தென் மண்டல காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை

 தமிழக காவல் துறை இயக்குனர் அவர்கள் தென் மண்டல காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை

தமிழக காவல்துறை இயக்குனர் திரு.J.K திரிபாதி இ.கா.ப அவர்கள் தலைமையில்  தென்மண்டல அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தென்மண்டல காவல்துறை தலைவர் திரு. முருகன் இ.கா.ப, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் திரு தீபக் டாமோர் இ.கா.ப, நெல்லை சரக காவல் துணை தலைவர் திரு.பிரவீன்குமார் அபிநபு இ.கா.ப, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுகுண சிங் இ.கா.ப, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வெ.பத்ரி நாராயணன் இ.கா.ப, திருநெல்வேலி மாநகர துணை ஆணையாளர் திரு. அர்ஜுன் சரவணன்  (சட்டம் & ஒழுங்கு) ஆகியோர் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

முன்னதாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியின்போது வீரமரணம் அடைந்த தூத்துக்குடி மாவட்ட காவலர் திரு. சுப்பிரமணியன் அவர்களின் புகைப்படத்திற்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.