பேரரசு, கௌதம் ராஜ், பொன் குமரன், கணேஷ் பாபு, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 'ப்ரண்ட்ஸ்'  படத்தை விநியோகிக்கும் விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் வினோத் ஜெயின் பேசுகையில்,  

''நம் எல்லோருக்கும் நெருக்கமான படம் 'ப்ரண்ட்ஸ்'. ப்ரண்ட்ஸ் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது நட்பு, சிரிப்பு.  இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் போரடிக்காது.‌ தற்போது 4K தொழில்நுட்பத்தில் டால்பி அட்மாஸ் ஒலி அமைப்புடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தினை நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்க உதவிய அனைவருக்கும் நன்றி. இந்தப் படம் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.

திரு‌. ஷானு பேசுகையில், "ப்ரண்ட்ஸ்' திரைப்படத்தை நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கும் பணிகள் 70 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றது. தயாரிப்பாளர் அப்பச்சனிடம் பேசி, மறு வெளியீட்டிற்கான உரிமையை வாங்கினோம். அப்போதே அவர் இந்த திரைப்படத்தை மிகப் பெரிய அளவில் வெளியிட வேண்டும் என்று நிபந்தனை விதித்த பிறகே அனுமதி வழங்கினார். மிகப்பெரிய திறமை வாய்ந்த தொழில்நுட்ப குழுவிடம் இப்படத்தின் புதுப்பிப்பு பணிகளை வழங்கினோம். இந்தப் படத்திற்காக 5.1 - 7.1-  டால்பி அட்மாஸ் - என மூன்று வெர்ஷன்களில் ஒலிகளை மாற்றி அமைத்திருக்கிறோம்.‌ ஒவ்வொரு ஃபிரேமையும் டி ஐ (DI) செய்து, கலர் கரெக்ஷனையும் செய்திருக்கிறோம். ரசிகர்களுக்கு நல்லதொரு அனுபவத்தை மீண்டும் வழங்குவதற்காக கடினமாக உழைத்து இருக்கிறோம். இந்தப் படத்தை எந்த காலத்தில் பார்த்தாலும் ரசிகர்களுக்கு சிரிப்பு வரும்.‌

இந்தப் படத்தை மலையாளத்தில் உள்ளது போல் இல்லாமல் தமிழ் ரீமேக்கில் இரண்டு கதாபாத்திரங்களை இயக்குநர் சித்திக் புதிதாக இணைத்து இருப்பார். அதனால் மலையாளத்தில் வெளியான ப்ரண்ட்ஸ்' படத்திற்கும்,  தமிழில் வெளியான 'ப்ரண்ட்ஸ்' படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அதிலும் வடிவேலுவின் காமெடி அல்டிமேட்டாக இருக்கும். இந்தப் படம் 21ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும்,'' என்றார்.

இயக்குநர் கௌதம் ராஜ் பேசுகையில், "நான் பள்ளியில் படிக்கும் போது இந்த படத்தை பார்த்தேன்.‌ தற்போது இந்த படம் மீண்டும் வெளியாகிறது. டிரைலரை பார்க்கும்போது தொழில்நுட்ப ரீதியாக தரமிக்கதாக இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ஆனந்த குட்டன் அந்த காலகட்டத்தில் பாசில், சித்திக் போன்ற இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றியவர். அவருடைய லைட்டிங் குவாலிட்டி ஸ்பெஷலாக இருக்கும்.‌

இந்தப் படத்தை மீண்டும் தியேட்டருக்கு சென்று பார்க்கும் போது பல விஷயங்களை நினைவு படுத்தும். அந்த அளவிற்கு இந்த படம் ஒரு கல்ட் கிளாசிக் மூவி.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால், அந்த காலத்தில் சித்திக் தான் பான் இந்திய இயக்குநர். அவர் ஒரு கதையை மலையாளத்தில் எடுத்து வெற்றி பெற வைத்து, அதே கதையுடன் தமிழ், தெலுங்கு ,இந்தி என்று ஒவ்வொரு மொழியிலும் இயக்குவார். அதன் பிறகு மீண்டும் மலையாளத்தில் ஒரு கதையை இயக்குவார். அவரைப் போல் ஒரு ஸ்கிரிப்ட்டை காமெடி வெர்ஷனில் எழுதி இயக்கக்கூடிய இயக்குநர் தற்போது இல்லை.

விஜய்யின் கலை உலக பயணத்தில் 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் தான் கலெக்ஷன் கிங் ஆக அவரை உயர்த்தியது.

புதுக்கோட்டை அருகில் உள்ள அறந்தாங்கியில் தான் நான் இந்தப் படத்தை பார்த்தேன். எங்கள் ஊரில் இந்த படம் 40 நாட்கள் ஓடியது.

சூர்யாவையும் ஊர் முழுவதும் அறிமுகப்படுத்தி சென்றடைய வைத்த படமும் இந்தப் படம் தான்.

லெஜன்ட் இளையராஜாவின் பாடல்களை இப்போது கேட்டாலும் ஃபிரஷ்ஷாக இருக்கிறது.

இன்று வரை டிரெண்டில் இருக்கும் நேசமணி கதாபாத்திரம் இந்தப் படத்தில் இருக்கிறது. தற்போது வரை மீம்ஸ் கிரியேட்டர்கள் இப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளைத் தான் பயன்படுத்துகிறார்கள்.

