சென்னை போலீஸ் தற்கொலை காரணம் என்ன?
சென்னை பெரம்பூரில் உள்ள செம்பியம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் ஜோசப் (39). இவர், புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் க்ரைம் பிரிவில் பணியாற்றி வந்தார்.
இவருக்கு ஜெகதீஸ்வரி என்ற மனைவியும், 12 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். ஜோசப்புக்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெகதீஸ்வரி, கணவருடன் கோபித்துக்கொண்டு சென்னை ஓட்டேரியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு மகன், மகளுடன் சென்றுவிட்டார்.
இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே தனியாக மன வருத்தத்தில் இருந்து வந்த ஜோசப், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துரையிடுக