இந்தப் படத்தை நீங்கள் தியேட்டருக்கு சென்று பார்க்கும் போது நிறைய நினைவுகளை மீண்டும் நினைவுபடுத்தும் என நம்புகிறேன். தற்போதுள்ள இளம் தலைமுறை ரசிகர்கள் இதை ஒதுக்குவார்கள், அதை ஒதுக்குவார்கள் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. அவர்கள் அனைத்தையும் ரசிக்கிறார்கள். இந்தப் படம் அவர்களுக்கு வேறு ஒரு அனுபவத்தை வழங்கும். இந்தக் குழுவினருக்கு வாழ்த்துகள்,'' என்றார்.

இயக்குநர் கணேஷ் பாபு பேசுகையில், "நான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன் என்பது பெருமிதமாக இருக்கிறது. இந்தப் படத்தில் விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா என நிறைய ஹீரோக்கள் உள்ளனர். படப்பிடிப்பு நடைபெறும் தருணத்தில் இவர்கள் அனைவருக்கும் இடையே ஒரு போட்டி இருக்கும்.  இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள குஷால் தாஸ் கார்டன் மற்றும் ஒய் எம் சி ஏ மைதானத்தில் தான் நடைபெற்றது. குஷால் தாஸ் கார்டன் என்பது சினிமாவிற்கு கோயில் போன்றது.  அவை எல்லாம் மறக்க முடியாத அனுபவங்கள்,'' என்றார்.

இயக்குநர் பொன் குமரன் பேசுகையில், "ஆண்பாவம் பொல்லாதது எனும் படத்தை அண்மையில் திரையரங்கம் ஒன்றில் குடும்பத்தினருடன் பார்த்தேன். பார்த்துவிட்டு வெளியே வரும்போது அங்கு 'ப்ரண்ட்ஸ்' படத்தின் விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்தது. என் மனைவி இந்த படம் எப்போது வருகிறது, என்று உற்சாகத்துடன் கேட்டார். இந்தப் படம் மீண்டும் வெளியாகிறது என்று சொன்னேன். அவருடைய உற்சாகம் காரணமாக இந்தப் படத்தை குடும்பத்துடன் அனைவரும் பார்ப்பார்கள் என்று நம்பிக்கை ஏற்பட்டது.

தற்போது கடந்த காலத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படங்கள் ரீ ரிலீஸ் செய்வது அதிகரித்து வருகிறது. இந்தப் படத்தை டெக்னிக்கலாக நல்ல குவாலிட்டியுடன் உருவாக்கி இருக்கிறார்கள். நாம் திரையரங்கத்திற்கு செல்லும் போது அதில் ஓடும் படங்கள் காட்சியாகவும், ஓசையாகவும் நல்லதொரு தரமான அனுபவத்தை கொடுத்தால் ரசிகர்கள் வரவேற்பார்கள். அது போன்றதொரு முயற்சியை மேற்கொண்ட தயாரிப்பாளர் வினோத் ஜெயின் மற்றும் அவரது குழுவினரை பாராட்டுகிறேன்.

நான் கன்னடத்தில் திரைப்படங்களை இயக்கி விட்டு தமிழில் இயக்குவதற்காக அவரை சந்தித்து ஒரு கதையை சொன்னேன். அப்போது அவர் மற்றொரு கதையை சொல்லி இந்த கதையை திரைப்படமாக உருவாக்கலாம் என சொன்னார். அந்த கதை மிகவும் அதிகம் செலவாகுமே என்று சொன்னதற்கு பரவாயில்லை என்று சொல்லி, தற்போது 'கோல்மால் ' என்ற பெயரில் படத்தை தயாரித்து வருகிறார். அதே அளவிற்கான நேரத்தையும், பொருளையும் செலவு செய்து 'ப்ரண்ட்ஸ்' படத்தை புதுப்பித்திருக்கிறார். தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு தரமான படத்தை தர வேண்டும் என்ற அவருடைய எண்ணம் உயர்வானது,'' என்றார்.

நடிகர் ரமேஷ் கண்ணா பேசுகையில், "இந்தப் படத்தின் இயக்குநர் சித்திக் அவர் எழுதிய வசனங்களை தவிர வேறு எந்த வசனங்களையும் நடிகர்கள் பேச அனுமதிக்க மாட்டார். நான் அவருடன் 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றி இருக்கிறேன். ஸ்கிரிப்டில் இருக்கும் டயலாக்கை தவிர வேறு ஒரு வசனத்தை நடிகர்கள் பேசினால் ஒப்புக்கொள்ள மாட்டார். இந்த படத்தில் இடம்பெற்ற 'ஆணியே புடுங்க வேணாம்' எனும் டயலாக் கோகுல கிருஷ்ணாவும், டைரக்டர் சித்திக் சாரும் எழுதிய டயலாக் தான்.

இந்தப் படத்தில் நான் பேசும் 'ஆடு நடந்தது... மாடு நடந்தது..' என்ற வசனம் மட்டும் தான் அவர் அனுமதித்த எக்ஸ்ட்ரா டயலாக். அதற்கும் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு இது ஒரு கல்ட் கிளாசிக் டயலாக் என நான் விளக்கம் சொன்ன பிறகு ஒப்புக்கொண்டார்.

ப்ரண்ட்ஸ் படப்பிடிப்பு நடந்த போது நானும், சூர்யாவும் கலகலப்பாக பழகினோம். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது அவரும், ஜோதிகாவும் காதலித்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நான் தூது சென்றிருக்கிறேன்.  

ப்ரண்ட்ஸ் படத்தை பொருத்தவரை இயக்குநர் ரசித்து ரசித்து உருவாக்கினார். அவர் ஒரு சிறந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர். அது போன்றதொரு சிறந்த இயக்குநர் தற்போது இல்லாதது நமக்கு மிகப்பெரிய இழப்புதான். நேசமணி அவர் உருவாக்கிய அற்புதமான கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தை மலையாளத்தில் சீனிவாசன் நடித்திருப்பார்.

இந்தப் படம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகிறது அதற்கு ஒரு ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறுகிறது என்றால் நமக்கெல்லாம் ஆண்டவனின் ஆசி இருக்கிறது என்றுதான் அர்த்தம்.  

நாங்கள் சினிமாவில் அறிமுகமாகும் போது எங்களுக்கு பிடித்த காமெடி படம் எது, என்று கேட்டால்.. நாங்கள் 'காதலிக்க நேரமில்லை', 'ஊட்டி வரை உறவு' ஆகிய படங்களை சொல்வோம். இந்தப் படங்களை எப்போது பார்த்தாலும் சிரிக்கலாம். அதேபோல் 'ப்ரண்ட்ஸ்' படத்தை எப்போது பார்த்தாலும் சிரிக்கலாம். இதனால் இந்த படம் ரீ ரிலீசிலும் மிகப்பெரிய வெற்றி பெறும்.

இந்தப் படத்தில் இடம்பெறும் கடிகாரம் உடையும் காட்சியை படமாக்கும் போது விஜய்யும், சூர்யாவும் சிரித்து விடுவார்கள். மீண்டும் அந்த காட்சியை படமாக்குவதற்கு அரை மணி நேரத்திற்கு மேலாகும். மீண்டும் படமாக்கும் போது 'ஐயோ நான் பிடிக்கலடா' என்ற டயலாக் சொல்லும்போது மீண்டும் விஜயும், சூர்யாவும் சிரித்து விடுவார்கள். படத்தை நீங்கள் உற்றுப்பார்த்தால் விஜயும், சூர்யாவும் திரும்பி நின்று கொண்டு சிரிப்பார்கள்.

விஜய் படப்பிடிப்புக்கு தளத்திற்கு வந்தால் அமைதியாக இருப்பார். ஆனால் நடிக்கும் போது அற்புதமாக நடித்து அசத்தி விடுவார். அது அவருக்கான கடவுள் கொடுத்த பரிசு. அதேபோல் டப்பிங்கிலும் அவர் நடித்த காட்சிகளை ஒரு முறை தான் பார்ப்பார். அதன் பிறகு எந்த ஒரு பிசிறு இல்லாமல் கச்சிதமாக பேசி விடுவார். எனக்குத் தெரிந்தவரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் இது போல் அவர் நடித்த காட்சிகளை ஒரு முறை பார்த்துவிட்டு டப்பிங்கில்  முதல் முறையிலேயே கச்சிதமாக பேசி விடுவார். அந்த வகையில் விஜய் அற்புதமான நடிகர் மற்றும் அற்புதமான டப்பிங் ஆர்ட்டிஸ்ட். அதே போல் படப்பிடிப்பு தளங்களில் ஹீரோ என்ற பந்தா எதுவும் இல்லாமல் எங்களுடன் சகஜமாக பழகுவார்.

இந்தப் படத்தில் தேவயானி கதாபாத்திரத்திற்காக முதலில் ஜோதிகாவிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் பிறகு சிம்ரனிடம் பேசினார்கள். இறுதியில் தேவயானி தான் நடித்தார்.‌ அப்போது அவருக்கு ஒரு அதிர்ஷ்டம் இருந்தது. 'காதல் கோட்டை' படத்திலிருந்து அவர் நடித்த எல்லா படங்களும் வெற்றி.‌ அவர் சார்பாகவும் வாழ்த்து தெரிவிக்கிறேன்,'' என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், "ரமேஷ் கண்ணாவை பற்றிய பல ரகசியங்கள் இப்போதுதான் தெரிகிறது. படப்பிடிப்பு தளத்திற்கு சென்று நடிக்காமல் பல வேலைகளையும் பார்த்திருக்கிறார். சூர்யா-  ஜோதிகா காதலுக்கு உதவி இருக்கிறார்.

சூர்யா- விஜய் இருவரும் முதலில் 'நேருக்கு நேர்' படத்தில் நடித்தார்கள். அதில் இருவரும் எதிரும் புதிருமாக இருப்பார்கள். இந்தப் படத்தில் இணைபிரியாத நண்பர்கள்.‌ இந்தப் படத்தை நான் கல்லூரியில் படிக்கும் போது பார்த்தேன்.‌

விஜய் நடித்த 'காதலுக்கு மரியாதை', 'துள்ளாத மனமும் துள்ளும்', சூர்யா நடித்த 'நந்தா' என எந்த படத்தை பற்றி பேசினாலும்.. அப்படத்தின் கதை நினைவுக்கு வரும். ஆனால் 'ப்ரண்ட்ஸ்' படத்தை பற்றி பேசும்போது அதன் கதை நினைவுக்கு வராது. அதில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் தான் நினைவுக்கு வரும்.

என்னை பொருத்தவரை சித்திக் மிகப்பெரும் இயக்குநர். ஆக்ஷன் படத்தை இயக்கலாம், லவ் சப்ஜெக்ட்டை இயக்கலாம், சென்டிமென்ட் படத்தை எடுத்து, மக்களை அழ வைத்துவிடலாம், ஆனால் காமெடி படத்தை இயக்குவது என்பது கடினம்.‌ ஏனெனில் காமெடி படத்திற்கு டைமிங் ரொம்ப முக்கியம்.‌ 'ப்ரண்ட்ஸ்' படத்தில் காமெடி காட்சிகளில் ஐந்து, ஆறு நடிகர்கள் இருப்பார்கள். அனைவரும் டைமிங் உடன் நடித்து ரசிகர்களை சிரிக்க வைப்பார்கள்.

இந்தப் படத்தில் யார் ஹீரோ என்று தெரியாது. விஜயா, சூர்யாவா, வடிவேலா, ரமேஷ் கண்ணாவா என தெரியாது. இவர்கள் எல்லாரும் ஒவ்வொரு காட்சியிலும் தங்களது திறமையை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

மலையாள இயக்குநர்கள் மிகவும் நேர்த்தியானவர்கள். திரைக்கதையில் என்ன இருக்கிறதோ அதை மட்டுமே படமாக்குவார்கள். நான் மலையாள திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறேன்.  

இந்தப் படத்திற்குப் பிறகு நேசமணி என்பது ட்ரெண்ட் ஆகிவிட்டது.

நான் 'திருப்பாச்சி' படத்தில் பணியாற்றும்போது விஜய் மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோவாக வளர்ந்து விட்டார்.‌ அந்தப் படத்தின் கதையை அவரிடம் சொல்லும்போது ஆடு வெட்டும் காட்சியில் பெஞ்சமினை வைத்து தான் கதை சொன்னேன். ஏனெனில் அவர் காமெடியன். அதனால் காட்சியை அப்படி உருவாக்கினேன். படப்பிடிப்புக்கு செல்லும் முன் மீண்டும் விஜயிடம் படத்தின் கதையை முழுவதுமாக சொன்னேன். அப்போது அவர் தயக்கத்துடன் அந்த ஆடு வெட்டும் காட்சியில் நான் நடித்தால் நன்றாக இருக்குமா எனக் கேட்டார். அந்தக் காட்சியில் அவரை நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்கனவே இருந்தது. ஆனால் அவர் ஆக்ஷன் ஹீரோவாக மாறிவிட்டதால் அந்த காட்சி அவருக்கு பொருத்தமானதாக இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது. அவர் கேட்டவுடன் 'ஓகே சார் நீங்கள் நடிக்கலாம்' என்று சொல்லிவிட்டேன். விஜய் இன்று மிகப்பெரிய கமர்ஷியல் ஹீரோவாக முன்னேறி விட்டாலும் அவருக்குள் ஒரு அற்புதமான காமெடி சென்ஸ் இருக்கிறது. என்னுடைய 'திருப்பாச்சி', 'சிவகாசி' ஆகிய இரண்டு படங்களிலும் முதல் பாதி காமெடியாக தான் இருக்கும்.  

ஒரு நடிகருக்கு காமெடி சென்ஸ் இருந்தால் அவர் மிகப்பெரிய ஹீரோவாக வளர்ந்து விடுவார். அப்போதுதான் நீண்ட காலத்திற்கு திரை உலகில் நட்சத்திரமாக வளர முடியும். சூர்யாவும் 'பிதாமகன்' படத்தில் காமெடியில் கலக்கி இருப்பார்.

தற்போதுள்ள சூழலில் புதிய படங்களை வெளியிடுவதில் சவால்கள் உள்ளது. இந்நிலையில் ஒரு படத்தை ரீ ரிலிஸ் செய்வது மிகப்பெரிய விஷயம். ரீ ரிலீஸ் செய்கிறார்கள் என்றால் அதற்கான தகுதி இருக்க வேண்டும். அதற்கான தகுதி இந்த 'ப்ரண்ட்ஸ்' படத்திற்கு இருக்கிறது.  தினமும் வெளியாகும் குண்டு வெடிப்பு, வன்முறை, உயிர் பலி போன்ற செய்திகளால் மக்கள் மனதளவில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மிகப்பெரிய ரிலீஃபாக இந்த 'ப்ரண்ட்ஸ்' படம் அமையும். அதனால் இந்தப் படம் வெளியாகும் போது எந்த அளவிற்கு வெற்றியை பெற்றதோ, அதே அளவிற்கு இந்த படம் மீண்டும் வெளியாகும் போதும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,'' என்றார்.

“யெல்லோ” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா! 




Covai Film Factory சார்பில் பிரசாந்த் ரங்கசாமி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரி மகாதேவன் இயக்கத்தில், வைபவ், பூர்ணிமா ரவி நடிப்பில், மாறுபட்ட களத்தில், உருவாகியிருக்கும் திரைப்படம்  “யெல்லோ” ( Yellow). 

 
பெண்  கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக அனைவரையும் ஈர்க்கும் வகையில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 
 
இந்நிகழ்வினில்.., 
 
ஒளிப்பதிவாளர் அபி ஆத்விக் பேசியதாவது.., 
இது என்னுடைய முதல் படம். இந்தப் படம் இங்கு வரக்காரணம் தயாரிப்பாளர்பிரசாந்த் தான். தயாரிப்பாளராக முழு ஆதரவாக இருந்து, இப்படத்தைத் தயாரித்துள்ளார். நடிகை பூர்ணிமாவை 8 ஆண்டுகளாகத் தெரியும் அவர் முதன் முதலில் நடித்த குறும்படத்திற்கு நான் தான் கேமராமேன், இப்போது அவரது முதல் படத்திற்கு நான் கேமராமேன் என்பது மகிழ்ச்சி. நவம்பர் 21 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது அனைவரும் ஆதரவு தாருங்கள். 
 
எடிட்டர் ஶ்ரீ வாட்சன் பேசியதாவது.., 
இப்படம் ஆரம்பித்து 2 வருடம் ஆகிவிட்டது. படக்குழு அனைவரும் ஒன்றாக இருந்து இப்படத்தைக் கொண்டு வந்துள்ளோம். ஹாட்ஸ்டாரில் ஒரு வெப் சீரிஸிற்காக, நானும் ஹரி பூர்ணிமாவை பார்க்க போனோம், அதிலிருந்து இப்போது படம் வரை வந்துள்ளோம். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 
 
கலை இயக்குநர் கார்த்திக் கிருஷ்ணன் பேசியதாவது.., 
இந்தப்படம் ஆரம்பித்த போது கொஞ்சம் நெர்வஸாக இருந்தது. கதை கேட்கும் போது மிகவும் ஊக்கம் தருவதாக இருந்தது. பயணம் தான் படம் என்பதால் பல இடங்களைத்  திரையில் சரியாகக் கொண்டு வர நிறைய உழைத்துள்ளோம். இப்படத்தில் உழைத்த அனைவரும் எல்லோரும் பெரிய அளவில் வந்து, பிஸியாக உழைக்க நான் சாபம் தருகிறேன். அனைவருக்கும் நன்றி. 
 
உடை வடிவமைப்பாளர் மீரா பேசியதாவது.., 
எனக்கு வாய்ப்புத் தந்த தயாரிப்பாளர், பூர்ணிமாவுக்கு நன்றி. சென்னைக்கு வந்து சாதித்த ஒரு இளம்பெண் பூர்ணிமா அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி. 
 
இசையமைப்பாளர் கிளிஃபி கிரிஷ் பேசியதாவது.., 
இது என் முதல் படம் எனக்கு வாய்ப்பு தந்த ஹரி பிரதருக்கு நன்றி. நான் இண்டிபெண்டன்ட் மியூசிக் ஆல்பம் பண்ணிக் கொண்டிருந்தேன் என்னைத் திரைத்துறைக்கு அழைத்து வந்ததற்கு நன்றி. பிரசாந்த் ப்ரோவுக்கு நன்றி. நான் இந்தப்படத்தில் நான்கு பாடல்கள் செய்துள்ளேன். பூர்ணிமாவுடன் நெருங்கிய நண்பராகிவிட்டேன். இந்தப்படம் கலர்ஃபுல் எண்டர்டெயினராக இருக்கும், அனைவருக்கும் நன்றி
 
இசையமைப்பாளர் ஆனந்த் காசிநாத் பேசியதாவது.., 
இது என் முதல் மேடை, தயாரிப்பாளர் பிரசாந்த் அண்ணா அவரை இன்று தான் நேரில் பார்க்கிறேன். என்னை நம்பி வாய்ப்பு தந்ததற்கு நன்றி. ஹரி அண்ணாவுடன் நாலைந்து வருடம் முன் ஆரம்பித்த நட்பு, இன்று வரை தொடர்கிறது. அவர் பெரும் உழைப்பில் இப்படத்தை உருவாக்கியுள்ளார். அபி ஆத்விக் விஷுவல் அற்புதமாக வந்துள்ளது. பாடல்கள் நன்றாக வந்துள்ளது. பாடலாசிரியர் மோகன்ராஜ் அண்ணாவிற்கும் சரண் குமாருக்கும் நன்றி. பூர்ணிமா  அக்காவுடன் ஒரு வெப் சீரிஸ் வேலைபார்த்துள்ளேன், அது  வளர்ந்து இன்று திரைக்கு வந்துள்ளது. வைபவ் நன்றாக நடித்துள்ளார். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. இது குழந்தைகள் ஃபேமிலி என எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 
 
பாடகர் அந்தோணி தாசன் பேசியதாவது.., 
இந்தப்படத்தில் எனக்கும் பாட வாய்ப்பு தந்த இசையமைப்பாளருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. யெல்லோ மஞ்சள் நிறம், மக்களை மகிழ்விக்கட்டும். திரையரங்கில் படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி. 
 
நடிகர் சாய் பிரசன்னா பேசியதாவது.., 
இந்தப்படம் ஆரம்பிக்கும்போது யாரையும் தெரியாது, ஆனால் இப்போது வா மச்சான் என பேசும் அளவு நெருக்கமாக ஆகிவிட்டோம். ஆரம்பத்தில் ஹரி அண்ணா கொரில்லா மேக்கிங்கில் கதை இல்லாமல் தோன்றுவதை எடுக்கலாம் என்றார், ஆனால் அதன்பிறகு  உட்கார்ந்து பேசி எழுதி, நிறைய உழைத்து, ஜாலியாகவே இந்தப்படத்தை எடுத்துள்ளோம். பூர்ணிமா சிறப்பாக நடித்துள்ளார் படம் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி. 
 
உத்ரா புரடக்சன்ஸ் உத்தாரா பேசியதாவது.., 
நவம்பர் 21 ஆம் தேதி உத்ரா புரடக்சன்ஸ் சார்பில் தமிழகமெங்கும் யெல்லோ திரையரங்கில் வெளியாகிறது. இப்படி ஒரு தரமான படத்தை வெளியிட என்னிடம் கொண்டு வந்த அஹமத் அவர்களுக்கு நன்றி. இந்தப்படம் எல்லோரையும் ஒரு டூர் கூட்டிப்போவது போல், எல்லோரையும் மகிழசிப்படுத்தும். இந்த காலத்தில் ஒரு படத்தை எடுத்து திரைக்குக் கொண்டு வருவது மிகப்பெரிய விசயம். இந்த குழுவில் அனைவரும் கடுமையாக உழைத்து, இப்படத்தை எடுத்துள்ளார்கள். மலையாளப்படம் போல் தமிழ்ப்படம் இல்லை என்பதைச் சொல்வதை மறந்து, இப்படத்தைப் பாருங்கள் அனைவருக்கும் பிடிக்கும்  நன்றி. 
 
நடிகர் வைபவ் முருகேசன் பேசியதாவது.., 
நான் பேட்டை படத்தில் பேக்ரவுண்ட் ஆர்டிஸ்டாக ஆரம்பித்து, வதந்தி முதல் பல படைப்புகளில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். இப்போது நான் நாயகனாக நடித்து யெல்லோ படம் திரைக்கு வருகிறது. பிரசாந்த் பிரதர் பல தடைகளைத் தாண்டி, இப்படத்தை முடித்து திரைக்குக் கொண்டு வந்துள்ளார். ஹரி பிரதர், இப்படம் ஒரு டிராவல் படம் என்பதால் பல இன்னல்கள் இருந்தது,  ஆனால் அதையெல்லாம் தாண்டி இப்படத்தை அருமையாக இயக்கியுள்ளார். பூர்ணிமா அவர் தான் இந்தப்படத்தின் மையமாக இருந்தார். அனைவரையும் ஒருங்கிணைத்தது அவர் தான். பாடல்கள் மிகச்சிறப்பாக வந்துள்ளது. ஒளிப்பதிவு அட்டகாசமாக இருக்கும். பிரபு சாலமன் எங்களை நம்பி, நாங்கள் கேட்டதால் ஒரு கதாப்பாத்திரம் நடித்துத் தந்துள்ளார். அவருக்கு நன்றி. இது என் முதல் படம் அனைவரும் படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி. 
 
நடிகர் லோகி பேசியதாவது.., 
எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர் ஹரி அண்ணாவுக்கு நன்றி. ஃபர்ஸ்ட் ப்ரேம் ஆசையாக நடிக்கத்  தயாராகி டயலாக் கேட்டேன்,  நீயே பேசுடா என்றார். இப்போது வரை படத்தில் நான் இருக்கிறேனா என்று சந்தேகமாக இருந்தது. ஆனால் படம் வேலை செய்தது மிக ஜாலியாக இருந்தது. படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 
 
இயக்குநர் ஹரி மகாதேவன் பேசியதாவது.., 
தயாரிப்பாளர் பிரசாந்த் அண்ணாவுக்கு நிறையக் கடமைப்பட்டுள்ளேன். பூர்ணிமா தான் அவரை அறிமுகப்படுத்தினார். கொரில்லா மேக்கிங் ஸ்டைலில் ஒரு கேமராவை எடுத்துக்கொண்டு பயணம் போவோம், என்ன கிடைக்கிறதோ அது தான் படம் என்றேன். இதைக்கேட்ட பிறகும் அவர் என்னை நிராகரிக்கவில்லை. என்னை முழுதாக நம்பினார். பின்னர் ஒரு திரைக்கதை முழுதாக எழுதி அவரிடம் காட்டினேன்.  நான் நினைத்ததை விடப் பெரிய அளவில் அவர் ஆதரவாக இருந்தார். அவர் கேமரா யூனிட் வைத்துள்ளார். அதை வித்து தான் இப்படத்தைத் தயாரித்துள்ளார். நான் கொரோனா காலத்தில் பல திரைக்கதை எழுதி, பலரைத் தொடர்பு கொண்டேன், அதில் ஒப்புக்கொண்டு நடித்தவர் பூர்ணிமா மட்டும் தான். அவருடன் ஒரு படம் செய்யலாம் என டிஸ்கஸ் செய்தது தான் இந்தப்படம். இந்தப்படத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் ஓய்வே இல்லாமல் இப்படத்தில் நடித்துத் தந்தார். வைபவ் பூர்ணிமா மூலமாக வந்தவர், சிறப்பாக நடித்துள்ளார். சாய் என்னுடைய நெருங்கிய நண்பர் இந்தப்படத்தில் அவர் நடித்ததைத் தாண்டி எல்லா டிபார்ட்மெண்டிலும் வேலை பார்த்துள்ளார் நன்றி. கிளிஃபி நானும் அவரும் டீக்கடையில் உட்கார்ந்து பலமுறை விவாதித்துள்ளோம். அவர் தந்த பாடல்களுக்கு நன்றி. ஆனந்த் என்னுடைய முகவரியான காத்தாடி பாடலை தந்தவன், அவனை நான் முழுதாக நம்புகிறேன். அபி இரவு பகல் பாராமல் கொஞ்சம் கூட சலித்துக் கொள்ளாமல் கேமரா செய்து தந்துள்ளார். புரடக்சனிலும் நிறைய உதவியாக இருந்தார். காஸ்ட்யூம் செய்து தந்த மீராவிற்கு நன்றி. நல்ல பாடல்கள் தந்த மோகன்ராஜ், ராஜேஷ் இருவருக்கும் நன்றி. ஹரி உத்தாரா பல புரடக்சன் கம்பெனி ஏறி இறங்கிய பிறகு, எங்களை நம்பி, எங்கள் படத்தைப் பார்த்து வெளியிடுவதற்கு நன்றி. என்னுடன் திரைக்கதையிலிருந்து முழுதாக சப்போர்ட்டாக இருந்த ஹரிஷ்மாவிற்கு  நன்றி. டெல்லிகணேஷ் சார் எங்களை நம்பி வந்து நடித்துத் தந்தார். அவர் எங்கள் படத்தில் நடித்தது பெருமை. இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். நன்றி. 
 
நடிகை பூர்ணிமா பேசியதாவது.., 
எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. இந்த விழா நேற்று வரை கனவாக இருந்தது. எஙகள் படத்தின் இசை விழா என்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. ஒரு படத்தின் வெற்றியாக நினைப்பது அடுத்தடுத்த வாய்ப்புகள், எக்ஸ்பீரியன்ஸ் பணம். ஆனால்  இந்தப்படத்தில் எங்கள் எல்லோருக்கும் பல பாடங்கள் கிடைத்தது. நிறையக் கற்றுக்கொண்டோம். பலருக்குப் பெரிய படத்தில் வேலை பார்க்க ஆசை இருக்கும், நாங்கள் எங்களுக்கான வாய்ப்பை உருவாக்கி உழைத்துள்ளோம். இப்படத்தில் எல்லோருமே சின்ன ஸ்கிரீனுக்கு உழைத்து, இப்போது பெரிய திரைக்கு வந்துள்ளோம். எங்கள் டீமை நினைத்து மிகவும் பெருமையாக உள்ளது. தயாரிப்பாளர் பிரசாந்த்திற்கு எங்கள் வளர்ச்சியில் நிறையப் பங்கு உள்ளது. மீடியா படத்தைப் பார்த்து நல்ல கருத்துக்களை எழுதுங்கள். படம் கண்டிப்பாகப் பிடிக்கும். இது கொரில்லா மேக்கிங், பல தடைகள் இருந்தாலும் முழு அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளோம். பிரசாந்த் அண்ணா உறுதுணையாக இருந்தார். என் நண்பர்கள் குடும்பத்திற்கு நன்றி. அனைவருக்கும் நன்றி. 
 
இந்த உலகம் அடுத்த நொடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம், அப்படியான ஆச்சரியங்கள் தான் இந்த படத்தின் மையம். மாறுபட்ட களத்தில் ஒரு அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் நாயகனாக வைபவ் நடித்துள்ளார். பூர்ணிமா ரவி முதன்மை பாத்திரத்தில் நாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் பிரபு சாலமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நமீதா கிருஷ்ணமூர்த்தி, சாய் பிரசன்னா, டெல்லி கணேசன், வினோதினி வைத்தியநாதன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
 
இப்படம் வரும் நவம்பர் 21 ஆம்தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது . உத்ரா புரடக்சன்ஸ் தமிழகமெங்கும் திரையரங்குகளில் இப்படத்தை  வெளியிடுகிறது.

ICL Fincorp's New NCD Issue Opens on 17th NOVEMBER 2025, Offering Effective Yield up to 12.62%



ICL Fincorp is proud to announce the launch of its latest public issue of Secured Redeemable Non-Convertible Debentures (NCDs), opening on 17th November 2025. With an effective yield of up to 12.62%, this offering presents an attractive and secure investment opportunity for those seeking flexible tenures. 

Following the remarkable response to our previous NCD issues, we are truly honored by the trust and confidence placed in us by our valued investors. This continued support inspires us to deliver even more robust financial solutions tailored to the evolving needs of our customers. 

The NCD issue will remain open until 28th November 2025 and is rated CRISIL BBB- /STABLE. Each NCD carries a face value of ₹1,000, and the issue offers ten options, with tenures of 13, 24, 36, 60 and 70 months, with monthly, annual and cumulative interest options with interest rates ranging from 10.50% to 12.62%. The minimum application amount is ₹10,000, making it accessible to a broad spectrum of investors. 

Proceeds from this issue will be strategically deployed to support ICL Fincorp’s growth initiatives and further enhance the quality of services offered to our customers and stakeholders across India. 

This step reaffirms our commitment to delivering reliable, innovative and customer-centric financial solutions. With a legacy of 34 years, ICL Fincorp continues to serve as a trusted financial partner under the visionary leadership of CMD, Adv. K.G. Anilkumar. Our growing presence spans 10 states – Kerala, Tamil Nadu, Andhra Pradesh, Telangana, Karnataka, Maharashtra, Odisha, Gujarat, West Bengal and Goa, as we move steadily towards establishing a pan-India footprint. The acquisition of Salem Erode Investments, a BSE-listed NBFC with a 93-year history in Tamil Nadu, has further reinforced our position in the financial sector.  ICL Fincorp offers a comprehensive portfolio of services, including Gold Loans, Hire Purchase Loans and Business Loans. The ICL Group has also diversified into sectors such as travel, fashion, diagnostics and charitable initiatives. 

Under the joint leadership of CMD Adv. K.G. Anil Kumar and Mrs. Umadevi Anilkumar, Wholetime Director & CEO, ICL Fincorp, continues to operate in compliance with the Reserve Bank of India’s standards, while earning the enduring trust of customers. 

As we unveil this new NCD issue, we warmly invite you to be a part of our journey towards financial growth, security and long-term value. To Know More: Visit Nearest ICL Fincorp Branch. To Download Application: Visit www.iclfincorp.com. For Enquiries: Call +91 85890 20137, +91 85890 20186 

CK Kumaravel Family’s Next Generation Launches NXTFACE; India’s First AI-Driven Gen Z Skincare Brand for “Second-Face” Transformation



Chennai: 

India’s Gen Z population is reshaping how beauty, identity, and technology intersect. Yet, while this generation contributes nearly 40 per cent of online beauty and personal-care purchases, there remains a significant gap in skincare designed around their biology, behaviour, and lifestyle. NXTFACE, India’s first AI-driven Gen Z skincare brand, officially launched today to empower the ‘second-face’ transition from adolescence to young adulthood. This defining stage in every young person’s life marks not just a physical change, but also a transformation in confidence, identity and self-expression.

Founded by Ms Dhamyanthi Kumaravel, a young second-generation entrepreneur from the family behind Naturals, India’s leading salon chain, NXTFACE marks the next chapter in India’s beauty revolution, driven by innovation and intelligence. Having personally experienced the post-teenage shift in her own skin, Dhamyanthi spent nearly two years travelling across countries, meeting scientists, and studying how hormones, stress, and environment affect young skin.On returning to India, she partnered with Connell R&D, a global leader with proven experience in developing state-of-the-art formulations backed by years of research and testing. This collaboration allows NXTFACE to create skincare that is suitable for Gen Z skin and smarter in performance, which is tailored specifically for Indian skin tones and climate.

Commenting on this launch, Ms Dhamyanthi Kumaravel, Founder-CEO of NXTFACE said:

“When I came back, I told my parents that the future of beauty won’t come from experience alone. It has to come from intelligence and an understanding of Gen Z. Our generation doesn’t need what our parents used; we need something that understands our transforming skin. NXTFACE does exactly that. It talks about change, not just glow or radiance. Your skin goes through another transformation as you step into young adulthood, and that’s your second face. NXTFACE was created to help our generation understand that phase, not fear it.”NXTFACE also introduces India’s first real-time, camera-activated AI skincare interface, where users can simply look into their screen to receive instant, unbiased skin insights along with lifestyle recommendations. Built on AI, ML, and LLM technology, this proprietary system analyses visual data instead of prompts or uploads, creating a seamless and human-like experience of understanding the skin.

Commenting on technology adoption, she added, “Our AI doesn’t rate beauty, it explains biology. It helps users see their skin clearly, not filtered, not judged, but understood. I’m excited about what AI can do. It’s like a supreme human brain that can analyse millions of data points in minutes to deliver unbiased and authentic information. This is incredibly important for consumers today, and that’s why I decided to make AI the heart of our innovation. By leveraging AI across our R&D and digital platforms, we stay laser-focused on understanding Gen Z’s evolving needs across a country as diverse as India, where every region brings its own skin tones, lifestyles, and climates.”

Adding to this, she also said, “NXTFACE harnesses advanced small molecule technology to enable deeper penetration and faster absorption, ensuring every ingredient performs at its highest potential. Our formulations are proactive, adaptive, and transformative — designed not just to treat today’s skin, but to prepare it for tomorrow. Select products feature Exosomes, celebrated for their exceptional cell-repair and rejuvenation properties, bringing cutting-edge biotechnology into the masstige skincare space. By merging innovation with accessibility, NXTFACE delivers next-generation skincare that evolves with your lifestyle — intelligent, results-driven, and made for skin that never settles. And with today’s launch, we’re not just introducing a brand—we’re unveiling a vision. We aim to scale NXTFACE to ₹500 crore in revenue by 2030, driven by innovation, intelligence and a deep understanding of Gen Z.”The launch range includes serums, sunscreens (gels, sprays, and sticks), lip balms, day creams, sleeping masks, and face washes, priced at an accessible average of ₹550, with all products being vegan, cruelty-free, and toxin-free. Commenting on her association, Ms Kayadu Lohar, Actor and Brand Ambassador, NXTFACE said, “I connected with NXTFACE instantly because it speaks to what we all experience - change. It’s not about hiding it or fighting it, but embracing it with confidence. That’s what makes it more than just skincare. It’s self-understanding.”

NXTFACE also sets a new benchmark in distribution strategy, combining retail, technology, and experience in one ecosystem. The brand will be available across modern trade, general trade, and pharmacy stores, leading e-commerce platforms, and its AI-powered official website. Additionally, it will debut through over 800 Naturals Salons, offering direct consumer trials, making NXTFACE one of India’s first skincare brands to exist simultaneously across store, salon, and screen.

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.